செவ்வாய், 30 ஏப்ரல், 2019

தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் அஷ்ட பந்தன மருந்தி'ல் என்னென்ன சேர்ப்பார்கள்?




அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, அஷ்ட பந்தன மருந்து' சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.

அஷ்டபந்தனம் என்றால் என்ன?’’

''கோயில்களில் அஷ்டபந்தன மருந்தை 12 வருடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பது ஆகம நியதி. அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.

உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அஷ்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துகிறார்கள்.

அஷ்டபந்தனம் தயாரிப்பதற்காகவே தமிழில் ஒரு வெண்பா பாடப்பட்டுள்ளது.

'கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி

செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது

நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து

ஆக்கல் அட்டபந்தனம் ஆம்'

இந்த மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும். அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இடிக்கும்போது எருமை வெண்ணெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும். அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஆதாரப்பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்த வசதியாக இருக்கும்.

இந்த மூலிகை மருந்துகளைக் கலந்து இடிப்பதற்கான பாத்திரங்கள், உரல், உலக்கை ஆகியவை மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தப் பொருள்களை எந்தெந்த அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்குக் கால அளவுகள் உண்டு. அஷ்டபந்தனம் தயாரிப்பவர்களின் வாக்கு, மனம், செயல் இவையாவும் இறைச் சிந்தனையிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

இந்த மருந்தை 100 ஆண்டுகள் வரை கெடாதவாறு தயாரிக்க முடியும். ஆனாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தயாரித்து, தெய்வ மூர்த்தங்களுக்கும் பீடத்துக்கும் இடையில் சாத்தி, கும்பாபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் இப்போது வழக்கமாகியுள்ளது.

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

பிராயச்சித்தம்
______________

அன்று சித்திரா பவுர்ணமி. திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் ருத்ரஅபிஷேகம். பதினொரு ரிக்விதுக்களோடு ருத்ராபிஷேகம் ஜபம் காலை 8 முதல் பிற்பகல் 2 வரை பிரமாதமாக ஏற்பாடு செய்தவர் மிராசுதார் நாராயணசுவாமி அய்யர். பெரியவா பக்தர். மறுநாள் ருத்ர பிரசாதத்தோடு காஞ்சியில் பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி நின்றார். புருவத்தை உயர்த்தி
பெரியவா "என்ன விஷயம்?"என்றார். மிராசுதார் பவ்யமாக தேங்கா, பழம், வில்வம் இலை, விபுதி குங்குமம், சந்தனம் எல்லாம் தட்டில் வைத்தார்.

"எந்த கோயில் பிரசாதம்?"

"திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்லே மகாருத்ரம் ஜபம் அபிஷேகம் ஏற்பாடு பண்ணினேன். அந்த பிரசாதம்."

பெரியவா தட்டை பார்த்தா.. "நாராயணசாமி நீ பணக்காரன். தனியாவே பண்ணினியா யாரோடையாவது சேர்ந்தா?"

"இல்லை பெரியவா. நானே தான் பண்ணினேன்!" ("நானே" கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது)

"லோக க்ஷேமத்துக்கு தானே?"

"அப்படின்னு இல்லை. ரெண்டு மூணு வர்ஷமாகவே வயல்லே சரியா அறுவடை இல்லே. வெள்ளாமை போரவில்லை. கவலையோட முத்து ஜோசியரை கேட்டதில் சித்ரா பவுர்ணமியிலே ருத்ர அபிஷேகம் பண்ணு என்று சொன்னார். நல்ல விளைச்சல் வரணும் என்று வேண்டிக்கொண்டு செய்தேன். பெரியவாளுக்கு அபிஷேக பிரசாதம்
கொடுத்துட்டு பெரியவா அனுக்ரகதுக்கும் ...." நாராயணசாமி மென்று விழுங்கிக்கொண்டே நிறுத்தினார்.”

" ஒ! அப்படின்னா நீ ஆத்மார்த்தமாகவோ லோகக்ஷேமதுக்காகவோ பண்ணலை. - பெரியவா கண்ணை மூடிக்கொண்டார். கால் மணிநேரம் நழுவியது. பிரசாதம் தொடப்படவில்லை.

"எத்தனை ரித்விக்குகள் வந்ததா சொன்னே? "

"பதினொன்னு பெரியவா"

"யாராரு, எங்கேருந்தேல்லாம் வந்தா?" –

பெரியவாளுக்கும் மிராசுதாருக்கும் நடக்கும் சம்பாஷணையை அருகில் நின்றுகொண்டிருந்த அனைத்து பக்தர்களும் சிலையாக நின்று கவனித்தனர்.

தன்னுடைய பையிலிருந்து ஒரு நோட்டுப்பு புத்தகம் எடுத்து மிராசுதார் படித்தார் "திருவிடைமருதூர் வெங்கிட்டு சாஸ்திரிகள்,  ஸ்ரீனிவாச கனபாடிகள், ராஜகோபால ஸ்ரௌதிகள்......" பெரியவா இடைமறித்து:

"ஒ! எல்லோருமே பெரிய வேத விற்பன்னர்கள ஆச்சே... உன் லிஸ்ட்லே தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பேர் இருக்கா பாரு?""

மிராச்தார் சந்தோஷத்தோடு " இருக்கு இருக்கு பெரியவா நேத்திக்கு அவரும் வந்தார்.

"பேஷ் பேஷ் வெங்கடேச கனபாடிகள் ரொம்ப படிச்சவா. வேதத்திலே அதாரிட்டி. வயசு அதிகமிருக்குமே இப்போ. கஷ்டப்பட்டுண்டு தான் ருத்ர ஜபம் சொல்லமுடியறதாமே"

துப்பாக்கியில் இருந்து குண்டு புறப்படும் வேகத்தில் மிராசுதார் பதிலளித்தார் :” " ரொம்ப சரியா சொன்னேள் பெரியவா: அவராலே மந்திரமே சொல்ல
முடியலே அவராலே மொத்தத்தில் சொல்லவேண்டிய ருத்ர ஜபம் அளவு கொஞ்சம் குறைஞ்சிருக்கும் என்று எனக்கு வருத்தம். ஏன் அவரை கூப்பிட்டோம் என்று
தோணித்து""

" உன்கிட்ட பணம் இருக்குங்கிறதுக்காக எதை வேணுமானாலும் சொல்லாதே.
தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பத்தி அவருடைய வேத சாஸ்திர அனுபவம் பத்தி உனக்கு தெரியுமா ? அவர் கால் தூசு சமானம் ஆவியா நீ?? பெரியவா கண்மூடிக்கொண்டது : " நேத்திக்கு என்ன நடந்தது என்று எனக்கு புரியறது. நான் கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு? கனபாடிகள் கண்ணை மூடிக்கொண்டு மனசாலே ஜபம் பண்ணிண்டிருக்கும்போது " வாங்கின பணத்துக்கு மந்திரம் சொல்லாமே ஏன் வாய் மூடிண்டிருக்கேள் என்று அவரிடம் போய் கேட்டாயா?" அங்கிருந்த
அனைவரும் வெல வெலத்து நடுங்கிக்கொண்டு இதையெல்லாம் கேட்டுகொண்டிருக்க மிராசுதார் தொப்பென்று கீழே விழுந்து கையால் வாய் மூடி, கண்களில்பிரவாகத்தோடு "தப்பு பண்ணிட்டேன் பெரியவா மன்னிச்சுடுங்கோ. நடந்ததை
தத்ரூபமாக சொல்றேள் "

"அது மட்டும் இல்லையே. எல்லா ரித்விக்குகளுக்கும் தட்சணை எவ்வளவு கொடுத்தே?

"எலெக்ட்ரிக் ஷாக் வாங்கியவன் போல தட்டு தடுமாறிக்கொண்டு நாராயணசுவாமி " தலா பத்து ரூபா கொடுத்தேன்"

“தெரியும். எல்லாருக்குமேவா? " மென்று
முழுங்கிக்கொண்டு விதிர் விதிர்த்துப்போய் நடுங்கிகொண்டிருந்த மிராச்தாரிடம் பெரியவா "எங்கிட்ட சொல்ல அவமானமா இருக்கோ. நானே சொல்றேன் எல்லாருக்கும் பத்து பத்து ரூபா கொடுதுண்டேவந்து கனபாடிகள் கிட்ட வந்து சம்பாவனை ஏழு ரூபா மட்டும் தான் கொடுத்தே. குறைச்சு மந்திரம் சொன்னதாக நினைச்சு ஏழு ரூபா கனபாடிகளுக்கு தகுந்த நியாயமான சம்பாவனையா குடுததில் உனக்கு சந்தோஷம். கனபாடிகள் ஒன்னும் சொல்லாமே சந்தோஷத்தோடு அதை
வாங்கிண்டா அப்படி தானே ??" நாராயணசாமி அய்யர் ஈட்டி பாய்ந்ததுபோல்துடித்தார்.

"பெரியவா நான் திருந்திட்டேன். என்னை மன்னிக்கணும்" என்று வாய் புலம்பிக்கொண்டே இருந்தது. மடத்துலே இருந்த எல்லா பக்தர்களுக்கும்
அதிர்ச்சி. பெரியவாளுக்கு இருக்கும் தீர்க்க தரிசனம் பிரமிக்க வைத்தது.

பெரியவா வீசிய மற்றொரு பிரம்மாஸ்திரம் அனைவரையும் தாக்கியது: கட்டி போட்டது.

"அதோடு போச்சுன்னா பரவாயில்லையே. ராமச்சந்திர அய்யர் வீட்டில் அனைவருக்கும் போஜனம் நடந்ததே. நீ தானே சக்கரைபொங்கல் பரிமாறினே. நெய், திராட்சை, முந்திரி எல்லாம் கமகமக்க அம்ருதமாயிருக்குன்னு எல்லாரும்
திருப்தியா சாப்பிடனும்னு பாரபட்சம் இல்லாம போட்டியா."

நாராயணசாமி நடுங்கினார் துடித்தார். பதில் வரவில்லை மஹா பெரியவாளே தொடர்ந்தார்

"நானே சொல்றேன். நன்னா இருக்கும் இன்னும் கொஞ்சம் என்று கேட்டவாளுக்கெல்லாம் மேலே மேலே பரிமாறினே. கனபாடிகள் இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று நாலு அஞ்சு தடவை கேட்டும் கூட அவர் இலைக்கு மட்டும் போடலை. காதிலே விழாதது மாதிரி நகந்துட்டே. சரியா? இது பந்தி தர்மமா? அவர் மனசு நோகடிச்சு சந்தோஷபட்டே"". இதை சொல்லும்போது பெரியவாளுக்கு ரொம்ப துக்கம் மேலிட்டது. நா தழுதழுத்தது. நாராயணசாமி கூனி குறுகி தலை குனிந்து கை கட்டி மண்டியிட்டு கண்களில் கங்கை வடித்தார்.

அமைதி பதினைந்து நிமிடம். பெரியவா கண்மூடி மெதுவாக திறந்தார். " தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பதினாறு வயசிலேருந்து ருத்ர ஜபம் சொல்பவர். இப்போ எண்பதொன்று வயதிலும் அவர் ருத்ர ஜபம் சொல்லாத கோவில் தமிழ்நாட்டில் இல்லை. அவர் நாடி நரம்பு மூச்செல்லாம் பரமேஸ்வரன். ரத்தம் பூரா ருத்ர ஜபம். ஓடறது. அவர் சிவ ஸ்வரூபம். மகா புருஷன். அவருக்கு நீ பண்ணினது மஹா பாவம்." மஹா பெரியவாள் மேலே பேச முடியாமல் நிறுத்தினார்.

“ நீ பண்ணின அவமானத்துக்கு அப்புறம் என்ன பண்ணினார் அவர் என்று உனக்கு தெரியுமா.? வீட்டுக்கே திரும்பலை. நேரா திருவிடைமருதூர் கோவில்லே மூணு பிரதக்ஷணம் பண்ணிட்டு மகாலிங்கம் முன்னாலே போய் நின்றார். கண்லே தாரை தாரையா நீர்வடிய "அப்பா ஜோதி மகாலிங்கம், நான் உன்னுடைய பக்தன். உன் சந்நிதிலே எவ்வளவோ காலமா நான் ருத்ர ஜபம் பண்ணி நீ கேட்டிருக்கே. இப்போ எனக்கு 81 ஆயிடுத்து. மனசிலே தெம்பு இருக்கே தவிர உடம்பிலே இல்லே. குரல் போய்டுத்து. சக்கரை பொங்கல் ரொம்ப நன்னா இருந்ததே என்று வெட்கத்தை விட்டு அடிக்கடி இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று மிராச்தார்கிட்ட கேட்டுட்டேன். முதல்லே அவர் காதிலே விழலை என்று நினைச்சேன். அப்பறம் தான் புரிஞ்சுது அவருக்கு அதில் இஷ்டமில்லை என்று. இவ்வளவு வயசாகியும் அல்ப விஷயத்துக்கு அடிமையாகிட்டேன். அதுக்கு தண்டனை தர தான் உன்கிட்ட நிக்கறேன் இப்போ. அவா அவா காசிக்கு போய் பிடிச்சதை விட்டுடுவா . நீ தானே காசிலேயும் லிங்கம். அதனாலே இதையே காசியா நினைச்சுண்டு உன் எதிர்க்க பிரதிஞை பண்றேன். இனிமே
இந்த ஜன்மத்திலே எனக்கு சக்கரை பொங்கல் மட்டு மில்லை. சக்கரை சேர்த்த எந்த பண்டமும் இந்த கை தொடாது.” கண்ணை தொடசுண்டு கனபாடிகள் அப்புறம் வீட்டுக்கு போனார்.

நாராயணசாமி நீ இப்போ சொல்லு மகாலிங்கம் நீ பண்ணினதை ஒத்துகொள்வாரா?"" மௌனம் . அனைவரும் கற்சிலையாயினர்.

மணி மூணு ஆயிடுத்து. அன்றைக்கு பெரியவா பிக்ஷை ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லார் கண்களிலும் இந்திய நதிகள். பித்து பிடித்ததுபோல் அனைவரிடமும் திரும்பி “” எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்கோ. பெரியவா தான் என்னை காப்பாத்தனும்” என்று பெரியவா காலடியில் விழுந்தார். அவர் கொண்டு வந்த பிரசாதம் தொடப்படவில்லை. "

பெரியவா “ எல்லாரும் இருங்கோ மகாலிங்க சுவாமியே அனுக்ரகம் பண்ணுவார்" என்றார். எதோ பெரியவா சொல்றதுக்கு காத்திருந்த மாதிரி 65 வயது மதிக்கதக்க ஒரு சிவாச்சாரியார் விபுதி உத்ராக்ஷ மாலைகளோடு ஒரு தட்டுடன் வந்தார். "என் பேரு மகாலிங்கம் திருவிடைமருதூர் கோவில் அர்ச்சகன். நேத்திக்கு கோவில்லே ருத்ராபிஷேகம் நடந்தது. பெரியவாளுக்கு பிரசாதம் சமர்பிச்சு ஆசீர்வாதம் வாங்கிண்டு போக வந்தேன்" என்று சொல்லி கோவில் பிரசாதத்தை பெரியவா முன்னால் வைத்து வணங்கினார்..

அவரை தடுத்து பெரியவா " சிவ தீக்ஷை வாங்கிண்டவா எனக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணகூடாது" என்று சொல்லிவிட்டு பிரசாதம் வாங்கிண்டார். அனைவரும் பெற்றனர். மடத்திலிருந்து அர்ச்சகருக்கு பிரசாதம் தரப்பட்டது.

அப்போது தான் அங்கு மிராசுதார்நாராயணசாமி நிற்பதை அர்ச்சகர் பார்த்தார். " பெரியவா இவர் தான் எங்கவூர் மிராசுதார் நாராயணசாமி அய்யர். இவா தான் நேத்திக்கு ருத்ர அபிஷேகம் ஏற்பாடு பண்ணினா"
என்று அவரையும் வணங்கிவிட்டு அர்ச்சகர் நகர்ந்தார். நாராயணசாமி ஐய்யர் வாய் ஓயாமல் பெரியவாளிடம் " என் பாபத்தை எப்படி கரைப்பேன். என்ன பிராயச்சித்தம் சொல்லுங்கோ" என்று கதறினார்.

பெரியவா எழுந்து ஒரு நிமிஷம் கண்மூடினார். "நான் என்ன பிராயச்சித்தம் சொல்ல முடியும். தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் மட்டுமே உனக்கு பிராயச்சித்தம் என்ன என்று சொல்லணும்." " பெரியவா, நான் இப்பவே ஓடறேன். "அவர் என்னை மன்னிச்சேன் என்று சொல்வாரா, என்ன பிராயச்சித்தம் பண்ணனும் என்று சொல்வாரா?" நீங்கதான் அருள் செய்யணும்"

பெரியவா ஒரு பெருமூச்சு விட்டார். " உனக்கு ப்ராப்தம் இருந்தா அது நடக்கும்" என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். வெகு நேரமாகியும்
பெரியவா வெளியே வரவில்லை.

மிராசுதார் ஓடினார். அடுத்த பஸ் பிடித்து நேராக தேப்பெருமாநல்லூர் சென்றார். கனபாடிகள் காலில் விழுந்து புரண்டு அழுது மன்னிப்பு கேட்க சென்ற போது கனபாடிகள் வீட்டு வாசலில் ஒரு சின்ன கூட்டம். அன்று காலையில் கனபாடிகள் மகாலிங்கத்தை அடைந்து விட்டார் என்று கூடியிருந்தவர்கள் சொன்னார்கள். மிராசுதார் ஐயோ என்று அலறினார்.
கனபாடிகள் உடல் இன்னும் அகற்றப்படவில்லை. நல்லவேளை கனபாடிகளின் காலை பிடித்து என்னை மன்னிச்சுடுங்கோ நான் மகாபாவி. என்று கதறினார். சுரீர் என்று அப்போது தான் உரைத்தது அதனால் தான் பெரியவா " ப்ராப்தம்" இருந்தால் என்று சொன்னாரா?????????.

***** தன் பாபம் தீர நாராயணசுவாமி எண்ணற்ற மடங்களுக்கும் கோயிலுக்கும் தான தர்மங்கள் எல்லாம் செய்து கடைசியில் காசியில் முக்தியடைந்தார் என்று
கேள்வி.

திங்கள், 22 ஏப்ரல், 2019


#யாக_பூஜையும்_யாக_மண்டபமும்

யாகசாலை அல்லது யாகமண்டபம் என்பது ஒரு திருவோலக்கம் போன்றது. அதாவது, ஒரு பெரும் சக்கரவர்த்தி தனது பரிவாரங்களோடு, அத்தாணி மண்டபத்தில் எழுந்தருளியிருப்பது போல நாமும் நமது இறைவனை ஆவரண தேவ தேவியர்களோடு, சகல பரிவாரங்கள் சகிதம் யாகமண்டபத்தில் வீற்றிருக்கச் செய்கின்றோம்.

இவ்வாறு திருவோலக்கத்தில் எழுந்தருளியிருக்கிற பேரரசனுக்கு சகல வித உபசாரங்கள் வழங்குவது போல, இவ்வாறு மஹா யாக மண்டபத்தில் வீற்றருளும் இறைவனுக்கு, நாம் சகல உபசாரங்கள் வாழ்த்தி வழங்கிப் போற்றுகின்றோம்.

இவ்வாறு இந்த யாக உருவாக்கத்திலும், யாக பூஜையிலும், மந்திர பூர்வமாகவும், பாவனை மூலமும், கைலாசம், வைகுண்டம், ஸ்ரீபுரம் போன்ற தோற்றம் நம் பூமியில் உருவாகின்றது. இந்த வழிபாடுகள் நிறைவு பெற்றதும், தேவ தேவியர்களை அவரவர் இருப்பிடத்திற்கு (யதாஸ்தானம்) அனுப்பி வைப்பார்கள். பிரதான மூர்த்தியும், அஷ்ட வித்யேஸ்வரர், பீடசக்தி என்கின்ற ஸ்நபன திருமஞ்சன கும்பங்கள் அபிஷேகம் மூலம் திருவுருவத்துடன் சேர்க்கப்பெறும்.

ஆலயங்களில் நடக்கிற யாக பூஜையினில், இரண்டு மிகச்சிறப்பானது. ஓன்று வருடம் தோறும் குறிப்பிட்ட காலத்தில் நடக்கிற மஹோத்ஸவ யாகம், மற்றையது மஹா கும்பாபிஷேக யாகம்.

இதனை விட சங்காபிஷேகம், பவித்திரோத்ஸவம், பிராயச்சித்தம், விசேஷ அபிஷேகம், போன்றவற்றிலும் யாகபூஜைகள் நடைபெறுகின்றன.

இவற்றுள் மஹோத்ஸவம் என்கிற வருடாந்த பெருந்திருவிழாவுக்கான யாகசாலை நமது தென்னகத் திருக்கோயில்களில் தனியே ஆகம விதிப்படி அமைக்கப்பெற்றிருக்கக் காணலாம். (அநேகமாக திரு கோயில்களில் ஈசான பாகத்தில் மேற்கு நோக்கியதாக இந்த யாகசாலை அமைந்திருக்கும்) மற்றைய விசேட யாகங்களுக்காக யாகசாலை தற்காலிகமாக, அழகாக அமைக்கப்பெறக் காணலாம்.

மஹோத்ஸவம், கும்பாபிஷேகம் இந்த நிகழ்வுகளில் எல்லாம் தினமும் இரண்டு வேளையாக பூஜை நடக்கக் காணலாம். சாதாரணமாக யாகசாலை நாற்புறமும் வாயில்களை உடையதாகவும், 16 தூண்களுடையதாகவும், நடுவில் சதுர வேதிகை (மேடை) உடையதாகவும், இருக்கும்.
தெரிந்த கதை தான்... தெரியாத சில விஷயங்களும் எழுதப்பட்டு உள்ளது... படிப்போம்.. அறிவோம்..

கண்ணப்பநாயனாரின் பக்தியை போற்றும் ஆதி சங்கரர்"

சிவானந்த லஹரியின் சுலோகத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் பக்தியைக் கண்டு, 'இதுவல்லவோ பக்தி' என்று புகழ்கிறார் ஆதிசங்கரர்.

கண்ணப்ப நாயனாருக்கு ஆதியில் அமைந்த பெயர் திண்ணன். நாகரீகத்தின் பக்குவமோ, படிப்பின் பாதிப்போ சிறிதும் இல்லாத ஓர் எளிய முரட்டு வேடன்.

திருக்காளத்தியில் காட்டுக்கு நடுவேயுள்ள சிவலிங்கத்தை 'இவர்தான் இறைவன்' என்று எப்படியோ உணர்ந்து கொண்டான்.

அவன் பூஜை முறைகள் எதுவும் தெரியாதவன். ஒரு கையில் கொடிய வில்; மறு கையில் கடித்துத் தின்று ருசி பார்த்து இறைவனுக்குப் படைப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு துண்டு பன்றி மாமிசம்; வாய் நிறைய ஸ்வர்ணமுகி என்னும் பொன்முகலி ஆற்றின் நீர்; தலையில் பலவிதமான காட்டுப்பூக்கள்; காலில் பழஞ்செருப்பு; தோளில் அம்புறாத்தூணி என இந்தக் கோலத்தில் அங்கு ஒவ்வொரு நாளும் வந்து, அங்கு ஏற்கெனவே சிவகோசாரியர் என்ற முனிவரால் பூஜிக்கப்பட்டிருக்கும் மலர்களை தன் செருப்புக் காலால் ஒதுக்கிவிட்டு, வாயிலிருந்து ஆற்றின் நீரை லிங்கத்தின்மேல் உமிழ்ந்து, பன்றி மாமிசத்தைப் படைத்து காட்டுப்பூக்களை இறைவனுக்குச் சூட்டி, தெரிந்த மட்டும் வாயாற வாழ்த்தி மனதார வணங்கி அகமகிழ்ந்து போகிறான் திண்ணன்.

ஐந்து நாள்களாக தொடர்ந்து பார்த்து அருவறுப்பும் பயமும் கலந்த உணர்வுடன் இறைவனிடம் மனமுறுகி வேண்டுகிறார் சிவாகோசாரியர்.

அவர் கனவில் தோன்றிய இறைவன், "மறைந்திருந்து பார், உன்னதமான அவனது பக்தியை அறிவாய்!'' என்றருளினார்.

மறுநாள் வழக்கம் போல அதே கோலத்தில் வருகிறான் வேடன். இறைவனைக் கண்டதும் அதிர்ந்து போகிறான்.

இறைவனின் வலது கண்ணிலிருந்து ரத்தம் அருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது. "ஐயோ! நான் என்ன செய்வேன்?'

ஓடோடிச்சென்று சிவலிங்கத் திருமேனியைக் கட்டிக்கொண்டு கதறி அழுகிறான் திண்ணன். பின்னர் பச்சிலைகளைக் கொண்டு வந்து இறைவனுடைய கண்ணில் பிழிகிறான்.

 ஆனால் ரத்தம் நின்றபாடில்லை. "ஊனுக்கு ஊன், கண்ணுக்கு கண்' என்று சொல்கிறது அவன் மனம். உடனே கூரிய அம்பினால் வலது கண்ணில் குத்தி கண்ணைப் பிடுங்கி எடுத்து குருதி வடியும் இறைவனின் கண்ணில் அப்புகிறான்.

என்ன ஆச்சரியம்!

 இறைவனுடைய கண்ணில் ரத்தப்பெருக்கு நிற்கிறது. ஆனந்தக் கூத்தாடுகிறான் திண்ணன்.

சில நொடிப்பொழுதில் அவனது மகிழ்ச்சி மறைந்தது. இப்போது இறைவனின் இடது கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியது.

திண்ணன் தயங்கவில்லை. "இன்னொரு கண்ணையும் கொடுப்பேன்' என்று தனது இடது கண்ணை எடுத்துவிட எண்ணினான். "அப்படியானால் இறைவனின் இடது கண்ணை எப்படி அடையாளம் காண்பது?' என தனது செருப்புடன் கூடிய காலை இறைவனின் இடது கண்ணில் மேல் வைத்தபடி தனது கண்ணைப் பிடுங்க முனைந்தபோது, "கண்ணப்பா, நில்!'' என்றபடி அவனது கரத்தைப் பிடித்து தடுத்து திருக்காட்சி அளித்து அழைத்துச் செல்கிறார் இறைவன்.

மெய்சிலிர்த்துப் போகிறான் திண்ணன். இறைவனின் அற்புதமான லீலையை மறைந்திருந்து பார்த்த சிவகோசாரியர் கண்ணீர் மல்க இறைவனையும் கண்ணப்பனையும் துதிபாடி மகிழ்கின்றார்.

இந்த கதையை நினைவு கூர்கிறார் ஆதிசங்கரர். கண்ணப்பன் ஒரு கண்ணை இறைவனுக்கும் கொடுத்துவிட்டு மறுகண்ணும் கொடுக்கத் தயாராகும் பொழுது, இறைவனே அவன் செயலைத் தடுத்து, "நில்லு கண்ணப்ப' என்று கூறி அருள்புரிந்தார்.

பக்தியில் கண்ணப்பனுக்கு நிகர் யாரும் இல்லை. அவனே பக்தர்களில் முதன்மையானவன் என்கிறார் சங்கரர்.

 ஆதிசங்கரர், கண்ணப்பனின் இறைபக்தியை தமது சிவானந்த லஹரியில் 63 ஆவது சுலோகமாக பதிவு செய்கிறார். அந்த சுலோகம்:

"மார்க்காவர்த்தித பாதுகா பசுபதே
ரங்கஸ்ய கூர்ச் சாயதே
கண்டூஷாம்பு நிஷேசனம் புர ரிபோர்
திவ்யாபி ஷேகாயதே!
கிஞ்சித்பக்ஷித மாம்ஸ சேஷ கபலம்
நவ் யோபஹா ராயதே
பக்தி: கிந் நகரோத்ய ஹோ
வநசரோ பக்தாவதம் ஸôயதே''
அஷயம்_என்றால்
வளர்தல்_என்று_பொருள்

எதை வழங்குகிறோமோ அதுதான் வளருமே தவிர எதை வாங்குகிறோமோ அது வளராது.

ஓருவருக்கு வழங்குவதற்காக வாங்கலாம். எதை பிறருக்கு கொடுக்கிறோமோ அது வளரும்.
தண்ணீர் பஞ்சம் வராமலிருக்க இன்று பிறருக்கு குடிநீர் வழங்கலாம்.

வஸ்திரம் அன்னம் அதுவும் தயிர்சாதம் தங்கம் வெள்ளி இதுபோல் எதை பிறருக்கு கொடுத்தாலும் அது வளரும்.
தானம் செய்ய செய்ய தான் தனம் வரும்.

தானம் என்கிற சொல்லிலேயே தனம் இருக்கிறது பாருங்கள்.

இது ஓரு புண்யகாலம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களுடைய ஆசீர்வாதம் அனுக்ரஹம் நமக்கு அனைத்தையும் அஷயமாக அள்ளித்தரும்.

இதில் துளிகூட சந்தேகமில்லை.


கோவில் மணி ஓசையும், அதன் பின்னணி அறிவியலும் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

கோவிலுக்கு செல்லும் அனைவரும் ஏன்? எதற்கு? என தெரியாமல் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவில் மணி அடிப்பது. சில கோவில் மணி அடித்துவிட்டு வணங்கினால் கடவுள் காது கொடுத்து கேட்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அது அல்ல உண்மை. பூஜை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்பதை கடந்து, இதன் பின் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது.
ஆகம சாஸ்திரங்களின் படி கோவில் மணியில் இருந்து வெளிப்படும் ஒழி எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கிறது. இது, உங்களுள் நல்ல ஆற்றல் பெருக செய்கிறது.
கோவில் மணி ஒலியின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமும் இருக்கிறது. ஆம், கோவில் மணி மனிதனின் மூளை செயற்திறன் மேலோங்க செய்யும் ஒரு அறிவியல் பின்னணி இருக்கிறது.
கோவில் மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் இருக்கிறது. கோவில் மணிகள் கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்களால் ஆனவை ஆகும். இதில் இருந்து வெளிவரும் ஒலி மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றன.
கோவில் மணியை அடித்தவுடன், அதிலிருந்து ஒரு கூர்மையான சப்தம் உற்பத்தியாகிறது, இந்த எதிரொலி குறைந்தபட்சம் 10 - 15 நொடி வரை நீடிக்கும். இந்த எதிரொலியின் காலம், உங்கள் உடலில் உள்ள ஏழு குணப்படுத்தும் மைய்ய புள்ளிகளை செயல்பட வைக்க போதுமானதாக இருக்கிறது.
மேலும், இந்த ஒலி உங்களுள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றியும், உங்கள் கவன குவியல் சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
கோவில் மணி ஒலி, கவன குவியலை மேம்படுத்தி உங்களை விழிப்புடன் இருக்க செய்கிறது. மேலும், மூளையின் செயற்திறனை இதன் மூலம் அதிகரித்து, உங்கள் வேலையில் நேர்மறையாக செயல்பட செய்கிறது. இதன் மூலம் மனம் அமைதி அடையும், நிம்மதி பெறும்.

புதன், 17 ஏப்ரல், 2019

**ஸ்ரீ குருவாக்ய பரிபாலனம்**
  ***தர்மசாஸ்திரம்***

1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

*தர்மசாஸ்திரம்*

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

ஆதிசங்கரபகவத்பாதாள் தனது திக்விஜயத்திற்கு பிறகு மோக்ஷபுரி என போற்றப்படும் காஞ்சிமாநகரத்தை வந்தடைகிறார். அங்கே தனக்கென ஒரு ஆஸ்ரமத்தை அமைத்திக் கொண்டார். தனது 32 வயதிற்குள் வியக்க தக்கும் வகையில் சாதனை புரிந்தார்.
அவரின் வாழ்க்கையில் சில நிகழ்வுகள்:- பிறந்தது -- கலி வருடம் 2593 (கி.மு 509), சந்நியாசம் மேற்கொண்டது -- கலி 2603 (கி.மு 499), த்வாரகா மடத்தை அமைத்து அதன் தலைவராக ஹஸ்தமாலகரை நியமித்தது -- கலி 2611 (கி.மு 491), சீடர் தோடகாச்சாரியாரை தலைவராகக் கொண்டு ஜோதிஷ் மடத்தை ஸ்தாபித்தது கலி 2616 (கி.மு 486), பத்மபாதரை தலைவராக்கி கோவர்த்தன மடத்தை ஸ்தாபித்தது -- கலி 2617 (கி.மு 485), சிருங்கேரியில் சீடர் சுரேஸ்வரை தலைவராக்கி சிருங்கேரி மடத்தை ஸ்தாபித்தது -- கலி 2618 (கி.மு 484), ஸர்வக்ஞ பீடமென காமகோடி பீடத்தை காஞ்சியில் உருவாக்கியது -- கலி 2620 (கி.மு 482) ஆதி சங்கரர் காஞ்சியில் முக்தியடைந்தாது -- கலி 2625(கி.மு477).
இவர் கைலாசத்திலிருந்து ஐந்து ஸ்படிக லிங்கங்களை கொண்டு வந்தார். அவைகள் இப்போதும் கீழ்க்கண்ட இடங்களில் உள்ளன.
முக்தி லிங்கம் - கேதார்நாத்

வர லிங்கம் - நேபாளம்

போக லிங்கம் - சிருங்கேரி மடம்

மோக்ஷ லிங்கம் - சிதம்பரம்

யோக லிங்கம் - காஞ்சி காமகோடி மடம்

காஞ்சியில் மடம் நிறுவி அதன் ஸ்தாபராக விளங்கிய பின் இதுவரை 69 பேர் காஞ்சி மடத்தின் தலைமை பொறுப்பை பெற்றுள்ளனர். மறைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரி 69வது தலைமைப் பொறுப்பை வகித்து சமீபத்தில் முக்கியடைந்தார். தற்போது இந்த மடத்தின் 70வது தலைமை பொறுப்பை அலங்கரிக்கிறார் விஜயேந்திரர்.
இதுவரை தலைமை ஏற்றவர்களின் விபரங்களை எளிமையாக பார்ப்போம்.

1. ஆதி சங்கரபகவத்பாதாள்
இவரே காஞ்சி மடத்தின் ஸ்தாபகர். இங்கு அவர் ஸர்வக்ஞ பீடத்தின் தலைமையை ஏற்றார். ஆதிசங்கரர் தனது சிறுவயதிலேயே சந்நியாசம் பூண்டார். அதே போல் காஞ்சி மடத்திற்கு அதிபதியாகிறவர்கள் ப்ரம்மசரியத்திலிருந்து நேராக சந்நியாசம் பெறவேண்டும். அவர்களின் எல்லோருடைய திருநாமத்துடன் “இந்திர சரஸ்வதி” சேர்க்கப்படும்.

2 ஸ்ரீ சுரேஸ்வர :-
இவர் மஹிஸ்மதியை சேர்ந்தவர், மந்தனமிஸ்ரர் என்ற பெயரில் வாதிட்டு தோற்று, ஆதிசங்கரரின் சீடரானார், இவர் காஞ்சியில் முக்தி அடைந்தார். கி.மு 407, இவர் எழுதிய நூல்கள் வாதிக, நைஷ்கர்ம்ய சித்தி, இவரின் சிலை காமகோடிபீடத்திலுள்ளது. தினமும் அவருக்கு பூஜை செய்வர். இன்றும் மந்தனமிஸ்ர அக்ர ஹாரம் காஞ்சியிலுள்ளது. இவருக்கு பிறகு வந்த ஆச்சார்யர்கள் அனைவருக்கும் இந்திர சரஸ்வதி பட்டம் வழங்கப்பட்டது.

3. ஸ்ரீஸர்வக்ஞாத்மன் சரஸ்வதி:-
தாமிரபரணி தீரத்திலிருந்து வந்தவர், ஏழு வயதில் சந்நியாசம் பெற்றார், ஸ்ரீ சுரேஸ்வரரின் கீழ் பாடம் பயின்றவர், இவர் எழுதிய நூல்கள்--ஸர்வக்ஞ விலாசம், சம்க்ஷேப ஸரீரகா, காஞ்சியில் கி.மு 364ல் முக்தியடைந்தார்.

4. ஸ்ரீஸத்யபோதேந்திர சரஸ்வதி:-
இவர் சேர நாட்டை சேர்ந்தவர், இவரும் சங்கரரின் பாஷ்யத்திற்கு உரை எழுதியுள்ளார், காஞ்சியில் கி.மு268ல் முக்தியடைந்தார்.

5. ஸ்ரீஞாநேந்திர சரஸ்வதி:-
இவர் எழுதிய நூல் “சந்திரிகா”, காஞ்சியில் கி.மு 205ல் முக்தியடைந்தார்.

6. ஸ்ரீசுத்தானந்தேந்திர சரஸ்வதி:
வேதாரண்யத்தை சேர்ந்தவர், காஞ்சியில் கி.மு 124ல் முக்தியடைந்தார்.

7. ஸ்ரீஆனந்த கணேந்திரசரஸ்வதி:-
சேரநாட்டை சேர்ந்தவர், சங்கர பாஷ்யத்திற்கு உரை எழுதியவர், காஞ்சியில் கி.மு 55ல் முக்தி யடைந்தார்.

8. ஸ்ரீகைவல்யானந்த யோகேந்திரசரஸ்வதி:-
திருப்பதியை சேர்ந்தவர், காஞ்சியில் கி.பி 28ல் முக்தியடைந்தார்.

9. ஸ்ரீக்ருபா சங்கரேந்திரசரஸ்வதி:-
ஆந்திர நாட்டை சேர்ந்தவர், ஆதிசங்கரரின் ஷண்மதஸ்தாபனத்தை உறுதிபடுத்தி அதை சீரிய முறையில் மக்களுக்கு அளித்தார், பகதி மார்க்கத்தை எளியமுறையில் செய்ய உதவினார், விந்திய பர்வதத்தில் கி.பி 69&ல் முக்தியடைந்தார்.

10. ஸ்ரீசுரேஸ்வரசரஸ்வதி:--
மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர், காஞ்சியில் கி.பி 127ல் முக்தியடைந்தார்.

11. ஸ்ரீசிவானந்த சித்கணேந்திர சரஸ்வதி:-
கர்நாடகத்தை சேர்ந்தவர், விருத்தாசலத்தில் கி.பி 172ல் முக்தியடைந்தார்.

12. ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி:-
பாலாற்றங்கரையிலிருந்து வந்தவர், சேஷாசல மலையில் கி.பி 235ல் மறைந்தார்.

13. ஸ்ரீசத்சித் கணேந்திரசரஸ்வதி:-
கடிலம் தீரத்திலிருந்து வந்தவர், அவதூத ராக வாழ்ந்தவர், காஞ்சியில் கி.பி 272ல் முக்தியடைந்தார்.

14. ஸ்ரீவித்யா கணேந்திரசரஸ்வதி:-
ஆந்திர நாட்டை சேர்ந்தவர், உக்ரபைரவரை அடக்கியவர் என்பர், அகஸ்திய மலையில் கி.பி 317ல் முக்தியடைந்தார்.

15. ஸ்ரீகங்காதரேந்திரசரஸ்வதி:-
ஆந்திர நாட்டை சேர்ந்தவர், அகஸ்தியமலை யில் கி.பி 329ல் முக்தியடைந்தார்.

16. ஸ்ரீஉஜ்வல சங்கரேந்திரசரஸ்வதி:-
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர், காஷ்மீரம் அருகிலுள்ள காலாபுரியில் கி.பி367ல் முக்தியடைந்தார்.

17. ஸ்ரீசதாசிவேந்திரசரஸ்வதி:-
காஷ்மீரத்தை சேர்ந்தவர், நாசிக் அருகிலுள்ள த்ரயம்பகத்தில் கி.பி 375ல் முக்தியடைந்தார்.

18. ஸ்ரீயோகபிலக சுரேந்திரசரஸ்வதி:-
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர், உஜ்ஜயினில் கி.பி 385ல் முக்தியடைந்தார்.

19. ஸ்ரீமார்த்தாண்ட வித்யாகணேந்திரசரஸ்வதி:
கோதவரி தீரத்தில் கி.பி 398ல் முக்திய டைந்தார்.

20. ஸ்ரீமூக சங்கரேந்திரசரஸ்வதி:-
வானசாஸ்திர வல்லுநர், காஞ்சிகாமாட்சியின் கடாக்க்ஷத்தால் பேசியவர், கோதவரி தீரத்தில் கி.பி 437, முக்தியடைந்தார்.

21. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி:-
வடகர்நாடகத்தை (கொங்கண்) சேர்ந்தவர், காசியில் கி.பி 447ல் முக்தியடைந்தார்.

22. ஸ்ரீ போதேந்திரசரஸ்வதி:-
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர், ஜகந்நாத க்ஷேத்ரத்தில் கி.பி 481ல் முக்தியடைந்தார்.

23. ஸ்ரீசச்சித் சுகேந்திரசரஸ்வதி:-
ஆந்திரவிலுள்ள ஸ்ரீகாகுலத்தை சேர்ந்தவர், சுப்ரஹமண்ய பக்தர், ஜகந்நாதக்ஷேத்ரமருகில் கி.பி 512ல் முக்தியடைந்தார்.

24. ஸ்ரீசித் சுகேந்திரசரஸ்வதி:-
கர்நாடகத்தை(கொங்கண்) சேர்ந்தவர், இவர் கொங்கணத்திலேயே வாழ்ந்தார், ரத்னகிரியில் கி.பி 527ல் முக்தியடைந்தார்.

25.ஸ்ரீசச்சிதாநந்த கணேந்திரசரஸ்வதி:-
ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர், கோகர்ணத்தில் கி.பி 548ல் முக்தியடைந்தார்.

26. ஸ்ரீப்ரஞான கணேந்திரசரஸ்வதி:-
பெண்ணாற்றங்கரையை சேர்ந்த ஊர், காஞ்சியில் கி.பி 565ல் முக்தியடைந்தார்.

27. ஸ்ரீசித் விலாசேந்திரசரஸ்வதி:-
ஹஸ்தகிரியை சேர்ந்தவர் (ஆந்திராவிலுள் ளது), காஞ்சியில் கி.பி 577ல் முக்தியடைந்தார்.

28. ஸ்ரீமஹாதேவ வேலேந்திரசரஸ்வதி:-
ஆந்திராவிலுள்ள பத்ராசலத்தை சேர்ந்தவர், கி.பி 601ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.

29. பூர்ண போதேந்திரசரஸ்வதி:-
காஞ்சியில் கி.பி 618ல் முக்தியடைந்தார்.

30. ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி:-
காஞ்சியில் கி.பி 655ல் முக்தியடைந்தார்.

31. ஸ்ரீ ப்ரம்மாநந்த கணேந்திரசரஸ்வதி:-
கடிலம் நதியிலுள்ள கிரமாத்தை சேர்ந்தவர், காஷ்மீர மன்னால் போற்றப்பட்டவர், காஞ்சியில் கி.பி 668, முக்தியடைந்தார்.

32. ஸ்ரீசிதாநந்த கணேந்திரசரஸ்வதி:-
காய்ந்த சருகுகளை உண்டே வாழ்ந்தவர், கி.பி 672ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.

33. ஸ்ரீ சச்சிதாநந்தேந்திரசரஸ்வதி:-
ஆந்திராவை சேர்ந்தவர், கி.பி 692ல் முக்தியடைந்தார்.

34. ஸ்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி:-
வேகவதி நதிக்கரையிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர், காஞ்சியில் கி.பி 710ல் முக்திய டைந்தார்.

35. ஸ்ரீசித் சுகேந்திரசரஸ்வதி:-
வேதாசலத்தை சேர்ந்தவர், சஹ்யமலையில் கி.பி 737ல் முக்தியடைந்தார்.

36. ஸ்ரீசித் சுகாநந்தேந்திரசரஸ்வதி:-
பாலாற்றங்கரையை சேர்ந்த கிராமம், கி.பி 758ல் கஞ்சியில் முக்தியடைந்தார்.

37. ஸ்ரீவித்யா கணேந்திரசரஸ்வதி:-
சிதம்பரத்தில் கி.பி 795ல் முக்தியடைந்தார்.

38. ஸ்ரீஅபிநவ சங்கரேந்திரசரஸ்வதி:-
சிதம்பரத்தை சேர்ந்தவர், எல்லோராலும் போற்றப்பட்டவர், தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர், காஷ்மீரநாட்டில் பீடமேறியவர், கி.பி 840ல் இமாலயத்தில் (ஆத்ரேய மலையில்)முக்தி யடைந்தார்.

39. ஸ்ரீ சத்சித் விலாசேந்திரசரஸ்வதி:-
கி.பி 873ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.

40. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:-
கர்நாடகத்தை சேர்ந்தவர், கி.பி 915ல் முக்தியடைந்தார்.

41. ஸ்ரீ கங்காதரேந்திரசரஸ்வதி:-
கர்நாடகத்தை சேர்ந்தவர், கி.பி 950ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.

42. ஸ்ரீ ப்ரம்மாநந்த கணேந்திரசரஸ்வதி:-
கி.பி 978ல் காஞ்சியில் முக்தியடைந்தார்,

43. ஸ்ரீஆனந்த கணேந்திரசரஸ்வதி:-
துங்கபத்திரா தீரத்தை சேர்ந்தவர், காஞ்சியில் கி.பி 1014ல் முக்தியடைந்தார்.

44. ஸ்ரீபூர்ண போதேந்திரசரஸ்வதி:-
கர்நாடகத்தை சேர்ந்தவர், கி.பி 1040. காஞ்சியில் முக்தியடைந்தார்.

45. ஸ்ரீபரம சிவேந்திரசரஸ்வதி:-
காஞ்சியில் கி.பி 1061ல் முக்தியடைந்தார்.

46 ஸ்ரீசந்திரானந்த போதேந்திர ஸ்ரஸ்வதி:-
கதாசரித சாகரத்தை எழுதியவர், கி.பி 1098ல் அருணாசலக்ஷேத்ரத்தில் முக்தியடைந்தார்.

47. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி:-
மிகவும் போற்றப்பட்டவர், அருணாசல க்ஷேத்திரத்தில் கி.பி 1166ல் முக்தியடைந்தார்.

48. ஸ்ரீஅத்வைதாநந்த போதேந்திர சரஸ்வதி:-
பெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர், கி.பி 1200ல் சிதம்பரத்தில் முக்தியடைந்தார்.

49. ஸ்ரீமஹா தேவேந்திரசரஸ்வதி:-
தஞ்சாவூரை சேர்ந்தவர், கடில தீரத்தில் கி.பி 1247ல் முக்தியடைந்தார்.

50. ஸ்ரீசந்திர சூடேந்திரசரஸ்வதி:-
இவரும் கடில நதிதீரத்தில் கி.பி 1297ல் முக்தியடைந்தார்.

51. ஸ்ரீவித்யா தீர்த்தேந்திரசரஸ்வதி:-
பில்வாரண்யத்தை சேர்ந்தவர், கி.பி 1385ல் இமாலயத்தில் முக்தியடைந்தார்.

52. ஸ்ரீ சங்கராநந்தேந்திரசரஸ்வதி:-
திருவடைமருதூரை சேர்ந்தவர், கி.பி 1417ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.

53. ஸ்ரீபூர்ணாநந்த சதாசிவேந்திர சரஸ்வதி:
-நாகாரண்யத்தை சேர்ந்தவர், கி.பி 1498ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.

54. ஸ்ரீவ்யாசாசல மஹாதேவேந்திரசரஸ்வதி:-
காஞ்சியை சேர்ந்தவர், கி.பி 1507ல் வ்யாசா சலத்தில் முக்தியடைந்தார்.

55. ஸ்ரீசந்திர சூடேந்திரசரஸ்வதி:-
தென்னாற்காடு மாவட்டைத்தை சேர்ந்தவர், கி.பி 1524ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.

56. ஸ்ரீசர்வக்ஞ சதாசிவபோதேந்திரசரஸ்வதி:-
வடபெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர், கி.பி 1539ல் ராமேஸ்வரத்தில் முக்தியடைந்தார்.

57. ஸ்ரீ பரமசிவேந்திரசரஸ்வதி:
பம்பாதீரத்தை சேர்ந்தவர், மஹான் சதா சிவப்ரம்மேந்திராளின் குரு, கி.பி 1586ல் திருவெண்காட்டில் முக்தியடைந்தார்.

58. ஸ்ரீஆத்ம போதேந்திரசரஸ்வதி:-
விருத்தாசலத்தை சேர்ந்தவர், இவர் சதா சிவப்ரம்மேந்திராளை குருரத்னமாலிகாவை எழுத சொன்னவர், கி.பி 1638ல் தென்பெண் ணாற்றங்கரையில் முக்தியடைந்தார்.

59. ஸ்ரீபகவன்நாம போதேந்திரசரஸ்வதி:-
காஞ்சியை சேர்ந்தவர், நாமசங்கீர்த்தனத்தின் மகிமையை எடுத்துரைத்தவர், கி.பி 1692ல் கோவிந்தபுரத்தில் (கும்பகோணமருகில்) முக்தியடைந்தார்.

60. ஸ்ரீஅத்வைதாத்ம ப்ராகசேந்திரசரஸ்வதி:-
கி.பி 1704ல் காஞ்சியில் முக்தியடைந்தார்.

61. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:-
கி.பி 1746ல் திருவொற்றியூரில் முக்தியடைந்தார்.

62. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி:-
இவர் காலத்தில் தான் போரினால். மடத்தை கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது, கி.பி 1783ல் கும்பகோணத்தில் முக்தியடைந்தார்.

63. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:-
கும்பகோணத்தை சேர்ந்தவர், கி.பி 1813, கும்பகோணத்தில் முக்தியடைந்தார்.

64. ஸ்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி:-
இவர் கோவிந்த தீக்ஷதர் வம்சத்தை சேர்ந்தவர், கி.பி 1851ல் கும்பகோணத்தில் முக்தியடைந்தார்.

65. ஸ்ரீசுதர்சன மஹாதேவேந்திரசரஸ்வதி:-
திருவடைமருதூரை சேர்ந்தவர், கி.பி 1891ல் இளையாத்தங்குடியில் முக்தியடைந்தார்.

66. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி:-
உடையம்பாக்கத்தை சேர்ந்தவர், கி.பி 1907ல் கலவையில் முக்தியடைந்தார்.

67. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:-
ஏழுநாட்களே பீடத்தில் இருந்தார், கி.பி 1907ல் கலவையில் முக்தியடைந்தார்.

68. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி (மஹா பெரியவா):
தென் ஆற்காடு மாவட்டமான விழுப்புரத்தில் மே 20, 1894 ஆம் ஆண்டு அனுராதா விண்மீனில் கன்னட இசுமார்த்த பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் சுவாமிநாதன் என்பதாகும். காஞ்சியில் ஜனவரி மாதம் 8ம்நாள் 1994ல் முக்தியடைந்தார். இவர் சரியாக 100 வருடங்கள் வாழ்ந்து தனது முக்தியடைந்தவராவார்.

69. ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே இருள்நீக்கி என்ற கிராமத்தில் 1935 ஜூலைமாதம் 18ம் தேதி அன்று, சுப்ரமணியம் மகாதேவன் என்ற இயற்பெயரைக் கொண்டு பிறந்தார். நம் இருளை நீக்கவேண்டும் இவரின் அவதாரம். ஜயேந்திர சரஸ்வதி, தனது 19 வது வயதில், 22 மார்ச் 1954 அன்று காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர் 40 ஆண்டுகள் கடந்து, ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மறைவிற்குப் பின் 1994ம் ஆண்டில் காஞ்சி சங்கர மடத்தின் 69 வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார். 2018 பிப்ரவரிமாதம் 28ம் தேதி முக்தியடைந்தார்?

70. ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி:
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள “தண்டலம்“ எனும் கிராமத்தில், 1969 ஆம் ஆண்டு, மார்ச் 13 இல் பிறந்தவர். சங்கர நாராயணன் என்ற இயற்பெயருடன் திகழ்ந்தவர் 1983 ஆம் ஆண்டு மே மாதம் 29 இல் தனது 14 ஆவது வயதில், அவரது முன்னைய 69 ஆவது சங்காரச்சார்யர் (குரு) இந்து சமயத்தின் காஞ்சி காமகோடி பீடாதிபதியான, ஜயேந்திர சரஸ்வதி 2018 பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஜெயேந்திரரின் முக்திக்குப்பின் 1 மார்ச் 2018ம் தேதி சங்கரமடத்தின் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார்?

திங்கள், 15 ஏப்ரல், 2019

மருதாணி

அம்பிகைக்கு உகந்த வாசனை பொருட்களில் ஒன்று மருதாணி ஆகும். வெறும் கைகளோடு பூஜை செய்வதை விட அம்பிகைக்கு உகந்த சிவப்பு வண்ணத்தோடும், நல்ல வாசனையோடும் நம் கைகளில் மருதாணி  வைத்து கொண்டு அம்பாளுக்கு தூப, தீப, ஆராதனைகள் செய்யும் போது தேவி இன்னும் மகிழ்கிறாள். மற்ற காலங்களில் வைத்து கொள்ளாவிட்டாலும் நவராத்ரி காலங்களில் ஆவது அவசியம் வைத்துக்கொண்டு பூஜிக்கலாம்.

சிறந்த அம்பாள் பக்தையாக விளங்கிய ஒரு பெண்மணிக்கு தனது கணவருக்கு வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மருத்துவமனை அணுக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றும் இருப்பினும் உயிர் பிழைப்பது கடினம் என்றும் தேதி வைத்துவிட்டனர். மிகவும் வருத்தப்பட அந்த பக்தை ஒரு ஸ்ரீவித்யா உபாசகரை நாடினார். அந்த பக்தைக்காக அம்பாளிடம் பிரார்த்தித்த உபாசகர் 5 வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு சென்று வரும் சுமங்கலி பெண்களுக்கு மருதாணி வைத்து வேண்டிகொள்ளுமாறு சொன்னார். 4 வெள்ளிக்கிழமைகள் செய்தானது. 5 ஆம் வாரம் ஆலயத்திற்கு சோதனையாக ஒருபெண்களும் வரவில்லை, பயந்த பக்தை அம்பாளை பிரார்த்தித்தாள். கருணை கொண்ட அம்பிகை சிறு பெண் (பாலா) ரூபத்தில் கோயிலுக்குள்  ஓடி வந்தாள். அக்கா எனக்கு மருதாணி வச்சிவிடறீங்களா? என கொஞ்சி மழலையாக கேட்டாள். சுமங்கலிக்கு தானே வைக்கவேண்டும், வந்ததோ சிறு பெண் என தயங்கிய பக்தை அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு, ஆடம் பிடித்த குழந்தைக்கு கைகளில் கொப்பி கொப்பியாக மருதாணி வைத்து விட்டு, நான் கொஞ்சம் மருதாணி தருகிறேன் நீ சென்று உன் அம்மாவுக்கும் வைத்து விடு என்று கேட்டுக்கொள்ள அப்படியே செய்யவதாக சொல்லிவிட்டு ஆலயம் விட்டு ஓடிவிட்டாள். வீட்டிற்கு வந்து அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு மறுநாள் அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டு, சோதனை செய்த போது மருத்துவர்கள் வியந்தனர், புற்றுநோயாக மாற இருந்த செல்கள் அனைத்தும் சாதாரண செல்களாக மாறிவிட்டதாகவும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறிவிட்டனர். வியந்த நன்றிப்பெருக்கோடு ஸ்ரீவித்யா உபாசகரிடம் சென்று சுவாமி நான் 5ஆம்வாரம்  பூர்த்தி செய்ய முடியவில்லை சுமங்கலிக்கு வைக்கல. ஆனாலும் அம்பாள் திருவருள் மூலம் கணவர் நலம் பெற்றார் என்றார். அப்போது சிரித்த ஸ்ரீவித்யா உபாசகர், வந்தது சாஃஷாத் அம்பிகை தான் என்றும், அவளுக்கே மருதாணி வைக்கும் பெரும் பேறு உன் பக்தியால் கிடைத்தது என்று கூறினார். கண்ணீர் மல்க அம்பிகைக்கு நன்றி சொன்னார் அந்த பக்தை..

 நாமும் அம்பாளை பூஜிக்கும் தருணம் மருதாணி வைத்துக்கொள்ளலாம், நவராத்ரி காலங்களில் இல்லத்திற்கு வரும் பெண்களுக்கும் மருத்துவ குணம் நிறைந்த மருதாணி வைத்துவிடலாம். அம்பிகை அருள் பெறலாம்..  ஜெய ஜெய ஜெகதாம்பிகே ஜெய ஜெய காமாக்ஷி!

மருதாணியின்மஹிமை
=======================

 ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.

“எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.
அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்
கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.

அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.
அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.

வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.
ஸ்ரீ சக்கர மத்தா லலிதாம்பாள்.

அனைத்து தெய்வங்கள் பசுவில் உள்ளது

பசுவிற்கு உணவளித்தால் வரும் பலன்
திங்கள்தோறும் வாழைப்பழம், புல், அகத்திக்கீரை பசுவிற்கு அளித்தால் தாய் மற்றும் தகப்பன்வழி நமக்கு வந்த தோஷங்கள் நீங்கும்.

செவ்வாய்தோறும் தண்ணீருடன் புல் கொடுத்தால் இடம், நிலம் வீடு அமையும்

புதன் தோறும் பசுவிற்கு புல் கொடுத்துவந்தால் நல்ல வேலை கிடைக்கும்

வியாழன் தோறும் அரிசிக்கஞ்சி அளித்தால் பூர்வஜென்ம பாவங்கள் நீங்கும்

வெள்ளிதோறும் பசுவிற்கு உணவளித்து பூஜை செய்தால் மஹாலட்சுமியின் அருள் கிடைக்கும்

சனிதோறும் அகத்திக்கீரையுடன் புல் மற்றும் தண்ணீர் அளித்தால் இந்த ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள் தொலையும்

ஞாயிற்றுக்கிழமை தோறும் பசுவிற்கு உணவளிக்க நல்ல கண் பார்வை கிடைக்கும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

அஷ்டமி தோறும் பசுவினை ஒருமுறை வலம் வந்து உணவளித்தால் கொடுத்த கடன் / வாராக்கடன் கிடைக்கும்

துவாதசி தோறும் பசுவிற்கு உணவளிக்க ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளித்த பலன் கிட்டும்.

தினமும் பசுவினை குளிப்பாட்டி பராமரித்து உணவளித்து நோய்களில் இருந்து காத்து கன்றுக்கு அளித்த பால் போக மீதமுள்ள பால் கறந்து தெய்வத்திற்கு அபிஷேகத்திற்கு அளித்து வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் லஷ்மியின் அருள் கிடைக்கும். அதனால்தான் வீட்டில் நம் முன்னோர்கள் பசுவினை காலம் காலமாக வளர்த்து வந்தார்கள். கன்றுக்கு பசிக்கு பால் தராமல் தான் கறந்து பருகினால் மிகப்பெரிய பாவம் என்றும் அந்த பாலினால் அபிஷேகம் செய்தால் பலன்கள் எதுவும் கிட்டாது எனவும் சாஸ்திரம் சொல்கிறது.  
ஸ்ரீ சக்கர மத்தா லலிதாம்பாள்

மஹா லக்ஷ்மி அருளும் விரத பலன்.

1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.
2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
3. மங்கல வாழ்வு அமையும்.
4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

அம்மனை பூஜை செய்ய பூஜாவிதானம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள வழியையே பின்பற்றவும். அப்படிப் பின்பற்ற இயலாதவர்களுக்குச் சில எளிய பூஜா மந்திரங்கள் இதோ :

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே
(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

மஹா லட்சுமி காயத்ரீ :

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்

அர்ச்சனை நாமாக்கள் :

ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம :
ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம:
ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம :
ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம :
ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம :
ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம :
ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம :
ஓம் அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம :
ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம :
ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம :
ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம :
ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் தனலக்ஷ்மியே நமோ நம :
ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம :
ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம :

ஸ்கந்த புராணத்தில் வரலட்சுமி விரதத்தின் மகிமையை சிவபெருமான் விளக்குகிறார். சுமங்கலிகளால் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. செல்வம் மற்றும் மங்கலத்தின் இருப்பிடமாக மகாலட்சுமி விளங்குகிறாள். அறிவுசார்ந்த, நற்குணமுள்ள மக்கட்பேறு, கணவரின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் வேண்டி மகாலட்சுமி பூஜை செய்யப்படுகிறது. இந்த விரதத்தன்று நீராடி, புத்தாடை அல்லது தூய ஆடை உடுத்த வேண்டும். தாமரை கோலம் வரைந்து, அதன் நடுவில் தேர் வடிவ சிற்பம் அல்லது பலகை வைக்கவேண்டும். புது அரிசி, மாவிலை, தேங்காயுடன் கூடிய ஒரு கலசத்தை அதில் வைத்து மகாலட்சுமியை ஆவாஹனம் செய்யவேண்டும். குடத்தில் இருக்கும் புது அரிசி, எதிர்கால வளர்ச்சியையும், சுபிட்சத்தையும் குறிப்பதாகும். கலசத்துக்கு பூஜை செய்த பிறகு, கணேச பூஜையும், பிறகு மங்கல சூத்திரமான மாங்கல்ய பூஜையும் நடத்த வேண்டும். வரலட்சுமி பூஜையின் முக்கிய அம்சமே பெண்ணின் வலக்கையில் ரட்சை(காப்பு) கட்டுவது தான்.

பூஜை முடிந்த பின், குங்குமம், மஞ்சள்கயிறு, பூ , வஸ்திரம் முதலிய மங்கல திரவியங்களை சுமங்கலிகளுக்கு தானமாகக் கொடுப்பர். உணவும் வழங்குவர். லட்சுமிதேவி தன் பக்தர்களுக்கு பொருள் வளத்தை மட்டுமல்லாது உயர் ஞானத்தையும் அருள்கிறாள். அவள் வித்யாசக்தியாக இருந்து, நல்ல கல்வியும் தருகிறாள். தன் பக்தர்களை பகவான் விஷ்ணுவுக்கு அவள் அறிமுகம் செய்து வைக்கிறாள். அவர்களது முக்திக்காக அவரிடம் சிபாரிசு செய்கிறாள். பகவான் விஷ்ணு அல்லது ஹரியான ஸ்ரீமன் நாராயணனின் சக்தியே மகாலட்சுமி. அழகு, கருணை, அழகான இயற்கைக் காட்சி, நாணம், அன்பு, செழிப்பு, இசை, பஞ்ச பூதங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கைகள், மனம், புத்தி, பிராணன் எல்லாமே அவளது தோற்றங்கள். லட்சுமிதேவி இல்லாமல் சந்நியாசிகள் கூட தங்கள் ஆஸ்ரமத்தையோ, பிரசாரத்தையோ நடத்த முடியாது. இல்லறத்தாரைக் காட்டிலும் அவர்களுக்குத் தான் லட்சுமி தேவி அதிகம் தேவைப்படுகிறாள். ஏனெனில், மக்கள் நன்மைக்காக அவர்கள் பெரும் தொண்டு செய்ய வேண்டியுள்ளது. ஆதிசங்கரர் தேவியையும், லட்சுமியையும், சரஸ்வதியையும் தமது பணியில் வெற்றிக்காக வழிபட வேண்டி நேரிட்டது. கடந்த காலத்தில் பெரும் ஆன்மிகப்பணி ஆற்றிய பெருமக்களும் இறை தூதர்களும் அன்னை லட்சுமிதேவியையும், சரஸ்வதியையும் ஆராதித்தவர்களே ஆவர். அன்னை மகாலட்சுமி உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாளாக! அவளது மந்திரத்தை நாம் பாராயணம் செய்வோம்.

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்!.  நன்றி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

நாயன்மார்கள் என்று கூறப்படுபவர்கள் யார்? அவர்கள் எத்தனை பேர்?

63 மூன்று நாயன்மார்கள் யாவர்?

9 தொகை அடியார்கள் என்பவர்கள் யார்?

தனி அடியார், தொகை அடியார் என்றால் என்ன?

நாயன்மார்கள் வரலாறு எப்படி உருவானது?

நாயன்மார்கள் என்பவர்கள் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார்.

நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் அறுபது சிவனடியார்கள் பற்றியே குறிப்பிட்டுள்ளார்.

அந்த நூலினை மூலமாகக் கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார்.

எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.

நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன.

அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன.

இந்த ஊர்வலத்திற்கு "அறுபத்து மூவர் திருவீதி உலா " என்று பெயர்.

****63 நாயன்மார்களின் பெயர்கள் :-****

1. அதிபத்தர்

2. அப்பூதியடிகள்

3. அமர்நீதி நாயனார்

4. அரிவட்டாயர்

5. ஆனாய நாயனார்

6. இசைஞானியார்

7. இடங்கழி நாயனார்

8. இயற்பகை நாயனார்

9. இளையான்குடிமாறார்

10. உருத்திர பசுபதி நாயனார்

11. எறிபத்த நாயனார்

12. ஏயர்கோன் கலிகாமர்

13. ஏனாதி நாதர்

14. ஐயடிகள் காடவர்கோன்

15. கணநாதர்

16. கணம்புல்லர்

17. கண்ணப்பர்

18. கலிய நாயனார்

19. கழறிற்ற்றிவார்

20. கழற்சிங்கர்

21. காரி நாயனார்

22. காரைக்கால் அம்மையார்

23. குங்கிலியகலையனார்

24. குலச்சிறையார்

25. கூற்றுவர்

26. கலிக்கம்ப நாயனார்

27. கோச் செங்கட் சோழன்

28. கோட்புலி நாயனார்

29. சடைய நாயனார்

30. சண்டேஸ்வர நாயனார்

31. சத்தி நாயனார்

32. சாக்கியர் 

33. சிறப்புலி நாயனார்

34. சிறுத்தொண்டர்

35. சுந்தரமூர்த்தி நாயனார்

36. செருத்துணை நாயனார்

37. சோமசிமாறர்

38. தண்டியடிகள்

39. திருக்குறிப்புத் தொண்டர்

40. திருஞானசம்பந்தமூர்த்தி

41. திருநாவுக்கரசர்

42. திருநாளைப் போவார்

43. திருநீலகண்டர்

44. திருநீலகண்ட யாழ்ப்பாணர்

45. திருநீலநக்க நாயனார்

46. திருமூலர் இடையர்

47. நமிநந்தியடிகள்

48. நரசிங்க முனையர்

49. நின்றசீர் நெடுமாறன்

50. நேச நாயனார்

51. புகழ்சோழன்

52. புகழ்த்துணை நாயனார்

53. பூசலார் அந்தணர்
 
54. பெருமிழலைக் குறும்பர்

55. மங்கையர்க்கரசியார்

56. மானக்கஞ்சாற நாயனார்

57. முருக நாயனார்

58. முனையடுவார் நாயனார்

59. மூர்க்க நாயனார்

60. மூர்த்தி நாயனார்

61. மெய்ப்பொருள் நாயனார்

62. வாயிலார் நாயனார்

63. விறன்மிண்ட நாயனார்

******9 தொகையடியார்கள் :-*********

1.தில்லைவாழ் அந்தணர்:

தில்லையில் நடராசப் பெருமானுக்கு வழிபாடு புரியும் அந்தணர்

2.பொய்யடிமை இல்லாத புலவர்:

சங்க காலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்.

3.பத்தராய்ப் பணிவார்:

திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை முழுமுதல் கடவுளாய் வழிபட்ட தொகையடியார்கள்.

4.பரமனையே பாடுவார்:

சிவபெருமானை மட்டுமே பாடுபவர்கள். பிற தெய்வத்தை பாடாதவர்கள்.

5.சித்தத்தை சிவன்பாலே வைத்தார்:

சிவயோக நெறியில் சித்தத்தை வைத்து முக்தியடைந்தவர்கள்.

6.திருவாரூர்ப் பிறந்தார்:

திருக்கயிலாயத்தில் உள்ள சிவகணங்களே இவர்கள்.

7.முப்போதும் திருமேனி தீண்டுவார்:

மூன்று காலங்களில் சிவபெருமானை அபிஷேகம் செய்து அர்ச்சிப்பவர்கள்.

8.முழுநீறு பூசிய முனிவர்:

உடல் முழுவதும் திருநீறு பூசி சிவபெருமானையே பூசித்து வருபவர்கள்.

9.அப்பாலும் அடிசார்ந்தார்:

முத்தமிழ் நாடுகளுக்கு அப்பால் உள்ள நாடுகளில் வாழ்ந்த சிவனடியார்கள்.

63 நாயன்மார்களின் வரலாற்றுச் சுருக்கம் :-

1. திருநீலகண்ட நாயனார்:

கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.

2. இயற்பகை நாயனார்:

சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3. இளையான்குடிமாற நாயனார்:

நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4. மெய்ப்பொருளார்:

தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

5. விறல்மிண்டர்:

சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

6. அமர்நீதியார்:

சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.

7. எறிபத்தர்:

சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

8. ஏனாதிநாதர்:
கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

9. கண்ணப்பர்:

பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.

10. குங்கிவியக்கலயர்:

சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

11. மானக்கஞ்சறார்:

தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

12. அரிவாட்டாயர்:

சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

13. ஆனாயர்:

புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14. மூர்த்தி நாயனார்:

சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.

15. முருக நாயனார்:

வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

16. உருத்திரபசுபதி:

கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.

17. திருநாளைப்போவார்:

தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18. திருக்குறிப்புத் தொண்டர்:

சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19. சண்டேசுர நாயனார்:

சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

20. திருநாவுக்கரசர் சுவாமிகள்:

தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21. குலச்சிறையார்:

பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22. பெருமிழலைக் குறும்பர்:

சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.
சுந்தரருடன் கயிலை சென்றவர்.

23. காரைக்கால் அம்மையார்:

இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24. அப்பூதி அடிகள்:

திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.

25. திருநீலநக்கர்:

திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்

26. நமிநந்தி அடிகள்:

ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.

27.திருஞானசம்பந்தர்:

ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28. ஏயர்கோன் கலிக்காமர்:

இறைவனை தூதுதவராய் அனுப்

பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்:

திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.

30. தண்டி அடிகள்:

கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர்.சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.

31. மூர்க்கர்:

சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.

32. சோமாசிமாறர்:

நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.

33. சாக்கியர்:

அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

34. சிறப்புலி:

சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்:

பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36. சேரமான் பெருமாள்:

சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.

37. கணநாதர்:

சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.

38.கூற்றுவர்:

நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39. புகழ்ச்சோழ நாயனார்:

எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

40. நரசிங்க முனையரையர்:

சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.

41. அதிபத்தர்:

வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை
நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42. கலிக்கம்பர்:

முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43. கலியர்:

வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.

44. சத்தி:

சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45. ஐயடிகள் காடவர்கோன்:

மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46. கணம்புல்லர்:

விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்

47. காரி:

காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48. நின்றசீர் நெடுமாறனார்:

திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49. வாயிலார்:

இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

50. முனையடுவார்:

அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.

51. கழற்சிங்க நாயனார்:

சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52. இடங்கழி:

அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53. செருத்துணை நாயனார்:

சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54. புகழ்த்துணை:

வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.

55. கோட்புலி:

சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56. பூசலார்:

பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57. மங்கையர்க்கரசியார்:

சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58. நேசர்:

சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.
எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59. கோச்செங்கட் சோழர்:

முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

60. திருநீலகண்ட யாழ்ப்பாணர்:

ஞான

சம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்

61. சடையனார் நாயனார்:

சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62. இசைஞானியார்:

சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63. சுந்தரமூர்த்தி நாயனார்:

தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியவர்.  பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

* நாயன்மார்கள் வரலாறு எப்படி உருவானது?

நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார்.

அதன் பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட, அறுபத்து இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து மூவரின் வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாயன்மார்களின் பட்டியல் :-

நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு
விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான்.

சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து, நம்பியாண்டார் நம்பி அடிகள், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார்.

அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.

* பக்தியே பிரதானம்:

நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள்.

மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே.

 பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர் வாழ்ந்தவர்கள்.

இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும்......

எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே......

இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.

பெண்கள் வீட்டோடு இருந்த அக்காலக் கட்டத்தில் காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசி, இசைஞானியார் மற்றும் திலகவதியார், சந்தனத் தாதியார், கமலவதியார், ஆகியோர் சிவ பூஜையே பிரதானமாக கொண்டு.....

சிவனாடியார்களுக்கு தொண்டுகள் பல செய்து.....

முக்தியடைந்தது வியக்கத்தக்க ஒன்று ஆகும்...

ஈசன் இன்றி அணுவும் ஆசையாது, காலனை உதைத்த கருணாமூர்த்தியே தன்னலமற்ற பக்தியுடன் நாம் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவோம்.

நம் துன்பம், வறுமை, நோய் நீங்கி வாழ்வில் வளங்கள் பல பெறுவோம்.

ஓம் நமச்சிவாய.!
நற்றுணையவது நமசிவாயவே..!
திருத்தொண்டத்தொகை - திருவாரூர்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ புற்றிடங்கொண்டார், ஸ்ரீ தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அல்லியம் பூங்கோதை, ஸ்ரீ கமலாம்பிகை

திருமுறை : ஏழாம் திருமுறை 39 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

திருத்தொண்டத்தொகை சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பட்டது. சிவனுடைய அடியவர்களுக்கெல்லாம் தான் அடிமை என்ற பொருள்பட அமைந்த திருத்தொண்டத்தொகை 11 பாடல்களால் ஆனது. திருவாரூர் கோயிலில் இருந்த போது சிவபெருமானே அவருக்குத் "தில்லைவாழ் அந்தணர்" என அடியெடுத்துக் கொடுத்துப் பாடுமாறு பணித்தார் என்பது சைவ மக்களின் நம்பிக்கை. இதுவே சேக்கிழாரின் பெரியபுராணத்துக்கு முதல் நூல் ஆகும். இதை விரிவு படுத்தி அடியவர்களின் வரலாறுகளைப் பெரியபுராணமாகத் தந்தார் சேக்கிழார்.

திருத்தொண்டத்தொகை 72 அடியார்களின் பெயர்களை எடுத்துக்கூறுகின்றது.

இவர்களில் 63 தனி அடியார்களும்,

9 தொகை அடியார்களும் அடங்குவர்.

தனிப்பட்ட ஒருவரை அடியவராகச் சுட்டும் போது அவர் தனி அடியார் எனப்படுவார்.

ஒன்றுக்கு மேற்பட்டவர்களை ஒருங்கே அடியவர்களாகச் சுட்டும் போது அவர்கள் தொகை அடியார் எனப்படுவர்.

63 அடியவர்களுள்.....

60 அடியவர்கள் ஆண்கள்......
3 அடியவர்கள் பெண்கள்.....

பாடல் எண் : 01

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்

விரிபொழில்சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர் நீதிக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 02

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்

ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்

கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன்

கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்

மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன்

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 03

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்

முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்

திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 04

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்

பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்

பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்

ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்

அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 05

வம்பறா வரிவண்டு மணநாற மலரும்

மதுமலர் நல் கொன்றையான் அடியலாற் பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 06

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே

மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்

சீர்கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்

கார்கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்

கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 07

பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்

பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரையற்கு அடியேன்

விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 08

கறைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த

கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்

நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

துறைக்கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித்

தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 09

கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை

மன்னவனாஞ் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்

புடை சூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி

பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்

அடல் சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 10

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்

முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

பாடல் எண் : 11

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கு அடியேன்

திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

இசைஞானி காதலன் திருநாவலூர்க்கோன்

அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார்

ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே.

நற்றுணையாவது நமச்சிவாயவே!
உபவாசம் என்றால் என்ன?

தபோவனத்தில் ஒரு சம்பவம் : ஞானானந்த கிரி சுவாமி தபோவனத்தில் இருந்த போது இரண்டு பாகவதர்கள் வந்தார்கள். அன்று இரவு முழுதும் திவ்யநாம சங்கீர்த்தனம் நடந்தது.
பஜனை முடிந்ததும் சுவாமியும் பாகவதர்களும் ஓய்வெடுக்க சங்கல்பித்தார்கள். சுவாமி பாகவதர்களை பார்த்து "நன்கு ஓய்வெடுப்போம். நாளை இருந்து பூஜைகளைப் பார்த்து ஆகராம் செய்து பிறகு போவோம்" என்று சொன்னார்.

இருவர் முகத்திலும் ஏதோ கலவரம். புரிந்து கொண்ட சுவாமி என்ன என்று கேட்டார். உடனே அவர்கள் "நாளை ஏகாதசி வ்ரதம். முழுநாள் சாப்பிட மாட்டோம்" என்றார்கள். சுவாமியும் குறும்புத்தனமாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு "சரி. நாளைய உபவாசம் நம்முடனேயே தபோவனத்தில் இருக்கட்டும்" என்று ஆணையிட்டார்.
மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டு இரவு ஓய்வெடுத்தனர். மறுநாள் காலை விடியும் முன் எழுந்து நீராடி சுவாமியின் தரிசனத்திற்காக காத்திருந்தார்கள்.
ஞான பிழம்பாய் சுவாமி தன் அறையை விட்டு வெளியில் வந்தார்.

காலை தனுர் மாத பூசை முடிந்தது.
பாகவதர்கள் இருவரையும் சுவாமி அழைத்தார். தனுர் மாத பூஜை முடிந்தது. பொங்கல் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு சுவாமியின் அறைக்கு வெளியில் நிற்போம். சுவாமி இருவரையும் கூப்பிடும் என்று சொல்லி வேறு எதுவும் பேச சந்தர்ப்பம் கொடுக்காமல் அறைக்கு சென்றார். குருநாதரின் வார்த்தையை தட்ட முடியாமல் பாகவதர்கள் இருவரும் பிரசாதம் சாப்பிட்டு சுவாமியின் அறைக்கு வெளியில் சுவாமியின் அழைப்பிற்காக காத்திருந்தனர்.
சுவாமி அழைத்தார். ஓடினர் இருவரும். "பாத பூஜையை தரிசித்து விட்டு மீண்டும் வருவோம்" என்றார். அப்படியே செய்தனர். மதியம் ஆயிற்று. மீண்டும் சுவாமி அழைத்தார்.

"மதியம் உணவருந்தி வருவோம்" என்றார். மறுக்க முடியாமல் அவ்வண்ணமே செய்தனர். உத்தரவுக்காக காத்திருந்தனர். மாலை ஆனது. சுவாமி அழைத்தார். "சாய பூஜையை தரிசிப்போம்" என்று ஆணையிட்டார். பைரவர் பூஜை முடிந்தவுடன் சுவாமி இருவரையும் அழைத்தார் "இரவு உணவருந்தி சுவாமி அறைக்கு வருவோம்" என்று சொன்னதும் இருவரும் அவ்வன்னாமே செய்தனர்.

இரவு உணவு முடிந்து சுவாமியின் அறைக்கு வந்த இருவரையும் பார்த்து "இன்னைக்குத்தான் நாம உண்மையில ஏகாதசி விரதம் இருந்தோம்" என்று சொன்னார் சுவாமி. இவர்களுக்கு ஒன்னும் புரியவில்லை.

"இன்னைக்கு முழுதும் சுவாமி எப்போ கூப்டுவாரோன்னு முழுசா இருவரின் மனசும் ஸ்வாமியிடமே இருந்தது. எங்கு சென்றாலும் சாப்பிடும் போது கூட சுவாமி எப்போ கூப்பிடுவார்ன்னு சதா சுவாமியையே ஸ்மரணை இருந்தது. இது தான் உபவாசம் என்பது. உடம்பை பட்டினிப்போட்டு வருத்துவதில் ஒன்னும் பயன் இல்லை. உபவாசம் என்றால் அருகில் வாசம் செய்வது என்று பொருள். எப்பொழுதும் இறைவனை மனதில் ஸ்மாரிதுக்கொண்டு எப்பவும் இறைவன் அருகிலேயே இருப்பது தான் உபவாசம் என்பது. அதை எந்த வேலை செயும் போதும் கடைபிடிக்கலாம். உடம்பைப் பட்டினி போட்டு தான் என்று இல்லை" என்று சுவாமி சொன்னார்.