வியாழன், 13 ஆகஸ்ட், 2020

ரமணர் & குஞ்சு ஸ்வாமிகள்

குஞ்சு ஸ்வாமி ஒரு முறை கோவிலூர் மடத்திற்கு யாத்திரை சென்று விட்டு திருவண்ணாமலை திரும்பினார்.

திரும்பியவுடன் பகவானிடம், 'பகவானே! கோவிலூர் மடாதிபதி மகாதேவ சுவாமி பகவானை ரொம்ப விசாரிச்சார்.

எல்லோரும் எப்படி இருக்காங்கன்னு ரொம்ப பிரியமா கேட்டு தெரிஞ்சுகொண்டார்.

நான் அங்கேயிருந்தபோது ராஜா சர் அண்ணாமலை செட்டியார் தரிசனத்துக்கு மடத்துக்கு வந்திருந்தார்' என்று குஞ்சு ஸ்வாமி கூறினார்.

"செட்டியார் என்ன செஞ்சார்?" என்றார் பகவான், அர்த்த புஷ்டியுடன்.

'அங்க வஸ்திரத்தை எடுத்து இடுப்புலே கட்டிக்கொண்டு ரொம்ப பணிவா சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணார்' என்றார் குஞ்சு ஸ்வாமி.

"நீ நமஸ்காரம் பண்ணினியோ?" என்றார் பகவான்.

தயங்கியபடியே 'இல்லை'என்றார் குஞ்சு ஸ்வாமி.

"ஏன் பண்ணலே?" என்றார் பகவான்.

'உங்களுக்கு நமஸ்காரம் பண்ணிட்டு வேற யாருக்கும் பண்றது எனக்கு சம்மதமா இல்லே' என்றார் குஞ்சு ஸ்வாமி.

பகவான் கடுமையானார்.

" ஆஹா! நீ பகவானை ரொம்ப தெரிஞ்சவனோல்லியோ!

ரொம்ப புத்திசாலி.

#இந்த_சோபாவிலே
#இருக்குற_அஞ்சடி_உடம்பா
#உன்_பகவான்?

#இந்த_ஹால்லே_தான்_பகவான் #இருக்காரா?

#வேரெங்கும்_இல்லே_பாரு.

இவ்வளவு ஏக பக்தி இருக்கறவா எதுக்கு வேற இடங்களுக்குப் போகனும்?

"வேற மடங்களுக்கு போனா அங்கேயிருக்கும் சம்பிரதாயத்தை அனுசரிக்கனும்.

"#எங்கே, #யாருக்கு_நமஸ்காரம் #பண்ணினாலும்_குருவோ,
#இஷ்ட_தெய்வமோ_அங்கே #இருக்கறதா_தியானிச்சு_நமஸ்காரம் #பண்ணினா_சேர_வேண்டிய #இடத்துக்குப்_போய்_சேர்ந்துடும்.

#இது #தான்_முறை'#என்றார்_பகவான்.

                           #நமஸ்காரம்.

#ௐ_நமோ_பகவதே_ஶ்ரீரமணாய.

#ஶ்ரீரமணார்ப்பணம்🙇🙇🙇

கருத்துகள் இல்லை: