செவ்வாய், 21 ஜனவரி, 2014

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

வரதராஜப் பெருமாள் கோயில்

காஞ்சி நகரின் கடைசியில் ஹஸ்தகிரி குன்றில் அமைந்துள்ள இந்தக் கோயில் பிரும்மாண்ட தோற்றம் கொண்டது. கலைநுட்பம் செழித்த நூறுதூண்கள் நிறைந்த மண்டபம் ஒன்றும் விஜயநகரப் பேரரசு காலத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வேலைப்பாடுமிக்கவளையங்கள் சங்கிலித் தொடராக நான்கு மூலைகளிலும் தொடர்வது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம். இறையருள் தரிசனமும் கலையெழில் தரிசனமும் கிடைக்கும் பெருமாள் திருத்தலம். வெகு நேர்த்தியான ரதி-மன்மதன் குதிரை வீரர்கள் ஆகிய சிற்பங்கள் அணிகலன்களைப்போலக்
காட்சியளிக்கின்றன. இங்கு வைகாசியில் நிகழும் கருடோத்சவம் காண பக்தர்கள் கூட்டம் திரளும்.

கருத்துகள் இல்லை: