வியாழன், 21 மே, 2020

🕭🕭🙇‍♂️நமஸ்காரம்🙇‍♂️🕭🕭

ப்ராஹ்மண⛥🚩 தர்மத்தை காப்பற்றவேண்டியது நம் கடமை.☝

1.உங்களை யாரும் குடுமி வெச்சுண்டு, கச்சம் கட்டிண்டு ஆபீஸ் போகச்சொல்லலை- லீவு நாட்களில் கச்சத்துடன் ஸந்த்யாவந்தனம், பூஜை செய்யுங்கோன்னு தான் சொல்றோம், (ப்ராத்திக்கிறோம்)☝

2.உங்களை யாரும் இங்கிலீஷ் படிப்பு படிக்காமல் பாடசாலையில் சேருங்கோன்னு சொல்லலை-
ருத்ரம்,சமகம், புருஷஸூக்தமாவது கத்துங்குங்கோ ன்னு தான் சொல்றோம்,☝

3.உங்கள் பெண் குழந்தைகளை தலையை வாரி, பின்னி விட்டு, குஞ்சலம் கட்டி, தாவணியில் தான் வெளியில் அனுப்பனும் னு சொல்லவரலை- மிடி, டீஷர்ட், ஜீன்ஸ், தலைவிரிக்கோலம் வேண்டாமே என்று தான் சொல்றோம்,☝

4.உங்களை யாரும் நித்யம் மடிசார் கட்டிண்டு தான் வலம் வரனும் னு சொல்லல- நாள், கிழமை என்றால் 9கஜத்தில் இருக்கலாமே என்று தான் சொல்றோம்,☝

5.உங்களை யாரும் கணவனை இழந்து விட்டதால் மொட்டை அடிச்சு வெள்ளை புடவையில் தான்  உலா வரவேண்டும் என்று சொல்லலை- நித்தமும் பகவத் தர்ஸனம், பஞ்சாக்ஷர ஜபம், பஜனை, பாராயணம் என்று நீங்கள் இருந்தேள் னா நீங்கள் தான் "ஸபரி" பாட்டி. ஸ்ரீராமபிரான் உங்களை தேடி வருவார்,
நாங்களெல்லாம் எம்மாத்திரம்....👆

"மந்த்ரம்" த்ரிகால ஸத்யம்.
எந்த காலத்திலும் எந்த யுகத்திலும் அதுக்கு சக்தி உண்டு, அதன் வாயிலாக "இறைவனை அறியவும்", இந்த "உலகத்திற்கு  க்ஷேமத்தை கொடுக்கவும்" தான்
நமக்கு இந்த "ப்ராஹ்மண ஜன்மா".

இதன் value நமக்கு தெரியவில்லை.
போன ஜன்மாவில் நாம் ஒவ்வொருவரும் பகவானிடம் கெஞ்சி, கூத்தாடி இந்த "ஜன்மா" வை அடைந்திருக்கிறோம்.
இதுவே நம் பிறப்பின் ரஹஸ்யம்.

இது தெரியாமல் நான் இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் என் பிள்ளைகளை வளர்ப்பேன் என்றால் நாளை நம் குழந்தைகள் நாம் சொல்பவர்களை, நாம் சொல்லும் விதம் கல்யாணம் செய்யமாட்டார்கள்

அவர்கள் இஷ்டத்துக்கு கல்யாணம், அப்புறம் டைவர்ஸ், மறுபடி கல்யாணம், மறுபடி பிரிதல், அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம்??

நாம் ஏதாவது கொஞ்சம் அனுஷ்டித்தால் நம் குழந்தைகளும் அதை கேட்பார்கள்,
அனுஷ்டிப்பார்கள்...

இதெல்லாம் புரியாமல் சாஸ்த்ர கோட்பாடுகள் ஆண்கள் எழுதியது,
அது பெண்களை கொடுமை படுத்துகிறது என்றால் நாஸ்தீகவாதிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாஸம்?
நாமே இப்படி பேசலாமா?☝

கடைசியாக☛ "சாஸ்த்ராய ச ஸுகாய ச"
வேதசாஸ்த்ரங்களை🕉 கடைபிடிப்பதால் ☝ நமக்கும் நம் தேசத்துக்கும் நன்மையே தவிர  ஒருகாலும் தீங்கு ஏற்படாது..☝
 இதை படித்துவிட்டு ஏதாவது ஒரு பத்து பேராவது, இந்த ப்ராம்ண தர்மத்தை கடைபிடித்தால் , இதை எழுதியவர்க்கு  திருப்தியாக இருக்கும். இதை எழுதியவர் மாந்தை ப்ரும்மஸ்ரீ லக்ஷிமிநாராயண பாகவதர்.
அரசவனங்காடு சுந்தரேசய்யர் கல்யாணம் .

கருத்துகள் இல்லை: