புதன், 23 செப்டம்பர், 2020

ராமானுஜர் பகுதி ஆறு

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு ஆறு

இளையாழ்வானுக்கும் யாதகப்பிரகாசருக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை இன்று பார்க்கலாம்.

🌺🌺 குருகுலம்

யாதவப் பிரகாசர்: தைத்திரிய உபநிஷத்தில் "ஸத்யம், ஞானம், அனந்தம், பிரஹ்ம" என்ற முக்கியமான வாக்கியத்திற்கு அதிலுள்ள சொற்கள் பிரம்மம் ஒன்றையே பொருளாகக் கொண்டவை. பிரம்மம் ஒன்று தான். அதற்கு சொரூபம் இல்லை. அதனைப் பார்க்க முடியாது.

இளையாழ்வான்: பிரஹ்மத்தின் ஸ்வரூப குணங்களைச் சொல்கிறேன்.

யாதவப் பிரகாசர்: சொல்வீர்!

இளையாழ்வான்: ஒரே மலருக்கு செம்மை, மென்மை, மணம், வடிவழகு, நிறை என்ற பல குணங்கள் இருக்கலாம். குணங்களின் இப்பன்மை அவற்றையுடைய மலரின் ஒருமைக்கு முரண் அல்ல. அதேபோல் பிரஹ்மம் ஒன்றே என்பதில் யாதொரு தட்டும் இல்லை என்பது என் விளக்கம்.

விளக்கம்:

அதாவது யாதவப்பிரகாசர் சொல்வது, "பிரஹ்மம் ஒன்று தான்" அதைப்பார்க்க முடியாது என்பது. இது அத்வைதத்தில் உள்ளவை. ஏன் என்றால் இராமானுஜர் அவதரிக்கும் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். அவர் ஒரு சமயம் பூ பறிக்கச் செல்லும் பொழுது, ஒன்று, ஒன்று, ஒன்று என்று வரிசையாகச் சொல்லி பூ பறித்தார்.

ஒன்று, இரண்டு என்று தானே சொல்ல வேண்டும்? ஏன் ஒன்று ஒன்று என்கிறாய் என்று ஆதிசங்கரரின் அன்னை கேட்க தனக்கு அனைத்தும் ஒன்றாகவே தெரிகிறது என்றார். இதன் அடிப்படையில் தான் அத்வைதம் உண்டானது.

இங்கே 'இளையாழ்வான்' சொல்வது, ஏன் இராமானுஜர் பெயரைச் சொல்லாமல் இளையாழ்வான் என்று சொல்கிறேன் என்கிறீர்களா? இராமானுஜருக்கு இன்னும் அந்தப் பேர் வரவில்லை. அது வரும்போது சொல்கிறேன் எப்படி வந்தது என்று.

இப்போ இளையாழ்வான் சொல்கிறார், பிரஹ்மத்திற்கு சொரூபம் உண்டு. அதைப் பார்க்கலாம். விக்கிரங்களாகப் பார்க்கலாம். அதற்கு வடிவழகு உண்டு. அதற்கு கல்யாண குணங்கள் உண்டு என்று பெருமாளின் கல்யாண குணங்களையும், விக்கிரக சொரூபங்களையும் விரிவாக எடுத்துக் கூறினார். வசிஷ்டாத்வைதம் - வசிஷ்டு என்றால் உள்ளது என்று பொருள். பிரம்மத்திற்கு சொரூபம் உண்டு என்பதை இங்கே நிரூபித்தார் இளையாழ்வான்.

இளையாழ்வானின் அறிவுக்கூர்மை, ரஸிக உள்ளம், நாவனமை கண்ட யாதவப்பிரகாசரின் மனதில் புயலைக் கிளப்பியது. முன்னோர் பலரது வரட்டுத் தத்துவ வாதங்கள் இவரது வனப்பு வேதாந்த விளக்கங்களால் தவிடுபொடியாகிவிடும் என்று யோசித்தார் யாதவப்பிரகாசர்.

ஆனாலும் அமைதியாகிவிட்டார் யாதவப் பிரகாசர். நாளைய பதிவில் மற்றொரு சம்பவத்தைக் காணலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

 ஸ்ரீமதே இராமாநுஜாய நம|

நலம் தரும் சொல்லை நான் அறிந்தேன்
அந்த நல்லது நடந்திட அருள் புரிந்தாய்!!

இராமானுஜனே உன் தயவாளே நாராயணனை சரணடைந்தேன்!!

நான் நாராயணனை சரண் புகுந்தேன்!!

எட்டு எழுத்தின் பொருளோ எட்டா இருக்கையில் எத்தனை தடவைகள் நீ நடந்தாய்!!

எத்தனை இடர் கடந்தாய்!
எத்தனை தடை கடந்தாய்!

எங்களை உய்விக்க பொருள் உரைத்தாய்!!

மூவாறு முறை நடந்த முனியரசே!
ஒரு நோவாற மருந்து அளித்த தனியரசே!

நாவாற நான் உன்னை பாடுவது
ஸ்ரீமன் நாராயணன் மந்திரம் ஓதுவதே!!

நரகம் நீ புகுந்தால் வைகுண்டமாகும்!
அந்த நாராயணனையே இடம் பெயர்க்கும்!!

அரங்கனின் அருளாளே பொருள் அறிந்தாய் உந்தன் அருகினில் எதிரி என்று எது நிலைக்கும்!!

கோட்டியூர் கோபுரத்தில் மேலே ஏறி நின்று கோடி உயிர் வாழ வழி உரைத்தாய்!!

ஈட்டிய பொருள் உரைக்க வகை சொல்ல
அந்த நம்பியின் பெருமானா ஆகி நின்றாய்!!

 வாழியெதிராசன் வாழியெதிராசன்

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!


கருத்துகள் இல்லை: