வியாழன், 27 ஜூன், 2019

சூரியன் உபதேசித்த சுக்ல யஜுர் வேதம்!

இறைவனுடைய உள்ளிழுக்கும் காற்றாகவும் வெளிவிடும் காற்றாகவும் விளங்குவது வேதம். பகவானுக்கும் சுவாசம் உண்டு என்கிறது வேதம். இந்த வேதத்தை நான்காக  வகுத்தவர் வியாசர். அவை ருக் யஜுர் சாமம் அதர்வணம் என்று எல்லாருமே அறிவார்கள். இதைத்தவிர சுக்ல யஜுர் வேதம் என்று மொரு வேதம் உண்டு. இந்த வேதத்தை யாக்ஞவல்கியர் என்ற மகான் சூரிய பகவானிடமிருந்து கற்று உலகிற்கு அளித்தார். யாக்ஞவல்கியர் இந்த வேதத்தைக் கற்ற வரலாறு சுவையானது. வைசம்பாயனர் என்ற ரிஷி வியாசரிடம் கற்ற யஜுர் வேதத்தை பல சிஷ்யர்களுக்கு கற்றுக்கொடுத்தார். ஒருநாள் வைசம்பாயனர் அதிகாலையில் நீராடிவிட்டு ஏதோ சிந்தனை செய்தவாறு ஆசிரமத்தை நோக்கிவந்தார். அப்போது நடுவழியிலே வேதத்தை பூரணமாகக் கற்றுணர்ந்த பிரம்மச்சாரி சிறுவன் ஒருவன் படுத்துக்கொண்டிருந்தான். அதையறியாமல் அந்த சிறுவனின் வயிற்றில் காலை வைத்து விட்டார் வைசம்பாயனர். அந்த சிறுவன் துடிதுடித்து இறந்துபோனான். அதனால் வைசம்பாயனருக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.

வருத்தம் தாங்காமல் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார் அவர். சீடர்கள் வழக்கம் போல வந்து வணங்கினார்கள். ஆச்சாரியர் முகம் வாட்டமாக இருப்பதைக் கண்டு பணிவோடு காரணம் கேட்டனர். வைசம்பாயனர் நடந்த விவரங்களைச் சொன்னார். சீடர்கள் செய்யும் பாவம் ஆச்சார்யர்களை வந்தடையும். இங்கே ஆச்சார்யரே பாவம் செய்து விட்டார். சீடர்கள் எல்லாருமாக சேர்ந்து ஏதாவது பிராயச்சித்தம் அனுஷ்டித்தால் அந்த பாவம் போகும். வைசம்பாயனரும் அவர்கள் அவ்வாறு அனுஷ்டித்து பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார். சீடர்கள் எல்லாரும் அப்படியே நாங்கள் செய்கிறோம். அதைக் காட்டிலும் ஒரு கடமை எங்களுக்கு உண்டா? ஆச்சார்யாருக்கு ஏற்பட்ட சிரமத்தைப் போக்கவில்லையென்றால் சீடர்கள் எதற்கு? என்றார்கள். அப்போது அவர்களுள் ஒருவரான யாக்ஞவல்கியர் குருவே உங்கள் தோஷத்தை நிவர்த்திசெய்ய இத்தனை பேர் எதற்கு?நான் ஒருவனே பிராயச்சித்தம் செய்து சிரமத்தைப் போக்கிவிடுவேன் என்றார்.

வைசம்பாயனருக்கு கடும் கோபம் வந்து விட்டது. எல்லாரையும் சாமானியர்கள் என்று மதித்து நீ ஒருவனே உயர்ந்தவனென்று காட்டிக்கொள்கிறாய். அது உன் அகங்காரத்தைக் காட்டுகிறது. இவ்வளவு அகங்காரமுடைய சீடன் எனக்குத் தேவையில்லை. நீ ஆசிரமத்தை விட்டு வெளியே போ! என்று கோபத்தோடு சொன்னார். யாக்ஞவல்கியருக்கு அதற்கு மேல் கோபம். ஆச்சார்யரே தங்களிடத்தில் இருக்கிற அன்பினால் மதிப்பினால் சொன்ன வார்த்தைகளே தவிர இவர்களைக் குறைத்துக் கூறுவதற்காக நான் பேசவில்லை. அப்படி நீங்கள் நினைப்பதும் ஏற்றதல்ல. என் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல் என்னை போகச் சொல்கிறீர்கள். உங்களுடைய ஆச்சாரியத்துவம் எனக்கு வேண்டியதில்லை என்றார். அதற்கும் மேலே வைசம்பாயனர் என்னுடைய ஆச்சார்யத்துவம் வேண்டியதில்லையானால் என்னிடம் கற்ற வேதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போகமுடியுமா? அதனால் வேதத்தை முழுக்க கக்கிவிட்டுப் போ என்றார்.

யாக்ஞவல்கியரும் சளைக்கவில்லை. கற்ற வேதங்களை எல்லாம் மொத்தமாக ஒரு மாமிசக் கோளமாகக் கக்கிவிட்டு கோபத்தோடு வெளியேறிவிட்டார். மகான்களின் தவவலிமையால் இப்படி எல்லாமே சாத்தியமாகும். வேதவித்தை கேட்பாரில்லாமல் ஒரே மாமிசக் கோளமாகக் கிடந்தது. வைசம்பாயனர் வேதம் இப்படி இருப்பதைக் கண்டு மனம் வருந்தி மற்ற சீடர்களை அழைத்து அவர்களை தித்திரா என்ற பறவைகளாக மாற்றி கிழே கிடந்த மாமிசத்தை உண்ணும்படி சொன்னார். அவர்களும் குரு சொன்னபடி செய்தார்கள். இவ்வாறு வேதவித்தைகள் கக்கப்பட்டு மறுபடியும் கொள்ளப்பட்டு தரித்தது. அதனால் இதற்கு கிருஷ்ண யஜுர் வேத தைத்ரீய சம்ஹிதை என்று பெயர். தித்திரா என்ற பறவையின் பெயரால் தைத்ரீயம் என்ற உபநிடதம் உள்ளது. வேதமிழந்த யாக்ஞவல்கியர் கங்கை நதி தீரம் சென்று நீராடி ஸ்ரீமந்நாராயணனைக் குறித்து பலவாறாக ஸ்தோத்திரம் செய்தார். பிறகு காயத்ரி தேவியைக் குறித்து பல நாட்கள் தவமிருந்தார். அவரது தவத்திற்கிரங்கிய காயத்ரி தேவி அப்பனே நீ வேண்டிய வரமென்ன என்று அன்புடன் கேட்டாள். அவளை வணங்கிய யாக்ஞவல்கியர் தாயே ஸ்ரீ வைசம்பாயனர் என்னிடம் கற்ற வித்தைகளைக் கொடு என்று கேட்டார். மறுக்க வழியில்லாமல் கொடுத்து விட்டேன். இப்பொழுது எனக்கு யஜுர் வேதம் வேண்டும். நீங்களே குருவாக இருந்து வேதத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என்றார்.

அதைக்கேட்ட காயத்ரி தேவி முன்னொரு காலத்தில் நைமித்திக பிரளயம் ஏற்படப் போகிறதென்று அறிந்த பிரம்மதேவர் விஷ்ணு லோகம் சென்று சுவாமி வரப்போகும் பிரளயத்தில் அசுரன் ஒருவன் வேதங்களை அபகரிப்பான் என்கிற பாடம் பயம் உண்டாகிறது என்றார். அதைக்கேட்ட விஷ்ணு, குழந்தாய் கவலை வேண்டாம். வேதத்தின் ஒரு பகுதியாக யஜுர் வேதத்தை சூரிய பகவானிடத்தில் வைப்போம் என்று சொன்னார். அதன்படியே இந்த வேதமானது அயாதயாமம் என்பது சூரியனிடம் வைக்கப்பட்டிருக்கிறது. நீ சூரிய பகவானைக் குறித்து தவமிருப்பாயாக. நீ வேத வியாசரிடம் வேத அத்யயனம் செய்திருக்கிறாய். அந்த பிரகஸ்பதியே உனக்கு அட்சராப்யாசம் செய்து வைத்திருக்கிறார். எனது கடாக்ஷத்தால் உன் விருப்பம் நிறைவேறும் என்று அருள் புரிந்து மறைந்தாள். அது முதல் யாக்ஞவல்கியர் சூரிய பகவானைக் குறித்துத் தவமிருந்தார். சூரியன் ஒரு குதிரை வடிவில் அவர் முன் தோன்றினான். {அதனால் முறைப்படி சந்தியா வந்தனம் செய்து முறைப்படி முத்திரையிட்டு, சூரியனைப் பார்த்து விட்டு கண்களை மூடினால் குதிரை ரூபம் கண்ணுக்குள் தெரியும்.} சூரியதேவன் யாக்ஞவல்கியரிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். யாக்ஞவல்கியர் என் ஆச்சாரியர் வைசம்பாயனர் என்னை அனுப்பி விட்டார். அவருக்குத் தெரியாத வேதம் முழுவதும் எனக்கு வேண்டும் என்றார். யாக்ஞவல்கியரின் தவத்திற்கு மெச்சிய சூரியன் குருவுக்கு என்ன தெரியாதோ அந்த வேதத்தை சீடருக்கு உபதேசம் செய்து விட்டார். அப்படி சூரியன் உபதேசம் செய்தது தான் சுக்லயஜுர் வேதம்.
ஸ்ரீ குருவாக்ய பரிபாலனம்
     ***தர்மசாஸ்திரம்***

1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை - தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

தர்ம சாஸ்திரம்
---------------------------------------------------
கனவில் பாம்பு தென்படுவதால் என்ன பரிகாரம்!

பெருமாள் கோயிலில்இருக்கும் கருடாழ்வாருக்கு சனிக்கிழமையில் துளசிமாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றுங்கள். இந்த பரிகாரத்தை மூன்று அல்லது ஐந்து வாரத்திற்கு தொடர்ந்து செய்யுங்கள்.
----------------------------------------------
ஏழுபடை வீடு!

கோவை மாவட்டம், பல்லடம் தாலுகாவில் உள்ள வானவன்சேரி என்ற கிராமத்தில் அலகுமலை முருகன் கோயில் உள்ளது. ஆறுபடை வீடு முருகன்களும் எந்தெந்த திசையில் உள்ளனரோ, அதே அமைப்பில் இங்கு அவர்களுக்கு சன்னதிகள் அமைந்துள்ளது சிறப்பு. அத்துடன் முத்துக்குமாரசுவாமி, பால தண்டாயுதபாணி சுவாமியையும் சேர்த்து ஏழு சன்னதிகள் உள்ளதால் இந்தக் கோயிலை ஏழு படை வீடு என்கின்றனர்.
----------------------------------------------
கிரகதோஷ நிவர்த்திக்கு யாரை வணங்குவது சிறந்தது?

நவக்கிரக வழிபாடு தற்காலத்தில் அதிகமாகி விட்டது. திருஞானசம்பந்தர் கோளறு பதிகத்தில் சிவனை வழிபட்டால் நவக்கிரகம் அனைத்தும் நன்மை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். தேவராய சுவாமிகள், கந்தசஷ்டி கவசத்தில், முருகவழிபாட்டால், நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று பாடியுள்ளார். அதனால்,அதிதேவதையான தெய்வத்தை வழிபடுவதே சிறந்தது.
---------------------------------------------------
அமாவாசையன்று நள்ளிரவு 12 மணிக்கு பூஜை நடத்துவது சரியா?

ஆண்டில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இரவு நேர பூஜையை ஆகம சாஸ்திரம் அனுமதிக்கிறது. மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் மட்டுமே வழிபாட்டுக்காக கோயில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் வழக்கமான நேரத்தில் வழிபடுவதே சரியானது.
---------------------------------------------------
அம்மாவின் ஆணை!

தசரதருக்கு கோசலை, கைகேயி, சுமித்ரா என்று மூன்று பட்டத்தரசிகள். இந்த மூவருமே மூன்று குணம் கொண்டவர்கள். கைகேயி தன் மகன் பரதனுக்கு பட்டம் சூட்ட விரும்பினாள். அதற்கு தடையாக இருந்தராமனைக் காட்டுக்குஅனுப்பவும் கணவரிடம் வரம் பெற்றாள். தான் வாழ பிறரைக் கெடுப்பது அரக்க குணம்.ராமனுக்கு பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்ததைக் கேள்விப்பட்டதும் மகிழ்ந்த கோசலை, அவன் காட்டுக்குச் செல்ல இருப்பதை அறிந்ததும் மனம் துடித்தாள். இன்பத்தைக் கண்டால் மகிழ்வதும், துன்பத்தைக் கண்டால் துவள்வதும் இயல்பு.சுமித்ரை தன் மகன்லட்சுமணனிடம், ராமனிடம் தம்பி என்ற உரிமை எடுத்துக் கொள்ளாதே! ஒருவேலைக்காரன் போல் நடந்து கொள், என்று மகனுக்கு ஆணையிட்டாள். பிறர் நலனுக்காக, மகனைப் பிரியும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்ட இவளே தெய்வத்தாயாக உயர்ந்து நிற்கிறாள்.
---------------------------------------------------


அனுமன் கையில் சிவலிங்கம்!

ஆறடி உயரத்தில் கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு நின்ற திருவடிவினராக அனுமன் அருள்பாலிக்கும் தலம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கூகலூர். இவர் அதிசய ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார். உடல்நிலை சரியில்லாதவர்கள் மகப்பேறு இல்லாதவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமை இங்கே வந்து வடைமாலை சாத்தி இவரை வழிபட்டால் நற்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.
உயிர் பிரியும் போது தச வாயுக்களின் பங்கு :

உடலை விட்டு இந்த இடத்தில் உயிர் பிரிய வேண்டும் என முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ள இடத்தில் தான் உயிர் உடலை விட்டு பிரியும்.
மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு. இவை தச வாயுக்கள் எனப்படும்.

1. உயிர் காற்று. (பிராணன்)
2. மலக்காற்று. (அபானன்)
3. தொழில் காற்று. (வியானன்)
4. ஒலிக்காற்று. (உதானன்)
5. நிரவுக்காற்று.( சமானன்)
6. தும்மல் காற்று. (நாகன்)
7. விழிக்காற்று. (கூர்மன்)
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
9. இமைக் காற்று. (தேவதத்தன்)
10. வீங்கற் காற்று. (தனஞ்சயன்)

உயிர் வெளியே புறப்படும் நாள், நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.

உதாரணமாக... ஒரு வீட்டை நாம் காலி செய்யும் போது எப்படி எல்லா பொருள்களையும் ஒழுங்காக அடுக்கி கட்டி கொண்டு வந்து நடு வீட்டில் வைத்து பின் அங்கிருந்து சரியாக எண்ணி ஒவ்வொன்றாக வெளியே கொண்டு செல்வது போல நமது அனைத்து அவயங்களும் ஒவ்வொன்றாக முழுச் செயலையும் ஒவ்வொன்றாக நிறுத்தி, நமது நடு நெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும். சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும், இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும், மூத்திர வாசல் வழியாகவும், காதின் வழியாகவும், மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும். ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு அவயங்களும் முழு நிறுத்தம் கண்டு எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ அந்த வழியாக தனஞ்சயன் என்ற அந்த வாயு மற்றவற்றையும் வெளியே அழைத்து செல்லும். உயிர் பிரியும்.

மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும் போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் செய்வது தான். உயிரற்ற உடல்களை ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள் பிழைக்க வைப்பதுவும் இந்த தனஞ்சயனை தம் யோக சக்தியால் ஊக்கி விட்டு மற்ற ஒன்பது வாயுக்களை அழைத்து வரச்செய்து உடலினுள் புகுத்தி உயிர் அளிப்பதே ஆகும். இவ்வாறாக புனரபி ஜனனம், புனரபி மரணம்.
என்ற நிலை அமைகிறது. பிறப்பின் துவக்கம் ஆசையின் தூண்டலால் அமைகிறது. பாபங்களும், புண்ணியங்களும் அற்ற சம நிலையை அடைவதே பிறப்பற்ற நிலையைத் தரும். அதுவே ஒவ்வொரு மனிதரும் காண வேண்டிய உன்னதமான முக்தி நிலையாகும்.

#தச வாயுக்களின் சுற்று:

1. பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல் வளையில் உள்ளது. கை, கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
2. அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும். குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.

3. வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையா பொருளில் உருப்புக்களை நீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.

4. உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.

5. சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.

6. நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.

7. கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண் திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.

8. கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டு பண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.

9. தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.

10. தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல் இறந்த மூன்றாம் நாள் தலை வழியாக வெழியே செல்லுதல்.

குழந்தை கருவில் உற்பத்தியாகும் போது தச வாயுக்கள் தான் அவற்றின் வளர்ச்சியை நிர்மானிக்கின்றன.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீஷ்வர ஜகத்குரு அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ஸ்ரீ சந்த்ரஸேகரேந்த்ர - அஸ்மதாசார்யாய நமோ நம:

ஸ்ரீ சந்த்ரமௌளி - பாதாப்ஜ - மதுபாய நமோ நம:

ஸ்ரீ ஆசார்யபாததிஷ்டானாபிஷிக்தாய நமோ நம:

ஸர்வக்ஞாசார்ய - பகவத்ஸ்வரூபாய நமோ நம:

அஷ்டாங்கயோகனிஷ்டா - கரிஷ்டாய நமோ நம:

ஸனகாதி - மஹாயோகி - ஸத்ருசாய நமோ நம:

மஹாதேவேந்த்ர - ஹஸ்தாப்ஜ - ஸஞ்ஜாதாய நமோ நம:

மஹாயோகி - விநிர்பேத்ய - மஹத்த்வாய நமோ நம:

காமகோடி மஹாபீடாதீஸ்வராய நமோ நம:

கலிதோஷ - நிவ்ருத்த்யேக - காரணாய நமோ நம:

ஸ்ரீ சங்கரபதாம்போஜ-சிந்தனாய நமோ நம:

பாரதீக்ருத ஜிஹ்வாக்ர - நர்தனாய நமோ நம:

கருணாரஸகல்லோல - கடாக்ஷாய நமோ நம:

காந்தி நிர்ஜித-ஸூர்யேந்து - கம்ராபாய நமோ நம:

அமந்தா நந்தக்ருன் - மந்தகமனாய நமோ நம:

அத்வைதானந்தபரித - சித்ரூபாய நமோ நம:

கடீதட - லஸச்சாரு - காஷாயாய நமோ நம:

கடாக்ஷமாத்ர - மோக்ஷேச்சா - ஜனகாய நமோ நம:

பாஹு - தண்ட - லஸத்வேணு - தண்டகாயநமோ நம:

பாலபாக - லஸத்பூதி - புண்ட்ரகாய நமோ நம:

தரஹாஸ - ஸ்புரத்திவ்ய - முகாப்ஜாய நமோ நம:

ஸூதாமதுரிமா - மஞ்ஜு - பாஷணாய நமோ நம:

தபனீய - திரஸ்காரி - ஸரீராய நமோ நம:

தப: ப்ரபா - ஸதாராஜத் - ஸுநேத்ராய நமோ நம:

ஸங்கீதானந்த - ஸந்தோஹ - ஸர்வஸ்வாய நமோ நம:

ஸம்ஸாராம்புதி - நிர்மக்ன-தாரகாய நமோ நம:

மஸ்தகோல்லாஸி - ருத்ராக்ஷ - மகுடாய நமோ நம:

ஸாக்ஷாத் - பரஸிவாமோக - தர்ஸனாயநமோ நம:

சக்ஷுர்கத - மஹாதேஜோ - அத்யுஜ்ஜ்வலாய நமோ நம:

ஸாக்ஷாத்க்ருத - ஜகன்மாத்ரு - ஸ்வரூபாய நமோ நம:

க்வசித் - பாலஜனாத்யந்த - ஸுலபாய நமோ நம:

க்வசின் - மஹாஜனாதீவ - துஷ்ப்ராபாய நமோ நம:

கோப்ராஹ்மண - ஹிதாஸக்த - மானஸாயநமோ நம:

குருமண்டல - ஸம்பாவ்ய - விதேஹாயநமோ நம:

பாவனாமாத்ர - ஸந்துஷ்ட - ஹ்ருதயாய நமோ நம:

பாவ்யாத்யபாவ்ய - திவ்யஸ்ரீ-பதாப்ஜாய நமோ நம:

வ்யக்தாவ்யக்ததராநேக - சித்கலாய நமோ நம:

ரக்தஸுக்ல - ப்ரபாமிஸ்ர - பாதுகாய நமோ நம:

பக்தமானஸ - ராஜீவ - பவனாய நமோ நம:

பக்தலோசன - ராஜீவ - பாஸ்கராய நமோ நம:

பக்த-காமலதா - கல்ப - பாதபாய நமோ நம:

புக்திமுக்தி ப்ரதாநேக - சக்திதாய நமோ நம:

சரணாகத - தீனார்த்த - ரக்ஷகாய நமோ நம:

ஸமாதி - ஷட்க - சம்பத் - ப்ரதாயகாய நமோ நம:

ஸர்வதா ஸர்வதா லோக - சௌக்யதாய நமோ நம:

ஸதா நவநவாகங்க்ஷய - தர்ஸனாய நமோ நம:

ஸர்வ - ஹ்ருத்பத்ம - ஸஞ்சார - நிபுணாய நமோ நம:

ஸர்வேங்கித - பர்ஜ்ஞான - ஸமர்த்தாய நமோ நம:

ஸ்வப்னதர்ஸனபக்தேஷ்ட - ஸித்திதாய நமோ நம:

ஸர்வவஸ்து - விபாவ்யாத்ம - ஸத்ரூபாய நமோ நம:

தீன - பக்தாவனைகாந்த - தீக்ஷிதாய நமோ நம:

ஜ்ஞானயோக - பலைஸ்வர்ய - மானிதாயநமோ நம:

பாவ - மாதுர்ய - கலிதாபயதாய நமோ நம:

ஸர்வபூதகணாமேய - ஸௌஹார்தாய நமோ நம:

மூகீபூதாநேகலோக - வாக்ப்ரதாய நமோ நம:

ஸீதளீக்ருத - ஹ்ருத்தாப - ஸேவகாய நமோ நம:

போகமோக்ஷ - ப்ரதாநேக-யோகஜ்ஞாயநமோ நம:

ஸீக்ரஸித்திகராநேக - ஸிக்ஷணாய நமோ நம:

அமானித்வாதி - முக்யார்த்த - ஸித்திதாய நமோ நம:

அகண்டைக - ரஸானந்த - ப்ரபோதாய நமோ நம:

நித்யாநித்ய - விவேக - ப்ரதாயகாய நமோ நம:

ப்ரத்யகேகரஸாகண்ட - சித்ஸுகாய நமோ நம:

இஹாமுத்ரார்த்த - வைராக்ய - ஸித்திதாய நமோ நம:

மஹாமோஹ - நிவ்ருத்த்யர்த்த-மந்த்ரதாய நமோ நம:

க்ஷேத்ரக்ஷேத்ரஜ் ஞ - ப்ரத்யேக - த்ருஷ்டிதாய நமோ நம:

க்ஷயவ்ருத்தி - விஹீனாத்மஸௌக்யதாய நமோ நம:

தூலாஜ்ஞான - விஹீனாத்மத்ருப்திதாய நமோ நம:

மூலாஜ்ஞான - பாதிதாத்மமுக்திதாய நமோ நம:

ப்ராந்திமேகோச்சாடன - ப்ரபஞ்ஜனாய நமோ நம:

ஸாந்தி - வ்ருஷ்டிப்ரதாமோக-ஜலதாய நமோ நம:

ஏககால - க்ருதாநேக - தர்ஸனாய நமோ நம:

ஏகாந்தபக்தஸம்வேத்ய - ஸ்வகதாய நமோ நம:

ஸ்ரீ சக்ரரத - நிர்மாண - ஸுப்ரதாய நமோ நம:

ஸ்ரீ கல்யாணதராமேய - ஸுஸ்லோகாய நமோ நம:

ஆஸ்ரிதாஸ்ரயணீயத்வ - ப்ராபகாய நமோ நம:

அகிலாண்டேஸ்வரீ - கர்ண-பூஷகாய நமோ நம:

ஸசிஷ்யகண - யாத்ரா - விதாயகாய நமோ நம:

ஸாதுஸங்கநுதாமேய - சரணாய நமோ நம:

அபின்னாத்மைக்யவிஜ்ஞான - ப்ரபோதாய நமோ நம:

பின்ன - பின்ன - மதைஸ்சாபிபூஜிதாய நமோ நம:

தத்தத்விபாக - ஸத்போத - தாயகாய நமோ நம:

தத்தத்பாஷா - ப்ரகடித - ஸ்வகீதாய நமோ நம:

தத்ர தத்ர க்ருதாநேக - ஸத்கார்யாய நமோ நம:

சித்ரசித்ர - ப்ரபாவ - ப்ரஸித்திகாய நமோ நம:

லோகானுக்ரஹக்ருத்கர்ம - நிஷ்டிதாய நமோ நம:

லோகோத்த்ருதி - மஹத்பூரி - நியமாய நமோ நம:

ஸர்வவேதாந்த - ஸித்தாந்த - ஸம்மதாய நமோ நம:

கர்மப்ரஹ்மாத்மகரண - மர்மஜ்ஞாய நமோ நம:

வர்ணாஸ்ரம - ஸதாசார - ரக்ஷகாய நமோ நம:

தர்மார்த்தகாமமோக்ஷ - ப்ரதாயகாய நமோ நம:

பத-வாக்ய - ப்ரமாணாதி - பாரீணாய நமோ நம:

பாதமூல - நதாநேகபண்டிதாய நமோ நம:

வேதசாஸ்த்ரார்த்த - ஸத்கோஷ்டீ - விலாஸாய நமோ நம:

வேதசாஸ்த்ரபுராணாதி - விசாராய நமோ நம:

வேதவேதாங்கதத்வ - ப்ரபோதகாய நமோ நம:

வேதமார்கப்ரமாண - ப்ரக்யாபகாய நமோ நம:

நிர்ணித்ரதேஜோவிஜித - நித்ராட்யாய நமோ நம:

நிரந்தர - மஹானந்த - ஸம்பூர்ணாய நமோ நம:

ஸ்வபாவ - மதுரோதார - காம்பீர்யாய நமோ நம:

ஸஹஜானந்த - ஸம்பூர்ண - ஸாகராய நமோ நம:

நாதபிந்துகலாதீத - வைபவாய நமோ நம:

வாதபேதவிஹீனாத்ம - போததாய நமோ நம:

த்வாதஸாந்த - மஹாபீட - நிஷண்ணாயநமோ நம:

தேஸகாலாபரிச்சின்ன - த்ருக்ரூபாய நமோ நம:

நிர்மானசாந்திமஹித - நிஸ்சலாய நமோ நம:

நிர்லக்ஷய - லக்ஷய - ஸம்லக்ஷய-நிர்லேபாய நமோ நம:

ஸ்ரீஷோடஸாந்த - கமல - ஸுஸ்திதாயநமோ நம:

ஸ்ரீ சந்த்ரஸேகர - ஸ்ரீஸரஸ்வத்யை நமோ நம:

இத்யேதத் குருதேவஸ்ய நாம்னாம் அஷ்டோத்தரம் ஸதம்  படனாத் பூஜனாத் தத்க்ஞானாத் பக்தானாம் இஷ்ட ஸித்திதம்.

ஸர்வம் ஸ்ரீ குரு தேவார்ப்பண மஸ்து.