செவ்வாய், 21 ஜனவரி, 2014

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

கைலாசநாதர் கோயில்


பல காலகட்டங்களையும் சேர்ந்த கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஒன்று தான் கைலாசநாதர் கோயில். இது காஞ்சிபுரம் நகர மத்தியிலிருந்து ஏறத்தாழஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. சுவரோவியங்கள், சிற்பங்கள் மற்றும் கட்டுமானக் கலை ஆகியவற்றால் முக்கியத்துவம் பெற்ற கோயில். கி.பி.8 ஆம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசரால் ராஜசிம்ம பல்லவன் கட்டிய இக்கோயிலை பின்னர் அவரது வழித்தோன்றலான மகேந்திர பல்லவன்மறுசீரமைப்பு செய்தார். மூலவரான கைலாச நாதரைச் சுற்றி 58 லிங்கங்கள்அமைக்கபட்டுள்ளன. இறையருள் குடியிருக்கும் கலைக்கோயில் இது.காஞ்சி சென்றால் கைலாசநாதரைக் கைவிடாதீர்கள்.

கருத்துகள் இல்லை: