சனி, 23 மே, 2020

அம்மா என்று அழைத்தால் ஓடி வருவாள்.  நம் துயர் துடைத்திட, நம்மை காத்திட பல பல வடிவங்களில் அவதாரம்  தரித்தாள் அன்னை பராசக்தி. 

அவள் நாமங்கள் பல பல கோடி. அவைகளை பதிவிட என் இந்த ஆயுட்காலம் போறாது. ஆனாலும் நான் படித்து மகிழ்ந்த சிலவற்றை இங்கு பதிவு செய்கின்றேன்.

சத்-சித்-ஆனந்தம்

‘ஸத் சித் ஆனந்த ரூபிணீ’ சச்சிதானந்த வடிவினள். அதாவது, உண்மை, அறிவு, மகிழ்ச்சி ஆகிய மூன்றின் வடிவினள்.

இறைவன் என்றும் அழியாத சத்தாக-உண்மையாக-மெய்ப்பொருளாக விளங்குகிறான். தேவி எப்போதும் பேரறிவு வடிவாகத் திகழ்பவள்.

கருத்துகள் இல்லை: