ஞாயிறு, 24 மே, 2020

*25/05/20*
*அந்திமக் காலத்தில் நாம் படும் சிரமங்கள்-*

*முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்*

எருதைப் போலவே நாமும் பிறர்க்கென உழைத்து ஓடாய்த் தேய்ந்து சிரமப்படுகிறோம்.

அந்திமக் காலத்தில் எழுந்திருக்க முடியாமல் போய்விடுகிறது.
அப்போது என்ன சிரமப்படுகிறோம் என்று சாஸ்திரம் சொல்கிறது பாருங்கள்.

வயதான காலம். உட்கார முடியவில்லை. எழுந்திருக்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. கண் தெரியவில்லை.

இன்னொருத்தருடைய தயவிலே எப்போதும் இருக்க வேண்டியதாயிருக்கிறது. அந்த மாதிரி ஒரு நிலை ஏற்பட்டுப் போய்விடுகிறது.

ஆதி சங்கர பகவத் பாதாள் சொல்கிறார்.

‘எல்லாம் இவரை விட்டுப் போய்விடுகிறது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் போக மாட்டேன் என்கிறது: ஆசை!”

அந்த அந்திமக் காலத்திலேயும் சிரமப்படுத்துகிறதே! உடல் கூனி, கேள்விக்குறி போல் போய்விடும் – அந்த மாதிரி ஒரு நிலை ஏற்படுகிறது.

இதுவே கஷ்டம் தான். இன்னொரு கஷ்டம் பாருங்கள்.

அந்திமக் காலத்திலே பத்தினி கூட இருக்க வேண்டும். ஆனால் பத்னியையும் இழந்து விட்டவர் கதி என்ன! அது இன்னமும் கஷ்டமான நிலை!

கல்யாணத்திலே பாணிகிரஹணத்திலே அதற்கு முன்னால் வருகிற சப்தபதி மந்திரத்தில், ‘ இந்த இளமையிலே உன்னைக் கை பிடித்தேன். பிடித்த இந்தக் கையை, எழுந்திருக்க முடியாமல் தொண்டு கிழம் ஆனாலும் நான் விடமாட்டேன். ஜீவிதாந்தம் நீயும் நானும் அப்படியே இருக்க வேண்டும்’ என்று அமைந்திருக்கிறது.

ஆகவே அந்திமக் காலத்தில் பத்னியை இழந்து தவிப்பது இருக்கிறதே… அந்தச் சிரமத்தை சொல்லி முடியாது!

என்ன சிரமத்தைப் படுவார் அவர்?

அடுத்து அதைச் சொல்கிறது சாஸ்திரம்:

எல்லாவற்றுக்கும் பிள்ளைகளிடத்திலேயே கேட்க வேண்டும்! ஒரு தடவை கேட்டால் கொடுப்பார்கள். மறுதடவை கேட்டால் என்ன நினைப்பார்களோ என்று தயக்கம் வரும். பத்னியுமில்லை. உடம்பும் ஒத்துழைக்க மாட்டேனென்கிறது. மருமகள் ஏசுகிறாள். அந்த நச்சுப் பேச்சுக்களைத் தாங்கவே முடியவில்லை.

இப்படி விவரித்துக் கொண்டே வருகிற சாஸ்திரம் கடைசியாய்ச் சொல்கிறது. இப்படி ஜீவித்துக் கொண்டேயிருப்பதை விட ‘போய் சேர்ந்து விடுவதே நல்லது!’ அந்த மாதிரி ஒரு நிலை!

இப்படிப்பட்ட நிலையை அடையலாமா? அந்த மாதிரி நிலையை அடைந்தாலாவது விவேகம் வரவேண்டாமா?

அப்போதாவது கிருஷ்ணா, ராமா, கோவிந்தா என்று சொல்லக் கூடாதா?

சொல்லமாட்டார்! அந்த சமயத்திலேயும் விவேகம் வருவதில்லை. சாமான்ய விஷயத்தையே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகையினாலே அந்திமக் காலம் என்பது ரொம்ப சிரமம்.

அதையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாதிரி ஒரு காலம் வரும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

அந்த மாதிரி நிலையில் பகவான் நம்மை வைக்கக் கூடாது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

 அதற்கு நாம் என்ன பண்ண வேண்டும் என்பதையும் இப்போதே நிர்ணயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

நமது நரம்புகளெல்லாம் நன்கு முறுக்கேறி மிடுக்குடன் இருக்கையிலேயே நிர்ணயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

எல்லாம் போன பிற்பாடு என்ன பண்ணுவது? ஒன்றும் பண்ண முடியாது!

அப்போதைக்கிப்போதே சொல்லி வைக்க வேண்டும்.

‘பிறர்க்கே உழைத்து’ என்பதில் இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. ‘பிறர்’ என்பது பந்து மித்ரர்களைக் குறிக்கிறது போலவே ‘தான்’ அல்லாத தன் ‘சரீரத்துக்கே’ என்றும் குறிக்கும்.

இந்த சரீரம் நாமல்லவே! ஆத்மா தானே நாம். சரீரம் வெறும் உபகரணம்.

நாம் உயர்ந்து மேலே போய் உத்தம கதியை அடைவதற்காக இந்த கர்ண களேபரங்களையெல்லாம் பரமாத்மா நமக்குக் கொடுத்திருக்கிறான்.

இதைப் போய் நாம் சாச்வதம் என்று நினைக்கலாமா?

மாமிசத்தாலும் ரத்தத்தாலும் பிசைந்து கடையப்பட்ட சுவர் இது!

இது நிற்பதற்கு உள்ளுக்குள்ளே ஸ்தம்பங்கள் எலும்புக்கூடு!

அதற்கு மேல் கூரை வேயப்பட்டிருக்கிறது – ரோமங்களைக் கொண்டு! அதற்கப்புறம் வாஸ்து சாஸ்திர ரீதியாக நவத்வாரங்கள்!

பெரியாழ்வார் – இதை – உடலைப் பெரிய பட்டிணம் என்று சொல்கிறார்!

இந்த நகரத்துக்கு ஒன்பது வாயிற்படிகள் பரமாத்மா வைத்திருக்கிறான்.

இந்த வீட்டை நமக்குக் கட்டிக் கொடுத்து க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்லக் கூடிய ஆத்மாவைக் கொண்டு வந்து இந்த வீட்டிலே உட்கார வைக்கிறான். க்ருஹப் பிரவேச சுபமுகூர்த்தம்!

வந்து உள்ளே உட்கார்ந்ததும் இது ஒரு தடவை உடலைப் பார்க்கிறது. பார்த்தவுடனே ‘இதுதான் சாச்வதம் – இதுதான் நம்மை ரக்ஷிக்கிறது’ என்று இந்த சரீரத்துக்கே உழைக்கிறது.

ஒருநாள், ஒவ்வொன்றாகக் குறைய ஆரம்பிக்கிறது.

சரீரத்திலே இருப்பது ஒவ்வொன்றும் சொன்ன வார்த்தை கேட்காமல் வேறான திக்கிலே போகவே, இது நமக்கு சாச்வதமில்லை என்று தெரிந்து போகிறது. அப்போது ‘வந்து திருவடியை அடைந்தேன்’ என்று விழுகிறான்!

பகவானுடைய காருண்யத்தைப் பாருங்கள்.

 நன்றாயிருக்கும் போது வரவில்லை. எல்லாம் போய்விட்ட பிறகு இப்போது ‘உன்னிடத்திலே வந்தேன்’ என்று சொன்னால் அவன் ‘இப்போதாவது வந்தாயே’ என்று ஏற்றுக் கொள்கிறான்.

‘ஏன் முந்தாநாள் வரவில்லை; ஏன் நேற்று வரவில்லை; ஏன் முன்பே வரவில்லை? என்று அவன் கேட்கமாட்டான். வந்ததைக் கொண்டாடி அனுக்ரஹம் பண்ணுகிறான்!

இந்தக் குழந்தை நம்மிடத்திலே வந்ததே என்று அனுக்கிரஹம் பண்ணுகிறான்.

அதனாலே நினைத்து நினைத்து, நினைத்து நினைத்து வருந்த வேண்டும். பச்சாதாபப்படவேண்டும். கண்ணீர் விட்டுக் கதற வேண்டும்.

கண்களிலிருந்து விழக்கூடிய நீரைக் கைகளால் இரைத்து, வாரி வாரி விட வேண்டும்.

அது தான் நிர்வேதம்!

அந்த நிர்வேதம் யாருக்கு வரும்?

விவேகமுடையவனுக்குத்தான் வரும்.

விவேகமுடையவனுக்குத்தான் நிர்வேதம் வருமேயொழிய அவிவேகிகளுக்கு வருமா!

ஆகவே விவேகம் என்கிற முதல் படிக்கட்டை ஏறினால் தான் நிர்வேதம் என்கிற இரண்டாவது படிக்கட்டை ஏற முடியும்.

விவேகம் வரவில்லையானால் நிர்வேதம் வராது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👤📝 *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*சிவனின் 3 மகள்கள் யார்..??என்றும்., அவர்களின் பிறப்பின் ரகசியங்களும்.....*🔱🔱🔱

அழிக்கும் கடவுளான சிவனை பற்றி நாம் அறிந்தது மிகவும் குறைவுதான். ஏனெனில் பெரும்பாலானவர்கள் அறிந்தது சிவபெருமானுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் அது உண்மையல்ல.

ஆம் சிவனுக்கு கஜாணன்., ஸ்ரீ தர்ம சாஸ்தா., மற்றும் காா்த்திகேயன் மட்டுமின்றி *மூன்று மகள்களும்* இருக்கிறார்கள். சிவபெருமானின் மகன்கள் அளவிற்கு அவரின் மகள்களை பற்றி அதிகம் தெரியவில்லை. ஆனால் அவர்கள் இந்தியாவின் பல மூலைகளில் அவர்களை இன்னும் வழிபடுகின்றனர். சிவபெருமானின் மூன்று மகள்களை பற்றியும்., அவர்களின் சிறப்புகளை பற்றியும் காண்போம்.....

*சிவபெருமானின் மகள்கள்*

சிவனின் மகள்களின் பெயர்கள் *அசோக சுந்தரி., ஜோதி* மற்றும் *வாசுகி.* இந்த தகவல் பலருக்கும் தெரிந்திருக்கலாம். இதற்கான குறிப்புகள் சிவபுராணத்திலும்., வேறு சில இடங்களிலிலும் உள்ளது. அவற்றின்படி இவர்களின் ஒவ்வொருவரின் பிறப்பிற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கின்றது.

*☆ அசோக சுந்தரி ☆*

சிவன் மற்றும் பார்வதியின் முதல் மகள் *அசோக சுந்தரி* ஆவார். இவரை பற்றிய விரிவான குறிப்புகள் பத்ம புராணத்தில் உள்ளது. அதன்படி பார்வதி தேவி தன் தனிமையை போக்கி கொள்வதற்காகவே அசோக சுந்தரியை உருவாக்கினார். அவரின் பெயர் காரணம் என்னவெனில் தனது சோகத்தை (தனிமையை) போக்க உருவாக்கப்பட்டதாலும்., மிகவும் அழகாக இருந்ததாலும் அவருக்கு *அசோக சுந்தரி* யென்று பெயர் சூட்டினார்.

இவர் குஜராத்தில் எல்லோராலும் வணங்கப்படுகிறார். இந்தியாவின் மற்ற பகுதிகளில் இவரை பற்றி யாரும் அறியவில்லை.

*★ ஜோதி ★*

சிவனின் இரண்டாவது மகள் ஜோதி. அவரின் பெயரே அதன் பொருளை விளக்குகிறது. இவர் ஒளியின் கடவுளாக அனைத்து கோவில்களிலும் வணங்கப்படுகிறார். ஜோதியின் பிறப்பிற்கு பின் இரண்டு கதைகள் உள்ளது. முதல் கதையானது அவர் சிவனின் ஒளி வட்டத்திலிருந்து பிறந்தார் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது கதை என்னவெனில் ஜோதி பார்வதி தேவியின் நெற்றியில் இருந்து வெளிப்பட்ட தீ பொறியிலிருந்து உருவானவர் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டில் எது உண்மையென்று கூற இயலாது. இந்த ஜோதியானவர் ஜுவாலாமுகி என்ற பெயரால் இந்தியா முழுவதும் ஏன் தமிழ்நாட்டிலும் கூட பல கோவில்களில் வணங்கப்படுகிறார்.
ஹிமாசல பிரதேசத்தில் உள்ள *ஜுவாலாமுகி ஆலயம்* அன்னையின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

*★வாசுகி★*

வாசுகி என்பவர் அனைத்து கோவில்களிலும் பாம்புக்கடியை குணமாக்கும் கடவுளாக கும்பிடப்படுகின்றார். இவர் சிவபெருமானின் மகள் ஆனால் பார்வதியின் மகள் இல்லை. ஏனெனில் பாம்புகளின் கடவுளான கத்ரு செதுக்கிய சிலையின் மீது சிவபெருமானின் உயிரணுக்கள் விழுந்ததால் வாசுகி பிறந்தார். அதனால்தான் அவர் சிவனின் மகளாகவும்., பார்வதியின் மகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. சிவபெருமான் ஆலகால விஷத்தை குடித்தபோது அவரை காப்பாற்றியது வாசுகிதான். இவருக்கு மானசா என்ற ஒரு பெயரும் உள்ளது.

இவரின் அதீத கோபத்தால் இவர் தன் தந்தை சிவன்., பார்வதி., கணவர் என அனைவராலும் ஒதுக்கப்பட்டார். இவர் மேற்கு வங்கத்தில் மிகவும் பிரபலமாக வணங்கப்படுகிறார். மேலும் இவர் பார்வதி தேவியை எப்பொழுதும் வெறுத்துக்கொண்டே இருந்தார். இவருக்கென எந்தவித உருவமும் கிடையாது ஆனால் பாம்பின் வடிவத்தில் வணங்கப்படுகிறார். இவர் பாம்புக்கடி மற்றும் அம்மை நோய்களை குணப்படுத்தக் கூடியவர் என்று நம்பப்படுகிறது...

 🕉️ *ஓம் சக்தி* 🕉️
கிருஷ்ண பக்தை அம்மாள்

கன்னட தேசத்துப்பெண் ஒருவள் அங்கே வாழும் பெரும்பாலானவர்கள் போல மாத்வ வகுப்பை சேர்ந்தவள். கும்பகோணத்தில் இத்தகைய ஒரு குடும்பத்தில் 1906ல் அவள் பிறந்தாள் .

அந்த கால வழக்கப்படி குழந்தையாக இருந்த போதே அவளுக்கு கல்யாணம் நடந்தது. கல்யாணம் என்றால் என்ன என்றே தெரியாத நிலையில், புருஷன் என்கிற பையன் பொறுப்பான கணவனாக மாறுவதற்கு முன்பே மரணம் அடைந்ததால் அவள் குழந்தை விதவை ஆகிவிட்டாள் . அப்பப்பா, அந்தக்கால விதவைகளுக்கு நிகழ்ந்த கொடுமைகளை எழுத்தால் விவரிக்க முடியாது. சமூகத்தில் ஒதுக்கப்பட்ட ஜென்மங்கள். அந்த பெண் உருவத்தில் சிதைக்கப்பட்டு, உள்ளத்தில் நொறுக்கப்பட்டு, சமூகத்தில் அபசகுனமாக வெறுக்கப்பட்டு
உலகத்தால் சபிக்கப்பட்ட ஒரு ஜீவனாக பசியிலும் அவமானத்திலும் வளர்ந்து வாழ்ந்தாள். நரசிம்மனிடம், நாராயணனிடம், கிருஷ்ணனிடம் அவள் கொண்ட பக்தி ஒன்றே அவளை உயிர்வாழ்வதில் கொஞ்சமாவது அக்கறை கொள்ள செய்தது.

இந்த சமூகம் எனும் கொடிய உலகத்திலிருந்து, நரகத்திலிருந்து விடுதலைபெற தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தாள் . பக்கத்தில் ஒரு ஆழமான குளம். கண்களை மூடி ஒருநாள் ''பகவானே, என்னை ஏற்றுக்கொள் '' என்று குதிக்கும்போது ''நில் '' என்று ஒரு குரல் தடுத்தது. கண் விழித்தாள். உக்கிரமான நரசிம்மன் அவள் எதிரே சாந்தஸ்வரூபியாக நின்றான்.

''எதற்காக இந்த தற்கொலை முயற்சி உனக்கு. உனக்கு கடைசி நிமிஷம் வரை உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க நிழலும் தான் கிடைக்கபோகிறதே'' என்ற நரசிம்மனை வாழ்த்தி வணங்கினாள் .

''பகவானே, எனக்கு ஒரு வரம் தா''

''என்ன கேள் அம்மாளு ''. அவள் எல்லோராலும் அம்மாளு என்று தான் அழைக்கப்பட்டவள்.

''எனக்கு பசியே இருக்கக்கூடாது''.

''அம்மாளு , இனி உனக்கு பசி என்றால் என்ன என்றே தெரியாது. போதுமா'' என்று தெய்வம் வரமளித்தது.
அன்று முதல், ஒரு நாளைக்கு ஒருமுறை ஒரு டம்பளர் மோர், பால், ஏதாவது ஒரு பழம் என்று கடைசி வரை வாழ்ந்த அம்மாளு அம்மாள் உணவை தொடவில்லை. ஏகாதசி அன்று அதுவும் கிடையாது. உற்சாகத்தோடு இருந்தாள். கிருஷ்ண பஜனையில் நாள் தோறும் அற்புதமாக தனைமறந்த நிலையில் கடைசி மூச்சு பிரியும் வரை ஈடுபட்டாள்.

இளம் விதைவையாக வாழ்ந்த அம்மாளு அம்மாளுக்கு ஒரு நாள் பாண்டுரங்கன் கனவில் உத்தரவிட்டான்.

''நீ பண்டரிபுரம் வாயேன்'' என்றான் பண்டரிநாதன்.

இந்த குரல் அவளை மறுநாள் பொழுது விடிந்ததும் பண்டரிபுரம் போக வைத்தது. எப்படி தனியாக போவது என்று அவளது அம்மாவை ''நீயும் என் கூட வா '' என்று கூப்பிட வைத்தது. அம்மா வரவில்லை. தனியாக கட்டிய துணியோடும் , தம்புராவோடும் பண்டரிபுரம் சென்றவள் பல வருஷங்கள் அங்கேயே தங்கிவிட்டாள் . கோவிலை அலம்பினாள் , பெருக்கினாள் , கோலமிட்டாள், மலர்கள் பறித்து மாலை தொடுத்தாள் , சூட்டினாள், பாடினாள் நிறைய பக்ஷணங்கள், உணவு வகைகள் சமைத்தாள். எல்லாம் அவளது அடுப்பில் குமுட்டியிலும் தான். பாண்டுரங்கனுக்கு திருப்தியோடு அர்பணித்தாள் . எல்லோருக்கும் அவற்றை பிரசாதமாக விநியோகித்தாள். ஆனால் அவைகளில் ஒரு துளியும் அவள் உட்கொள்ளவில்லை.

அந்த ஊர் ராணி, அம்மாளுவின் பூஜைக்காக வெள்ளி தங்க பாத்திரங்கள் நிறைய கொடுத்தாள். கண்ணில் கண்டவர்களுக்கு எல்லாம் அவற்றை அப்படியே விநியோகம் செய்து விட்டாள் அம்மாளு அம்மாள். பணத்தை தொட்டதே இல்லை. கீர்த்தனங்கள் சர மாரியாக அவள் வாயிலிருந்து பிறந்தன. எந்த க்ஷேத்ரம் சென்றாலும் அந்த ஸ்தல மஹிமை அப்படியே அவள் பாடலில் த்வனிக்கும்,. அவள் அந்த க்ஷேத்ரங்களுக்கு அதற்கு முன் சென்றதில்லை, ஒன்றுமே தெரியாது, என்றாலும் இந்த அதிசயம் பல க்ஷேத்ரங்களில் நடந்திருக்கிறது! இன்னொரு அதிசயம் சொல்கிறேன்.

ஒரு பெரியவர் மரணத்தருவாயில் இருக்கும்போது உறவினர்கள் அம்மாளுவை அவரிடம் அழைத்து போனார்கள். அவரைப் பார்த்ததும் அவர் உயிர் பிரிந்து போவது தெரிந்தது. உடனே அம்மாளு தனைமறந்த நிலையில் கண்களை மூடி பாடினாள். அவரது உயிரை ராம நாமம் தூக்கி செல்வது அவளுக்கு தெரிந்தது. அதை பாடினாள். அருகே இருந்த உறவினர்களுக்கு அந்த மனிதர் ராமநாமம் உபதேசம் பெற்று ஜபித்து வந்தவர் என்பதே தெரியாது. பிறகு தான் தெரிந்தது!

அம்மாளு அம்மாள் நரசிம்மனை மறப்பாளா? தன் உயிரைக் காத்து புதிய பாதை அமைத்துக் கொடுத்த நரசிம்மனுக்கு ஜெயந்தியை விமரிசையாக கொண்டாடினாள். அன்று 108 வகை பிரசாதங்கள், பக்ஷணங்களை ஆசையோடு தயாரித்தாள். வழக்கமான உணவும் இதைத்தவிர சமைத்தாள். '' இந்தா நரசிம்மா வா, வந்து இதை ஏற்றுக்கொள்'' என்று அர்பணித்தாள். அன்று வெகு அருமையான கீர்த்தனங்களை பொழிவாள். தானாகவே தைல தாரையாக ஆயிரக்கணக்கான ஸ்லோகங்கள், கீர்த்தனைகள் அவள் வாயிலிருந்து புறப்பட்டிருக்கிறது.

ஒரு ஆச்சர்யமான சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். மஹா பெரியவா கும்பகோணத்தில் தங்கி இருந்த போது ஒருநாள் ஒரு மாத்வர் ''என் பெண்ணுக்கு கல்யாணம். பெரியவா ஆசீர்வாதம் அனுக்கிரஹம் பெற வந்திருக்கிறேன்'' என்கிறார்.

''என்கிட்டே எதுக்கு வந்திருக்கே. மரத்தடியில் ஒரு நித்யஉபவாசி இருக்காளே அவா கிட்டே போய் ஆசிர்வாதம் வாங்கிக்கோ. உனக்கு சர்வ மங்களமும் சித்திக்கும். வேண்டிக்கொண்ட எண்ணங்களும் நிறைவேறும் ''.பெரியவா இவ்வாறு அம்மாளு அம்மாளின் மஹத்வத்தை எல்லோருக்கும் அறிவித்ததற்கு பிறகு நிறைய பக்தர்கள் அம்மாளுவை சூழ்ந்து கொண்டார்கள். மஹா பெரியவா ஒரு தடவை ''அம்மாளு அம்மாள் புரந்தர தாசர் அம்சம்'' என்று கூறியிருக்கிறார்.

பாகவத தர்மத்தின் உதாரணமாக நித்ய பஜனை, ஆடல் பாடல் என்று அவள் வாழ்க்கை பூரணமாக கடந்தது. கிருஷ்ணனை நேரில் கண்டாள் என்பார்கள்.

ஒரு சமயம் சென்னை ஜார்ஜ் டவுனில் நாராயண முதலி தெருவில் நாராயண செட்டி சத்திரத்தில் அம்மாளு அம்மாள் தங்கியிருந்தார். அப்போது சென்னையில் பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதிலே பங்கேற்ற நாட்டியக் கலைஞர்கள் கோபிநாத் மற்றும் தங்கமணி, தம் குழுவினருடன் இரவு நேரக் கலை நிகழ்ச்சியை முடித்துவிட்டு அம்மாளு அம்மாள் தங்கியிருந்த சத்திரத்தின் மேல் தளத்திற்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியைத் தாண்டிய நிலையில் சற்றே கண்ணயரும் நிலையில், கீழே தாள சப்தமும், நர்த்தனம் ஆடும் சப்தமும் கேட்டதும் இந்நேரத் தில் யார் ஆடுவார்? ப்ரமையோ என்றிருந்தனர். மீண்டும் மீண்டும் இன்னமும் சப்தம் அதிகரிக்க, நாட்டியக் கலைஞர்கள் கீழே வந்து பார்த்தபோது அம்மாளு அம்மாள் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தார்.

உடனே தாளத்தை வாங்கி நாட்டியத்தில் அனுபவம் மிக்க கலைஞர்கள் தாளம் போட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை மறந்து நாட்டியத்தில் லயித்தனர். கேதார ராகத்தில் ‘பாலக் கடல சய்யா’ எனும் கீர்த்தனம் பிறந்தது. எல்லாம் முடிந்ததும் நாட்டியக் கலைஞர்கள் அம்மாளு அம்மாவை வணங்கி, ‘‘சில ஜதிகள், நாட்டிய சாஸ்திரம் நன்கு கற்றவர்களாலேயே ஆட முடியாது. அதைப்போன்ற, எவராலும் சாதாரணமாக ஆட முடி யாத தெய்வீக நர்த்தனத்தை இன்று கண்டோம். இது யாரிடமும் பயின்று வருவதல்ல, யாராலும் பயிற்றுவிக்க முடியாததும்கூட’’ என்று கூறி பிரமித்து நின்றனர். ‘‘இன்று இதைக் கண்டது நாங்கள் செய்த பேறு’’ என உணர்ச்சிவசப்பட்டனர். இவள் புரந்தர தாஸரின் அவதாரம் என்று ஒருமனதாக புகழ்ந்தார்கள்.

2002ல் மதுராபுரி ஆஸ்ரமத்தில் 94வயதில் நேரிலேயே கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் தரிசனம் கிடைத்தது. அந்த கணமே ''நாக்கு கால மூர்தியு நீனே '‘nAkku kAla murtiyu neenE’ நீ தானே நாலு கால மூர்த்தி என பாடினாள் . அந்த நாலு கால மூர்த்திகள் யார்? விடியற்காலையில் ஸ்ரீமந் நாராயணன், காலை முடியும் நேரம் ஸ்ரீ ராமன், அந்தி நேரத்தில் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மன், இரவில் ஸ்ரீ வேணுகோபாலன், கோபிநாதன்.

பங்குனி உத்தரம் சிறந்த நாள். கௌரி சிவனை அடைந்தாள். சீதை ராமனை அடைந்தாள். ஆண்டாள் பரமனை அடைந்தாள். கடைசி காலங்களை கும்பகோணத்தில் கழித்தாள். வயதானாலும் கிருஷ்ணனை தூங்கப்பண்ணி, எழுப்பி, குளிப்பாட்டி, சிங்காரித்து, ஆடைகள் அணிவித்து, பாடி, உணவு சமைத்து நிவேதித்து, தாயாக பாண்டுரங்கனுக்கு சேவை செய்தவள் அம்மாளு அம்மாள்.கிருஷ்ண பக்தை அம்மாளு அம்மாள் 104 வயது வாழ்ந்து 2010 பங்குனி உத்திரம் அன்று சித்தி அடைந்தாள். அதற்கு சில நாட்கள் முன்பே அவளது நாவில் ஒரு பாடல் வைகுண்டம் எப்படி இருக்கும் என விவரித்தது .

அவளது குரு ராமச்சந்திர தீர்த்தர் சமாதி கும்பகோணம் காவிரிக்கரையில் அமரேந்திர புரத்தில் உள்ளது

கலியுகத்தில், த்ராவிட தேசம் எனும் தென்னிந்தியாவில், தாமிரபரணி, க்ருதமாலா, பயஸ்வினி, காவேரி, மகாநதி போன்ற புண்ய நதிக்கரை பிரதேசங்களில் எண்ணற்ற நாராயண பக்தர்கள் தோன்று வார்கள் என்று மேலே கண்ட ஸ்லோகம் சொல்கிறது.ஆகவே தான் அற்புத ஆழ்வார்கள் போல் அம்மாளு அம்மாளும் நம்மிடையே தோன்றி இருக்கிறாள்.

Source; Internet
மூன்றாம் பிறை தரிசனம்

24.05.20
➖➖➖
 மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.  சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.
மூன்றாம் பிறையை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

மூன்றாம்பிறை பிறந்த கதை :

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர்.  சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறு அருளினார்.

மூன்றாம் பிறை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் :

சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
 மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.
மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்க ளைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்க ளை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையன்று (சோமவாரத்தில்) வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

அனைத்து மதங்களும் போற்றும் மூன்றாம் பிறை:

மூன்றாம் பிறையை சிறப்பை இன்னும் சொல்வதெ ன்றால் அனைத்து மதங்களுமே இதை ஏற்றுகொ ண்டுள்ளன.அதாவது இஸ்லாம் மத‌ம், ஜைன‌ம், கிறித்தவம், இந்து மத‌ம் என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது என தெரிவிக்கிறது . அந்த பிறையைகண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும் , செல்வ ங்களை சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும். மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

*பிறை பார்ப்பதன் புண்ணியம்*

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஊர்மக்கள் அவரவர் பங்காக மணலைக் கொட்டி, உடையும் கரையை அடைத்தார்கள்.
மதுரை மாநகரில் பிட்டு விற்று வாழ்ந்து வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க யாருமில்லை. அவள் தினமும் வழிபடும் சொக்கநாதப் பெருமானை நினைத்து வருந்தினாள்.
அவளது உண்மையான அன்பிற்கு செவி சாய்த்த இறைவர், தாமே கூலி ஆளாக வந்து அவள் பங்கிற்கு வேலை செய்தார் என்பது திருவிலையாடற்புராணம் கூறும் செய்தியாகும்.
 கிழவியின் பங்கினை அடைக்க சிவபெருமானே கூலி ஆளாக வரவேண்டுமா? அப்பெருமான் தன்னிடம் உள்ள பூதக்கணங்களில் ஒன்றை அனுப்பி இருந்தாலே போதுமே! அப்பெருமானே ஆளாக வரும் அளவிற்கு அந்த மூதாட்டியின் தகுதி என்ன என்பது பற்றி சிந்திப்போம்.
திருவிளையாடற் புராணத்தை அருளிய பரஞ்சோதி முனிவர்
     *திங்கள் ஆயிரம் தொழுதாள்* என்று கூறுகின்றார். ஆயிரம் பிறையைத் தரிசித்த மேலான புண்ணியம் தான் அவள் பெற்றிருந்த தகுதியாகும்.

பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம்.
பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். இன்று முதல் அனைவரும் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வார்களாக!

*பிறை பார்க்கும் பயன்*

#மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.

#நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.

#ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.

#ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.

#ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.

#பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.

வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.

#நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும்  ( முத்திப்பேறு )

மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.

அதற்கான முறைகளையும் காண்க:

 ஒரு தாம்புள தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதில் குலவிளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து ( வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்,) ஏற்றி வணங்க வேண்டும், அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்கலாம்,அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும், தேவையை கேட்க வேண்டும், இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும், இந்த தர்மம் நம் சேமிப்பு கணக்கில் இருக்கும், இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி வழங்குவார், இதைத்தான் முன்னோர்கள் கையில் ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள், பின்னாளில் வந்தவர்கள் கையில் காசு. நகை. தானியம். மாங்கல்யம். இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள், தவறாக புரிந்து கொண்டவர்கள் காட்டிய வழி இன்றும் கையாளப்படுகிறது , கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, தர்ம பலம் . மனதிலே அன்பு பலம் இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார்.சூரியனிடமும். சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும், அதுவே யாசகம் பெருவது . ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெரும்போது கையேந்தியே பெற்றார், சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார், இதை படி அளப்பது என்பார்கள், எனவே இதை உணர்ந்து பவ்வியமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள், செல்வ சந்தோஷ வளம் கிட்டும்,வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும், பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு. தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்கவும், இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தையாவது செய்வது நலம், ஆயுளுக்கும் செய்து வந்தால் தரித்திரனும். அவனிருக்கும் போதே உயர்ந்த செல்வத்தை பெறுவான் இது உறுதி.மேக மூட்டமாக உள்ள காலங்களில் பிறை தெரியாது , எனினும் கவலை இல்லை , மாலை 6 1/2 மணி முதல் 7 1/2 மணிக்குள் மேற்கு திசை அடிவானத்தை பார்த்து கூறிய முறைப்படி வழிபட்டால் போதும், நலம் பயக்கும்,பிறை தரிசனம் செய்யும் போது நிதான மன பக்குவத்துடன் செய்ய வேண்டும், குறிப்பாக சந்தோஷ மன நிலையில் பிறையை காண வேண்டும், என்ன மனநிலையில் நாம் பிறையை காண்கிறோமோ அதுவே வரமாக நமக்கு பெருகி கிடைக்கும், எனவே நல்ல மனதோடு தேவைகளை கேட்க வேண்டும்,அசைவ உணவை விரும்பி உண்ணும் இஸ்லாமியர்கள்கூட இந்த பிறை தரிசனத்தை காணும் நாளில் கடுமையான விரதங்களை மேற்கொண்ட பின்னரே பிறை தரிசனம் கண்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள்,இந்த பிறைநாள் செவ்வாய். வெள்ளி. சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு, அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும், அதே போல் கார்த்திகை. மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும், ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும் கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும்.திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராய் நின்று பிறையை வணங்க வேண்டும்,திருமணம்ஆகாதவர்கள் பெற்றோர்களுடன் நின்று பிறை தரிசனம் காண வேண்டும், சூழ்நிலையால் முடியாதவர்கள் தனித்து நின்றும் வழிபடலாம், இந்த பிறை தரிசனம் காண ஆண்.பெண் பேதமில்லை, யாருக்கு செல்வம். சந்தோஷம். கல்வி வேண்டுமோ அவரவர் தரிசனம் கண்டு வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும்.ஓரிரு முறை தரிசனம் கண்டும் இன்னும் எதுவும் கிடைக்கவில்லையே என நினைக்காமல் பொறுமையாக வழிபட்டு வரவேண்டும். அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு இறைவன் யோகத்தை அருளுவார், எனவே பொறுமையாக உண்மையாக வழிபட்டு வரவேண்டும், சிலருக்கு ஒரே தரிசனத்திலேயே கிடைத்து விடும், சிலருக்கு 12 மாதம் பிறை தரிசனம் கண்டவுடன் தான் பலன் கிடைக்கும், எனவே இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தரிசனம் காணுங்கள் அளவு கடந்த நன்மைகளை பெறுங்கள் .

*
🌙இன்று!..மூன்றாம் பிறை தரிசனம்:- சந்திர தரிசனம் மேற்கொள்பவர்களுக்கு சகல பாவங்களும், சங்கடங்களும் தீரும், என சாஸ்திரங்கள் உரைக்கின்றன!
🌙
சர்வம்!
சிவார்ப்பணம்!!
🙏

ஸ்ரீவிட்டோபா ஸ்வாமிகள்
உடல் முழுதும் புழுதி, சேறு; இடுப்பில் ஒரு கோவணம் மற்றும் அரைகுறையான மேலாடை என்னும் கோலத்தோடு, ஊர் முழுதும் சுற்றிக் கொண்டிருந்தார் துறவி ஒருவர். சாப்பாடு கிடையாது; ஒருவேளை பசித்தால், ஏதாவது ஒரு வீட்டின் முன் நின்று, இருமுறை கைகளைத் தட்டுவார். ஓசை கேட்டு, யாராவது வந்து உணவு இட்டால் சரி... இல்லையேல், பட்டினி தான். நல்லவர்கள் என்றும் எங்கும் இருப்பர் அல்லவா! அதன்படி, அந்த ஊரில் இருந்த பெண்மணி ஒருவர், இந்த உத்தம துறவியின் நிலை உணர்ந்து இரங்கி, தினந்தோறும் அத்துறவி வரும்போது, அவரை வணங்கி உபசரித்து, உணவு அளிப்பார். துறவியும் அன்போடு இடப்படும் அந்த அன்னத்தை ஒரு கவளம் வாங்கி கொள்வார். இந்த உத்தமருக்கு உணவளிக்காமல், நான் உண்பதில்லை என்ற நியதியைக் கடைப்பிடித்து வந்தார் அந்தப் பெண்மணி.

ஒருநாள்... அந்த வீட்டுக்கு, உணவிற்காக துறவி சென்றபோது, பெண்மணி வீட்டில் இல்லை; ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தார். பெண்மணியின் கணவர் மட்டும் வீட்டில் இருந்தார். துறவியைப் பார்த்தார்; துறவியின் கோலமும், தோற்றமும் அந்த மனிதருக்கு, அலட்சியத்தையும், சினத்தையும் உண்டாக்கின. ஆதலால், அவர் தன் கையில் இருந்த பிரம்பை ஓங்கி, ’போ, போ... இங்க நிக்காதே... போ...’ என்று திட்டி, விரட்டி விட்டார். துறவியும் வாய் திறவாமல், நகர்ந்து விட்டார். இது நடந்து நீண்டநேரம் கடந்து, பெண்மணி வீடு திரும்பினார். துறவி வந்ததோ, அவரைத் தன் கணவர் அவமானப்படுத்தித் துரத்தியதோ, பெண்மணிக்குத் தெரியாது. அவர், ’என்ன ஆச்சு இன்னிக்கி... அந்த மகான் உணவுக்கு இன்னும் வரலியே...’ என்று கவலையில் ஆழ்ந்தார். அலுவலகம் சென்ற, அந்தப் பெண்மணியின் கணவர் எழுதத் துவங்கினார்; ஊஹூம், எழுத முடியவில்லை. சில வினாடிகளில் கை முழுதுமாக உணர்ச்சியற்று, செயலற்றுப் போய் விட்டது. மருத்துவரிடம் ஓடினர்; பலனில்லை. அதனால், அவரை வீட்டிற்கு கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினர் நண்பர்கள்.

பதறித் துடித்தார் மனைவி, ’ஏன் இப்படி நடந்தது...’ எனக் குழம்பினார். அந்த நேரத்தில் அவர் கணவர், ’இன்று, ஒரு பரதேசி வீட்டிற்கு வந்தார். பிரம்பை ஓங்கி, கண்டபடி திட்டி, அவரை விரட்டினேன். ஒருவேளை, அதனால், இப்படி ஆகியிருக்குமோ...’ என்றார், மனைவியிடம். பெண்மணிக்கு உண்மை புரிந்தது. ’ஆகா! வந்தது, நம் மரியாதைக்கு உரிய துறவி தான். நம் கணவர் அவமானப்படுத்தியது அவரைத்தான்...’ என்பதை உணர்ந்தார். உடனே, கணவரை ஒரு வண்டியில் அழைத்துக் கொண்டு, துறவியைத் தேடிப் போனார். துறவி, ஒரு இடத்தில், உட்கார்ந்து, கைகளால் தாளம் போட்டபடி, பாடிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும், பெண்மணி, வண்டியிலிருந்து இறங்கி, துறவியின் திருவடிகளில் விழுந்தார்; துறவியின் முன், கணவரை நிறுத்தி, மன்னிக்கும்படி வேண்டி அழுதார். அவர் கணவரின் பாதிக்கப்பட்ட கையை, கருணையோடு பார்த்த துறவி, ’ஜா ஜா...’ என்று சொல்லி, பழையபடி பாடலை முணுமுணுத்து தாளம் போடத் துவங்கினார்.

அதே வினாடியில், செயலற்று இருந்த கை செயல்படத் துவங்கியது. கணவரின் கை செயல்படத் துவங்கியதைக் கண்ட பெண்மணி, ஆனந்தக்கண்ணீர் சிந்த, கணவரோடு சேர்ந்து, துறவியின் திருவடிகளில் மீண்டும் விழுந்து வணங்கினார். அந்தத் துறவி, விட்டோபா சுவாமிகள். இந்நிகழ்ச்சி நடந்த இடம், திருவண்ணாமலையில் இருந்து வேலுார் செல்லும் வழியில் உள்ள போளூர் என்னும் ஊர். ஸ்ரீவிட்டோபா சுவாமிகளின் சமாதி, இன்றும் அங்கே உள்ளது. யாரையும் இழிவாகப் பேசி, அவமானப் படுத்தாமல் இருந்தால், தெய்வத் திருவருள் தானே வந்து பொருந்தும் என்பதை விளக்கும் வரலாறு இது.இவர் சித்தியான போது ஸ்ரீசேஷாத்திரி ஸ்வாமிகள் வானத்தை நோக்கி அதோ விட்டோபா போறான் என்று பல முறை கூறினாராம்
மதுரகாளிதாசன்
கங்கையில் குளித்தால் பாவம் தொலையுமா?

கங்கையில் குளித்தால் பாவம் தொலையும் என்றால், உலகில் உள்ள எல்லா பாவங்களையும் செய்து விட்டு கங்கையில் குளித்து விட்டால் போதுமா?. பின் மறுபிறவி எதற்கு?. சுவர்க்கம்,நரகம் எதற்கு?. கடவுளின் அருளைப்பெற பக்தி மட்டுமே போதாது. நம்பிக்கையும் வேண்டும்.

ஒரு சமயம் பார்வதி சிவபெருமானிடம், கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்கிறார்களே, இது உண்மையானால், உலக மக்கள் யாவரும் கங்கையில் ஒரு முறை குளித்து தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள முடியுமா? என்றுக் கேட்டாள். இதுகேட்டு பெரிதும் நகைத்த சிவபெருமான் அன்னைக்கு விடையளிக்க அவளை பூலோகம் அழைத்து வந்தார். கங்கையின் கரையில், சிவபெருமான் கிழத்தோற்றம் கொண்டு உயிர் போகும் தாகம் கொண்டவராய் கீழே விழுந்தார். பார்வதியார் கணவனை மடியில் கிடத்திக்கொண்டு, யாராவது என் கணவரைக் காப்பாற்றுங்கள் அவர் தாகத்தில் இருக்கிறார் என கூவி அங்குள்ளவர்களை உதவிக்கழைத்தாள். அப்போது குளித்து விட்டு வந்த சிலர் பெரியவருக்கு நீர் கொடுக்க முன் வந்தனர். பார்வதியோ, உங்களில் யார் பாவம் இல்லாதவரோ அவர் நீர் அளித்தால்தான் என் கணவர் உயிர் பிழைப்பார் என்றாள். ஒருவரும் முன்வரவில்லை. அப்போது அவ்வழியே வந்த ஒரு திருடன் விஷயமறிந்து, கங்கையில் குளித்துவிட்டு ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்து பெரியவர் வாயில் ஊற்றினான். இத்திருடன் பெரும் பாவியாயிற்றே என அனைவரும் வியப்போடு நோக்க, பெரியவராகிய சிவன் அது குறித்து திருடனிடமே கேட்டார். திருடனும் அவருக்குப் பதில் சொன்னான். நான் பெரும் பாவிதான். எனினும், கங்கையில் குளித்ததால் என் பாவங்கள் போய்விட்டது. எனவே நான் தங்களுக்கு நீர் தந்தேன். இனி நான் திருடினால்தான் எனக்கு பாவங்கள் சேரும் என்றான். அவனது நம்பிக்கையைக் கண்ட தேவி மனம் மகிழ்ந்தாள். ஆம் தெய்வீக நம்பிக்கை இல்லாது போனால் கங்கையில் குளித்தும் பயனில்லை.
*தீயவை வேகமாக பரவும்  ரமண ஆஸ்ரமத்தில்  ஒரு நாள் **

கும்பகோணத்தில் இருந்து இரண்டு பெண்கள் வந்தார்கள். ஒருவர் குரு; இன்னொருவர் சிஷ்யை. அன்று மாலையே ரயிலில் திரும்ப இருந்தார்கள். மதியம் மூன்று மணிக்கு ஹாலுக்கு வந்தார்கள்.

சிஷ்யை தன் குருவுக்கு ஆசனம் தயார் செய்து பகவான் முன்பு அமர வைத்தார். அவ்வப்போது பகவான் அருகில் சென்று “ அவங்க எல்லாத்துலேயும் உங்க மாதிரியே ஸ்வாமி. நீங்க இருக்கிற ஸ்திதியிலேயே அவங்களும் இருக்காங்க.

எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்கோ” என்றார்.

சிறிது நேரம் கழித்து “மோக்‌ஷத்துக்கான வழி என்ன? அதை உபதேசம் செய்யணும். பந்தம்ன்னா என்ன? மாயையில் இருந்து விடுபடறது எப்படி?” என்று கேட்டார்.

பகவான் பதிலே சொல்லவில்லை. நேரமோ போய் கொண்டே இருந்தது. ரயிலுக்கு நேரமாகிக்கொண்டு இருந்தது. சிஷ்யை பதட்டத்துடன்  “ஸ்வாமி! தயை செய்து உபதேசம் செய்யுங்க.

சீக்கிரம் தீக்‌ஷை கொடுங்க. வேகமா முடியுங்க. ரயிலுக்கு நேரமாச்சுன்னு உங்களுக்கே தெரியும்” என்றார். பகவான் அப்போதும் மௌனமாகவே இருந்தார்.

ஸ்வாமி! ஏதாவது சொல்லுங்களேன். எல்லாரும் அஞ்ஞானம் அஞ்ஞானம் என்கிறாங்களே அது என்ன? என்றார் சிஷ்யை.

பகவான் அருகில் இருந்த முருகனாரிடம் திரும்பி “அவளை யார் அஞ்ஞானத்துல இருக்கான்னு விசாரம் பண்ணச் சொல்லு ங்கோ!” என்றார்.

முருகனார் அவர்கள் பக்கம் திரும்பி “நீங்க போகலாம். தீக்‌ஷை முடிஞ்சது” என்றார். அவர்களும் கிளம்பினார்கள்.

சிறிது நேரம் கழித்து பகவான் பொதுவாக பேச ஆரம்பித்தார். “எல்லாம் உடனே கிடைக்கணும். 

எல்லாருக்குமே ஏதோ ஒரு ட்ரெய்னை பிடிக்க வேண்டி இருக்கு. வரும் போதே அவசரமா வரது! போகும் போதும் மோக்‌ஷம் பார்சல்லே வேண்டி இருக்கு.

எதையாவது இங்கேயும் அங்கேயும் படிச்சுட்டு எல்லாம் தெரியும்ன்னு  நினைக்க வேண்டியது.

“எல்லாரும் இங்கே சிரத்தையோட சாதனை பண்ணனும்தான் வரா. வந்த பிறகு இங்கேதான் இனின்னு ஆனபிறகு அகந்தை தலைக்கு ஏறிவிடறது;

எதுக்கு இங்கே வந்தோம் என்கிறதே மறந்துடறது. எனக்கு ஏதோ பெரிய சேவை செய்யறதா நினைச்சுக்கறா, அவா மட்டுமே பகவானுக்கு சேவை பண்ண பிறந்தாப் போலயும் மத்தவா எல்லாம் வீணா பொழுது போக்கறதாகவும் நினைக்கறா.

இந்த நினைப்போட சேவை செய்யறதே அவா வந்த நோக்கத்தை கெடுக்கும். *அடக்கம் மட்டுமே அகந்தையை நாசம் பண்ணும்.*

“ஈஸ்வரனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கு. ஆனா கதவு உசரம் ரொம்ப கம்மி. *தலை வணங்கினாத்தான் உள்ளே போகலாம்.*

பெருமாள் ஸ்வாமியை விடவா யாரும் எனக்கு சேவை செய்துட முடியும்?

பல வருஷம் என் நிழலாவே இருந்தார். எனக்கு பேதி கண்டப்ப மலத்தை தன் கையாலேயே எடுத்து சுத்தம் பண்ணினார்,

அவரேதான் எனக்கு எதிரா கோர்ட்டுக்கு போய் விசாரணை கமிஷன் போட்டு விசாரிக்கவும்  வெச்சார் !

மனசுல நான் என்கிற எண்ணம் கொஞ்சம் இருந்தாலும் அது வேகமா பரவி வந்த நோக்கத்தையே கெடுத்துடும்” என்றார்.

 *தீய எண்ணங்களும் தீய சக்திகளும்  வேகமாக பரவும் !*
#சோகத்தூர்_யோகந்ருஸிம்மர்_மஹாத்மியம்

வந்தவாசியிலிருந்து சுமார் 5 கி.மீ.தொலைவில் உள்ளது சோகத்தூர் என்னும் அழகிய வயல் வெளி நிரம்பிய சிற்றூர். பல மஹான்கள் இத்தலத்தில் அவதரித்துள்ளனர்.

இங்குள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ந்ருஸிம்மர், சோளிங்கரில் உள்ளது போன்று உன்னத யோக நிலையில் அமர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்..தாயார் ஸ்ரீ அமிர்தவல்லி..

மிகவும் வரப்ப்ரஸாதியான இப்பெருமாள் ப்ரதி மாத ஸ்வாதி நக்ஷ்த்திரத்தில் யாகம் கண்டருளி மிகவும் சாந்தமான நிலையில் பக்தர்களின் கோரிக்கைகளை , "நாளயென்பது நரசிம்மனுக்கில்லை" என்ற வாக்கின்படி நிறைவேற்றி வருகிறார் என்பது இத்தலத்தின் பெருமையாகும்

ஆவணியாபுரம், இஞ்சிமேடு, சோகத்தூர் இம்மூன்றும் அருகருகே உள்ள ந்ருஸிம்ம தலங்கள்..இம்மூன்று ந்ருஸிம்மர்களையும் ஒரே நாளில் சேவித்தல் விசேஷமானது என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்..

இத்திருக்கோவிலில் ஸ்ரீ ராமபிரானும்  பட்டாபிஷேக திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

தொடர்புக்கு ஸ்ரீ சொளந்திரராஜ ஐயங்கார் 8754579689

கோவில் பட்டர்: 8248564734
*மானசீக பக்தி!*

பகவானிடத்தில் மனித உறவுகள் வாயிலாக பக்தி செலுத்துவது உயர்ந்தது.

அதில் தோழமை பாவனையில் சிறப்புற்று விளங்கிய அர்ச்சுனன் ஒருமுறை ஸ்ரீகிருஷணரிடம் கேட்டான். கிருஷ்ணா, இந்த பூவுலகில் என்னைவிடச் சிறந்த சிவபக்தன் யாராவது இருக்க முடியுமா?

எனது பக்தியையும் கடும் தவத்தையும் வீரத்தையும் மெச்சி சிவபெருமானே எனக்குப் பாசுபதாஸ்திரத்தைத் தந்துள்ளதே இதற்குச் சான்று அல்லவா? என்று கேட்டான்.

கிருஷ்ணர் சற்று யோசித்துவிட்டு பதில் சொன்னார். அர்ச்சுனா, இந்தச் சந்தேகத்தை சிவபெருமானிடமே கேட்டுவிடுவோம். நாளைக் காலை கயிலாயம் செல்வோம் வா, எனது யோக மாயாசக்தியால் உன்னை நான் அங்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார்.

மறுநாள் விடியற்காலையில், வெள்ளிப் பனிமலையின் மீது உதிக்கின்ற செங்கதிர் ஒளி படர்ந்து பரவி பசுமை புல்வெளியில் பனிபடர்ந்து பரவி கயிலாயம் பொன்மயமாக ஜொலிக்கிறது. அப்போது கிருஷ்ணரும் அர்ச்சுனனும் சிவபெருமானை வணங்கினர்.

அப்போது சிவபெருமான் வா கிருஷ்ணா, நான் கூறியபடி நீ அர்ச்சுனனைத் தவமியற்ற வைத்தாய், நீ கேட்டுக்கொண்டபடி அவனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கிவிட்டேன் என்று கிருஷ்ணரிடம் கூறினார்.

அர்ச்சுனன் வியப்போடு! கிருஷ்ணா, எனக்கு சிவபெருமான் பாசுபதாஸ்திரம் அருள நீதான் காரணமா? எனக்குத் தெரியாமல் போயிற்றே! அறியாமல் நான் கூறியதற்கு என்னை மன்னித்துவிடு என்று வேண்டினார்.

அப்போது, சிவபெருமான் நந்திதேவரை அழைத்து வந்தார்! கிருஷ்ணரிடம், கிருஷ்ணா, இன்னும் ஓர் அதிசயம் அர்ச்சுனனுக்காகக் காத்திருக்கிறது.

நந்திதேவரை, அழைத்து திவ்ய புஷ்பாஞ்சலி தோட்டத்திற்கு இவர்களை அழைத்து சென்று காட்டுங்கள் என்று கட்டளையிட்டார்.

நந்திதேவரும் சிவபெருமான் கட்டளைஏற்றுக்கொண்டு நந்திதேவர் புஷ்பாஞ்சலி தோட்டத்தை அர்ச்சுனனுக்குக் காண்பித்தார். கிருஷ்ணர் ஒன்றும் அறியாதவர் போல் அவன் பின்னே தொடர்ந்தார்.

நந்திதேவர் அர்ச்சுனனிடம் அர்ச்சுனா, பூவுலகில் பக்தர்கள் பூஜித்து அர்ச்சிக்கும் வில்வங்கள், மலர்கள்யாவும் கயிலாயம் சேர்ந்துவிடும். அவரவர் அர்ச்சனைகளுக்கேற்ப பல்வேறு அளவுகளில் ஆங்காங்கே குவியலாக இருப்பதைப் பார்.

இவற்றை இறைவன் தனது திருக்கண்களால் நோக்கி அர்ச்சித்தவர்களுக்கு அருள்புரிவார்.

அர்ச்சுனா, இதோ, நீங்கள் பூஜை செய்த பூக்கள். இரு கைகள் கொள்ளளவு கொண்டதாக இருக்கின்றன பார் என்றார்.

அப்போது தூரத்தில் புஷ்பங்களாலான பெரிய மலையைக் கண்டு அர்ச்சுனன் வியப்படைகிறான்.

 அர்ச்சுனன் நந்திதேவரே பார்த்து, நந்திதேவரே, பெரிய மலை போன்று குவிந்திருக்கின்ற இந்த புஷ்பமலைக்கு உரியவர் யார்? அவர் எவ்வளவு உயர்ந்த பக்தராக இருக்க வேண்டும்! என்று வினாவினார்.

அதற்கு நந்திதேவர் அவர் வேறு யாருமல்ல, உன் அன்பு சகோதரர் பீமனே, இப்பூவுலகில் அவருக்கு இணையான சிவபக்தி வேறு யாருக்கும் இல்லை என்பதை அம்மையப்பன் அறிவார்கள் என்று கூறினார்.

அர்ச்சுனன் அதை நம்பாமல் சிரித்தபடி யோசித்தான்.

நந்திதேவரே, சிரித்ததற்காக மன்னியுங்கள், பீமன் அண்ணா எங்களுக்காக நாள் முழுவதும் பல்வேறு வேலைகள் செய்துவிட்டு இரவு முழுவதும் காவலும் காப்பார்.

அவருக்குப் பூஜை செய்யவும் அர்ச்சிக்கவும் நேரம் எது? என்று கேட்டார்.

பீமன் வேலைகள் செய்யும்போது நடக்கும்போதும் எல்லாக் காலத்திலும் நமசிவாய என்று எப்போதும் ஜபித்துக் கொண்டிருப்பார்.

எங்கேனும் மலர்த் தோட்டத்தையோ வில்வ மரத்தையோ கண்டால் உடனே சர்வம் புஷ்பம் சிவார்ப்பணம் என்று சொல்லி மானசீகமாக பரமனுக்கு அர்ப்பணம் செய்வார்.

அவ்விதம் வந்து சேர்ந்தவையே இந்த மலர்களும் வில்வ தளங்களும் என்று கூறினார் நந்திதேவர்.

மானசீகமாக அர்ப்பணம் செய்வது இந்த அளவிற்குப் பலன் தருமா நந்திதேவரே என்று வியப்புடன் அர்ச்சுனன் கேட்டார்.

அதற்கு நந்திதேவர் அர்ச்சுனா, பூஜையில் மானசீகமே சிறந்தது. அது சாத்வீகமானது. எளிதில் செய்யக் கூடியது. இறைவன் ஒருவரது மனதைத்தான் பார்க்கிறார்.

அவன் புறத்தில் என்ன செய்கிறான் என்பது கணக்கல்ல என்று கூறினார்.
 அர்ச்சுனனும், கிருஷ்ணனும் சிவபெருமானையும் பார்வதியையும் வணங்கி நின்றனர்.

அப்போது, சிவபெருமாஅர்ச்சுனா, சாட்சாத் நாராயணனே பாண்டவர்களாகிய உங்களின் நண்பனாக கிருஷ்ணர் வடிவில் இருக்கிறார்.

ஏனெனில் நீங்கள் தர்மத்தை உயிராகப் போற்றுகிறீர்கள். தர்மம் எங்கிருக்கிறதோ அங்கு கிருஷ்ணன் இருப்பான்.

கிருஷ்ணன் இருக்குமிடத்தில் வெற்றியும் நிச்சயம் என்று கூறினார்.

அர்ச்சுனன் கைகூப்பி கிருஷ்ணரை பார்த்து, பரந்தாமா, உன்னையும் உனது செயல்களையும் யார் அறிய முடியும்? என் ஆணவத்தை அகற்றி சிவதரிசனம் கிடைக்கச் செய்ததோடு எனக்கு மனத்தெளிவையும் <உண்டாக்கி விட்டீர்கள். உங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் என்று கூறினார்.

 பீமனின் பக்தியால் மகிழ்ந்து இறைவன் லிங்கவடிவில் வெளிப்பட்ட இடம் மகாராஷ்டிராவில் உள்ள நாகேசம். பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான இதனைப் பக்தர்கள் இப்போதும் பூஜித்து, பரமனின் அருளைப் பெற்று வருகிறார்கள்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
மாவீரன் கர்ணன் யுத்த கலத்தில் மற்ற எவராலும் எதிர்க்க முடியா (எதிர் ஆயுதம் இல்லாத) 3 அஸ்திரங்களை கொண்டிருந்தார் விதியின் சூழ்ச்சி அதை பயன் படுத்த முடியாமலே போனது.

1. விஜய தனுசு
2. ருத்ர அஸ்திரம்
3. நாக அஸ்த்திரம்

விஜய தனுசு : (சிவனுடைய தனுசு) சிவ பெருமானும், பரசு ராமரும் மட்டுமே பயன் படுத்திய தனுசு பரசூராமர் கர்ணனை தனக்கு நிகராக கருதிய ஒரே வீரன் கர்ணன் என்பதால் அவருக்கு அளித்தார் இதன் சக்தி அர்ஜுனனிடம் இருக்கும் பாசுபததாஸ்திரத்தை விட பல ஆயிரம் மடங்கு சக்தி படைத்து பசுபததாஸ்திரத்தையும் நொடியில் அளிக்கும் கர்ணன் தேர் சக்கரத்தில் மாட்டி அனைத்தும் மறக்கும் தருவாயில் இது மட்டுமே கர்ணனிடம் மிஞ்சியது இதை அறிந்ததால் கிருஷ்ணர் கர்ணனனை அப்பொழுதே கொள்ள பணித்தார் கர்ணன் அஸ்த்திரம் ஏந்தி விட்டால் கர்ணனை கொள்ள இயலது என்று தெரியும் காரணம் விஜய தனுசின் நானை அறுக்கும் சக்தி சிவனை தவீர வேர் எவராலும் இயலாது...

ருத்ர அஸ்திரம்: சிவபெருமானின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது, ஒரு முறை ஏவி விட்டால் எதிர் இருப்பது எப்பேர்பட்ட சக்தி வாய்ந்த தேவ, கடவுளாக இருந்தாலும் அளித்து விடும் சிவன் எதிர் தோன்றி நின்றால் மட்டுமே கட்டுப்படும் தேவந்திரனுக்கும் கர்ணனுக்கும் ஏற்பட்ட முதல் போரில் கர்ணன் ருத்ர அஸ்திரம் பயன்படுத்த முற்பட்ட போது அதிர்ச்சியுற்றவர் தன் தோல்வியை கர்ணனிடம் ஒப்பு கொண்டார் இதன் பின் விளைவே கர்ணனனை பழி வாங்க வண்டு உருவம் கொண்டு கர்ணன் தொடையை குடைந்து பரசு ராமரின் சாபத்தில் சிக்க வைப்பார்

நாக அஸ்திரம்: இராமாயனத்தில் இந்திரஜுத்தால் ஶ்ரீ இராமர் மீது ஏவபட்டது இதன் தாக்கம் கடவுளையும் கட்டி போட்டது கர்ணன் தன் தாய் குந்திக்கு செய்த சத்தியத்தால் அர்ஜுணன் மீது இரண்டாவது முறை பயன் படுத்த வில்லை அது மட்டுமல்லாது தனி ஒருவனாய் நின்று பாண்டவர் ஐவரையும் கொள்ளும் சக்தி நாகாஸ்த்திரத்தில் உள்ளது...

மற்றைய சக்தி படைத்த அனைத்து அஸ்திரத்திற்க்கும் எதிர் அஸ்திரம் உண்டு ஆனால் கர்ணனிடம் உள்ள இந்த மூன்று அஸ்த்திரத்திற்க்கும் எதிர் இல்லை ஒட்டு மொத்த யுத்த கலத்திலும்..
போரில் ராமனால் வீழ்த்தப்பட்ட ராவணன் மரணப்படுக்கையில் இருந்தபோது, ராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று, " இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவிடக்கூடாது. நீங்கள் எனக்கு உபதேசிப்பதன்மூலம், அதை இந்த உலகம் அறிந்து பயன்பெற வேண்டும். எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்..!

ராவணன் உபதேசித்தான்...

1.உன் சாரதியிடமோ, வாயிற்காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வார்கள்.

2. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

3. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

4. நான், அனுமனை சிறியவன் என்று எடை போட்டதுபோல், எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

5. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

6. இறைவனை விரும்பினாலும், மறுத்தாலும் முழுமையாகச் செய்.

ராமன் வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

எதிரியைக்கூட வணங்கி உபதேசம் பெற்றது எவ்வளவு உயர்ந்த பண்பு அன்பர்களே..!!

பணிவும் அன்பும் எப்போதும் நம்மை உயர்த்தும்.

 பொறுமையைவிட மேலான தவமுமில்லை
திருப்தியை விட மேலான இன்பமுமில்லை
இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்...