வியாழன், 24 ஏப்ரல், 2014


51 சக்தி பீடங்கள் (தல யாத்திரை குறித்த முக்கியத் தகவல்கள்):
 *அம்பிகையின் உடற்கூறுகள் விழுந்த சக்தி பீடங்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. சில புராணங்கள் பீடங்களின் எண்ணிக்கை 108 என்றும், வேறு சில புராணங்கள் 51 என்றும், 64 என்றும் குறிப்பிடுகின்றன. இருப்பினும் வடமொழியில் 'அ' முதல் 'ஷ' வரையிலான 51 பீஜ அட்சரங்கள் தோன்றிய தலங்களில் விழுந்த உடற்கூறுகளே பிரதான சக்தி பீடங்களாக வழிபடப் பட்டு வருகிறது.

*மற்ற தலங்கள் உப பீடங்களாகவே அறியப்பட்டு வருகின்றன. பிரதான பீடங்களைப் பற்றிய ஆதார பூர்வமான தகவல்களை '51 அட்சர சக்தி பீடங்கள்' என்னும் நூலின் வாயிலாக அறியலாம். இவ்வரிய நூலின் ஆசிரியர் 'திரு. ஜபல்பூர் நாகராஜ் சர்மா' அவர்கள். இவர் காஞ்சி மகாப் பெரியவரின் பரிபூரண ஆசியைப் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

*51 பீடங்களுக்கும் நேரில் சென்று தரிசித்து, அரிய பல அனுபவங்களையும் பதிவு செய்து உள்ளார் நூலின் ஆசிரியர். மேலும் தல புராணம் - மூர்த்தி; தலம்; தீர்த்தம் இவைகளின் சிறப்பு அம்சங்கள் - கல்வெட்டுச் செய்திகள் - திருக்கோயில் அமைவிடம் - செல்லும் வழி - முதலிய பல அரிய விவரங்கள் இந்நூலில் சிறப்பான முறையில் விளக்கப் பட்டுள்ளது.

*51 சக்தி பீடங்களில், பாரத நாட்டில் 43 பீடங்களும், பங்களாதேஷ் நாட்டில் 2 பீடங்களும், நேபாளத்தில் 3 பீடங்களும், திபெத்தில் 2 பீடங்களும், பாகிஸ்தானில் ஒரு பீடமும் அமைந்துள்ளது. பாரத நாட்டின் 43 பீடங்களும், இருபது மாநிலங்களில் பரந்து, நிலை கொண்டுள்ளது.

*மிகவும் சக்தி வாய்ந்த இப்பீடங்களுக்கு யாத்திரை மேற்கொள்வது, அம்பிகையின் பரிபூரணத் திருவருளைப் பெற வழி வகுக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. தல யாத்திரை மேற்கொள்வோருக்கு இந்நூல் 'ஒரு உன்னதமான வரம்' என்று கூறுவது மிகையாகாது.

*(நூல்: 51 அட்சர சக்தி பீடங்கள், ஆசிரியர்: ஜபல்பூர் நாகராஜ் சர்மா, விகடன் பிரசுரம். சென்னையில் 'கிரிட்ரேடர்ஸ்' நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்).

கருத்துகள் இல்லை: