வியாழன், 24 ஏப்ரல், 2014

உனக்கு என்ன லாபம்!

பிரச்னோத்ர ரத்ன மாலிகா என்னும் நூலில் ஆதிசங்கரர்,சம்சாரம் என்னும் பிறவிச்சக்கரத்தில் சுழன்று கிடப்பதால் உனக்கு என்ன லாபம்? என்று கேட்கிறார். இந்த கேள்வியை எப்போதும், உனக்குள்ளேயே கேட்டுக் கொண்டே இரு. அதுவே பிறவிப் பயன், என்று அவரே பதிலும் அளிக்கிறார். அதாவது,நாம் பூமியில் பிறந்த நோக்கம் என்ன? நமக்கு ஏன் ஆசை, கோபம், பாவம் இவையெல்லாம் வருகிறது. எப்போதும் ஆனந்தமாக இருக்க முடியாதா? என்றெல்லாம் அடிக்கடி எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி ஆராய்ந்து பார்க்கத் தொடங்கினால் கோப தாபம் மனதில் எழாது. மனம் பக்குவப்படும். புளித்துக் கிடந்த மாங்காய், கனிந்து பழமாவது போல், மோட்சம்கிடைத்து விடும்.

கருத்துகள் இல்லை: