ஞாயிறு, 12 ஜனவரி, 2020

கணுப்பிடி வைத்தேன் காக்காப்பிடி வைத்தேன்...

கணுபிடியும் காக்கப்பிடியும் கலந்து நான் வைத்தேன்.

மஞ்சள் இலையை விரிச்சு வைத்தேன்.

பார்த்து வைத்தேன் நிரப்பி வைத்தேன்.

பச்சை இலையில் பரப்பி வைத்தேன்.

மகிழ்ச்சி பொங்க பிரிச்சு வைத்தேன்.

காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம் சொல்லி வைத்தேன்.

கலர் கலராகசாதம் வைத்தேன்.

கரும்பு துண்டு கலந்து வைத்தேன்.

வகைவகையாக சாதம் வைத்தேன்.

வத்தலை பாக்கு சேர்த்து வைத்தேன்.

வாழைப்பழம் சேர்த்து வைத்தேன்.

அண்ணன் தம்பி குடும்பமெல்லாம் அமோகமாய் வாழ அழகாக வைத்தேன்.

கூட்டு பொரியல் அவியல் வைத்தேன்.

கூட்டு குடும்பமாய் வாழ வைத்தேன்.

தூபம் தீபம் காட்டி வைத்தேன்.

கற்பூரம் ஏந்தி வைத்தேன்.

கடவுளை வணங்கி வைத்தேன்.

ஆண்டவனை வேண்டி வைத்தேன்.

குருவை நம்பி நினைத்து வைத்தேன்.

ஆர்த்தி எடுத்து காட்டி வைத்தேன்.

காக்கை கூட்டம் போல் எங்கள் குடும்பமும் பிரியாதிருக்க கணுப்பிடி வைத்தேன்.