வியாழன், 13 ஆகஸ்ட், 2020

அஷ்டபதியின் விளக்கம்

அஷ்டபதியின் விளக்கம் 

அஷ்டபதி ஒன்று

நாராயணனின் பத்து அவதாரங்களைப் பற்றியது.
 

அஷ்டபதி இரண்டு 

இந்த அஷ்டபதி கிருஷ்ணனை துதிப்பதாக அமைந்துள்ளது. 

அஷ்டபதி மூன்று

ராதை கண்ணன் மற்றவர்களுடன் விளையாடுவதை செய்வதைப் பார்த்து பொறாமை கொண்டு அவனை விட்டு நீங்குகிறாள். ராதை ஜீவாத்மா என்று பார்த்தால், ஜீவன் தன் அந்தராத்மாவான பகவானுடன் இணையத் துடிக்கிறது.
 

அஷ்டபதி நான்கு

கிருஷ்ணன் கோபியருடன் ராஸலீலை செய்வதை தோழி வர்ணிக்கிறாள்.
 

அஷ்டபதி ஐந்து

ராதை கோபித்து அவனை விட்டு நீங்கினாலும் அவன் நினைவை தடுக்க முடியாமல் அவனை நினைத்து கூறும்
 

அஷ்டபதி ஆறு

ராதா அவனுடன் இருந்த  அனுபவத்தை நினைந்து அவனைத் தன்னுடன் சேருமாறு செய்ய தோழியை வேண்டுகிறாள்.
 

அஷ்டபதி ஏழு

கிருஷ்ணனும் ராதை கோபித்துக் கொண்டு சென்றதைப் பார்த்து வருந்துகிறான். அவனுடைய மனோநிலையைக் குறிப்பது இந்த அஷ்டபதி.
 

அஷ்டபதி எட்டு

கிருஷ்ணனை அழைத்து வர ராதையால் அனுப்பப்பட்ட சகி அவனிடம் சென்று ராதையின் நிலையைக் கூறுகிறாள்
 

அஷ்டபதி ஒன்பது

சகி கிருஷ்ணனிடம் ராதையின் நிலையை மேலும் வர்ணிக்கிறாள்
 

அஷ்டபதி பத்து

ராதையின் நிலையை அறிந்ததும் கண்ணன் தான் அங்கேயே இருப்பதாகச சொல்லி ராதையை அங்கு அழைத்து வரும்படி சகியிடம் கூறுகிறான்
 

அஷ்டபதி பதினொன்று

சகி கண்ணன் இருக்குமிடத்திற்கு செல்வதற்கு ராதையை தூண்டுகிறாள்
 

அஷ்டபதி பன்னிரெண்டு

சகி மீண்டும் கண்ணனிடம் சென்று ராதையின் நிலையைக் கூறுகிறாள்.
 

அஷ்டபதி பதிமூன்று

ராதை ,  சகி இன்னும் வராததைக் குறித்து வருந்துகிறாள்
 

அஷ்டபதி பதினான்கு

சகி திரும்பி வந்து ஒன்றும் பேசாமல் நின்றாள். அதைப் பார்த்து ராதை கண்ணன் மறந்துவிடடான் என எண்ணுகிறாள்
 

அஷ்டபதி பதினைந்து

ராதை கண்ணன் வேறு கோயியையுடன்   இருப்பதால்தான் வரவில்லை என்று எண்ணி துயரமடைகிறாள்
 

அஷ்டபதி பதினாறு

யார் கண்ணனுடன் இருக்கிறாளோ அவர்கள் கொடுத்து வைத்தவள். ஏனென்றால் இந்த வேதனையை அனுபவிக்கவில்லை என்று ராதை சொல்லுகிறாள்
 

அஷ்டபதி பதினேழு

ராதை கண்ணனை   நினைத்து  ஏங்குகிறாள்
 

அஷ்டபதி பதினெட்டு

சகி ராதையிடம் கண்ணன் தானே வந்த பின்பு அவனை போகச்சொன்னது தவறு என்று கூறுகிறாள்
 

அஷ்டபதி பத்தொன்பது

அவள் சமாதானம் ஆகி இருப்பாள்என்று கண்ணன் மறுபடி அவளிடம் வரநினைப்பது
 

அஷ்டபதி இருப்பது

 கண்ணன் ராதை இன்னும் தயங்குவதைப் பார்த்து அவளாக வரட்டும் என்று அவர்கள் சந்திக்கும் இடத்தில் சென்று காத்திருக்கிறான்.
 

அஷ்டபதி இருபத்தி ஒன்று

ராதை,  கண்ணன் இருக்கும் இடம் நோக்கி செல்ல நினைக்கிறாள்
 

அஷ்டபதி இருபத்தி இரண்டு

ராதை கண்ணன இருக்கும் இடம்போய் அவனைக் காண்கிறாள் (கல்யாண அஷ்டபதி)  ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இணையும் இடம்

#அஷ்டபதி_23

ராதையிடம் கண்ணன் பேசுகிறான்.

#அஷ்டபதி_24

கண்ணனுடன் இணைந்த பிறகு ராதா கண்ணனை நோக்கி இவ்வாறு கூறுகிறாள்.

கருத்துகள் இல்லை: