சனி, 23 மே, 2020

அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா!!

இது லலிதா சகஸ்ரநாம நாமம் அம்பாளின் நெற்றியை வர்ணிக்கும் பகுதி.

அரைவட்ட வடிவமான அஷ்டமிச் சந்திரன் போல் விளங்கும் நெற்றியைக் கொண்டவளுக்கு நமஸ்காரம்.

அளகம் என்பது நெற்றியின் இரு பக்கங்களின் இருக்கும் பகுதி.அங்குதான் அம்பாளுடைய சுருண்ட கூந்தல் காற்றில் அழகாக முன்னுச்சியில் இரு புறமும் ஆடிக்கொண்டு இருக்குமாம்.

அம்பாளுடைய நெற்றி எப்படி அழகாக இருக்குமாம் தெரியமா!!

திரும்பி சகஸ்ரநாம வரிகளை படிப்போம்

அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா

அப்படி என்றால்

மாதிரி இருக்கிறது. என்ன சரியாகப் புரிய வில்லையா? கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாமா. அவளுடைய நெற்றி எட்டாநாள் சந்திரன் போல் இருக்கிறது. எல்லோரும் நெற்றியை பிறைச் சந்திரனுக்குத்தான் ஒப்பிடுவார்கள் ஆனால் இங்கு வேறுமாதிரி.ஆதி சங்கரர் செளந்தர்ய லகிரியில் அம்மா உன் தலையில் ஒரு பாதி அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா சந்திரன் மாதிரி இருக்கிறது. நெற்றியில்மறு பாதி சந்திரன் இருக்கிறது. இரண்டையும் அப்படியே சேர்த்து வைத்துப் பார்த்தால் முழுநிலவாகி விடும். அப்படி பௌர்ணமி பூர்ண சந்திரன் போல இருப்பதுதான் உன்முகம் என்கிறார்.இப்போது புரிகிறதா ஏன் அபிராமி பட்டர் அமாவாசையன்று பௌர்ணமி என்று கூறினார்.அவர் அம்பாளின் முகதரிசனம் செய்து கொண்டு இருந்தபோது கேட்ட கேள்விக்கு வந்த பதில்.பிறைச் சந்திரன் என்று சொன்னால் அது நெற்றியோடு பொருந்தாது. இரண்டு பக்கமும் தூக்கிக்கொண்டு இருக்கும் அழகாக இருக்காது.ஆனால் பாதி பிறை எட்டம்நாள் சந்திரன் சமமாக இருக்கும். அதை அப்படியே அம்பாளின் நெற்றியாக பாவனை செய்து இருபுறமும் சுருண்ட கூந்தல் காற்றில் அலைபாயும்படி கற்பனை செய்து பார்த்தால் அஷ்டமீ சந்த்ர விப்ராஜ அளிகஸ்தல சோபிதா என்ற வரிக்கு அர்த்தம் புரியும்.

ஸெளதர்யலகரியில் 46 வது ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் அவள் நெற்றி அழகை எப்படி வர்ணிக்கிறார் என்று பார்ப்போமா. !!

லலாடம் லாவண்ய த்யுதி விமல மாபாதி தவ யத்

த்வதீயம் தன்மன்யே மகுட கடிதம் சந்த்ரசகலம்

விபர்யாஸ ந்யாஸா துபயமபி ஸம்பூய ச மித:

ஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர:                                         

வெண்ணிலவு போன்ற அழகுடன் உன்னுடைய எந்த நெற்றியானது பிரகாசிக்கிறதோ அதை கிரீடத்தில் சூடிக்கொண்டிருப்பதன் இரண்டாவது பாகமாகிய சந்திரகலையோ என்று எண்ணுகிறேன். இரண்டும் திருப்பிப் பொருத்தப் பட்டால் ஒன்றுக்கொன்று நன்றாகச் சேர்ந்து அமிருதம் ஒழுகும் பூர்ணிமைச் சந்திரனாக பரிணமிக்கும்.

அம்பாளுடைய நெற்றிக் கிரீடத்தில் இருக்கும் பாதிச் சந்திரனைப் பூர்ணமாக்கும் மற்றொரு பாதிபோல் வலைந்தும் அழகாகவும் உள்ளது என்று நெற்றி வர்ணிக்கப் படுகிறது.

கருத்துகள் இல்லை: