திங்கள், 12 நவம்பர், 2018

எட்டுக்குள் ஒரு யோகா" !!!
 (முழுவதும் படியுங்கள்)

 "எட்டு" போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.

மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும் !!

உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து,
6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு  அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள் !! இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும். காலை அல்லது மாலை, வடக்கு நோக்கி நின்று அந்த எட்டு வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள். ஆண்கள் வலது கை பக்கம் பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்கணும். ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்கணும். பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று  இதேபோல் 21 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும், 42 நிமிடம்.

1. பயிற்சி தொடங்கிய அன்றமார்பு சளி கரைந்து வெளியேறுவதை காணலாம்.
2. இந்த பயிற்சியை இருவேளை செய்துவந்தால் உள்ளங்கை கை விரல்கள் சிவந்திருப்பதை காணலாம். அதாவது ரத்த ஓட்டத்தை சமன் படுத்துகிறது என்று அர்த்தம்.
3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை வியாதி) குறைந்து முற்றிலும் குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை)
4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் போன்றவை தீரும்.
5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.
7. உடல் சக்தி பெருகும் ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்.
8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும்.
10. பாத வலி, மூட்டுவலி மறையும்.
11. சுவாசம் சீராகும் அதனால் உள் உருப்புக்கள் பலம் பெரும்.

சரி! இதெப்படி நடக்கிறது என்று உங்களுக்குள் கேள்வி ஏழும். "8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்.. அந்த வடிவம் "முடிவில்லாதது" மட்டுமல்ல நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி சம நிலை படுத்துகிறது என்பதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்தனர் சித்தர்கள்.

விருப்பம் உள்ளவர்கள் முயற்சி செய்து பலனடையுங்கள். நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம்.

1வது 21 நாளில் ---- சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி இடகலை நாடி புத்துயிர் பெரும் !!!

2 வது 21 நாளில் ---- மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும் ,!!!!

3 வது 21 நாளில் ---- தொடை பகுதி பலம் பெரும் ,!!!!

4 வது 21 நாளில் ---- ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்பபை குறைபாடு குழந்தை பேறின்மை, மாத நாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் .!!!

5 வது 21 நாளில் ---- வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும் !!!!,

6 வது 21 நாளில் --- இரத்த அழுத்தம், இதய நோய், ஆஷ்துமா, காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும் !!!!

7 வது 21 நாளில் --- தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாய் பிடிப்பு வராது.

8 வது 21 நாளில் --- அன்னாக்கு பகுதி விழிப்படையும், வாய் கண் காது மூக்கு கருவிகள் நோய் தன்மை தாக்காது, இரண்டு நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும், மூளைப் பகுதி விழிப்படையும், மூளைப் பகுதி நோய் தீரும்.

 இதை செய்ய வயது வரம்பு இல்லை, இப்பயிற்சி "வாசி யோக"த்திற்கு இணையானது இந்த எட்டு  நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர், மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான். மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் வாய் வழியாக சுவாசம் கூடாது !!!!

ஞாயிறு, 11 நவம்பர், 2018

ருத்ர வீணை

இது பெரும்பாலும் ஹிந்துஸ்தானி சங்கீததின் ஒரு வகையான துருபத் எனும் இசையை இசைக்க உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்கும் சரஸ்வதி வீணைக்கும் உள்ள வித்தியாசங்களை பார்தோமென்றால்,சரஸ்வதி வீணையில் குடங்கள் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் ஆனால் ருத்ர வீணையில் இரண்டு பக்கமும் சம அளவுள்ள காய்ந்து போன பூசனிக்காய்கள் பொருத்தப்பட்டிருக்கும். சரஸ்வதி வீணையில் உள்ளது போலவே இந்த வீணையிலும மெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் (அதாங்க!!அந்த தாயக்கட்டைகள்!! :-)
இந்த வீணையை வாசிக்கும் விதமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். தண்டியின் ஒரு பகுதியில் உள்ள குடத்தை தோளின் மேல் இருத்திக்கொண்டு இந்த வகையான வீணையை வாசிப்பார்கள். இந்த இந்த வகை வீணைகள் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இந்தியாவின் மிக பழமையான இசை கருவிகளில் ருத்ர வீணையும் ஒன்று.

நாதத்திலிருந்தே எல்லாம் வந்தது. ஸப்த ஸவரங்களும் ஸப்த மண்டலங்கள்,ஸப்த ரிஷிகள், ஸப்த தாதுக்களாய் வந்ததாகச் சொல்வார்கள். இந்த பிரபஞ்சத்தில் அசையும், அசையாத எல்லாப் பொருள்களிலும் ஏதோ ஒரு ரீங்காரம் இசையாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.இசை நாடி நரம்புகளிலெல்லாம் ஊடுருவிச் சென்று மூளையை அடைந்து உணர்வுகளை மாற்றி விடும் வல்லமை உடையது.

மலையாளத்தில் தெருவ கீதங்கள் என்ற படத்தில் உள்ள இரண்டு ஜேசுதாஸ் பாடல்களை மொட்டை மாடியிலோ, தோட்டத்திலோ அமர்ந்து கொண்டு ஒலிக்கச் செய்தால் காற்றே இல்லாத நேரத்தில் கூட மெல்லிய தென்றல் காற்று வந்து உங்களைத் தழுவுவதை உணர முடியும். அமிர்த வர்ஷினி பாடினால் மழை வரும் என்கிறார்கள். வந்தது, அது ஒரு காலம். இப்போது காற்று மண்டலம் எங்கும் ஒலி, ஒளி அதிர்வுகளும், அலைகளும் குறுக்கிடுவதால் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே. செல் போன் டவரில் இருந்து வரும் கதீர் வீச்சுகளால் குருவி முட்டை குஞ்சு பொரிப்பதற்கு முன்பே உடைந்து போய் குருவிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்து விட்டதல்லவா ? அதுபோல எத்தனையோ குறுக்கீடுகள் இசை அலைகளை வெகு தூரம் சென்று இலக்கை அடையவிடாமல் தடுத்து விடுவதாகச் சொல்லப்படுகிறது.

இயற்கையின் வடிவான இறைவனை ஆராதிக்கவும், அந்த ஆராதனையின் மூலம் உயிர்களை மகிழ்விக்கவும், அவற்றின் மனதை அமைதிப்படுத்தவும் இசைக் கருவிகள் தோன்றின. ஆதியிலிருந்தே எண்ணற்ற இசைக் கருவிகள் உருவாகியும், இடையில் அழிந்தும் மீண்டும் உயிர் பெற்றும் சிறப்புச் செய்திருக்கின்றன. தோல் வாத்தியங்கள், தந்தி வாத்தியங்கள், காற்று வாத்தியங்கள், உராய்வு வாத்தியங்கள் போன்ற எண்ணற்ற வாத்தியங்கள் இசை உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்திருந்தாலும், தந்தி வாத்தியங்கள் இவற்றில் தனி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. தந்தி வாத்தியங்கள் அனைத்தும் யாழ் வகையைச் சேர்ந்தவைகளே. 200 தந்திகள் கொண்ட யாழ் கூட இருந்ததாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட அதிசயமான யாழ் வகைகள் ஏதும் இப்போது இல்லை என்பது வேதனையான விஷயம்.

இதில் வீணை என்பது மிகவும் அற்புதமான வாத்தியம். மனித உடலையும் வீணையையும் ஒப்பிட்டு பேசுவார்கள். வீணையின் நடுவே நீளமாக காணப்படும் பகுதி மனிதனின் முதுகுத்தண்டாகவும், குடத்தை தலையாகவும், சிம்ம முகத்தை மூலாதாரமாகவும், தந்திகளை நரம்புகளாகவும், தந்திகளை இழுத்து சரி செய்வதை யோகப் பயிற்சியாகவும் கூறுவார்கள். நன்கு சுருதி சேர்தந்து வைக்கப்பட்டுள்ள வீணை அருகில் ஒலிக்கும் ஒலியை அதிர்வுகளாய் வெளிப்படுத்தும். அது போல யோகப் பயிற்சியில் சிறந்தவர் அருகில் உள்ளவர்களின் உணர்வுகளை உணர்ந்து விடுவார் என்று சொல்வார்கள். வீணையை இசைப்பவரின் பிராண சக்தி அந்த வீணையில் ஓடிக் கொண்டே இருப்பதாகச் சொல்வார்கள். வீணைகளில் எண்ணற்ற வீணைகள் இருந்தாலும், மூன்றுவிதமான வீணைகள் அங்கங்கே வாசிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இந்திய தேசத்தை பாரம்பரியமாகக் கொண்டவை. ருத்ர வீணை, விசித்திர வீணை, சரஸ்வதி வீணை போன்றவைகளில் தென் இந்தியாவில் சரஸ்வதி வீணையே பெரும்பாலும் வாசிக்கப்படுகிறது.

மந்திர உபாசணைகளால் எத்தனைவிதமான சித்திகளைச் செய்ய முடியுமோ, அத்தனையையும் வீணையை இசைத்து ராக ஆலாபணைகளால் செய்ய முடியும். இதற்கு இராவணனை உதாரணமாகச் சொல்வார்கள்.குதிரை முக தேவர்கள் மூலம் யாழ், நாரதர்கள் வழியாக தும்புறுஎன்கிற தம்புரா, கலைவாணி இசைக்கும் ஸாரஸ்வத வீணா போன்ற இசைக் கருவிகள் எல்லாம் தேவர்களால் மனிதர்களுக்கு அருளப்பட்டது என்ற நம்பிக்கை உண்டு. இறைவனால் வழங்கப்பட்ட 64 தந்திரக்கலைகளில் கந்தர்வ தந்திரம், ருத்ரயாமளம், யக்ஷிணிதந்திரம், வீணா என்ற தந்திரங்கள் யாவும் இசையைப் பற்றியதே. இந்தத் தந்திரங்களை உபாசிப்பவர்களுக்கு இசை ஞானமும், இசைக் கருவியும் இறைவனால் வழங்கப்படும் என்று தந்திர சாஸ்திரம் சொல்கிறது.

துருபதம் என்ற பண்டைய இசைப் பாரம்பரியம் 19 ஆம் நூற்றாண்டு வரை காணப்பட்டது. அவர்கள் இசைக்கும் வீணை ருத்ர வீணையாகும். அது இறைவன் தந்தது என்றும் இறைவனின் வடிவமாகும் என்றும் எண்ணற்ற அதிசயங்களை ராக ஆலாபணைகளால் செய்யக் கூடியது என்றும் சொல்வார்கள். இதன் அமைப்பும், வடிவமும் வித்தியாசமாக இருப்பதோடு இதன் மீட்டல் லயம் நீண்ட நேரத்திற்கு இன்பம் தருபவையாக இருக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. தேக்கு மரத்தாலானது. இரண்டு குடங்களும் பதப்படுத்தப்பட்ட பூசணிக் காயால் ஆனது. இது 22 உலோகக் கட்டைகளும், ஏழு தந்திகளையும் உடையது. விசித்திர வீணையும் ருத்ர வீணையைப் போன்ற தோற்றத்தையே பெற்றிருக்கிறது. ஆனால் 16 தந்திகளையே கொண்டுள்ளது. அதில் 6 முக்கியமான தந்திகள். இதில் உலோகக் கட்டைகள்(frets) கிடையாது. மனிதன் பேசுவது போலக் கூட இதில் இசைக்க முடியும். தென்னிந்தியாவில் பிரபலமானது ஸரஸ்வத வீணை. இது பலா மரத்தின் ஒரே கட்டையால் செய்யப்படுகிறது. இதில் 24 உலோகக் கட்டைகள் உண்டு. 7 தந்திகளும் உண்டு. இதில் 4 மீட்டுவதற்கும், 3 தாளத்திற்கும் பயன்படும். இதில் இடது பக்கம் காணப்படும் சிறு பானை போன்ற அமைப்பு வடிவத்திற்காகவும், லாவகமாகக் கையாள்வதற்காக மட்டுமே.

எண்ணற்ற தேவ வாத்தியங்களும், இசைக் கருவிகளும் காலத்தால் அழிந்து விட்டாலும், இருக்கும் சிலவற்றையாவது காப்பாற்றும் கடமை நமக்கும் உள்ளது. ஏனெனில் தேவ வாத்தியங்களில் இறை சக்தி உள்ளது. அது எல்லா நிலைகளிலும் மக்களைக் காத்திருக்கின்றன என்பதை புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இதை அறிவுறுத்தவே எல்லா தெய்வவடிவங்கள் கைகளிலும் ஏதாவது ஒரு வாத்தியக் கருவி காணப்படுகிறது.
சாஸ்தா வழிபாடு!

அஷ்டசாஸ்தா வழிபாடு-1

யுகம் கடந்த புருஷனாக விளங்குபவர் சாஸ்தா. கிருதயுகத்தில் கந்த புராணக் கூற்றுப்படி, சூரபதுமனுக்காகவும் அசுரர் குலத்துக்காகவும் பயந்து பூமியில், பாரத தேசத்தில், தமிழ்நாட்டில், குடகு முதல் காவிரி பாயும் தீர்த்தக்கரைவழியே வந்து, வேணுபுரம் என்று வடமொழியில் கூறப்படும் சீர்காழிப் பகுதியில் தேவேந்திரன் தன் மனைவி சசிதேவியுடன் மறைந்து வாழ்ந்திருந்த போது, தேவர்கள் அவனைத் தேடிக் கண்டுப்பிடித்து, சூரபதுமன் அழிய வேண்டுமானால் முருகப் பெருமான் அவதாரம் ஆக வேண்டும் என்று சிவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோரி, இந்திரனையும் கயிலாயம் அழைத்துச் சென்றனர். தனித்துவிடப்பட்ட இந்திராணியை சூரபதுமன் சகோதரி அஜமுகி என்ற அரக்கியிடமிருந்து சாஸ்தா காத்தருளினார். (இடம் தென்பாதிகிராமம், சீர்காழி) என்று கந்தபுராணம் கூறுகிறது. எனவே முருகனுக்கும் மூத்தோன் என்று சாஸ்தா கூறப்படுகிறார்.

அதேபோல, சிவபுராணத்தில் சிவனை மதியாது யாகம் நடத்திய ரிஷிகளுக்கும், ரிஷி பத்னிகளுக்கும் சிவன் மகிமையை வெளிப்படுத்த சிவன் பிக்ஷõடனராகவும், திருமால் மோகினியாவும் உருமாறி, அவர்களை மாயையிலிருந்து விடுபடச் செய்து நல்வழிப்படுத்திய பின், சிவ-விஷ்ணு சேர்க்கையில், அயோனிஜனாக சாஸ்தா அவதரித்ததாக வழுவூர் மகாத்மியம் கூறுகிறது. (இடம் கழினிவாசல், வழுவூர்)

பத்மாசுரன் தலையில் கைவைத்து, மோகினி மாலும் சிவனும் கூடி சாஸ்தா அவதாரமானது மரக்காணம், பாண்டிச்சேரி அருகில் உள்ள புத்துப்பட்டு என்னும் கிராமம் என்று கூறப்படுகிறது. (பத்மபுராணம்)

லலிதோ பாக்யானத்திலும் கந்த புராணத்திலும், பாற்கடல் கடைந்த சமயத்தில் மோகினி அவதாரம் எடுத்த திருமாலுக்கும் சிவனுக்கும் ஹரிஹரபுத்திரர் அவதரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் கிருதயுகத்தைச் சார்ந்தவையாகும்.

த்ரேதாயுகத்தில், இராமவதாரம் நடைபெற்றுது. புத்ரகாமேஷ்டி யாகத்தை தசரதன் நடத்திய போது யாககுண்டத்திலிருந்து கையில் பாயச பாத்திரத்துடன் ஓர் யுகபுருஷன் வெளிவந்தான் எனவும் மஹத்பூதம் என்றும் வால்மீகி வர்ணிப்பது சந்தானப்ராப்தி யருளும் மாணிக்க பாத்திரம் கையிலேந்தி இருக்கும் சாஸ்தாவையே குறிப்பதாகும். இராமன் தரிசனம் பெற்ற சபரி முக்தி அடைந்தது சாஸ்தாவின் அருளினால் என்பதால் தான் மதங்கமலை என்று வழங்கப்பட்ட இடம் இன்று சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

இராமர் முறித்த சிவதனுசு வில் சாஸ்தாவின் ஆவேச சக்தி ஆவிர்பாகம் ஆகியிருந்ததாகவும், சாந்த மூர்த்தியான இராமன் அந்த வில்லைத் தொட்டவுடன் சாஸ்தாவின் ஆவேச சக்தி இராமரிடம் குடி புகுந்து, பிற்காலத்தில் இராவணனை அழிக்க உதவியது என்று சமூக வரலாறு நூல் ஒன்று தெரிவிக்கிறது.

துவாபர யுகத்தில் (மஹாபாரத காலம்) அரக்குமாளிகையிலிருந்து பாண்டவரைக் கைப்பற்றினார் சாஸ்தா என்று ஓர் செவி வழிக்காதை உண்டு. அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுக்கும் முன்பு, அவனது வீரத்தைப் பரிட்சிக்க பரமேச்வரன் வேடுவனாகத் தோன்றி, ஒரு பன்றியை, வில்லால் அடித்துக் கொன்றது யார் என்று பிரச்சினை எழுப்பி போர் தொடுத்து, முடிவில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுத்தார் பரமேச்வரன். அந்த பிரச்சினைக்குக் காரணமாயிருந்த முள்ளம் பன்றியை உசுப்பி விட்டவர் சாஸ்தா என்று கூறுகிறார்கள் (ஆதாரம் : சிதம்பரம் அருகே உசுப்பூர் சாஸ்தா கோயில்)

கலியுகத்தில் பம்பையில் தவழ்ந்து பந்தள பாலகனாக வளர்ந்து மகிஷி ஸம்ஹாரம் செய்து, வன்புலி வாகனனாகத் தோன்றி பூதநாத கீதை உபதேசம் செய்தருளி சபரிமலையில் கோயில் கொண்டான் சாஸ்தா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்தியா முழுவதும் ஐயப்பன் வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. இதில் ஐயப்பன், சாஸ்தா, ஐயனார் என பல உருவங்களில் ஐயப்பன் வழிபாடு நடைபெறுகிறது. இது தவிர ஆதிபூத நாதர், கல்யாண வரதர், மஹா சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, சந்தான பிராப்தி சாஸ்தா, வீர சாஸ்தா, ஞான சாஸ்தா, வேத சாஸ்தா என எட்டு வகையான சாஸ்தா இருப்பது பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்காக இந்த அஷ்ட சாஸ்தா வழிபாடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நடமாடும் தெய்வமாம் காஞ்சி மஹா முனியின் அருளானையின்படியும், சிருங்கேரி ஆச்சார்யாளின் அனுக்ரஹதினாலும் ஐயப்ப வழிபாட்டில்  பல்வேறு  ஆராய்ச்சிகள் செய்து, கலிகாலத்திற்கு உகந்தவாறு எட்டு வித அவதாரங்களை வடிவமைத்து கொடுத்து  ஐயப்பனின் பதமலர்களை அடைந்தவர் குருசாமி பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மா. அவரது முயற்சியின் பலனாக திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம், பாலாஜி நகர்-சாய் நகரில்  அஷ்டசாஸ்தா திருக்கோயில் விரைவில் கட்டப்பட இருக்கிறது.

கோயில் திருப்பணிக்கு நன்கொடை தர விருப்பமுள்ளவர்கள், பொருளாகவோ, பணமாகவோ வழங்கலாம்.

தொடர்புக்கு:வில்லிவாக்கம் ஸ்ரீ விஸ்வநாத சர்மா அஷ்டசாஸ்தா ட்ரஸ்ட்
29, வடக்கு மாட வீதி, ஐயப்பன் கோயில் அருகில்,
வில்லிவாக்கம், சென்னை-600 049.
போன் : +91-44-2617 3963, 99625 62067, 99625 62068.
email: sasthakalyan@gmail.com
பெண் பக்தர்களின் கவனத்திற்கு!

நாட்டில் ஐயப்பனுக்கென பல கோயில்கள் இருந்தாலும், கேரளமாநிலம், பந்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை  ஐயப்பன் கோயில் மட்டுமே மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் இந்த ஐயப்பனை தரிசிக்க கோடிக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இதில் வெளிநாட்டு பக்தர்களும் உண்டு. இங்குள்ள ஐயப்பன் பிரம்மச்சரிய கோலத்தில் குத்துக்காலிட்டு, யோகநிலையில், சின்முத்திரையுடன் அருள்பாலித்து வருகிறார். இவரை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்கள் 10வயதிற்குள்ளாகவும், 50 வயதிற்கு மேலாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. எனவே 11வயது முதல் 49 வயது வரை உள்ள பெண் பக்தர்களை  பம்பைக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படுவதே கிடையாது. அப்படி இவர்கள் வந்தாலும், பம்பையில் உள்ள கணபதி கோயிலிலேயே நிறுத்தப்பட்டு விடுகிறார்கள். அதே சமயம் 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பக்தர்களாக இருந்தாலும் கூட, பணியிலிருக்கும் போலீஸ்காரர்களுக்கு  பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் வந்து விட்டால், அவர்களுடைய வயதை சரிபார்க்க பேன்கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளார் அட்டை போன்ற போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்கும் படி கூறுகிறார்கள். இதில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை   இருந்தால் மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள். பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டு, இது போன்ற அடையாள அட்டை இல்லாத நிலையில் அவர்கள் பம்பையிலேயே நிறுத்தப்படுகின்றனர். எனவே இந்த பெண்பக்தர்களால் ஐயப்பனை தரிசிக்க முடியாது.  அதுமட்டுமின்றி, இவர்களுடன் வரும் ஆண் பக்தர்களும் இவர்களை தனியாக விட்டு விட்டு ஐயப்பனை தரிசிக்க செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இது போன்ற நடைமுறை சிக்கலை தவிர்க்க, பெண்பக்தர்கள் தங்களுக்கான அடையாள அட்டை மற்றும் அதற்கான போட்டோ காப்பியை எடுத்து செல்ல வேண்டும். இது போன்ற விஷயங்களை சபரிமலைக்கு அழைத்து செல்லும் டிராவல்ஸ் நிறுவனங்களும், குருசாமிமார்களும் பெண் பக்தர்களுக்கு எடுத்து கூறுவது மிக மிக முக்கியம்.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
தங்கும் விடுதிகள்

* யாத்ரிகர்கள் மையம் எண் 1, மொத்த அறைகள் 103,

* யாத்ரிகர்கள் மையம் எண் 2, மொத்த அறைகள் 115,

* யாத்ரிகர்கள் மையம் எண் 3, மொத்த அறைகள் 143,

* சபரிநிவாஸ், மொத்த அறைகள் 64,

* மாளிகைப்புறம் கட்டடம், மொத்த அறைகள் 16,

* மாளிகைப்புறம் ஹால்

* மராமத்து காம்ப்ளக்ஸ், மொத்த அறைகள் 22,

* நன்கொடையாளர் கட்டடம் எண்.1, மொத்த அறைகள் 24,

* நன்கொடையாளர் கட்டடம் எண்.2, மொத்த அறைகள் 16,

* நன்கொடையாளர் கட்டடம் எண்.3, மொத்த அறைகள் 24,

* நன்கொடையாளர் கட்டடம் எண்.4, மொத்த அறைகள் 24,

* நன்கொடையாளர் கட்டடம் எண்.5, மொத்த அறைகள் 24,

* நன்கொடையாளர் கட்டடம் எண்.6, மொத்த அறைகள் 24,

* நன்கொடையாளர் கட்டடம் எண்.7, மொத்த அறைகள் 24,

* கே.கே.டி. ஹால், மொத்த அறைகள் 2,

* பூரண புஷ்கலை ஹால்

* 5 காட்டேஜ்கள், மொத்த அறைகள் 51,

அறைகளை புக் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

தேவஸ்வம் நிர்வாக அதிகாரி, சபரிமலை தேவஸ்தானம், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, நந்தன்கோடு, திருவனந்தபுரம்-3, போன் : 0471 - 231 7983,231 6963.

சபரிமலைக்கு சென்ற பிறகு ரூம்கள் புக் செய்ய வேண்டுமானால் மராமத்து காம்ப்ளக்ஸ் அருகிலுள்ள அக்கமடேஷன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். போன் : 04735 - 202 049
அவசர உதவி- முக்கிய டெலிபோன் எண்கள்

சபரிமலை சன்னிதானம்

எஸ்டிடி கோடு 04735

சிறப்பு கமிஷனர் - 202 015
தேவஸ்வம் கமிஷனர் - 202 004
லஞ்ச ஒழிப்பு போலீஸ் எஸ்.பி. - 202 081
லஞ்ச ஒழிப்புஅதிகாரி (கோயில்) - 202 058
செயல் அலுவலர் - 202 028
உதவி செயல் அலுவலர் - 202 019
நிர்வாக அலுவலகம் - 202 026
காணிக்கை தனி அதிகாரி - 202 017
மாளிகைப்புறம் கோயில் - 202 022
விருந்தினர் மாளிகை (கெஸ்ட்ஹவுஸ்) - 202 056
அறைகள் பதிவு அலுவலகம் - 202 049
செய்தித்துறை அதிகாரி - 202 048
புக் ஸ்டால் - 202 053
நிர்வாக அதிகாரி - 202 038
தனலட்சுமி பாங்க் - 202 065
அரசு அலோபதி ஆஸ்பத்திரி - 202 101
அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரி - 202 102
அரசு ஹோமியோபதி ஆஸ்பத்திரி - 202 843
அரசு இதய நோய் மையம் - 202 050
கன்ட்ரோல் ரூம் எஸ்.பி. - 202 029
டி.ஐ.ஜி. முகாம் - 202 076
போலீஸ் ஸ்டேஷன் - 202 062
போலீஸ் வயர்லஸ் ஸ்டேஷன் - 202 033
போஸ்ட் ஆபீஸ் - 202 130

பம்பை

டெலிபோன் எக்சேஞ்ச் - 202 198
தேவஸ்வம் போர்டு விருந்தினர்
விடுதி தலைவர் - 202 466
நிர்வாக அதிகாரி - 202 442
பெட்ரோல் பங்க் - 202 046
உதவி மக்கள் தொடர்பு அதிகாரி - 202 339
அரசு அலோபதி ஆஸ்பத்திரி - 202 318
தனலட்சுமி பாங்க் - 202 465
கேரள அரசு போக்குவரத்து கழகம் - 202 445
மின்சார வாரியம் - 202 424
தீயணைப்பு நிலையம் - 202 333
போஸ்ட் ஆபீஸ் - 202 330
போலீஸ் கன்ட்ரோல் ரூம் - 202 324
ஐயப்ப தரிசனம் 

வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம்


  1    நெய் அபிஷேகம்    ரூ 10
  2    விபூதி பிரசாதம்    ரூ 15
  3    மலர் நிவேத்யம்    ரூ 15
  4    நெய்விளக்கு    ரூ 15
  5     உடையாடை சார்த்து    ரூ 15
  6    உடையாடை நடைக்கு வைத்தல்    ரூ 15
  7    வர நிவேத்யம்    ரூ 15
  8     சகஸ்ர அர்ச்சனை     ரூ 20
  9    அஷ்டோத்திர அர்ச்சனை    ரூ 20
  10    பஞ்சாமிர்தம்    ரூ 20
  11    தங்க ஆபரணபூஜை    ரூ 20
  12    நாகராஜா பூஜை    ரூ 25
  13    வல்சம் நிவேத்யம்    ரூ 25
  14    அப்பம் ஒரு பாக்கட்    ரூ 25
  15    அபிஷேக நெய் 100 மி.லி    ரூ 50
  16    பஞ்சாமிர்தம் 100 மில்லி    ரூ 50
  17     அரவணை பிரசாதம் 250 மி.லி    ரூ 60
  18    நாமகரணம்    ரூ 70
  19    பூஜித்த மணி    ரூ 70
  20    நீராஞ்சனம்    ரூ 75
  21    பூஜித்த விளக்கு    ரூ 100
  22    சோறு ஊட்டு    ரூ 100
  23    நவக்கிரகபூஜை    ரூ 100
  24    துலா பாரம்    ரூ 100
  25    எழுத்து தொடங்கி வைத்தல்    ரூ 101
  26    ஐயப்ப சக்கரம்    ரூ 120
  27    பறையடி    ரூ 120
  28     கணபதி ஹோமம்    ரூ 200
  29     முழுகாப்பு    ரூ 500
  30     உஷபூஜை    ரூ 501
  31    பகவதி சேவை    ரூ 1000
  32    அஷ்டாபிஷேகம்    ரூ 1200
  33    புஷ்பாபிஷேகம் (பூக்கள் தனி)    ரூ 2000
  34     உச்சபூஜை    ரூ 2001
  35     நித்யபூஜை    ரூ 2501
  36     களபாபிஷேகம்    ரூ 3000
  37     வெள்ளி அங்கி சார்த்து    ரூ 4000
  38     தங்க அங்கி சார்த்து    ரூ 7500
  39    உற்சவபலி    ரூ 15000
  40     சகஸ்ரகலசம்    ரூ 25000
  41     உதயாஸ்மன பூஜை    ரூ 30000
  42     படிபூஜை    ரூ 50001

மண்டல, மகர விளக்கு சீசனில் படிபூஜை நடக்காது. மாத பூஜை நாட்களிலும், மகர விளக்கு தரிசனம் முடிந்த பின்னரும் மட்டுமே படிபூஜை நடத்தப்படும்.

பம்பை

எண்வரிசை  வழிபாடு  கட்டணம்
  1    அவல் நைவேத்தியம்    ரூ 20
  2    மோதகம்    ரூ 25
  3     புஷ்பாபிஷேகம்    ரூ 1500
  4    வடை மாலை (அனுமானுக்கு)    ரூ 150
  5    மகாகணபதி ஹோமம்    ரூ 100
  6    இருமுடி கட்டு (பொருட்களுடன்)    ரூ 160

மாளிகைப்புறம்

எண்வரிசை  வழிபாடு  கட்டணம்
  1    மஞ்சள் குங்குமம்    ரூ 25
  2    மலவடி பூஜை    ரூ 15
  3     அவல் நைவேத்தியம்    ரூ 20
  4    அஷ்டோத்திர அர்ச்சனை    ரூ 20

செக்/டிராப்ட் மூலமாக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முகவரி மூலம் அனுப்பலாம்.

தி செக்ரட்ரி,
திருவாங்கூர் தேவஸ்தானம்,
நந்தன்கோடு போஸ்ட்
திருவனந்தபுரம்-695 003
கேரளா, இந்தியா
போன் நம்பர் : 0471-2315 009

அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்களை மொத்தமாக நன்கொடையாக அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் சபரிமலை பம்பைக்கு அனுப்பி விடலாம்.

தி எக்ஸிக்யூடிவ் ஆபிஸர்,
சபரிமலை தேவஸ்தானம்,
திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு,
சபரிமலை-பம்பா போஸ்ட்
பத்தனம்திட்டா மாவட்டம்,
கேரளா, இந்தியா.
போன் நம்பர் : 04735-202026, 202028
வழிபாட்டு இடங்கள்

அரசனாக அச்சன் கோவிலில்

சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது அச்சன்கோவில் ஆகும். அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை சூழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது.

அச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. பல தலங்களில் உள்ள ஐயப்பன் விக்கிரகங்கள் தீயாலும், இதர இயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும் பழைய விக்ரகம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள் கொண்டுவரப்படும். மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா நடக்கும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டுமே ஆகும். அச்சன்கோவிலில் நடக்கும் விழாவில் 9வது நாளன்று தேரோட்டம் நடத்தப்படும். மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம் கிடையாது. இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் நடை திறக்கப்பட்டு ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள சந்தனத்தை பூசினால் விஷம் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை.
படிப்பு தரும் குட்டி சாஸ்தா

கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு சாஸ்தா, குழந்தை வடிவில் இருக்கிறார். கருவறை நுழைவு வாயில் சிறுவர்கள் புகும் அளவிற்கு உயரம் குறைந்து உள்ளது. செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. விஜயதசமி தினத்தன்று இங்கு "வித்தியாரம்பம்' எனும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. இந்நாளில் பள்ளியில் புதிதாக சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி தரப்படும். குழந்தைகளின் படிப்பு சிறப்பாக அமைந்திட "குட்டி சாஸ்தா' அருள்புரிவார் என்பது நம்பிக்கை.

குழந்தை வரம் வேண்டி வருவோரின் துன்பமும் தீர்கிறது. கோயில் முன்பு மீன்கள் துள்ளி விளையாடும் ஆறும் ஓடுகிறது. குடும்பத்துடன் சென்று ஐயப்பனை வழிபட ஏற்ற தலம்.

மாப்பிள்ளை ஐயப்பன்

சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா கிரகஸ்த (குடும்பம்) நிலையில் ஆரியங்காவில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சாஸ்தா, புஷ்கலாதேவியுடன் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார். சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாவிவே இங்கே சாஸ்தாவுடன் ஐக்கியமானார். அவரை சாஸ்தா திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடத்துவர். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால் "மதகஜ வாகன ரூபன்' என்றொரு பெயரும் உண்டு. இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் விரைந்து நடக்கும் என்பது நம்பிக்கை.

சொரிமுத்தையனார் கோயில்:

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள சொரிமுத்தய்யனார் கோயிலில், தர்ம சாஸ்தாவான ஐயப்பனே இங்கு சொரிமுத்தைய்யனார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு செல்வது முன்னொரு காலத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. பொதிகை மலைக்காடுகளில், வனவிலங்குகள் ஏராளமாக வசிக்கும் காட்டுப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே இந்தக் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசை அன்று இங்கு நடக்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.தாமிரபரணியில் நீராடி இந்த ஐயனை வழிபட்டால் எப்படிப்பட்ட பாவமும் விலகும் என்பது ஐதீகம். இதுகோயில் மட்டுமல்ல. மிகச்சிறந்த சுற்றுலாத்தலமும் ஆகும்.

மாம்பழத்துறை பத்ரகாளி

ஆரியங்காவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது மாம்பழத்துறை தலம். புஷ்கலையை மணம் முடித்த சாஸ்தா தனது தொழிலுக்கு அவள் தொந்தரவாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இத்தலத்தில் தங்கும்படி செய்தார். இங்கு புஷ்கலை தேவி, "பகவதி' அம்மனாக "பத்திரகாளி' வடிவத்தில் அருளுகிறாள்.

பந்தளம்

சபரிமலையில் இருந்து 88 கி.மீ தூரத்தில் திருவனந்தபுரத்தையும், கோட்டயத்தையும் இணைக்கும் பாதையில் உள்ளது பந்தளம். பந்தள ராஜாவின் குடும்ப கோயில் இங்குள்ளது.மகர விளக்கு திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான திருஆபரண பெட்டி இங்கிருந்துதான் புறப்படுகிறது. மார்கழி 26ம் தேதி பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணம் தை முதல் தேதி சபரிமலை வந்து சேருகிறது

மகர சங்கிரம தினத்தில் ஜோதிபாய் ஐயன் தெரியும் போது மட்டுமே சபரிமலை ஐயப்பனுக்கு இத்திருவாபரணங்கள் சாத்தப்பட்டிருக்கும்.

ஐயப்பன் திருவுருவில் அணிவிக்கும் ரத்ன மகுடம், நூபுரம், ஆரம், கடகம், அங்குலியங்கள், பதக்கம் ஆகியவை ஒரு பெட்டியிலும், மாளிகைபுறத்தம்மனுக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் மற்றொரு பெட்டியிலும் கொண்டு வருவர். தை முதல்நாள் பிற்பகலில் திருஆபரண பெட்டி சபரிபீடம் வந்தடையும்போது, வானத்தில் பருந்துகள் தோன்றி வட்டமிட்டு, திருஆபரண பெட்டியுடன் தொடர்ந்து வரும் காட்சி கண்கொள்ளா அதிசய காட்சி.
ஐயப்பன் ஸ்லோகம் (சமஸ்கிருதம்)

மகா கணபதி தியான ஸ்லோகம்

மூக்ஷக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே

மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்

சபரிமலையில் தந்திரி ஓதுகிற ஐயப்ப மூல மந்திரமாவது:

ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம

கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய ஒரே கடவுள் ஐயப்பன்தான் என்பதே இம்மூல மந்திரத்தின் பொருள்.

சாஸ்தா காயத்ரீ

ஓம் பூத நாதாய வித்மஹே
பவநந்தனாய தீமஹி
தந்ந: சாஸ்தா ப்ரசோதயாத்

ஓம் தத் புருஷாய வித் மஹே
பூத நாதாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத்

ஸ்ரீ தர்ம ஸாஸ்தா காயத்ரீ

ஓம் பூதாதி பாய வித் மஹே
மஹா தேவாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோதயாத்

ஐயப்பன் மகா மந்திரம்

 பூதநாத ஸதானந்தா
ஸர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

ஐயப்பன் ஸுப்ரபாதம்

1. ஸ்ரீ ஹரிஹர ஸுப்ரஜா சாஸ்தா பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்தே
உத்திஷ்ட நரசார்தூல தாதவ்யம் தவ தர்சனம்
உத்திஷ்டோத்திஷ்ட சபரி கிரீச உத்திஷ்ட சாந்திதாயக
உத்திஷ்ட ஹரிஹர புத்ர த்ரைலோக்யம் மங்களம் குரு

2. குரோ ஸமஸ்த ஜகதாம் மனக்லேச ஹாரே
பக்தோ விஹாரினே மனோஹர திவ்ய மூர்த்தே
ஹேஸ்வாமி பக்தஜனப்ரிய தான சீல
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

3. தவஸுப்ரபாதம் அமித்ர ரக்ஷக
பவது ப்ரஸன்ன மனன சுந்தர
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மைக்ய ஸ்வரூப
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

4. அகஸ்த்யாதி மஹா ரிஷிய ஸமுபாஸ்ய ஸந்த்யாம்
காந்தகிரி குஸுமானி மனோஹரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபன்னா
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

5. வாஸவாதி தேவகணா ஸ்வர்காத் இஹைவ ஆக தா
தர்சிதும் பவந்தம் மகர ஸங்கிரம காலே
உச்சை சரண கோஷை பஹுதா ஸ்துவந்தி
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

6. ச்ரத்தா பக்தி ஸமன்வித ஆதீத பூஜாத்ரவ் யானி
த்வ்ய கந்தாதி ஆஜ்ய பூரித நாளிகே ரானி
க்லிஷ்டமானவ வர்க்கேன நிஜவ்ரதம் கல்பயன்தவ பார்ச்வம் ஆகதம்
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

7. திவ்ய பஸ்மாலங்க்ருத லலாட காத்ர நீலவஸ்த்ரதர
ஸம்ஸார பேஷஜ துளஸீஹார ஸமாவ்ருத மார்க்க ரக்ஷக
சிஷ்டாணாம் ரக்ஷகஸ் சைவ சரணகோஷஸந்துஷ்ட
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

8. ஸோம சுந்தரேஸ்ய ப்ரேம்னா சக்த்யாம் சஹரிணாஸஹே
நிக்ர ஹார்த்தம் தைத்யானாம் பாலரூபேண ஸமன்வித
அவதார யாமாஸ பம்பாதீரே பந்தளாதிப ப்ரபூஜித
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

9. ஸந்யாஸரூப சபரி யாத்ரா ஸர்வாப குணவர்ஜித
ஸஸ்நேஹம் ஸோத் ஸாஹஞ்ச ஸாந்த்வனானி பணந்த
ஸமஸ்த மங்கள ஸன்மார்க்கம் ஸதா அஸ்மா ஸுப்ரதர்சிதம்
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

10. பவத்ஸகா சாத் ஈப்ஸித பலம் ஆப்னு வந்தி இஹ லோக மானவா
தத் காரணா தேவ அர்தினா தவ பார்ஸ்வ மா க தா
மாது பரிபாலனாதிவ பவிஷ்யேம ஸுகினோத்ருவம்
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

11. நிர்மானுஷ்யா ரண்யே த்வயி ஸ்தி தேஸதி
திவாம் ஸமீப யிஷ்யும் அசக் தோ பூதோபீ
தவநாமம் உக் சரன்னேவ இஹ ஆயாதே புனர்புன
ஸ்ரீ சபரி பீடாச் ரம ஸ்தானி னே தவ ஸுப்ரபாதம்

12. நிஷ்டாயாம் ஸ்திதோபி அஸ்மத் ஸ காச ஹ்ருதி ஸனனி வேஷ்ட
நசாஸ்த்ரு பக்தானாம் அசுபம் வித்ய தே க்வ்சித்
தீயந்தாம் யச கீர்த்திம் வித்யாம் புத்திம் ச்ரியம்பலம்
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

13. அப்ர மேய ப்ரபாபவ அணிமாதி ஸித்தித
அக்ஞான நாசன ஸுவிக் ஞான தாயக
ஆனந்த பூத அனாத நர்த
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

14. மானவாவதாரே மனு ஜாக் ருதிம் மணிகண்டா பிரதானம் ரமணிய தேஹீனம்
தனுர் தரம் தைர்ய கீர்த்திம் பஜாமி நித்யம் புவனைக நாதம்
தேவா வதாரே திசாந்த ரூபம் காந்த ச்ருங்க வாஸினம் கமனீய லோசனம்
வாஸர வார்ச்சிதம் புராண புருஷம் பஜாமி நித்யம் பூதாதி நாதம்.

15. பாண்ட் யேச ரத்னம் புவி பாலகம் பந்தனா திபம் பரமபுருஷம்
சுசிஸ்மிதம் சுத்த தே ஹினம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
அத்புத காத்ரம் கிராதவ புஷம் ஆத்யந்த ரஹிதம் ஆபத் ஸகாயம்
ஆனந்த ஸிந்தும் அரவிந்த லோசனம் பஜாமி நித்யம் த்ரிபுராரி புத்ரம்.

16. ஏனதர் நாம பனதர் திவ்யை புஷ்பவனேன விரசிதை
பக்தி பூர்வக் குதை ப்ரபாதச் லோகை
தோஷாணி த்யக் தவா குணான் ஸ்வீகுருஷ்வன்
பரீணாது பகவான் ஸ்ரீ ஹரிஹர புத்ர
ஓம் நமோ கிரிசாய சிபி விஷ்டாய
ஸ்ரீ ஹரிஹர புத்ராய ச ஓம் தத் ஸத்

சாஸ்த்ர ஸுப்ரபாதம்

1. ஸ்ரீ சேச புத்ர யுரு÷ஷாத்தம தர்ம மூர்த்தே
ஸ்ரீ மன் சுபப்ரத விசக்ஷண விச்வ மூர்த்தே
உத்தியத்தினேச சதகோடி ஸமான காந்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராதமஜ ஸுப்ரபாதம்

2. தர்மக்ஞ தர்ம பரிபாலக தர்ம சீல
ப்ரத்யக்ஷ தைவ கலி தைவத தேவதேவ
உத்புல்ல பத்ம ஸத்ருசானன தீன பந்தோ
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

3. பூர்ணேதி பூர்ண சசி ஸுந்தர புஷ்களேதி
பத்னீத்வ யேன பரிலப்த விலாஸ கேலே
பும்ஸ்கோகில த்வனி விபோதித கீதலோல
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்கஜ ஸுப்ரபாதம்

4. பூதேச பூத பவபாவி விதப்ரமேய
ஸந்யாஸி மானஸ சரச்ருதி கீயமான
அக் ஞான மோஹ திமிரா பஹ பால நேத்ர
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

5. ஹே வீரதீர ரண சூர ஜிதாரி ராசே
வித்யா நிதே குண நிதே ஜகதாதி ஹேதோ
ஸெள பாக்ய தாண்ய தன மங்கள தாயி நஸ்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

சாஸ்தா சதகம்

ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி சுவாமியே சரணமய்யப்பா என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்

1. லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷõகரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்
ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

5. பாண்டியேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம்
ஆர்த்தத் ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

6. த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன் விதம்
கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

7. சில வீர்ய ச¬முத் பூதம் ஸ்ரீநிவாச தானூர்த் பவம்
சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

8. யஸ்த தன்வந்தரி மாதா பிதா தேவோ மஹேஸ்வரா
தம் சாஸ்தார மஹம் வந்தே மஹா ரோக நிவாரணம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

9. ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

(சுவாமியே சரணம் ஐயப்பா)

10. ஆஸ்யாம கோமள விசாலுதனும் விசித்ரம்
வயோவஸான மருணோத்பவ தாம ஹஸ்தம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

11. உத்தரங்கரத்தன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபதமே

(சுவாமியே சரணம் ஐயப்பா)

மஹாசாஸ்தா அஷ்டோத்தரம்

ஓம் மஹாசாஸ்த்ரே நம
ஓம் விச்வசாஸ்த்ரே நம
ஓம் லோகசாஸ்த்ரே நம
ஓம் தர்மசாஸ்த்ரே நம
ஓம் வேத சாஸ்த்ரே நம

ஓம் காலசாஸ்த்ரே நம
ஓம் கஜாதி பாய நம
ஓம் கஜாரூடாய நம
ஓம் கணாத் யக்ஷõய நம
ஓம் வ்யாக்ரா ரூடாய நம

ஓம் மஹாத்யுதயே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
ஓம் கதா தங்காய நம
ஓம் கதா க்ரண்யை நம

ஓம் ரிக்வேத ரூபாய நம
ஓம் நக்ஷத்ராய நம
ஓம் சந்த்ர ரூபாய நம
ஓம் வலாஹகாய நம
ஓம் தூர்வாச்யாமாய நம

ஓம் மஹா ரூபாய நம
ஓம் க்ரூரத் ருஷ்டயே நம
ஓம் அனாமயாய நம
ஓம் த்ரிநேத்ராய நம
ஓம் உத் பலாகாராய நம

ஓம் காலஹந்த்ரே நம
ஓம் நராதிபாய நம
ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம
ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம
ஓம் மதனாய நம

ஓம் மாதவஸுதாய நம
ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
ஓம் மஹா பலாய நம
ஓம் மஹாத் ஸாஹாய நம
ஓம் மஹாபாப விநாசநாய நம

ஓம் மஹா சூராய நம
ஓம் மஹா தீராய நம
ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம
ஓம் அஸி ஹஸ்தாய நம
ஓம் சரதராய நம

ஓம் ஹாலாஹல தராத்மஜாய நம
ஓம் அர்ஜுநேசாய நம
ஓம் அக்னிநயநாய நம
ஓம் அநங்க மதனாதுராய நம
ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம

ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷ?தாய நம
ஓம் கஸ்தூரி திலகாய நம
ஓம் ராஜசேகராய நம
ஓம் ராஜ ஸத்தமாய நம

ஓம் ராஜ ராஜார்சிதாய நம
ஓம் விஷ்ணு புத்ராய நம
ஓம் வநஜனாதிபாய நம
ஓம் வர்சஸ்கராய நம
ஓம் வரருசயே நம

ஓம் வரதாய நம
ஓம் வாயுவாஹனாய நம
ஓம் வஜ்ர காயாய நம
ஓம் கட்க பாணயே நம
ஓம் வஜ்ரஹஸ்தாய நம

ஓம் பலோத்ததாய நம
ஓம் த்ரிலோகஞாய நம
ஓம் அதிபலாய நம
ஓம் புஷ் கலாய நம
ஓம் வ்ருத்த பாவநாய நம

ஓம் பூர்ணாதவாய நம
ஓம் புஷ்கலேசாய நம
ஓம் பாசஹஸ்தாய நம
ஓம் பயாபஹாய நம
ஓம் பட்கார ரூபாய நம

ஓம் பாபக்னாய நம
ஓம் பாஷண்டருதி ராகனாய நம
ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம
ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம
ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம

ஓம் பூஜ்யாய நம
ஓம் பூதசாஸ்த்ரே நம
ஓம் பண்டிதாய நம
ஓம் பரமேச் வராய நம
ஓம் பலதா பூஷ்ட ப்ரதாய காய நம

ஓம் கவயே நம
ஓம் கவீ நாமதிபாய நம
ஓம் க்ருபாளவே நம
ஓம் க்லேசநாசனாய நம
ஓம் ஸமாய நம

ஓம் அரூபாய நம
ஓம் ஸேநான்யை நம
ஓம் பக்தஸம்பத் ப்ரதாயகாய நம
ஓம் வ்யாக்ரசர்மதராய நம
ஓம் சூலிணே நம

ஓம் கபாலினே நம
ஓம் வேணுவாதநாய நம
ஓம் கலாரவாய நம
ஓம் கம்புகண்டாய நம
ஓம் கிரீடாதி விபூஷிதாய நம

ஓம் தூர்ஜடவே நம
ஓம் விரநிலாய நம
ஓம் வீராய நம
ஓம் விரேந்த்ர வந்திதாய நம
ஓம் விச்வரூபாய நம

ஓம் வ்ருஷபதயே நம
ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம
ஓம் தீர்க்கநாஸாய நம
ஓம் மஹாபாஹவே நம
ஓம் சதுர்பாகவே நம
ஓம் ஜடாதராய நம

ஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட ஸ்துத்யா நம

ஓம் ஹரிஹராத்மஜாய நம

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

ஸ்ரீ தர்ம ஸாஸ்த்று மூல மந்த்ரம்

1. ஓம் ஸ்ரீ ஹரிஹர புத்ராய
2. ஓம் புத்ர லாபாய
3. ஓம் மஹா சாஸ்த்ரேய
4. ஓம் சத்ரு நாச நாய
5. ஓம் மத கஜ வாகனாய
6. ஓம் பிரதயட்ச சூலாயுதாய
7. ஓம் வர வரத சர்வ ஜனமே
8. ஓம் வசமான ய ஸ்வாஹா
9. ஓம் சாஸ்த்று ஸ்ரீ பாபு ஜயாமி நமக
தற்பயாமி நமக

ஸ்ரீ சபரிகிரி வாசன் ஸ்தோத்திரம்
த்யானச் லோகம்

ஸனிக் தாரவ விஸார குந்தல பராம்
ஸிம்ஹா ஸனாத் யாஸினம்
ஸபூர் ஜத் பத்ர ஸுக் லுப்த குண்டல
மஹேஸ் விஸ் வாஸப் ருயோர் யுகம்
நீல கௌம வஸம் நவீன் ஜலத
ஸயாமம் ப்ரபா ஸ்த்யகா
பாயாத் பார்ஸ்வ யுகம் ஸுசரக்தா ஸகலா
கல்பம் ஸ்மரேத் ஆர்யுகம்

ஸ்ரீ மஹா ஸா ஸ்தாமாலா மந்த்ரம்

1. ஓம் ஹரி ஹர புத்ராய
2. ஓம் பிரும்ம நிஷ்டாய
3. ஓம் யோ ஹிந்த ராய
4. ஓம் ஸர்வக் ஞ பீடஸ் தியாய
5. ஓம் விஷ்ணு பிரும்ம முகாம ரார்ச்சிதாய
6. ஓம் அத்ரி வாஸாய
7. ஓம் ஸிம் ஹாஸனாய
8. ஓம் கர தல தருத் சாப பானாய
9. ஓம் சங்கு சக்ர சுரி காயுத தராய
10. ஓம் கட்கரா டாங்கி தாய
11. ஓம் கேரள க்ஷத்ரியா சார நிரதாய
12. ஓம் சிவ புத்ராய
13. ஓம் சிவங்க ராய
14. ஓம் சிவாய சிவை வராய
15. ஓம் பரி வாரி தாய
16. ஓம் சபரி கிரீந்தர பீட நிலையாய
17. ஓம் மஹிக்ஷி மர்த்தன விக்ர மாய
18. ஓம் கணபதி ஸமே தாய
19. ஓம் ஸர்வ பூதாதி பாய
20. ஓம் மஞ்சாம்பிகா பரிவாராய
21. ஓம் தர்ம சாஸ்ரே நமக

த்யானம்

1. அன்யதா சரணம் நாஸ்தித்வமேவ சரணம்
மம தஸ் மாத் காருண்ய பாவேன் ரக்ஷ்ரக்ஷ் மஹேஸ்வரா
ஆவாகனம் நஜா நாமி நஜாநாமி விஸர்ஜனம்
பூஜாம் விதிம் நஜாநாமி க்ஷம்ய தாம் பூதநாயகா

2. ஜனன மரண ரஹித பரம ஸுகதம் தேஹிமே தேஹி
த்ரை லோக்ய த்யான வாஸ ப்ரபாகர் ப்ரகாச போத
நமஸ்தோ நமஸ்தேஸ்து பகவான் ஸ்ரீ பூர்ண புஷ்களா நாத
த்ராஹிமாம் த்ராஹிமாம் பாஹி ஸர்வாப ராதம் க்ஷமஸ் வாஹிலேசம்

த்யானம்

ஓங்கார மூலம் ஜோதி ஸ்வரூபம்
பம்பா நதி தீர ஸ்ரீ பூத நாதம்
ஸ்ரீ தேவ தேவம் சதுர் வேத பாவம்
ஸ்ரீ தர்ம ஸாஸ்தார மனஸாம் ஸ்மராமி

ஸ்ரீ ஐயப்பன் நமஸ்காரம்
பஞ்ச ரத்தினம்

1. அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம்
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம்

2. சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத ரஞ்ச தக்ஷிணே
விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம்

3. வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண மால விபூஷ்ணம்
வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்

4. கிங்கிண் யொட்டியாண பூஷேஷம் பூர்ண சந்திர நிபானணம்
கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்

5. பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி நிவாஸினம்
மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தனம்

ஆரத்தி மங்களம்

1. மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்
மாளிகை புரத்து மஞ்ச மாதாவுக்கும்
பந்தளத்தை ஆண்டு வந்த பார் போற்றும் மன்னருக்கும்
மணிகண்ட கோபால கிருஷ்ணனுக்கும்
ஜெயமங்களம் நித்ய சுப மங்களம்

2. பஞ்சகிரி நிவாஸாய பூத நாதாய மங்களம்
ஸ்ரீ ஹரிஹர புத்ராய பஞ்ச பூதாய மங்களம்
கலியுக ப்ரத்யக்ஷ தேவாய காந்த கிரீசாய மங்களம்
சர்வ பாப வினாசாய சபரிகிரீசாய மங்களம்

3. சங்கராய சங்கராய சங்க ராய மங்களம்
சங்கரீ மனோகராய ஸாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம் தாத்தாத்ரேய மங்களம்
கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம் ராதாகிருஷ்ண மங்களம்
பூர்ண புஷ்களா ஸமேத பூத நாத மங்களம்

திவ்ய நாம ஸங்கீர்த்தனம்
தீபப் ரதக்ஷிணம் சம்பூர்ணம்
சுவாமியே சரணம் ஐயப்பா
கற்பூரம் ஹாரத்தி எடுக்க வேண்டும்

தேவர்கள் ஸ்துதி

மஹிஷி சம்காரத்தால் பெரு மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பகவானைக் கீழ்காணும் ஸ்தோத்திரத்தால் துதித்தார்கள். அதன் மூலம் மிகவும் பிரிதி அடைந்த பகவான் இத்தோத்திரம் மூலம் தன்னைத் துதிப்பவர் எவராயினும் அவர்களுக்கு வேண்டும் வரம் தருவதாக அருளி இருக்கிறார். இத் தோத்திரத்தை அனைவரும் துதிப்பது மிக விசேஷமாகும்.

தேவர்கள் வேண்டுதல்

1. ஓம் நமஸ்தே பகவதே நாமோ தாராயணாயதே
ஓம் நமஸ்தே பகவதே சர்வக் ஞாய நமோ நம

2. கோர சம்சாரார்ண வஸ்ய தாரகாய நமோ நம
தாரகப் பிரம்ம ரூபாய பூத நாதாயதே நமோ நம

3. போத ரூபாய பூதாய புண்ய பூர்ணயதே நமோ நம
வர்ணத் ராய யுதேகா ஓங்காராய நமோ நம

4. பகவராய நமஸ்துப்யம் ரேபாந் தாய நமோ நம
யகாராய நமஸ்துப்யம் கோகாராய நமோ நம

5. பகவராய தகாராய ரேபாந்தாய நமோ நம
நகாராய நமஸ்துப்யம் மகாராய நமோ நம

6. ஹாபோ சங்கடம் தேக சகலம் சகலேச்வர
தேவேச விச்வ கர்த்தா ஸ்த்வம் பரிபாஹி ஜெகத்பதே

7. விச்வ பர்தா ஜய சதா விஸ்வ ஹர்த்தா ஜெயப்ரபோ
சர்வே ஷாம் ஜீவ ஜாலனா மேக ஜீவஸ்வரூபக

8. தேவ தேவ ஜயத் வம்போ சர்வதா சர்வநாயகா
தர்ம ஸாஸ்தா ஜய பகவான் ஜன்மதுக்க வினாசன

விருத்தம்

1. ஐயனே கருணாக ரானந்த மூர்த்தி
அசில லோகாதி நாதா

2. மெய்யாய் எழுந்தருளி விளையாடி வர
மருள வேண்டும் மிது சமயம் ஐயா

3. கையினால் அடியவர்கள் பூஜா நைவேத்தியமும்
நெய்யினால் விளக் கேற்றியும்

4. ஐயா நீர் இங்கு வந்து எழுந்தருள்வீர்
என்று அனைவரும் காத்திருக்கோம்

5. கருணாகரா ஓங்கார பொருளான தெய்வமே
ஹரிச் சந்திர சூடா பாலா

6. பெரிதான காட்டினில் புகுந்து வந்துன்
மனம் தெரிவிக்க ஆசைக் கொண்டோம்

7. கோர மிருக மேவிவளர் பாமாலை ஊடு
வழி தீரமாய் ஏறி வந்தோம்

8. காருண்யனே எங்கள் கண்ணெதிரில்
உந்தனை காணாது மனம் வாடுகிறோம்

9. ஐயனே உன் வசதி ஆரியங்காவிலோ
அச்சனார் கோவில் தன்னிலோ

10. தென் குளத்தூரிலோ தேவர்கள் மலர்
சொரியும் முத்தையனார் கோவில் தன்னிலோ

11. விண்ணவர்கள் போற்றும் பொன்னம்பலம்
தன்னிலோ சபரி ஹிரி வரை தன்னிலோ

12. எங்கெங் கிருக்கினும் எழியோர்கள் மீது
கிருபை செய்தருள வேண்டுமையா

13. மலைநசட்டில் வளமோங்கு மாமலையின்
வாசனை மதனே சதகோடி வடிவே

14. அந்த மதியற்ற மகிக்ஷி முகி வதை
காரணார்த்தமாய் அவதாரமான பொருளே

15. பாண்டி முதலான பல தேச வாசிகளெல்லாம்
பக்தி பூண்டிங்கு வந்தோம்

16. பரம காருண்யனே கருணை மிக காட்டியே
பரிவுடன் பவனி வருவாய்

17. வந்தால் ஒழித்திடும் என் சந்தாபமும்
எங்கள் சகல வித துரித மெல்லாம்

18. சித்திப் பறக்கடித்திடும் உனது பாத சார
சீரகத்தின் பொடியதை தந்தருள்வீர்

19. அந்தி பகல் உந்தனது நாமமே சிந்தனைகள்
செய்ய அருள் வாய்

20. பொய்யா தவமுனிவர் போற்றும் பொற்பாதனே
பூர்ணா புஷ்களை நாதனே

21. பொன்னம்பலத்தில் வளர் பூர்ணாச் சந்திர
பிரபா சோபி தானந்த திவ்யா

22. தவயோக சித்தாந்த சபரீ பீடாஸ்ரம
ஸ்தான மெய் ஞான குருவே

சபரிமலையில் இரவு நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

1. ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம்
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

2. சரண கீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்
அருண பரஸுரம் பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

3. ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரேய

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

4. துரக வாகனம் ஸுந்த ரானனம்
வரக தாயுதம் தேவ வர்ணிதம்
குருக்குருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

5. த்ரி புவனார் சுதம் தேவாத்மகம்
த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

6. பவபயா பகம் பாவு காவகம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

7. களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

8. ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

மாலையை அவிழ்த்து விரதத்தினை முடித்துக் கொள்ளும் போது சொல்லும் மந்திரம்

அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.
விரத முறைகள்!

கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகின்றனர். இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மாலை அணிந்து விரமிருந்து சபரிமலை செல்வோர் மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் :

1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.

2. மாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.

3. தாய் தந்தையின் நல்லாசியுடன், குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.

4. இவ்வாறு மாலை அணிந்த பின்பு  கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது.   அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.

5. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி  கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.

6. கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியவேண்டும்.

7. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

8. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.

9. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

10. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.

11. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.

12. மது, மாமிசம், புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.

13. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் சாப்பிடலாம்.

14. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.

15. காலணிகள் பயன்படுத்தக்கூடாது.

16. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.

17. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.

18. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும் பொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.

19. இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.

20. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.

21. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.

22. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.

23. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து, கட்டினைப் பிரித்து, பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.

24. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரத்தை கூறி மாலையைக் கழற்றி,சந்தனத்தில் நனைத்து  ஐயப்பன்  திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை:

1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை - முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

2. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.

3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.

4. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.

5. விரத நாட்களில் பெண்களை - சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.

6. வீட்டிலிருக்கும் பெண்கள் மாதவிலக்கானால், அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருத்தல் வேண்டும். அப்படி வசதி இல்லாவிடில், மாலை அணிந்தவர்கள் வெளியில் எங்காவது தங்கியிருத்தல் நல்லது.

7. விரத சமயத்தில் மாலை அணிந்தவர்களுக்கு மிகவும் துன்பங்கள் ஏற்படும் என்பதும், சோதனைகளுக்கு உள்ளாவார்கள் என்பதும் தவறான கருத்துகளாகும்.

8. ஒருவேளை, அணிந்திருக்கின்ற ஒரே மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால், அதைச் செப்பனிட்டு அணிந்துகொள்ளலாம். இதில் தவறு ஏதுமில்லை. எந்தவிதமான தவறும் செய்யாமல் விரதத்தைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், இப்படி மாலை அறுந்துவிட்டதே என்ற வீண் மன சஞ்சலமும் அடைய வேண்டியதில்லை.

9. மாலை போடும் சமயத்தில் எந்தவிதமான பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மனசஞ்சலம் ஏதாவது இருந்தால், மாலை போடுவதை தள்ளிப்போடுதல் நல்லது.

10. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் அப்பழுக்கற்ற பக்தியும், மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.

11. இருமுடி கட்டும் வைபவத்தை, தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.

12. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று: தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல், தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.

13. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!
இளையாற்றங்குடி மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஆலயங்கள் நிறைந்து நிற்கும் புண்ணிய பூமி;சைவமும் வைணவமும் சரிசமமாக சஞ்சாரம் செய்யும் சமத்துவ பூமி;மொத்தத்தில் ஆன்மிகம் பல்கிப் பெருகி மனதைப் பரவசமாக்கும் புனித பூமி காஞ்சி மாநகர்.எண்ணற்ற திருக்கோயில்கள் இந்த நகரம் முழுதும் தரிசிக்கக் கிடைக்கின்றன.அருள்மிகு காஞ்சி காமாட்சியின் திருச்சந்நிக்கும் ஸ்ரீவரதராஜ பெருமாளின் தரிசனத்துக்கும் இறையருள் பெறும் நாட்டத்துடன் எந்நேரமும் கூடும் பக்தர்கள் கூட்டத்துக்குஅளவே இல்லை! காஞ்சிக்குப் பெருமை சேர்ப்பதே சங்கர மடம்தான்.ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மடத்துக்கு அவரே முதல் ஆசார்யராக விளங்கினார்.  பேதங்கள் மலிந்திருந்த அந்தக் காலத்தில் இந்து மதத்தின் பெருமைகளை அனைவருக்கும் எடுத்துக்கூறி சமய உணர்வுகளை ஊட்டினார்.இந்து மதம் ஏன் உயர்ந்தது என்பதை விளங்கினார்.

அவரில் துவங்கி இன்று 69-வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் 70-வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் திகழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு முன் 68-வது பீடாதிபதியாக திகழ்ந்தவர்தான் கலியுக தெய்வம் என்று நாடே போற்றும் ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் என்கிற மகா பெரியவர்.இந்த புனிதமான மடத்தில் 65-வது பீடாதிபதியாக விளங்கியவர் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்(காலம் கி.பி.1851-1890).திருவிடைமருதூரில் அவதரித்தவர்.  காரைக்குடிக்கு அருகில் உள்ள இளையாற்றங்குடியில் நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு சொந்தமான நித்யகல்யாணி சமேத கயிலாயநாதர் ஆலயத்துக்கு அருகே அதிஷ்டானம் கொண்டுள்ளார்.(நட்டுக்கோட்டை நகரத்தார் கொண்டாடும் ஒன்பது சிவாலயங்களுள் இது பிரதானமான தலம்).

இதை இளையாத்தங்குடி என்றும் சொல்கிறார்கள்.புதுக்கோட்டையில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவு.புதுக்கோட்டையில் இருந்து  நமணசமுத்திரம், திருமயம்,கீழச்செவல்பட்டி வழியாக இளையாற்றங்குடியை அடையலாம்.  கீழச்செவல்பட்டியில் இருந்து சுமார் 3 கி.மீ.தொலைவு.காரைக்குடியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு.பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு.திருப்பத்தூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு.நாட்டில் பல பகுதிகளுக்கும் யாத்திரையாகச் சென்று மக்களிடையே பல ஆன்மிகக் கருத்துக்களைப் போதித்து வந்த மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.  சிவகங்கை மற்றும் காளையார்கோவில் ஆகிய தலங்களையும் தரிசித்தார்.  அப்போது ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்த நகரத்தார் எங்கள் பகுதிக்கும் தாங்கள் எழுந்தருள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வாத்தியங்கள் முழங்க இளையாற்றங்குடி ஷேத்திரத்துக்கு வந்தார்.

ஸ்ரீநித்யகல்யாணி சமேத கயிலாயநாதரை தரிசித்துவிட்டு நகரத்தாரின் பக்தியையும் சேவையையும் பார்த்துப் பெரிதும் மகிழ்ந்தார்.அதற்கேற்றாற்போல் ஸ்வாமிகள் தங்குவதற்கும் அவருடைய சிவ பூஜைக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்திருந்தனர்.ஸ்வாமிகள் பல நாட்கள் இங்கு தங்கியிருந்து தங்களுக்கு ஆசி வழங்கிச் செல்லும்படி வேண்டினர் நாட்டுக்கோட்டை செட்டியார் பெருமக்கள்.அவர்களது அன்பான வேண்டுகோளை ஏற்று நிரந்தரமாகவே அங்கு தங்கிவிட்டார் ஸ்வாமிகள் என்பதுதான் உண்மை. தனது ஜீவன் முக்தியடையப்போவது இங்கேதான் என்பதையும் இறைவன் சித்தத்தால் ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்டார்.மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் .அதற்கான ஓர் இடத்தையும் அவரே தேர்ந்தெடுத்தார் நகரத்தாருக்குச் சொந்தமான நிலத்தில் குறிப்பிட்ட ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதை அவர்களிடம் இருந்து கேட்டு வாங்கிய ஸ்வாமிகள் அந்த இடத்தில்தான் சமாதி கொண்டுள்ளார்.ஸ்வாமிகள் இன்று இளைப்பு ஆறும் குடிதான் இளையாற்றங்குடி.காரணம் சிறு வயது முதல் அவர் சுற்றித் திரிந்த ஷேத்திரங்கள் ஏராளம்.தனது இறுதிக் காலத்தில் அமைதியான சூழ்நிலையை விரும்பி இங்கே இளைப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பார்கள்.

தனக்குப் பிறகு ஓர் ஆசார்யரை நியமித்துவிட வேண்டும் என்று விரும்பினார் ஸ்வாமிகள்.உதயம்பாக்கத்தைச் சேர்ந்தவரும் பிரம்மசர்ய விரதம் காத்துவரும் பாலாற்றங்கரையில் வசித்து வந்தவருமான சுவாமிநாதன் என்ற இளைஞரைத் தேர்ந்தெடுத்து சந்நியாச தர்மப்படி தீட்சை வழங்கினார்.பூஜை விதிகளையும் மடத்து சம்பிரதாயங்களையும் உபதேசித்ததுடன் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற தீட்சா நாமத்தையும் அருளினார்.இதையடுத்து, இளைய மடாதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகள்(மகா பெரியவர் அல்ல).மகாதேவேந்திர ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்து வந்தார்.தான் சமாதி ஆகப் போகும் சில நாட்களுக்கு முன்னரே  அதை சூசகமாக உணர்ந்துவிட்டார் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.முக்காலமும் உணர்ந்தவர் ஆயிற்றே!சமாதி அடைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் ஒரு மாலை வேளையில் இளையாற்றங்குடி கயிலாயநாதர் ஆலயத்துக்கு அருகில் உள்ள தோப்புகளையும் பிற பகுதிகளையும் சுற்றிப் பார்த்துக்கொண்டே வந்தார்.ஓர் இடத்தை கடந்து செல்ல நேரிட்டபோது அங்கேயே அப்படி நின்றார்.

அவர் மனதில் ஏதோ ஒரு மின்னல் தோன்றியது.  தனக்குப் பின்னால் பவ்வயமாக நடந்து வந்து கொண்டிருந்த தேவஸ்தானத்தின் டிரஸ்டியான செட்டியரசர் பிரமுகர் ஒருவரைத் தன்னருகே வருமாறு அழைத்தார் செட்டியார் ஓடோடி வந்து ஸ்வாமிகள் முன் வணங்கி நின்றார்.முட்சொடிகள் புதர்போல் மண்டிக் கிடந்த அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி இந்த நிலத்தை எமக்குத் தருவீர்களா?என்று கேட்டார்.  ஸ்வாமிகள்.எந்த நோக்கத்துக்காக அந்த இடத்தை ஸ்வாமிகள் கேட்கிறார் என்று செட்டியாருக்கு புலப்படவில்லை என்றாலும் ஸ்வாமிகளே வாய்விட்டு ஓரிடத்தைத் தருமாறு கேட்டு விட்டாரே.அவருக்குப் போய் செடி,கொடிகள் மண்டிப்போன இடத்தைத் தருவதா?சிவன் கோயிலுக்கு அருகே நல்ல இடமாகப் பார்த்துத் தரலாம்.தினமும் தரிசனத்துக்குச் சென்று வருவதற்கும்  அவருக்கு வசதியாக இருக்கும் என்று நினைத்து தன் ஆசையை ஸ்வாமிகளிடம் பவ்யமாகச் சொன்னார்.ஆனால் ஸ்வாமிகள் இந்த இடம்தான் எமக்குத் தேவை.உங்களால் கொடுக்க இயலுமா?என்று கேட்டார்.

ஸ்வாமிகள் இப்படிக் கேட்டதும் மனம் உருகிய செட்டியார் தங்களின் விருப்பப்படியே நிறைவேற்றுகிறேன்.கவலை வேண்டாம் ஸ்வாமி என்று சொன்னாரே தவிர,ஸ்வாமிகளின் எண்ணத்தை அவரால் அறிந்துக்கொள்ளமுடியவில்லை.ஸ்வாமிகள் தனது இறுதி நாட்களில் இருக்கிறார் என்பதை செட்டியார் அப்போது அறிந்திருக்கவில்லை.மறுநாள்!ஸ்வாமிகளின் உடல்நலன் லேசாக பாதிக்கப்பட்டது. மூன்றாம் நாள்,20.03.1890 அன்று ஸ்வாமிகள் முக்தி அடைந்தார்.நாட்டுக்கோட்டை நகரத்தார் இன பிரமுகர்கள் உட்பட பலரும் மளமளவெனக் குவிந்தனர்.இளையாற்றங்குடி என்கிற ஷேத்திரத்துக்குத் தனது வருகையால் ஒரு புதுப் பொலிவைக் கொடுத்தவர்.  மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.அவருக்கு செய்ய வேண்டிய கடைசிக் காரியங்கள் முறையாக நடக்க வேண்டுமே என்கிற அக்கறையில் அனைவரும் கூடினர்.  குறிப்பிட்ட ஒரு நிலத்தை ஏன் விடாப்பிடியாகக் கேட்டார் ஸ்வாமிகள் என்பது இப்போதுதான் தேவஸ்தான டிரஸ்டியான அந்த செட்டியாருக்குப் புரிந்தது!

நாட்டின் பல பகுதிகளால் இருந்தும் ஆன்மிகப் பெருமக்கள் குவிந்தனர்.காஞ்சி மடத்தில் 63வது ஆச்சார்ய ஸ்வாமிகள் ஸித்தி ஆன செய்தியை எவரெவருக்குத் தெரிவிக்க வேண்டுமோ அனைவருக்கும் ஆட்கள் மூலம் தகவல் அனுப்பினார்கள் நகரத்தார் பெருமக்கள்.கீர்த்தனங்கள் பாடப்பட்டன.நாம கோஷம் கோரஸாக வெளிப்பட்டது.கயிலாயநாதர் கோயிலுக்கு வடக்குத் திசையில் உள்ள விரிவான ஒரு தோட்டத்தில்(ஸ்வாமிகள் விரும்பிக் கேட்ட அதே இடம்தான்)அதிஷ்டானம் அமைக்கப்பட்டது.ஸித்தி பெற்ற தினத்தில் இருந்து தொடர்ந்து ஒரு மண்டல காலத்துக்கு பூஜைகள்,பாராயணங்கள் என்று வேத கோஷம் நிறைந்து காணப்பட்டது.விஜயநகரம்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,கொல்லங்கோடு,கொச்சி போன்ற சமஸ்தானத்தில் பிரதிநிதிகள் மண்டலாபிஷேக காலத்தில் இளையாற்றங்குடிக்கு வந்திருந்து. ஸ்வாமிகளுக்கு தங்கள் சமஸ்தான சார்பாக உரிய மரியாதையை செலுத்தி வணங்கினார்கள்.

ஏழைகளுக்குப் பல வகையான தானங்கள் வழங்கப்பட்டன.இறைத்திருப்பணியில் தங்களை பெரிய அளவில் ஈடுபடுத்திக் கொண்ட நகரத்தார் பெருமக்கள் பின்னாளில் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை திருக்கோயிலாக கட்டி பராமரித்து வருகிறார்கள்.கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள திருவிடைமருதூரில் ஸ்வாமிகள் அவதரித்தார்.அவருடைய தந்தையார் பெயர் சோஷத்ரி சாஸ்திரிகள்.தந்தை ரிக் வேதத்திலும் அதன் பிரயோகங்களிலும் வல்லவர் சிறந்த சிவபக்தர்.திருவிடைமருதூரில் உறையும் மகாலிங்க ஸ்வாமியின் அருளால் தனக்கு மகன் பிறந்ததால் அவனுக்கு மகாலிங்கம் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார்.விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப பிற்காலத்தில் பிரகாசிக்கப் போகும் மகாலிங்கமும் குழந்தைப்பருவத்திலேயே சிறந்து விளங்கினார்.அவன் முகத்தில் தெரிந்த கம்பீரமான தேஜஸ் கண்களில் தெரிந்த ஒளி எந்த ஒரு காரியத்தையுமண சுறுசுறுப்புடன் செய்து முடிக்கும் சாதுர்யம் போன்றவை பலராலும் வியந்து பேசப்பட்ட விஷயங்கள்!ஐந்து வயது முடிந்த பிறகு உபநயனம் செய்து வைக்கப்பட்டது.இளமைப் பருவத்தில் தன் தந்தையாரிடமே வேதத்தைக் கற்றார் தினமும் செய்ய வேண்டிய ஆசார அனுஷ்டானங்களை முறையாகச் செய்து வந்தார்.அவருடைய கீர்த்தி திருவிடைமருதூரில் மட்டுமில்லாமல் பல இடங்களிலும் பேசப்பட்டது.

அப்போது காஞ்சி சங்கர மடத்தில்,64வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்(1814-1851)
வேதம்,சாஸ்திரம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய திருவிடைமருதூர் மகாலிங்கம் என்ற இளைஞனைப் பற்றி இந்த ஆசார்யருக்கு தகவல் தெரிந்திருந்தது.அவர் 1846ல் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கபிரதிஷ்டை(தாடங்கம் என்பது காதல் அணியும் ஆபரணம்)நடத்தினார்.  இந்த நிகழ்வுக்கான வைதீக விஷயங்களை முன்னின்று கவனிக்கும்படி மகாலிங்கத்தைப் பணித்தார்.ஆசார்யர்.அதை,சிரமேற்கொண்டு செய்து முடித்தார் மகாலிங்கம்.இத்தனை சின்ன வயதில் இப்படிப்பட்ட ஒரு பெரும் பணியை ஏற்று நடத்தி முடித்த மகாலிங்கத்தின் சாதுர்யம்,பலரையும் அவர் பக்கம் திரும்ப வைத்தது. அதற்கு ஆசார்யரும் விதிவிலக்கல்ல.எத்தனையோ பண்டிதர்கள் மன்னர்கள்,பிரமுகர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்வின் பிரதான வைதீக காரியத்தை இளைஞன் கச்சிதமாக முடித்துவிட்டானே!பலரும் பிரமிக்கும்படி பாரட்டுகளைப் பெற்று விட்டானே என்று சந்சோஷப்பட்டார் 64வது பீடாதிபதி.

அப்போது அவர் ஒரு தீர்மானத்துக்கும் வந்தார்.நமக்குப் பிறகு இந்த பீடத்தை அலங்கரிக்க இவரே தகுதியானவர்.இவரால்தான் மடத்தன் பெருமைகள் மேலும் உயரும் என்று தீர்மானித்தார்.மகாலிங்கத்தின் பெற்றோரை வரவழைத்துப் பேசி சம்மதம் வாங்கினார்.ஒரு சுபதினத்தில் மகாலிங்கத்துக்கு சந்நியாச தீட்சை வழங்கினர்.காஞ்சி காமகோடி மடத்தின் சம்பிரதாயப்படி என்னென்ன போதிக்க வேண்டுமோ அனைத்தையும் போதித்து அருளினார்64வது பீடாதிபதி.  மகாலிங்கத்துக்கு மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று தீட்சா நாமம் சூட்டினார்.1851ல் கும்பகோணம் ஸ்ரீமடத்தில்64வது பீடாதிபதி சமாதி எய்த பின் 65வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.மகாலிங்கம் என்கிற மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.

புதுப்பெரியவர் வரவுக்குப் பின் காஞ்சி மடத்தின் பெருமையும் புகழும் திக்கெட்டும் பரவியது.  தினமும் நடக்கும் சந்திரமௌளீஸ்வர பூஜையைத் தவிர,வேத பாராயணங்கள் விசேஷ ஹோமம் என மடத்தில் எப்போதும் மந்திர கோஷம்தான். வேள்விப் புகைதான்.புது ஆசார்யரின் கீர்த்தி பற்றிக் கேள்விப்பட்டுப் பல பண்டிதர்களும் பொது ஜனங்களும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து புறப்பட்டு காஞ்சிக்கு வந்து அவரை தரிசனம் செய்தனர்.எத்தனை நாட்களுக்குத்தான் மடத்தில் இருந்துகொண்டே எல்லாவற்றையும் கவனிப்பது?எனவே, ஷேத்திராடனம் புறப்பட விருப்பம் கொண்டார் ஸ்வாமிகள்.மடத்தைச் சேர்ந்த பரிவாரங்களுடன் மயிலாடுதுறை,வைத்தீஸ்வரன் கோவில்,சிதம்பரம்,விழுப்புரம் எனக் கிளம்பினார்.செல்லும் இடத்தில் எல்லாம் சிறப்பான வரவேற்பு.புது ஆசார்யர் வருகிறார் என்றதும்,அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து எண்ணேற்றோர் தரிசிக்க வந்தனர்.ஆந்திரப் பிரதேசம், பூரி ஜகந்நாதர் திருக்கோயில்,விஜயநகர சாம்ராஜ்ஜியம் எனப் பயணம் தொடர்ந்தது.மடத்துக்கு தானமாகப் பல கிராமங்களை எழுதித் தந்தனர்.ஆந்திர மன்னர்கள்.3.7.1885 அன்று விஜயநகரத்துக்கு சென்றார்.ஸ்வாமிகள்.விஜயநகர ராஜாவான ஆனந்த கஜபதி மகாராஜா,நகரத்து எல்லையிலேயே யானை,குதிரை,ராஜபரிவாரம் ஆகியவை புடைசூழ,வாத்தியங்கள் முழங்க,பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்று மகானின் கால்களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான்.  விஜயநகரத்திலேயே சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டார்.ஆந்திராவில் பிரபலமாகத் திகழ்ந்த ஜமீன்தார்களும் ராஜாக்களும் தங்களது ஊருக்கு ஸ்வாமிகள் எழுந்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தூனி,பார்லிகிமேடி, பித்தாபுரம்.பொப்பிலி,வெங்கடகிரி போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்தார்.கோதாவரி,கிருஷ்ண ஆகிய புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து  காளஹஸ்தியை அடைந்தார்.காளஹஸ்தி மகாராஜாவின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு காளஹஸ்தீஸ்வரரை தரிசித்தார்.

அதன்பின், சென்னை வழியாகக் காஞ்சிபுரத்தை அடைந்தார்.சில நாட்களுக்குப் பிறகு யாத்திரை மீண்டும் தொடர்ந்து.  திருப்பாதிரிப்புலியூர்.தாஞ்சாவூர்,தென் ஆற்காடு,திருச்சி,கோவை,கேரள தேசம் ஆகிய இடங்களுக்குப் பயணித்து சூழ்நிலைக்கு ஏற்றாவறு ஆங்காங்கு தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.  அப்போது கும்பகோணம் வந்த ஸ்வாமிகள் மகாமக நிகழ்வில் கலந்துகொண்டார். தனது வாழ்நாளில் தெற்கே ராமேஸ்வரத்தில் இருந்து வடக்கே காசி வரை நாட்டின் பல பகுதிகளுக்கு பாதயாத்திரையாகவும் பல்லக்கிலுமாகப் பயணித்து ஏராளமானோருக்கு ஆசிகளை வழங்கினார் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். திறமை எவரிடம் இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவிக்க ஸ்வாமிகள் எப்போதுமே தயங்க மாட்டார்.சிவபுராணம் கேட்பதில் ஸ்வாமிகளுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.அதைப் பொருத்தமான நபர் பிரசாங்கம் செய்தால் வெகு சுவாரஸ்யமாகக் கேட்டு ரசிப்பார்.அந்தக் காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் ரிஷிவந்தியம் என்னும் கிராமத்தில் வெங்கட்ராம ஐயர் என்பவர் வசித்து வந்தார். சத்தான பல விஷயங்களைக் கற்றுக் தேர்ந்தவர்; பழுத்த சிவபக்தர்.தவிர, மிராசுதாராகவும் இருந்தார்.தனது பணிகள் போக எஞ்சிய நேரத்தில் உள்ளூர் அன்பர்களுக்கு சிவபுராண சொற்பொழிவு நிகழ்த்துவார்.பக்தியுடனும் உருக்கத்துடனும் வெங்கட்ராம் ஐயர் நிகழ்த்தும் சிவபுராண உபன்யாசங்களைக் கேட்க நூற்றுக்கணக்கான பேர் திரளுவார்கள்.

மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.வெங்கட்ராம ஐயரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவருடைய சிவபுரணப் பிரசங்கத்தைக் கேட்க வெகுவாக ஆவல் கொண்டார்.எனவே கும்பகோண மடத்தில் தான் தங்கியிருந்த நாட்களில் வெங்கட்ராம ஐயரை அங்கே வரச் செய்து, சிவபுராண உபன்யாசம் செய்யுமாறு சொன்னார்.வெங்கட்ராம ஐயரும்,கும்பகோண மடத்துக்கு வந்து அங்கேயே சில நாட்களில் தங்கி,தினமும் சொற்பொழிவாற்றினார்.உபன்யாச நாட்களில் தினமும் ஸ்வாமிகள் நேரில் வந்து அமர்ந்து,உபன்யாசத்தைக் கேட்டு வந்தார்.இது, வெங்கட்ராம ஐயருக்குப் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது.சிவபூஜை செய்வதில் மிகவும் தேர்ந்தவர் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.  அவர் சிவபூஜை செய்யும் நேர்த்தியைக் கண்டு,பண்டிதர்கள் பலரும் வியந்துள்ளனர்.  தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயருக்குப் பதினெட்டு வயதாக இருக்கும்போது, ஸ்வாமிகள் சிவபூஜை செய்யும் காட்சியை மனமாரக் கண்டு தரிசித்திருக்கிறாராம்.  அதோடு, உ.வே.சாமிநாதனின் புராணப் பிரசங்கங்களையும் ஸ்வாமிகள் கேட்டுப் பராட்டி இருக்கிறாராம்,ஸ்வாமிகள்,இசையிலும் வேதத்திலும் அபார ஞானமும் புலமையும் உள்ளவர்.வேத வித்துக்களையும் சங்கீத வித்வான்களையும் தகுந்த நேரத்தில் ஆதரித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறார்.

ஸ்வாமிகளிடம் கொண்டிருந்த அபரிமிதமான அன்பின் வெளிப்பாட்டால், அவர் மேல் கீர்த்தனம் இயற்றியவர்கள் பலர்.அவர்களுள் மைசூர் சதாசிவராவ், முத்துசாமி தீட்சிதரின் வம்சத்தவரான சுப்பராம தீட்சிதர்,திருவாரூர் யக்ஞேஸ்வர ஆஸ்ரமி கவிகுஞ்சரா பாரதியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.  ஸ்ரீமகாதேவேந்திரசரஸ்வதி ஸ்வாமியின் திருக்கோயிலைத் தரிசிப்போமா? ஸ்வாமிகளது பூத உடலை வைத்து அதன் மேல் ஒரு சிவாலயத்தை எழுப்பி உள்ளனர்.எனவே ஒரு சிவ தலத்துக்கான பலிபீடம்,நந்திதேவர் ஆகியவை இங்கே அமைந்துள்ளன.கருங்கல் திருப்பணி,உள்ளே நுழைவதற்கு முன் ஒரு கல்வெட்டு, அதில் அதிஷ்டானமும் அதைச் சேர்ந்த கட்டடங்களும் இளையாத்தங்குடி கயிலாயநாத ஸ்வாமி,நித்ய கல்யாணி அம்மை தேவஸ்தானத்துக்கு முற்றிலும் சொந்தமானது என்று குறிக்கப்பட்டுள்ளது.கைலி, சட்டை,பனியன் அணிந்து உள்ளே செல்லக்கூடாது.கருவறை பகுதி அத்தனை பவித்திரமானது.ஸ்வாமிகளின் சமாதியின் மேல் அமைந்துள்ளது லிங்கத் திருமேனி.அர்த்த மண்டபம்,மகா மண்டபம்,பெரிய முன் ஹால் போன்றவை உள்ளன்.மகா மண்டபத்தில் விநாயகரும் தண்டாயுதபாணியும் வீற்றிருக்கிறார்கள்.இதை அடுத்த அர்த்த மண்டபத்தில் இன்னொரு விநாயகரும் ஆதிசங்கரரும் தரிசனம் தருகிறார்கள்.

கருவறையில் காணப்படும் லிங்கத் திருமேனியின் பாணம்.சாளக்கிராமத்தால் ஆனது.மடி மற்றும் ஆசாரம் காரணமாக இவருக்கான நைவேத்தியம் தினமும் குமுட்டி அடுப்பில்தான் தயராகிறது.பெரும்பாலும் நெய் கலந்த சாதம் அல்லது தயிர் சாத்தை ஸ்வாமிகளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.நகரத்தாரின் கட்டுப்பாட்டிலும் அருகிலும் இருக்கும் கயிலாயநாதர் ஆலயத்தில் இருந்து சிறிது அரிசி,வெல்லம்,எண்ணெய் போன்றவை தினமும் அதிஷ்டானத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.இந்த அதிஷ்டானத் திருக்கோயிலுக்கு 1992,2003 ஆகிய வருடங்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தினமும் நான்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன.லிங்கத்திருமேனிக்கு அபிஷேக காலத்தில் திரவியம்,தேன்,பால்,சந்தனம் போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடக்கிறது.பிரதோஷ தினங்களில் நந்திதேவருக்கும் சதுர்த்தசியில் விநாயருக்கும்,ஏகாதசி மற்றும் துவாதசியில் ஆதிசங்கரருக்கும் அபிஷேகங்கள் நடக்கின்றன.இங்கு சிறப்பாக நடந்துவரும் வேத பாடசாலையில்.பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கிருஷ்ண யஜுர் வேதம் பயின்று வருகிறார்கள்.வேதம் படிக்கும் வித்துக்களைப் பார்த்தாலே அழகுதான்!

பாடசாலையும் ஆலய அபிஷேகங்களையும் கவனித்து வரும் வருணகுமார சர்மா ஏகாதசி,துவாதசி போன்ற சில தினங்களில் லிங்கத் திருமேனிக்குப் பட்டு வஸ்திரம் அணிவிப்பேன்.மற்ற நாட்களில் காவி வஸ்திரம்தான்.இங்கு பூஜை செய்வதற்கு மடியும் ஆசாரமும் மிக மிக அவசியம்.சுத்தபத்தம் இல்லாமல் உள்ளே போகக்கூடது.ஒருவேளை அப்படிப் போனாலும் வாசல் நிலைப்படி நம் உச்சந்தலையில் இடித்து நமது சுத்தக் குறைவை உணர்த்திவிடும்.ஸ்வாமிகளை ஆழ்ந்து தியானித்து தரிசிப்பவர்கள் அவருடைய சக்தியை இந்த சந்நிதியில் உணர முடியும்.ஸ்வாமிகள் இன்றைக்கும் இங்கு மானசீகமாக இருக்கிறார்.  தன்னை வணங்கும் பக்தர்களைக் காத்து வருகிறார்.பக்தர்கள் எவருமே இல்லாதபோது சந்நிதியில் ஸ்வாமிகள் சிரிப்பது போன்ற சத்தத்தையும் பேசுவது போன்ற ஒலியையும் நான் அவ்வப்போது கேட்டதுண்டு.அந்த அனுபவங்களை நினைத்து மெய் சிலிர்க்கிறேன் என்றார் நம்மிடம்.அதிஷ்டானம் மற்றும் வேத பாடசாலையின் தேவைகளை காஞ்சி மடத்தின் மேற்பார்வையுடன் அவ்வப்போது கவனித்து வருபவர் சுந்தரேச ஐயர்.ஓய்வு பெற்ற ஆசிரியான இவர்.புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.

அதிஷ்டானத்தை ஒட்டி வெளிப்பக்கம் ஒரு பிரமாண்ட வில்வ மரம் இருக்கிறது.  மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.இங்கே தங்கியிருந்த காலத்தில் இருந்தே இந்த வில்வ மரம் இருந்து வருகிறது.இதன் இலைகளை அவரே பறித்து ஸ்ரீசந்திரமௌளீஸ்வரருக்கு பூஜை செய்வாரம்.இதுபோன்ற உயர்வான வில்வ இலைகளை இதுவரை சிவபூஜைக்குக் கிடைத்தில்லை என்பாராம் ஸ்வாமிகள்.  அந்த அளவுக்கு இந்த வில்வ மரத்தின் மேல் ஒர் ஈடுபாடு.காஞ்சி மகா பெரியவருக்கு மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் பெரும் அபிமானம் உண்டு.புதுக்கோட்டை பகுதிக்கு யாத்திரையாக வரும்போதெல்லாம் மறக்காமல் இளையாற்றங்குடிக்கு வந்து அதிஷ்டானத்தில் தங்கி தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.1925ல் காஞ்சி மகா பெரியவர்,இனையாற்றங்குடிக்கு வந்தபோது இங்கு வியாஸ பூஜை நடத்தி, சாதுர்மாஸ்ய விரதம்  மேற்கொண்டார்.தவிர மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு ரொம்பவும் அபிமானமான வில்வ மரத்தடியில் ஒரு கொட்டகை போட்டு அதில் தங்குவாரம்.வில்வ மரத்தை பிரதட்சணம் வருவாராம்.ஸ்வாமிகளின் திருவடி பட்ட இந்த இடம் பவித்திரமானது என்று நெகிழ்வாராம்.இந்த வில்வ இலைகளைக் கொண்டு, ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை பூஜிப்பாராம்.

பாரத தேசமெங்கும், புனித யாத்திரை மேற்கொண்டு எத்தனையோ திருத்தலங்களைத் தரிசித்து ஆன்மிக எழுச்சி ஏற்படுத்திய மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்று இளையாற்றங்குடியில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்.இது அந்த மண்ணில் மைந்தர்கள் செய்த நற்பயனால் விளைந்தது என்றேதான் சொல்ல வேண்டும்.  நாட்டுக்கோட்டை நகரத்தார் இல்லையென்றால் வேதமும் இல்லை கோயிலும் இல்லை என்று காஞ்சி மகா பெரியவர் அடிக்கடி சொல்வார்.பூம்புகாரில் இருந்து சுமார் 400 வருடங்களுக்கு முன் இங்கு இடம் பெயர்ந்த அந்த நட்டுக்கோட்டை நகரத்தாரை ஆசிர்வதிக்க என்றே, இந்த அதிஷ்டானம் அந்தப் பகுதியில் அமைந்தது போலும்!
ஐயப்பனின் வரலாறு

மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார்.

சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.

தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் சூட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.

எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். அவனுக்கு ராஜராஜன் என்று பெயர் சூட்டினர். மணிகண்டனின் வருகையால் தான் தனக்கு எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன், மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த மந்திரி, மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும், வசதிகளும் போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது சூழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான்.இது சூழ்ச்சி என்று தெரிந்தபோதிலும், மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறினர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை வென்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.

ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாது என்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயன் அருள் செய்தார்.

மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.

மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழுந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.

மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.

ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

ஐயப்பனின் வாழ்வில் வாபரின் பங்கு

வாபர் ஒரு இஸ்லாமியர். கொள்ளைக்காரனாக இருந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்தார். அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை. எனவே அவர்கள் ஐயப்பனிடமே இதுபற்றி முறையிட்டனர்.

ஒருமுறை ஐயப்பன் வாபரை காணச்சென்றார். குழந்தையாக இருந்த ஐயப்பன் வாபருக்கு எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால் உன்னை அழித்துவிடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்லுவேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் வாபரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றார்.

அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலுக்கு வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
மஹாளய ஸங்கல்பம்.
25-09-2018  செவ்வாய்--மஹாளய பக்ஷ தர்ப்பணங்கள்.

  ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, உத்திரப்ரோஷ்டபதி நக்ஷத்திர, 

  வ்ருத்தி நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ப்ரதம தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

      26-09-2018  புதன் 

 ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா  மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வீதியாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர, ரேவதி நக்ஷத்திர, 

  த்ருவ- நாம யோக தைதுள கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்விதீய தின  தில தர்பணம்  கரிஷ்யே.    

 27-09-2018--வியாழன்   

   ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா  மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள குரு வாஸர, அஸ்வினி நக்ஷத்திர, 

  வ்யாகாத நாம யோக வணிஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாம் த்ருதீயாயாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்ருதீய தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

 28-09-2018-வெள்ளி --மஹா பரணி 

 ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா  மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர, அபபரணி நக்ஷத்திர, 

  ஹர்ஷ நாம யோக பவ  கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்த்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சதுர்த்த தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

29-09-2018 ஶனி 

    ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா  மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, க்ருத்திகா நக்ஷத்திர, 

  வஜ்ரம் நாம யோக கெளஸ்துப கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே பஞ்சம தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

30-09-2018 ஞாயிறு 
  
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள பானு வாஸர,  ரோஹிணி நக்ஷத்திர, 

  ஸித்தி நாம யோக கரஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சஷ்ட்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சஷ்டம தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

 01-10-2018 திங்கள்.வ்யதீபாதம் 

  ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர, 

  வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ஸப்தம தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

01-10-2018--திங்கள்-வ்யதீபாதம்

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள இந்து வாஸர, ம்ருகசிரோ நக்ஷத்திர, 

  வ்யதீபாத நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால ஶிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

  02-10-2018--செவ்வாய்

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பெளம வாஸர, ஆருத்ரா நக்ஷத்திர, 

  வரீயான் நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே அஷ்டம தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

03-10-2018-புதன்

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே  நவம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர, புனர்வஸு நக்ஷத்திர, 

  பரிக நாம யோக தைதுள கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம்  நவம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே  நவம தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

 04-10-2018 வியாழன்

ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள குரு வாஸர, புஷ்ய நக்ஷத்திர, 

  ஸித்த நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே தசம தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

05-10-2018—வெள்ளி

    ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர, ஆஶ்லேஷா நக்ஷத்திர, 

  சாத்ய நாம யோக பாலவ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஏகாதஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே ஏகாதஸ தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

06-10-2018--ஶனி -கஜசாயா

   ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர, மகா நக்ஷத்திர, 

  சுப நாம யோக கரஜ கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்வாதஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்வாதஸ தின  தில தர்பணம்  கரிஷ்யே.  

    07-10-2018ஞயிறு

   ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர,  பூர்வ பல்குனி நக்ஷத்திர, 

  சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே த்ரயோதஸ தின  தில தர்பணம்  கரிஷ்யே.

  07-10-2018 ஞயிறு-த்வாபர யுகாதி
ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர, பூர்வ பல்குனி நக்ஷத்திர, 

  சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் 

 அக்ஷய த்ருப்தியர்த்தம்  த்வாபர யுகாதி புண்ய கால ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
  

  08-10-2018 திங்கள்
  ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர, 

  ப்ராம்ய நாம யோக சகுனி கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே சதுர்தஸ தின  தில தர்பணம்  கரிஷ்யே.

08-10-2018 திங்கள்
  ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர, உத்திரபல்குனி நக்ஷத்திர, 

  ப்ராம்ய நாம யோக சகுனி கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய 
 த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே. 

  
 09-10-2018—செவ்வாய்

 ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, ஹஸ்த நக்ஷத்திர, 

  மாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்னம் கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் ஸர்வேஷாம் காருணீக பித்ருணாஞ்ச 

 அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே  ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ( பக்ஷ மஹாளயம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள்) பக்ஷ மஹாளயே பஞ்சதச  தின  தில தர்பணம்  கரிஷ்யே. 

     09-10-2018—செவ்வாய்  வைத்ருதி

 ஸ்ரீ விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்னியா  மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர, ஹஸ்த நக்ஷத்திர, 

  மாஹேந்த்ர நாம யோக கிம்ஸ்துக்னம் கரண ஏவங்குன ஸகல விஶேஷன விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள

 (ப்ராசீணாவீதி) -------------உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம்  வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

சாதுர்மாஸ்யம்


சாதுர்மாஸ்யம் குருமார்களை ஆராதிக்க உகந்த காலம். நாரதர், சாதுர்மாஸ்ய காலத்தில் விரதமிருந்த சந்யாஸிகளுக்கு ஸேவை செய்த காரணத்தாலேயே ஞானம் உண்டாகி தேவரிஷியாகும் வாய்ப்பு கிட்டியதாக கூறுகிறார்.


சதுர் என்றால் நான்கு - சாதுர்மாஸ்யம் என்பது நான்கு மாதங்கள் அனுஷ்டிக்க வேண்டிய ஒரு விரதம். இது எல்லா ஆஸ்ரமத்தில் இருப்பவர்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் தான். ஆனால் சந்யாஸிகளுக்கு இது கூடுதல் விசேஷம்.

பொதுவில் சந்யாஸிகள் ஒரே இடத்தில் ரொம்ப நாளைக்கு தங்குதல் கூடாது என்கிறது சாஸ்திரம். (அந்த ஊரின் மீதோ மக்களின் மீதோ கூட அவருக்கு பற்றுதல் உண்டாகி விடக்கூடாது என்ற நோக்கில்). இதனால் இவர்களுக்கு பரிவ்ராஜகர்கள் என்று பெயர்.

ஆனால் இப்படி தொடர்து சஞ்சரித்துக் கொண்டே இருப்பதால் அவர்களுக்கு ஆத்ம விசாரம் செய்யும் நேரம் குறையவும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்காக விசேஷமாக சொல்லப்படும் காலமே சாதுர்மாஸ்யம். ஆனி மாதத்து பௌர்ணமி முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு சந்யாஸி எங்கும் பயணப்படாமல் ஒரே இடத்தில் தங்கி இருக்க சாஸ்த்ரங்கள் வழிகாட்டுகின்றன. இது மழைக்காலமாகவும் இருப்பதைக் காணலாம். 

மழைக்காலங்களில் பூச்சி, பொட்டுக்கள் வெளியே வரும் வாய்ப்பும் அதிகம். ஒரு சந்யாஸி ப்ரயாணம் மேற்கொள்வதால் அறிந்தோ அறியாமலோ கூட இந்த புழு பூச்சிகளுக்கு துன்பம் உண்டாகலாம் என்ற காரணத்தாலும் இவர்கள் ஒரே இடத்தில் தங்குவது அவசியமாகிறது.

(சக்கரத்தில் சிக்கி பூச்சிகள் சாகுமே என்ற காரணத்தால் சக்க்ரம் வைத்த வண்டியில் கூட ஏறாமல் வாழ்நாள் முழுதும் நடந்தே பயணித்தவர் மஹாபெரியவர்.)

இப்படி பிற உயிர்களுக்கென வாழும் சந்யாஸிகள் ஒரே இடத்தில் தங்கி இருக்கும் காரணத்தால், அவருக்கு சிஷ்யர்கள் ஸேவை செய்யும் காலமே சாதுர்மாஸ்யம்.

(சாதுர்மாஸ்ய காலத்தில் சந்யாஸிகள் மட்டுமே விரதம் அனுஷ்டிப்பது என்ற முறை நம் தமிழகப்பகுதிகளில் தான் பரவலாகக் காணப்படுகிறது. ஆந்திர கர்நாடகப் பகுதிகளில் க்ருஹஸ்தர்களும் உணவுக் கட்டுப்பாடு முதல பலவகைகளிலும் விரதம் காப்பது வழக்கம்)

இன்று சாதுர்மாஸ்யம் என்று வழக்கத்தில் இருந்தாலும் (சதுர் பக்ஷம் எனும்படி 2 மாதங்களே வழக்கத்தில் இருக்கின்றன)

சந்யாஸிகளின் சாதுர்மாஸ்யம் வ்யாஸ பூஜையுடனே துவங்குகிறது. நாம் நம் குருமார்களை வணங்க வேண்டிய காலத்தில் குருமார்கள் அவர்களது குருவான வ்யாஸரை வணங்குகிறார்கள்.

இந்த சாதுர்மாஸ்யமே ஒரு சந்யாஸியின் வயது. அதாவது, ஒரு சந்யாஸியின் வயது அவரது உடலுக்கான வயது அல்ல! அவர் எவ்வளது சாதுர்மாஸ்யம் கடைபிடித்திருக்கிறாரோ அதுவே அவர் வயது. 80 வயது ஆகி இருந்தாலும் தன்னைவிட அதிக சாதுர்மாஸ்யம் அனுஷ்டித்த பால சந்யாஸியைக் கண்டால் வணங்கத்தான் வேண்டும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சாதுர்மாஸ்ய காலமே குருவழிபாட்டுக்கு உகந்த காலம்.

நாம் வணங்கும் இஷ்ட தெய்வமே குருவாக மனித உருவில் வந்திருக்கிறது என்ற உண்மையை முதலில் உணர வேண்டும். குருவுக்கும் நம் இஷ்ட தெய்வத்துக்கும் பேதமில்லை என்பதை முதலில் உணரவேண்டும். இதை உணராமல் குருவை சாதாரண மனிதனாக எண்ணுபவன் எத்தனை பிறவி எடுத்தாலும் அவனுக்கு கதி கிடைக்காது.

அப்படிப்பட்ட குருவுக்கு நாம் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

இந்த சாதுர்மாஸ்ய காலத்தில், அந்த நன்றிக்கடனின் வெளிப்பாடாக தான் பெற்ற நல்வாழ்வுக்காகவும், பெற்ற ஞானத்துக்காகவும், குருவை வணங்க வேண்டும்.

சாதுர்மாஸ்ய காலத்தில் தங்கள் குருவையும், குல ஆசார்யர்களையும் வணங்குவதால் எண்ணில்லா நன்மைகள் விளைகின்றன. 

வ்யாஸ பூர்ணிமா, குரு பூர்ணிமா என்றெல்லாம் அழைக்கப்படும் நாளில் அவரவர் குருநாதர்களை குருதக்ஷிணையுடன் சென்று கண்டு வணங்கி ஆசி பெறுதல் வேண்டும்.

குருவில் கருணா கடாக்ஷம் படுவதால் அந்த ஒரு வருஷத்தில் நாம் அறியாமல் செய்த பாவங்கள் கரைவதோடு, வாழ்வில் முன்னேற்றம் அடைய ச்ரேயஸ் உண்டாகிறது, தர்மத்தில் கூடுதல் லயிப்பு உண்டாகிறது. (லௌகீக வாழ்வுக்கான முன்னேற்றம் - தனியே சொல்லப்படா விட்டாலும் குருவின் க்ருபையால் உண்டாகிறது).

ஆக சாதுர்மாஸ்யம் அனுஷ்டிப்பவரைக் கண்டாலே ப்ரம்மஹத்தி முதலான பாபங்கள் நீங்கி விடுவதாக பாரஹஸ்பத்ய ஸ்ம்ருதி கூறுகிறது.

சாதுர்மாஸ்ய காலத்தில் ஸந்யாஸிகளை வணங்குவதாலும் சேவை செய்வதாலும் ப்ரம்மஞானம் உண்டாகிறது என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

 மொத்தத்தில் இஹவாழ்வுக்கும் பரவாழ்வுக்கும் தேவையான அனுக்ரஹம் கிட்டுகிறது. 

108 பெருமாள் திவ்ய தரிசனம்!

இப்பிரபஞ்சத்தில் பெருமாளை சேவிக்க 108 திவ்ய தேசங்கள் உள்ளன. முதல் தேசம் ஸ்ரீரங்கம். 108 வது தேசம் பரமபதநாதர். 102வது தேசம் முக்திநாத் பெருமாள் (சாலக்கிராமப் பெருமாள்). இது நேபாளம் ஜாம்ஜோம் அருகே உள்ளது. தவிர ஏனைய 107 திவ்ய தேசங்கள் இந்தியாவில் உள்ளது. அவை வடநாட்டு திருப்பதி. தென்நாட்டு திருப்பதி, சோழநாட்டு திருப்பதி, நடுநாடு திருப்பதி (சோழ மண்டலம்), மலைநாடு திருப்பதி (கேரளம்) என ஐந்து மண்டலங்களாக பரவி உள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்தது தான் 108 பெருமாள் திவ்ய தேசம்.

108 பெருமாள் திவ்ய தேசம் தரிசனத்தை ஒரே இடத்தில் சேவிக்க... மதுரை தமுக்கம் மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புரட்டாசியை முன்னிட்டு தினமும் அதிகாலை 5.45 முதல் காலை 8 மணி வரை திருப்பதி ஸ்ரீநிவாசன் (மலையப்ப சுவாமி), திருச்சானுார் அலமேலு மங்கை தாயார் (பத்மாவதி தாயார்) பாராயணம் மற்றும் சுப்ரபாதம் சிறப்பாக நடக்கிறது.

108 திவ்ய தேசம் பெருமாள் சுவாமிக்கு காலை 6 மணி, மாலை 6 மணிக்கு இரண்டு கால சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பெருமாள் தரிசனத்தை முன்னிட்டு பஜனைகள், கோலாட்டம், ஆன்மிக சொற்பொழிவுகள் அருமை. பிரசாத ஸ்டாலில் லட்டு, முறுக்கு, புளியோதரை பிரசாதம் தலா ரூ.10.

அற்புதங்கள் நிறைந்த 108 பெருமாள் திவ்ய தரிசனம் தினமும் அதிகாலை 5.45 முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. செப்.,21ல் நிறைவடைகிறது.

கட்டணம் நபருக்கு ரூ.50. விவரங்களுக்கு மேலாளர் ஜெயப்பிரகாசின் மொபைலில் 98941 33523 தொடர்பு கொள்ளலாம். கோபுர தரிசனம் கோடி புண்ணியம். 108 பெருமாள் திவ்ய தரிசனம் நூறு கோடி புண்ணியம்.
தரிகொண்ட வெங்கமாம்பா!

ஆந்திரமாநிலம் தரிகொண்டா என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, சதா சர்வகாலமும் திருவேங்கடவனை நினைத்து உருகி தன்னை அர்ப்பணித்து, திருவேங்கடமுடையானையே தன் கணவனாக பாவித்து, திருமலையில் ஸ்ரீவாரி சேவை செய்து பரந்தாமனை அடைந்தவள் மாத்ருஸ்ரீதரிகொண்ட வெங்கமாம்பா.

ஆந்திர மாநிலத்தில் ஒரு காலத்தில் கடும் வறட்சி ஏற்படவே ராய துர்க்க பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியே கிளம்பி பிரத்தமிட்டா என்ற கிராமத்தில் ஒரு நாள் இரவு தங்கினர். காலையில் அங்கு லட்சுமி நரசம்மா என்ற அந்தணப் பெண்மணி தயிர்ப்பானையில் தயிர் கடைந்து கொண்டிருந்தாள். (தயிர்ப்பானைக்கு தெலுங்கில் தரிகொண்ட என்பது பெயர்.) அங்குள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மரிடம் பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தவாறே அந்தப் பெண்மணி தயிர் கடைந்து கொண்டிருக்கையில் திடீரென்று தயிர் மத்து நின்று விட்டது. துணுக்குற்ற அவள் மீண்டும் தயிர் கடைய மீண்டும் மத்து சுழலாது நின்றது. மத்தை ஓடவிடாமல் ஏதாவது தடை செய்கிறதா என்றே கையை உள்ளே விட்டுப் பார்க்க ஏதும் இல்லாததும் கண்டு அவள் திகைத்தாள். மீண்டும் மத்து நின்ற போது, தன் கணவனை அழைத்துப் பார்க்கச் சொல்ல, கணவர் வந்து பார்த்தபோது ஸ்ரீலட்சுமிநரசிம்ம சிலை ஒன்று தயிர்பானையில் இருப்பதை அவர் கண்டார். தனக்கு கோவில் கட்டி வழிபட நல்ல காலம் பிறக்கும் என்ற அசரீரி கேட்க, ஊர் மக்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு கோயில் எழுப்பி பெருமாளுக்கு தரிகொண்ட நரசிம்மர் (தயிர்ப்பானை நரசிம்மர்) என்று திருநாமம் இட்டு வழிபட்டு வந்தனர். கிராமத்தின் பெயரும் தரிகொண்ட என்று ஆயிற்று.

தரிகொண்ட கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபராக எழுந்தருளியிருக்கிறார். ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம், அகலமான பிரகாரம் ஆககியவற்றோடு கூடிய இந்த கோயிலில் பாஞ்சராத்ர ஆகமப்படி  பூஜைகள் நடைபெறுகின்றன. நீதிமன்றம், வழக்கு என்று செல்லாமல் மக்கள் இங்குள்ள பலிபீடத்தை வலம் வந்து ஆரத்தி செய்து சத்ய பிரமாணம் எடுத்துக் கொள்வது வழக்கம். எனவே தரிகொண்ட கிராமம் சத்ய ப்ரமாண க்ஷேத்ரமாகத் திகழ்கிறது. இந்த கோயிலில் செஞ்சு லட்சுமி, ஆதிலட்சுமி சன்னதிகளும், அனுமனுக்குச் சன்னதியும் உள்ளன. மேலும் இங்கு அவதரித்த பக்தை தரிகொண்ட ஸ்ரீவெங்கமாம்பாவுக்கு தனிச் சன்னதி உள்ளது. ஆந்திர மாநிலம் வாயல்பாடு என்ற ஊரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் தரிகொண்ட கிராமம் அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மா வம்சத்தில் வந்தவர்கள் நியோகி அந்தணர்களான கிருஷ்ணய்யா மங்கமாம்பா தம்பதியர் குழந்தைப் பேற்றுக்காக வருந்தி திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அனவரதமும் அவர்கள் வேண்டி கொண்டிருக்கையில் ஒரு நாள் மங்கமாம்பாவிடம் ஒரு சிறு குழந்தை ஓடி வந்து தயிர் சாதம் கேட்க, அவள் தயிர்சாதம் எடுத்துக் கொண்டு குழந்தைக்கு ஊட்ட முற்பட்டபோது, அக்குழந்தை தயிர்சாதப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தது. கிருஷ்ண பரமாத்வே தன்னிடம் வந்து தயிர் சாதம் பெற்றுச் சாப்பிட்டதாக மங்கமாம்பா மெய்சிலிர்த்தாள். ஸ்ரீவேங்கடேசப்பெருமாளையும் மனமுருகி அவர்கள் வேண்டிக்கொண்டனர். திருமலை வேங்கடவன் பெண் அம்சமாக தனக்குக் குழந்தையாகப் பிறக்கபோவதாக மங்கமாம்பா கனவு கண்டாள். அவள் கண்ட கனவு பலித்து, திருவேங்கடவன் அருளால் ஒரு பெண் குழந்தை (1730ம் ஆண்டு) அந்த தம்பதியருக்குப் பிறக்க, வேங்கடேசர், அலமேலுமங்கா ஆகிய பெயர்களை இணைத்து வெங்காம்பா என்று பெயரிட்டு அக்குழந்தையை அவர்கள் போற்றி வளர்த்தனர்.

இயற்கையாகவே சிறுவயதிலேயே இறைப்பற்று கொண்டிருந்த ஸ்ரீவெங்கமாம்பா தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச் சென்று கோயில்க் கைங்கர்யங்கள் செய்வதில் ஈடுபட்டாள். சுப்ரமண்ய ஆச்சார்யர் என்பவரிடம் ராமாயணம், பாரதம், பாகவதம் போன்றவற்றைப் பயின்றாள். திருமண வயது வந்தவுடன் பெற்றோர் வெங்கமாம்பாவுக்கு தக்க வரணைத் தேடி திருமணம் செய்து வைத்தனர். ஆனால் வெங்கமாம்பாவோ இல்லறத்தில் ஈடுபாடின்றி, பக்தி மேலீட்டால் திருவேங்கடமுடையானே தன்னுடைய பதி என்று கூறி பரவசப்பட்டு வந்தாள். நோய்வாய்ப்பட்டு அவள் கணவன் இறந்தபோது, தன்னுடைய மணாளன் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் என்றும், தான் நித்ய சுமங்கலி என்றும் கூறிய வெங்கமாம்பா தன்னிடமிருந்து மங்கலப்பொருட்கள் அகற்றப்படுவதைத் தடுத்தாள். அவளது பக்தியைக் கண்ட கிராம மக்கள் வெங்கமாம்பா அலிமேலுமங்கா (அலர்மேல் மங்கா) அவதாரம் என்று கூறி, அவளை தேவுடம்மா என்று வழிபட்டனர். தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் கைங்கர்யங்கள் செய்வதிலும், இறைவன் மீது கீர்த்தனைகள் இயத்துவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாத்ருஸ்ரீ வெங்கமாம்பா திருமலையானைத் தரிசக்க பயணம் மேற்கொண்டாள்.

திருவேங்கடவன் மீது 36000 கீர்த்தனைகள் எழுதி இறவாப் புகழ் பெற்ற தாளப்பாக்கம் அன்னமய்யா (1408-1503) அவர்களின் சந்ததியினர் -ஸ்ரீவெங்கமாம்பாவின் மகிமை அறிந்து அவளை வரவேற்றனர். முதலில் ஸ்ரீவெங்கமாம்பவை கோயிலுற்குள் அனுமதிக்க மறுத்த அர்ச்சகர்களும் அவள் மகிமை அறிந்து ஏற்றுக் கொண்டனர். திருவேங்கடவன்  மீது ஆறாத காதல் கொண்ட ஸ்ரீவெங்கமாம்பா ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினாள். தன்னை மறந்து கோயில்க் கைங்கர்யங்களில் ஈடுபட்டு வந்த அவள், ஸ்ரீவேங்கடாசல மஹாத்மியம், தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சதகம், நரசிம்மர் விலாச கதை, சிவ நாடகம், பாலகிருஷ்ண நாடகம், விஷ்ணு பாரிஜாதம் போன்ற பல முக்கியமான நூல்களை இயற்றியதோடு யோகக் கலையையும் நன்கு பயின்று அஷ்டாங்க யோக சாரம் என்ற நூலையும் இயற்றி பெருமையடைந்தாள். திருமலையையும், திருவேங்கடமுடையானையும் பற்றி ஏராளமான கவிகள் இயற்றி தலைசிறந்த கவியத்ரியாகத் திகழ்ந்த மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாதான் இயற்றிய கீர்த்தனைகளில் முத்திரையாக கிருஷ்ணமய்யாவின் மகள் வெங்கமாம்பா என்று பதிஷ செய்திருக்கிறாள்.

தன் உடல், ஆவி அனைத்தையும் திருவேங்கடவனுக்கே அர்ப்பணித்த ஸ்ரீவெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்தசேவை ஆரத்தி கைங்கரியத்தின்போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தாள். தினந்தோறும் காலையில் ஸ்ரீவேல்கடவன் சன்னிதிக் கதவுகள் திறக்கப்படும்போது அங்கு சிதறிக் கிடந்த முத்துக்களைக் கண்டு துணுக்குற்ற அர்ச்சகர்கள், வெங்கமாம்பாவே இதற்குக் காரணம் என்றறிந்து வெங்கமாம்பாவை கோயிலிலிருந்து தொலைவில் உள்ள தும்புரகோணா என்ற குகைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வேங்கடவன் அருளால் அங்கிருந்து ஒரு குகைப் பாதையின் வழியாக தன் ஆரத்தி சேவையை அவள் மீண்டும் தொடர்ந்தாள். பெருமாளும் தன் பக்தை வெங்கமாம்பாவின் ஆரத்தியுடன் தான் தனக்கு இரவு பூஜை முடிய வேண்டும் என்று அர்ச்சகர்களின் கனவில் கட்டளையிட அர்ச்சகர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து ஏகாந்த சேவையின்போது வெங்கமாம்பாவை அனுமதித்தனர். தன்னுடைய ஆரத்தியில் திருவேங்கடமுடையானையே அவள் கண்டு மெய்மறந்தாள்.

அன்று முதல் தொடர்ந்து, திருமலை திருவேங்கடவன் திருக்கோவிலின் கடைசி சேவையான ஏகாந்த சேவையின் போது மாத்ருஸ்ரீவெங்கமாம்பாவின் சந்ததியினர் இந்த ஆரத்திக் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கமாம்பா முத்துக்களைக் காணிக்கையாக்கியதால் இந்த ஆரத்தி முத்தியா<லு ஆரத்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆரத்தியின் போது ஒரு வெள்ளத்தட்டில், வெற்றிலை, பாக்குதூள் ஆகியவற்றோடு மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் இஷ்ட தெய்வமான முத்துமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சிலை ஆகியவை வைக்கப்படுகின்றன. தினந்தோறும் கடைசி சேவையான ஏகாந்த சேவை அதிகாலை 1.30 மணி அளவில் முடிந்து, திருக்காப்பிடப்பட்டு, மீண்டும் 3.00 மணிக்கு ஸ்ரீவாரி சுப்ரபாத சேவையுடன் அடுத்த நாள் பூஜைகள், வழிபாடுகள் துவங்குகின்றன. 1730ஆம் ஆண்டு வேங்கடவன் அருளால் அவதரித்த ஸ்ரீவெங்கமாம்பா, எண்ணற்ற கீர்த்தனைகளையும், நூல்களையும் இயற்றி, இறுதியில் 1817 ஆம் ஆண்டு தனது 87வது வயதில் தன் பெருமானுக்காக அமைத்த துளசி வனத்தில் ஜீவசமாதி அடைந்தார். ஒரு பள்ளிக் கூட வளாக்ததிற்குள் அமைந்திருக்கும் பக்தை ஸ்ரீவெங்கமாம்பாவின் சமாதி பக்தர்களின் பார்வைக்காகத் தினமும் திறந்து வைக்கப்படுகிறது. மேலும் திருப்பதியில் மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் சிலை ஒன்றும் இரயில்வே பாலத்தின் கீழ் உள்ள சந்திப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் திருமலையில் கவியத்ரி மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் 285வது ஜயந்தி நாள் கொண்டாடப்படுகிறது. வெங்கமாம்பாவின் ஜயந்தி மற்றும் நினைவு நாட்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். கூர்ம ஜயந்தி இதே நாளில்தான் தாளப்பாக்க அன்னமய்யாவின் ஜயந்தி நாளும் கொண்டாடப்படுகிறது.
-----------------------------------------------