வியாழன், 21 மே, 2020

தெளிவு

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - மாயா, பிரகிருதி, சக்தி

எது உண்மை,  பிரம்மம் எது -  நாமே பிரம்மம் என்பதை அறிவோமா நண்பர்களே !!!!

என்னுடைய கட உபநிஷத் தொடர் பதிவின் சார்ந்ததாக  இந்த தனி பதிவு இடுகின்றேன்..எது நிலை ஆனது , எதுவுமே நிலை ஆனது அல்ல. எது பெரியது , எதுவும் பெரியது அல்ல.நிலை இல்லாதை தேடி , நினைத்து , நினைத்து நாம் ஓடி கொண்டு இருகின்றோம் என்பதே உண்மை..வரும் போது தனியாக வந்தாய் எதையும் எடுத்து வரவில்லை , போகும் போது தனியாக தான் போக போகிறாய், எதையும் கொண்டு போக போவதில்லை .சிறிய கவிதை, பெரிய விஷயம் என்று கூறுவார்கள் . என்ன என்பதை அடுத்த பதிவினில் பார்ப்போம் நண்பர்களே.

பண்டைய இந்தியாவில் அனைத்து நூல்களையும் பெரும்பாலும் கவிதை வடிவில் எழுதும் வழக்கம் இருந்தது. உதாரணத்திற்கு மனுதர்ம சாஸ்திரம், பரதரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டலாம். மேலும் கணித சாஸ்திரம், வான சாஸ்திரம் மற்றும் கட்டடக் கலையை வர்ணிக்கும் ஆகம சாஸ்திர நூல்களும் கவிதை வடிவில் எழுதப்பட்டிருக்கின்றன.

தத்துவ விஷயங்களை எடுத்துரைக்கும் பல நூல்களும் அவ்வாறே கவிதை வடிவில் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

கட உபநிஷத், ஸ்வேதாஸ்வதர உபநிஷத் போன்ற நூல்களும் அப்படியே செய்யுள் வடிவில் அமைந்திருக்கின்றன.

ஸ்ரீசங்கராசாரியாள் விவேக சூடாமணி போன்ற பல நூல்களை கவிதை வடிவில் எழுதியுள்ளார். இம்மாதிரியான நூல்களில் சிறிய உவமைகள், திருஷ்டாந்தம் போன்ற கவிதை நயங்களைக் கொண்டு அவற்றின் மூலம் மிகப்பெரிய தத்துவங்களை விளக்கும் முறை கையாளப்பட்டது. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

கருத்துகள் இல்லை: