சனி, 4 ஜூலை, 2015

சிறிது நன்மையாவது செய்யுங்கள்!
□ பலனை எதிர்பார்க்காமல் உங்களால் முடிந்த நல்லதைச் செய்து கொண்டிருங்கள்.பலன் கொடுக்க வேண்டியது கடவுளின் வேலை.
■ நம்முடைய துன்பத்தை மலை போல நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பது கூடாது.நம்மால் உலகம் சிறிது நன்மை பெறும் என்று தெரிந்தாலும் கூட அதற்காக நாம் கடுமையாகப் பாடுபட வேண்டும்.
□ கருணையில் கடவுள் கடலுக்குச் சமமானவர்.நதிகளைப் போல தன்னை நாடி வரும் பக்தர்களை ஏற்றுக் கொண்டு அவர் அருள்புரிகிறார்.
■ புத்திக்குத் தெரிந்தும் ஒரு தவறைச் செய்யும்போது அது பாவமாகிறது.புத்தி தங்கள் வசத்தில் இல்லாமல் இருப்பவர்கள் செய்யும் எந்தச் செயலும் பாவமாகாது.
□ இயற்கையில் எல்லாம் மாறிக் கொண்டே தான் இருக்கிறது.சில மாறுதல்கள் மட்டும் நம் கண்ணுக்குத் தெரிகிறது.மலையும் சமுத்திரமும் கூட காலச்சக்கரத்தில் மாறுதல் அடைகின்றன.
■ காஞ்சி மஹாபெரியவா

கருத்துகள் இல்லை: