வெள்ளி, 8 செப்டம்பர், 2023

25. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

25. ஸ்ரீ சச்சிதானந்த கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்



இருபத்தி ஐந்தாவது ஆச்சார்யர் [கி.பி. 527 - 548]

ஸ்ரீ சச்சிதானந்த கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளை "ஸ்ரீ சித்த குரு" என்று அன்புடன் அழைத்தனர். தமிழ் அந்தண மரபினர். தமிழகத்திலுள்ள ஸ்ரீ முஷ்ணத்தைச் சேர்ந்தவர். தந்தையின் பெயர் ''கிருஷ்ணர்''. இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ''சிவ சாம்பர்''.

இவர் பாரதம் முழுவதும் மூன்று முறை விஜயம் செய்திருக்கிறார்.

இவர் ஸ்ரீ பாதம் படாத பகுதியே இந்தியாவில் கிடையாது எனலாம். அந்த அளவிற்க்கு யாத்திரை செய்தவர். அனைத்து விதமான மக்களையும் அரவணைத்து சென்றார். இவரை மக்கள் போற்றி புகழ்ந்து கொண்டாடினர்.

இவர் தன் யோக வலிமையால் விலங்குகள் பேசும் மொழிகளை அறிந்திருந்தார். அறுபத்தி மூன்று நாயன் மார்களில் சேரமான் பெருமாள் நாயனார் இவ்வாற்றல் பெற்றிருந்ததால் கழறிற்றறிவார் எனப் போற்றப்பட்டதாக பெரிய புராணம் சொல்கிறது.

இவர் கி.பி. 548 ஆம் ஆண்டு, பிரபவ வருடம், ஆடி மாதம், சுக்ல பட்க்ஷம், பிரதமை தினத்தில் கோகர்ண க்ஷேத்திரத்தில் லிங்க ரூபியாக சித்தி அடைந்தார்.

இவர் 21 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.

24. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

24. ஸ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று



இருபத்தி நான்காவது ஆசார்யர் [கி.பி. 512 - 527]

ஸ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று கொங்கண நாட்டைச் சேர்ந்தவர். பெற்றோர் வைத்த பெயர் ''சிவ சர்மா''.

இவர் தனது அருளாட்சி காலமான பதினைந்து ஆண்டுகளையும் பெரும்பாலும் கொங்கணப் பகுதியிலேயே கழித்தார்.

இவர் கி.பி. 527 ஆம் ஆண்டு, பிரபவ வருடம், ஆவணி மாதம், சுக்ல பட்க்ஷம், நவமி திதி அன்று மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி அருகில் சித்தி அடைந்தார்.

இவர் 15 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.