சனி, 4 ஜூலை, 2015

நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்
* நாம் எப்படியோ பூமியில் பிறந்து விட்டோம்.நமக்குள் அழுக்கை (பாவங்களை)ஏற்றிக் கொள்ள இடம் கொடுத்து விட்டோம்.இனியாவது அழுக்கை போக்குவதற்காக பயன்படுத்தி கொள்வோம்.
* வாக்கு மனம் உடல் என மூன்றாலும் பாவம் செய்து இருக்கிறோம்.அவற்றைக் கொண்ட அந்தப் பாவத்தைப் புண்ணியத்தில் கரைத்து விட முயற்சிக்க வேண்டும்.
* நாம் இந்த உலகை விட்டு ஒருநாள் போக வேண்டியது உறுதி. அதற்குள் பாவமூட்டையைத் தொலைத்து விட்டால் போதும் ஆனந்தம் கிடைத்து விடும்.
* வெளியுலகப் பொருட்களால் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது என்று நினைப்பது அறியாமை.மகிழ்ச்சியோ நிம்மதியோ அவரவர் மனதைப் பொறுத்த விஷயங்களே.
* காஞ்சி மஹா பெரியவா

கருத்துகள் இல்லை: