வியாழன், 24 ஏப்ரல், 2014


நினைவில் கொள்ள வேண்டிய ஆறுமுகக் கடவுளின் சில முக்கிய சுலோகங்கள்:

அனுதினமும் பூஜை அறையில் ஆறுமுகக் கடவுளை போற்றி மகிழ சில முக்கிய சுலோகங்கள் இவை. இப்பாடல்கள் முருகப் பெருமானின் திருவருளைப் பெற்றுத் தரும் என்பது திண்ணம். ஓம் சரவண பவ!!!

(கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர்):-
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஓளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!

(திருவண்ணாமலை திருப்புகழ் - அருணகிரிநாதர்):-
ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்று
ஆறு முகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!!

(திருமுருகாற்றுப்படை - நக்கீரர்):-
அஞ்சு முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும்
வெஞ் சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்
நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும்
-தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்!!!

(கந்த புராணம் - கச்சியப்ப சிவாச்சரியார்):-
ஆறிரு தடந்‌தோள் வாழ்க அறுமுகம் வாழ்க -வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க -செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம்!!

(கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர்):-
நாள் என்செயும் வினைதான் என்செயும் எனை -நாடிவந்த
கோள் என்செயும் கொடும் கூற்று என்செயும் -குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் -சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து -தோன்றிடினே!!

கருத்துகள் இல்லை: