வியாழன், 13 ஆகஸ்ட், 2020

ஜோதிடம்

ஜோதிடர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றம் பெற பன்னிரண்டு விதிகளை வாராகமிஹிரர் பரிந்துரைக்கிறார்.

1. அத்வேஷி - ஜோதிடருக்கு யாரிடமும் விருப்போ, வெறுப்போ, துவேஷமோ இருக்கக் கூடாது.

2. கணிதாஹம பராகக -  வானமண்டலம் பற்றியும், ஆகமங்களைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

3. நித்ய சந்தோஷி - நித்தமும் மகிழ்ச்சியாக,  இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும்,

4. முகூர்த்த குண தோஷ ஞானகா -
நல்ல, கெட்ட முகூர்த்தங்களையும், எவை நன்மை அல்லது தீமை பயக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

5. வாக்மி- வாக்குப் பலிதமுள்ளவராக இருக்க வேண்டும்,

6. குசல புத்திமான் -  ஒரு விஷயத்தை புத்தியோடு, ஞானத்தோடு கூறவேண்டும்.

7. சாந்தசஹா- சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும்,

8. அமிர்த வாக்யான் - இனிய வார்த்தைகளைப் பேச வேண்டும்.

9. சௌம்யான் - சாத்வீக குணம் இருக்க வேண்டும்.

10. திரிகாலக்ஞான் - கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி அறிந்து  கொண்டு தெளிவாகக் கூற வேண்டும்.

11. ஜித்தேந்திரியஹா-
தனது இந்திரிய ஆசைகளைக் கடந்தவராக இருக்க வேண்டும்.

12. நித்ய கர்மார்த்தா - தினசரி தனது குல ஆச்சார, அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தப் பன்னிரண்டு விதிகளை ஜோதிடர்களுக்கு வராகமிஹிரர் கூறி, இவற்றை அனுசரிப்பவர்களை "தெய்வக்ஞன்" என்கிறார்.....

கருத்துகள் இல்லை: