புதன், 18 டிசம்பர், 2013

சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்: உற்சவ மூர்த்திகள் வீதியுலா!

காஞ்சிபுரம்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் உற்சவ மூர்த்திகளின் வீதியுலா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருவாதுரை நட்சத்திரம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், வழக்கத்தீஸ்வரர் மற்றும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து சிவலாயங்களில், அதிகாலை முதலே மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், உற்சவ மூர்த்திகள் தம்பதி சமேதராய் சிறப்பு மலர் அலங்கார பல்லக்கில், முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தனர். கச்சபேஸ்வரர் கோவிலில், திருமணம் ஆகாத பெண்கள் தலையில் மண் சட்டியினால் ஆனா தீபம் ஏந்தி, சுவாமியை வநம் வந்து, சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிப்பட்டனர். இதனால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல், நாகலத்து மேடு பகுதியில் உள்ள சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜர் பெருமான் கோவிலில், உற்சவர் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். மேலும், பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பல இடங்களில், அன்னதானம் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை: