சனி, 4 ஜூலை, 2015

மனதால் உயர்வோம்
♡ வெளியுலக அறிவுக்கு துணை நிற்பது விஞ்ஞானம்.உள் உலகமாகிய உண்மைக்கு வழிகாட்டுவது மெய்ஞானம்.
♤ திருமந்திரத்தில் அன்பே சிவம் என்கிறார் திருமூலர்.அறிவான தெய்வமே என்று இறைவனைக் குறிப்பிடுகிறார் தாயுமானவர்.அன்பையும் அறிவையும் நாம் ஒவ்வொருவரும் பெற முயற்சிக்க வேண்டும்.
♡ இந்த உலகை விட்டுச் செல்லும் முன்"என்னிடம் பாவமே இல்லை'என்று சொல்லும் நிலையை அடைய வேண்டும்.
♤ மனிதன் மனதால் உயர்நிலையை அடைய வேண்டும்.அப்போது மனிதன் வாழ்க்கையை நடத்திச் செல்வது சிரமமாகவே இருக்காது.
♡ மனதை கீழ்நிலைக்குச் செலுத்தாமல் மேல்நிலைக்கு உயர்த்தினால் தெய்வநிலையை அடையலாம். கடவுளின் திருவடியை கெட்டியாக பிடித்துக் கொண்டால் தான் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
♤ காஞ்சி மஹா பெரியவா

கருத்துகள் இல்லை: