சனி, 4 ஜூலை, 2015

கடவுளிடம் சொல்வோமே!
● நீருக்குள் வாளியை இழுக்கும்போது கனம் தெரிவதில்லை.அதுபோல துன்பம் ஏற்படும் போது ஞானம் என்னும் தண்ணீருக்குள் அமுக்கிவிடுங்கள்.கனம் குறைந்து மனம் லேசாகி விடும்.
○ நாம் இந்த மண்ணில் பிறவி எடுத்து விட்டோம்.யாராக இருந்தாலும் ஒருநாள் உயிர் போகத் தான் போகிறது.வாழும் காலத்திற்குள் நம் பாவத்தைப் போக்கிக் கொள்ள முயற்சிப்போம்.
● பாவத்தைப் போக்குவதற்கு எங்கும் அலையத் தேவையில்லை.இருந்த இடத்திலேயே கடவுளின் பெயரைச் சொன்னாலே போதும்.இரண்டெழுத்தான"சிவ'என்பதை எப்போதும் சொல்லுங்கள்.
○ அன்னதானத்தால்மட்டுமே ஒருவரை முழுமையாகத் திருப்திப்படுத்த முடியும்.மற்றவை எல்லாம் எவ்வளவு கிடைத்தாலும் மனம் திருப்தி அடைவதில்லை.
● துன்பத்தை பிறரிடம் சொல்லாமல் இருக்க முடியாது.கடவுளிடம் முறையிட்டால் நிம்மதி கிடைக்கும்.
○ காஞ்சி மஹா பெரியவா


கருத்துகள் இல்லை: