சனி, 4 ஜூலை, 2015

எல்லாம் நமக்காகவே!
卐 தர்மம் செய்ய எண்ணம் வந்து விட்டால் நினைத்தவுடன் செய்து விட வேண்டும்.இல்லாவிட்டால் மனம் மாறி விடும்.
卐 பணத்தை தேடுவது மட்டுமே வாழ்க்கைஅல்ல.தினமும் கொஞ்சம் நேரமாவது கடவுளைப் பற்றி சிந்திக்கவும் வேண்டும்.
卐 நமக்கு இரண்டு கைகள் இருக்கின்றன.இதில் ஒரு கையால் கடவுளின் திருவடியையும் மற்றொரு கையால் உலக விஷயத்தையும் பிடியுங்கள்.
卐 கடவுள் மீது பக்தி செலுத்துவதால் கடவுளுக்கு எந்த வித ஆதாயமும் இல்லை.எல்லாம் நமக்காகத் தான் என்பதை உணர்ந்து வழிபாடு செய்யுங்கள்.
卐 காஞ்சி மஹா பெரியவா

கருத்துகள் இல்லை: