புதன், 18 டிசம்பர், 2013

எல்லாம் சிவனுக்காகவே!

சிவனுடைய கருணையை, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து என்று மாணிக்கவாசகர் போற்றுகிறார். குழந்தைக்குப் பசிக்குமே என வேளையறிந்து, பாலூட்டி பசி தீர்ப்பவள் அம்மா. சிவனோ அந்த தாயினும் மேலான அன்பு கொண்டவன் என்கிறார். உலகில் பிறந்த உயிர்கள் எல்லாம் உணவைத் தேடி அலைகின்றன. ஆறறிவு படைத்த மனிதன் வயிறு வளர்ப்பதற்காக மட்டும் வாழக்கூடாது. மேலான இறைவனை உணரவே, இந்தப் பிறவி என்பது பற்றி சிந்திக்க வேண்டும். திருவாசகத்திலுள்ள சுட்டறுத்தல் என்னும் பகுதியில், சிந்தித்தால் சிவனைச் சிந்திக்கிறேன். பார்ப்பதாக இருந்தால் சிவனின் திருப்பாத மலர்களைக் காண்கிறேன். அவன் திருவடிகளையே வணங்குகிறேன். அவனைப் பற்றிய மணியான வார்த்தைகளையே பேசுகிறேன், என்கிறார் மாணிக்கவாசகர்.

பொருள் புரிந்து பாடுவோம்: நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்னும் மாணிக்கவாசகரின் சிவபுராணத்தைப் பாராயணம் செய்து விட்டு அன்றாடப்பணிகளைத் தொடங்குவது சிவபக்தர்களின் வழக்கம். அதன் இறுதி அடி, சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப்பணிந்து என்று முடியும். சிவபுராணத்தின் பொருளைத் தெரிந்து பாடுபவர்கள், சிவலோகத்தில் ஈசனோடு வாழும் பாக்கியம் பெறுவர் என்பது இதன் பொருள். சிவபுராணம் மட்டுமில்லாமல் இறைவனுக்குரிய எந்த வழிபாட்டுப் பாடலாக இருந்தாலும் அதன் அர்த்தம் புரிந்து பாடுவதே சிறப்பு.

கருத்துகள் இல்லை: