வியாழன், 21 மே, 2020

சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரும் சிறந்த ஸ்ரீவித்யா உபசகருமான திரு. முத்துஸ்வாமி தீக்ஷ்தரும் லக்ஷ்மியின் மீது லலிதா ராகத்தில் "ஹிரண்மயிம்" என்ற கீர்த்தனத்தை இயற்றியுள்ளார். லலிதா ராகமும் வசந்தா ராகமும் இரட்டைபிறவி சகோதரிகள் ஒரே ஒரு ஸ்வரம்தான் ப என்கிற பஞ்சமம்தான் கிடையாது லலிதாவில். ஒருசமயம் தீக்ஷ்தரை அவ்ர் மனைவி தனக்கு செல்வம் வேண்டும் என்பதாற்காக தஞ்சை மன்னரைப் புகழ்ந்து அவர் மீது கீர்த்தனை இயற்றிப் பாடி செல்வத்தைக் கேளுங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அவர் மறுத்து மனிதரைப் பாடமாட்டேன் என்று கூறி லக்ஷ்மியின் மீது இந்தக் கீர்த்தனையை பாடினார்

ராகம்: லலிதா தாளம்: ரூபகம்

பல்லவி

ஹிரண்மயிம் லக்ஷ்மீம் சதா பஜாமி

ஹீன மானவ ஆஸ்ரியம் த்வஜாமி-----(ஹிரண்மயீம்)

அனுபல்லவி

கிரதர சம்பிரதாயம் க்ஷிராம்புதி தனயாம்

ஹரிவத்ஸ்தலாலயாம் ஹரிணீம் கரனகிஸலயாம்

கரகமலத்ருத குவலயாம் மரகத மணிமய நிலயாம்------(ஹிரண்மயீம்)

சரணம்

ஸ்வேத தீபவாஸிணீம் ஸ்ரீகமலாம்பிகாம் பராம்

பூதபவ்ய விலாசணீம் பூசுர பூஜிதாம் வராம்

மாதராம் அப்ஜமாலினீம்

மாணிக்ய ஆபரணாதராம்

சங்கீத வாத்ய விநோதினீம்

கிரிஜாம் தாம் இந்திராம்

சீதகிரண நிபவதனாம்

ஸ்ருதசிந்தாமணி சதனாம் பீடவஸனாம்

குருகுஹ மாதுலகாந்தாம் லலிதாம்---- (ஹிரண்மயீம்)

ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று தொடங்கும் ஸ்ரீசூக்தத்திலிருந்து முதல் அடியை எடுத்து தொடங்குகிறார்.

பல்லவி

தங்கமயமான வண்ணத்துடன் ஜொலிக்கும் லக்ஷ்மியைத்தான் நான் பாடுவேன் மற்றபடி ஒருபொழுதும் நான் மனிதர்களை பாடமாட்டேன்

அனுபல்லவி

அழிவில்லாத செல்வத்தைத் தருபவளும்

பாற்கடல் பெற்று எடுத்தவளும்

மஹாவிஷ்ணுவின் மார்பில் எப்பொழுதும்

கோவில் கொண்டு இருப்பவளும்

இளம் தளிரைப் போன்ற தனது செம்பஞ்சு சரணங்களை உடையவளும்

தனது கையினில் எப்பொழுதும் இருக்கும் தாமரையினால் அந்த பூவுக்கு அழகு சேர்ப்பவளும்

இடுப்பில் மரகத மணி பச்சை ஒட்யாணத்தால் அலங்கரித்துக்கொண்டுஇருப்பவளுமானலக்ஷ்மியை மட்டும் தான்

நான் எப்பொழுதும் பாடுவேன்

சரணம்

வெண்மை ஓளிவிடும் தீபத்தில் வசிப்பவளும்

பூலோகத்தில் ஸ்ரீகமலாம்பிகையாக உருவெடுத்தவளும்

சகலபூதங்களும் அமைதியாக அவளிடத்தில் உறைபவளாகவும்

தேவர்களாலும் மனிதர்களாலும் பூஜிக்கப் பெற்று வரம் தருபவளாகவும்

உலகுக்கே தாயாக விளங்குபவளாகவும் தாமரைப் பூவில் அமர்ந்தவளும்

மாணிக்கம்,வைரம், முதலான நவரத்தினங்களால் அலங்கரித்துக் கொண்டு இருப்பவளும்

சங்கீதத்தையும் வேறு வேறு வத்யங்களயும் கேட்டு சந்தோஷிப்பவளாகவும்

சந்திரனனின் குளிர்ந்த கிரணங்களைப் போன்ற முகமுடையவளும்

அழகிய சிந்தாமணி மண்டபத்தில் இருக்கும் ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவளும்

குருகுஹனான முருகனுக்கு மாமனான மஹாவிஷ்ணுவின் அன்பிற்கு உரியவளும்

லலிதாதேவியுமான மஹாலக்ஷ்மியைத்தவிர வேறு யாரையும் பாடமாட்டேன்

கருத்துகள் இல்லை: