வியாழன், 21 மே, 2020

ஓம். சொற்கள் மிகுந்த சக்தியுடையவை. The words are having power to heal and destoy as well. சாதாரண வார்த்தைகளுக்கே அத்தகைய பலன் உண்டு என்னும் போது, மந்திர பீஜாக்ஷரங்களுக்கு மகத்தான சக்தியுண்டு என்பது உலகம் கண்ட உண்மை.

ஒரு சீடன் குருவினை நாடி உபதேசம் வேண்டினான். குருவோ சீடன் ஒருபாமரன் என்பதால் ஏற்றுக்கொள்ளவிழையவில்லை. அவனுக்கு அடிப்படை அறிவே போதுமானதன்று என்று நினைத்து பலமுறை தட்டிக் கழித்தும் அவன் விடாது நச்சரிக்கத் தொடங்கினான்.

ஒரு நாள், அவர் எங்கோ வெளியே புறப்படும் வேளை அவரருடைய கால்களைப்பற்றிக் கொண்டு உபதேசம் செய்தே ஆகவேண்டும் என்று கதர ஆரம்பித்தான். அவனுக்கு சுக துக்கங்கள் ஆசை நிராசை என்பதெல்லாம் தெரியாத யதார்த்தவாதி.

“இது அங்கே! அது இங்கே!! எழுந்து கிழக்குமுகமாக நின்றுகொண்டு சொல் ” என்றார். கருணைபிறந்த ஆசானை மனதாரப் பாராட்டி, வணங்கி , கைகட்டி வாய்புதைத்து அவர் எப்படிச் சொல்லவேண்டும் என்று சொன்னாரோ அதை உள்ளத்தில் வாங்கிக்கொண்டு அவரிடம் விடைபெற்றான். அதன் பின்னர் அவன் அவரைப் பார்க்க வரவே இல்லை.

அவரும் அப்படி ஒரு சீடன் வந்துபோனதை மறந்தேபோனார். ஆறு மாதங்கள் கழிந்து அவன் வந்து குருவினை வணங்கி, சில கனிவகைகளைக் கொண்டுவந்ததை முன்னர் வைத்து “குருவே வணக்கம். நான் சித்தியடைந்துவிட்டேன்”. என்றான்.

அவருக்கு எல்லாமே வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பட்டது. ” நீ யாரப்பா? எங்குவந்தாய்? என்ன சித்தியடைந்தாய்? “என்று கேட்டார்.

“அவன் சொல்லட்டுமா ?” என்று குருவின் அனுமதியை வேண்டினான்.

அவர் அனுமதியளித்தார்.

சீடன் கிழக்குமுகமாக வணங்கிக் கண்களை மூடி, “இது அங்கே! ” என்றான். குரு ஆகாய மார்க்கமாக தூக்கிஎறியப்பட்டு கூப்பிடு தூரத்தில் ஆற்று மணலில் விழுந்தார்.

நடந்தசம்பவம் அவரை மிகவும் வேதனைப் படுத்தியது. கண்மூடி நின்ற சீடன் அடுத்த வார்த்தையைப் பிரயோகித்தான்.”அது இங்கே!”.

மீண்டும் குரு ஆரம்பத்தில் நின்ற தன் வீட்டருகே வீசப்பட்டு நின்றார்.

குழந்தைத் தனமாய் வந்த ஒருவனுக்கு வேடிக்கைக்காக வாயினால் கூறிய யதார்த்தவார்த்தை இவ்வளவு பயன் தரும் சக்தியுடையது என்று அவர் நம்பமுடியாமல், “என்றுமுதல் இதனை அறிந்துகொண்டாய்? ” என்று கேட்டார்.

நேற்றுத்தான் வழக்கம் போல் பாறையின் அருகே உட்கார்ந்து ஜபித்துக் கொண்டிருக்கும் போது சப்தம் கேட்டது. பயந்துவிட்டேன். கடகட சத்தத்துடன் நான் பார்த்துக் கொண்டிருந்த பாறாங்கற்கள் இடம் மாறி திரும்பவும் வந்துகொண்டிருந்தன.

நான் சொல்வதை அவை கேட்டு அசையற்று தூங்கிவிட்டன. அதனை உங்களிடம் சொல்லவந்தபோது உங்களைப்பார்த்துக்கொண்டே சொல்லிவிட்டேன். என்னுடைய அபராதத்தை மன்னித்துக் கொள்ளுங்கள். அடிபட்டுவிட்டதா?” என்று கண்ணிர் மல்கக் கேட்டான் அப்பாவித்தனமாய்.
காலில் பட்ட அடியினைவிட மனதில் பட்ட அடியே அவருக்கு வேதனையளித்தது.

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சதர் இச்சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: