புதன், 23 செப்டம்பர், 2020

ராமானுஜர் பகுதி பத்து

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு பத்து

இன்றைய பதிவில் திருக்கச்சி நம்பிகள் பற்றிப் பார்க்கலாம்.

🌻🌺 திருக்கச்சி நம்பிகள்

சென்னை அருகிலுள்ள பூவிருந்தவல்லியில், 1009ம் ஆண்டு வீரராகவர்-கமலாயர் தம்பதிகள் வாழ்ந்தனர். திருமால் பக்தர்களான இவர்களுக்கு நான்காவதாக பிறந்தவர் 'கஜேந்திர தாசர்'. இவர் தான் பிற்காலத்தில் 'திருக்கச்சி நம்பிகள்' என்று பெயர் பெற்றார். கஜேந்திரதாசர் திருமாலின் மீது பக்தி கொண்டவராய் வளர்ந்து வந்தார்.

முதுமையை எய்தியதும் வீரராகவர், தன் பிள்ளைகள் நால்வருக்கும் சொத்தினை சமமாகப் பிரித்துக் கொடுத்தார். வைசியர்கள் என்பதால் செல்வத்தை மேலும் பெருக்கிக் கொண்டு செல்வந்தர்களாக வாழவேண்டும் என்று வீரராகவர் தன் பிள்ளைகளுக்கு அறிவுரை தந்தார். முதல் பிள்ளைகள் மூவரும் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டு வாழ்ந்தனர்.

கஜேந்திரதாசர் மட்டும் பணத்தைப் பற்றி எண்ணாமல் திருமாலுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே காலத்தைக் கழித்தார். ஒரு நாள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகளின் கனவில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் வந்தார். "கஜேந்திர தாசரே! நந்தவனம் அமைத்து, பூக்களைப் பறித்து மாலையாக்கி நாளும் புஷ்ப கைங்கர்யம் செய்வாயாக! உனக்கு எம் அருளைப் பூரணமாகத் தந்தோம்!" என்று ஆணையிட்டார்.

பூவிருந்தவல்லியில் தந்தை கொடுத்த நிலத்தில் நந்தவனம் அமைத்தார் திருக்கச்சி நம்பிகள். பூக்களைப் பறித்து மாலையாக்கி, நடந்தே பூவிருந்தவல்லியில் இருந்து காஞ்சிபுரம் சென்று வரதராஜருக்கு மாலை அணிவித்து அழகு பார்த்தார். பிறகு சில காலங்கள் கழித்து ஆலவட்டம் கைங்கரியம் செய்து வந்தார். திருக்கச்சி நம்பிகளின் மேலான தூய பக்தியை கண்டு பெருமாளே நேருக்கு நேர் அவருடன் பேசத் தொடங்கி விட்டார்

 இளையாழ்வானும் திருக்கச்சி நம்பியும் :-

அப்படி பூவிருந்தவல்லியில் இருந்து திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரம் நடந்து செல்கையில் இளையாழ்வான் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவரிடம் பேசுவார். திருக்கச்சி நம்பிகள் பிராமணன் அல்லாதவர். அதனால் இளையாழ்வானுடன் ஓரளவுடன் மட்டுமே பழகுவார். இளையாழ்வானுக்கோ திருக்கச்சி நம்பிகள் மீது அதிக ஆர்வம். ஏனெனில், இறைவனுக்கே ஆலவட்டம் கைங்கரியம் செய்கிறார் அல்லவா?! அதுவும் இல்லாமல் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுடன் பேசுவார். அதனால் இளையாழ்வானுக்கு திருக்கச்சி நம்பிகளைக் கண்டாலே மரியாதை தானாக வந்துவிடும். சில காலங்கள் திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரத்திற்கு நடந்து வரும் பொழுது அவரைச் சந்திப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் இளையாழ்வான்.

 மோட்சம் உண்டா?

சில காலம் கழித்து, பூவிருந்தவல்லிக்கு வராமல், காஞ்சிபுரத்திலேயே தங்கி ஆலவட்டம் என்னும் விசிறி சேவை செய்யவும் செய்தார் திருக்கச்சி நம்பிகள். பெருமாளுடனேயே பேசும் சக்தி மிக்க திருக்கச்சி நம்பியின் பாதத்தூளியை (கால் தூசு) வணங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் ஒரு அன்பர். அவர் ஒரு முறை நம்பிகளிடம், "சுவாமி! அடியேனுக்கு மோட்சம் உண்டா?" என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்றார். பெருமாளும், "அவருக்கு மோட்சம் உறுதி"  என்று பதில் தந்தார். திருக்கச்சி நம்பிகள் பெருமாளிடம், "பெருமாளே! அடியேனுக்கும் மோட்சம் உண்டுதானே?"  என்று கேட்டார். பெருமாளோ அவரிடம், "அதெப்படி முடியும்! குரு பக்தியோடு சேவை செய்து, பாகவத அபிமானம் பெற்றால் தான் வைகுண்டம் போக முடியும்"  என்று பதில் தந்தார். மறுநாளே குரு ஒருவருக்கு சேவை செய்யும் எண்ணத்தில் ஸ்ரீரங்கம் கிளம்பினார் திருக்கச்சி நம்பி. அங்கு குருவாக இருந்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் மாடுமேய்க்கும் வேலையாளாக சேர்ந்து விட்டார்.

 திருக்கோஷ்டியூர் நம்பிகள் உணர்தல்

ஒரு நாள் மழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்த மாட்டிற்கு தன் ஆடையைப் போர்த்தி விட்டு தான் அதன் கீழ் படுத்துக் கொண்டிருந்தார். பசுக்கொட்டிலில் நடந்த இந்த நிகழ்வைக் கண்ட கோஷ்டியூர் நம்பிக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது. "தம்பி, ஏன் உன் ஆடையை பசுவுக்கு கொடுத்தாய்?" என்று கேட்டார்." மழையில் நனைந்தால் பசுவுக்கு சீதளம் உண்டாகும். அதன் பாலைப் பருகும் உங்களுக்கும் சீதளம் உண்டாகுமே. அதனால் தான் இப்படி செய்தேன்" என்றார்.

திருக்கோஷ்டியூர் நம்பி, இவர் மாடுமேய்ப்பவர் அல்ல, பரம ஞானி என்று உணர்ந்து கொண்டார். பிறகு ஆளவந்தார் என்ற யமுனாச்சாரியாரிடமும் சிஷ்யனாக சேர வேண்டும் என்று நினைத்தார் திருக்கச்சி நம்பிகள். அதுவும் நிறைவேறி விட்டது.

ஆளவந்தருடன் ஸ்ரீரங்கத்தில் தங்கி ஸ்ரீரங்கத்திலும் பெருமாளுக்கு விசிறி வீசும் தொண்டு செய்து வந்தார் திருக்கச்சி நம்பி. ரங்கநாதர் அவரிடம், "எனக்கு இங்கே காவிரிக்கரையோர காற்று சுகமாக வீசுகிறது. திருமலை (திருப்பதி) செல். அங்கு எனக்கு ஆலவட்டம் வீசு" என்று ஆணையிட்டார். எனவே திருக்கச்சி நம்பி, திருமலை சென்று வெங்கடேச பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தார். அங்கே பெருமாள், "எனக்கு எதற்கு விசிறி? இங்கே, மலைக்காற்று சுகமாக இருக்கிறது. காஞ்சிபுரம் செல், வரதராஜப் பெருமாளுக்கு இந்த சேவையைச் செய்" என்று அனுப்பி வைத்தார். அன்றிலிருந்து காஞ்சிபுரத்தில் ஆலவட்டம் வீசுவதையே கைங்கர்யமாகக் கொண்டிருந்தார் திருக்கச்சி நம்பிகள்.

அவரிடம் தான் இளையாழ்வானின் அன்னை காந்திமதி, பிரச்சினைகளைச் சொல்லி தீர்வு கேட்க இளையாழ்வானை அனுப்பி வைக்கிறார். இளையாழ்வான் திருக்கச்சி நம்பிகள் சந்திப்பு பற்றி நாளைய பதிவில் அறியலாம்.

மருவாரும் திருமல்லி வாழவந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறுமொழி பூதூரர்க்களித்தபிரான் வாழியே
திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே
வரதரின் அன்புத்தொல்லை பல வருடங்களுக்கு முன் காஞ்சி மாநகரம். அனைவரும் நெற்றி நிறைய திருமண் இட்டுக் கொண்டு வாய் நிறைய வரதனின் நாமங்களைப் பாடியபடிவரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்று அவரை சேவித்துக் கொண்டிருந்தார்கள் இவர்கள் நடுவே கஜேந்திரதாசர் என்ற திருக்கச்சிநம்பிகளும் ஞான ஜோதியாகபிரகாசித்தபடி இருந்தார் அவரது கைகளில்  அழகான  வேலைப்பாடுடன் கூடிய ஒரு  விசிறி இருந்தது ஆம் அந்த  வைணவப் பெரியவர் காஞ்சி  வரதனுக்கு ஆலவட்டக்கைங்கரியம்(பெருமானுக்கு  விசிறி  விடும்சேவை)செய்யவே கோயிலுக்குச் சென்று  கொண்டிருந்தார் உலகமே வரதனின் திருமுன்பு தன் மனதில் இருக்கும் பாரத்தைக் கொட்டுவார்கள். ஆனால்  அந்த  வரதன் ஆசை தீர பேசி மகிழ்வது இந்த மகானுடன்தான் அந்த அளவு பக்தியையும் புண்ணியத்தையும் உடைய உத்தமர் அவர்.இராமாயணத்தின் சபரியே கலியுகத்தில் தனது எளிய பக்தி நெறியை உலகிற்கு போதிக்க நம்பிகளாக அவதரித்தார் சென்ற ஜென்மத்தில் சபரியின் பக்திக்கு மயங்கி அவள் தந்த எச்சில் பழத்தைஉண்டபகவான், இந்த ஜென்மத்தில்அவரோடு பேசி மகிழ்வதில்வியப்பொன்றும் இல்லையே அன்பு என்ற ஓன்றை அவர் மேல் வைத்தால் தன்னையேதரும் தயாபரன் அல்லவா அந்த மாயவன் அன்பே உருவான நம்பிகள் கோயிலுக்குள் நுழைந்தார் எதேச்சையாக வலது பக்கம் அவரது பார்வை சென்றது அங்கு அவர் என்ன கண்டாரோ தெரியாது தன்னை மறந்து வலது பக்கமாக விழுந்து விழுந்து வணங்கத் தொடங்கினார் நம்பிகள் அவரது கண்களில் அருவியைப்போல நீர் வழிந்தபடீ இருந்தது நாராயணா வரதா என்று அவர் நா உச்சரித்து அருகில் இருந்தவர்கள் இதைக் கண்டு மலைத்துப் போனார்கள நம்பிகளிடம் சென்று சுவாமி இப்படி நீங்கள் ஆனந்தப் பரவசநிலையை அடையக் காரணம் என்ன எதைக் கண்டு இப்படி திக்குமுக்காடிப்போய் இருக்கிறீர்கள்  என்று கேட்டார்கள் அவர் தனது விரலை நீட்டி எதையோ காண்பித்தார் அங்கிருந்தவர்களுக்கு எதுவும் தெரியவில்லை புரியவுமில்லை அங்கே ஒன்றுமில்லையே சுவாமி உங்களுக்குத் தெரியவில்லையா அங்கு சங்கு சக்கரங்களைக் கையில் எந்திக் கொண்டு திருமகளாம் பெருந்தேவி தாயாரின் வலது கையைப் பற்றிக்கொண்டு தேவர்களும் முனிவர்களும் தொழ நமது தேவாதி தேவன் வரதன் உல்லாசமாக வலம் வந்து கொணடீருக்கிறார் பாருங்கள் பாருங்கள் அந்த திசையை வணங்கியபடியே சொன்னார் நம்பிகள் சுவாமி எங்களால் வரதனைக்காணமுடியவில்லை ஆனால் வரதனைக்கண்டு பேசி மகிழும் தங்களைக் கண்டதையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம் என்றபடிஅனைவரும் அவர்பாதத்தில் விழுந்தார்கள் புரியதா கண்ணா இந்த திருக்கச்சிநம்பிகள் எம்பெருமான் வரதருடன் பேசி அவரைப் பார்த்துப் பழகிமகிழ்தவர் கடவுளோட பேசினவங்க இருக்காங்களானு தொடர்ந்து காலம்காலமா மக்கள் கேட்டுட்டுஇருக்காங்க இல்லையா ஒவ்வொரு காலத்துலயும் அதுக்கான வாழும் உதாரணங்களை அந்தப் பெருமாளே மக்களுக்கு காட்டிட்டு இருக்கார் இல்லையா மின்டும் தரிசிக்கலாம்
இன்னும் அனுபவிப்போம்...

திருக்கச்சி நம்பிகள் தனக்கு ஆச்சாரியாராக இசையாததால், அவரிடம் சில கேள்விகள் கொடுத்து அவற்றுக்கு பேரருளாளனிடமே பதில்கள் பெற்றுத் தருமாறு வேண்டி, அவர் மூலமாக பேரருளாளன் பணித்ததாக ஆறு வார்த்தைகள் பெற்றார் அவையாவன,

1. பரத்துவம் நாமே - நாமே சகலத்துக்கும் உயர்ந்த சத்தியமான மூலப்பொருள்.

2.. பேதமே தர்சனம். - ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் அவசியமான பேதம் உண்டு என்பதே உண்மையான தத்துவம்.

3. உபாயமும் பிரபத்தியே. - என்னை அடைய ஒரே நேரான வழி நம்மிடம் அடைக்கலம்.

4. அந்திஸ்மிருதியம் வேண்டா - இப்படி வாழ்பவன் உடல் உயிரை விட்டு பிரியும் காலத்தில் நம்மை துதி செய்ய அவசியம் இல்லை.

5. சரீர அவஸானத்திலே மோக்ஷம் - உடலிலிருந்து உயிர் பிரிந்ததும் அவன் என்னிடம் வந்து சேர்வான்.

6.பெரிய நம்பி திருவடிகளிலே ஆஸ்ரயி - பெரிய நம்பிகளை ஆச்சாரியராகக் கொள்

என்பவை இவ்வார்த்தைகள். பின் திருவரஙகம் பெரிய கோவிலில் உள்ள ஆளவந்தாரின் சீடர்களின் விருப்பத்தற்கிணங்க மதத்தலைவராக திருவரங்கம் செல்லும் வழியில் மதுராந்தகத்தில் ஏரி காத்த இராமர் திருக்கோவிலில் பெரிய நம்பியைக் சந்தித்தார். அந்த திருக்கோவிலிலேயே மகிழ மரத்தடியில் பெரிய நம்பி இராமானுஜருக்கு திருவிலச்சினை செய்து தன்னைவிட ஆளவந்தாரை ஆச்சாரியனாக கொண்டிருக்க வேண்டினார். பின் பெரிய நம்பியிடம் காஞ்சியில் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும், ஆளவந்தாரின் கருத்துகளையும் கேட்டறிந்து வந்தார். தனது மனைவியின் குணத்தினால் பெரிதும் துன்பமுற்ற இராமானுஜர், இல்லற வாழ்க்கையை விடுத்து திரிதண்ட சந்நியாசியாக தீட்சை பெற்றார். கூரத்தாழ்வானும், முதலியாண்டானும் இவரது பிரதம சீடர்களானார்கள். துறவிகளில் சிறந்தவராக விளங்கியதால் இவர் யதிராஜர் என்னும் திருநாமம் பெற்றார்.

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🙏💐


கருத்துகள் இல்லை: