வியாழன், 24 ஏப்ரல், 2014

இப்படியும் தர்மம் செய்தாங்க!

உஞ்சவ்ருத்தி என்றால் பிச்சை ஏற்பது, அல்லது வீடு, வீடாகச் சென்று அரிசி போன்றதானியங்களை பெற்றுக் கொள்வது. தர்ம சாஸ்திரம் கூறும் உஞ்சவிருத்தி இதிலிருந்து வேறானது. அந்தக் காலத்தில் வயலில் நெல்லை அறுத்து, களத்து மேட்டில் குவிப்பார்கள். நெற்கதிரை அடித்து நெல்லை மலைபோல ஒன்று திரட்டி மூடையாக கட்டுவார்கள். எடுப்பதெல்லாம் கொடுப்பதற்கே என்னும்சிந்தனையோடு களத்தில் சிறிது அளவு நெல்லை விட்டுச் செல்வர். இதை தர்மம் செய்வதாகக்கருதினர். சோற்றுக்கு வழியில்லாத ஏழைகள் களத்தில் சிதறி கிடக்கும் நெல்லை எடுத்துச் செல்வர். உஞ்சவிருத்திஎன்பதற்கு சிதறிக் கிடப்பதை ஒன்று திரட்டுவது என்றும் பொருள் உண்டு.

ஸ்ரீயும் வேணும்! ஹ்ரீயும் வேணும்!!

பிறருக்கு தானம் அளிக்கும் போது மனசு ஸ்ரீயாக(லட்சுமிகரமாக) மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும். அப்போது ஹ்ரீயும் (வெட்கமும்) உண்டாக வேண்டும்என்கிறது தைத்திரீயோபநிஷத் என்னும் நூல். தானம் கொடுப்பவன் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பது சரி. ஏன் வெட்கப்பட வேண்டும் என்றுஎண்ணலாம். இந்த வெட்கம், கவுரவக் கூச்சத்தால் உண்டாவது.தன்னை நாடி வந்தவருக்கு இன்னும் அதிகமாகக் கொடுக்க முடியவில்லையே என்பது ஒருபுறம். தானம் செய்வது வெளியில் நாலுபேருக்குத் தெரிந்து பாராட்டத் தொடங்கினால், நான் என்ற எண்ணம் வந்து விடுமே என்பதுமறுபுறம். அதனால், தானம்கொடுக்கிறோம் என்று கருதாமல். நம்மை இவ்வாறு கொடுக்க வைத்த கடவுளுக்கு நன்றி என்றஉணர்வோடு தானம்அளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: