திங்கள், 14 அக்டோபர், 2013

படலம் 97: எட்டு திசை நாயகர்களை தான செய்யும் முறை

97வது படலத்தில் 8 லோக பாலகர்களின் தான விதி கூறப்படுகிறது. துலாரோஹதான விதியில் கூறப்பட்டுள்ள இடம் காலம் இவைகளில் அவ்வாறே அந்தந்த விதியில் கூறப்பட்டுள்ளபடி நிர்மாணிக்கப்பட்ட வேதிகை, மண்டலம், குண்டம், இவைகளுடன் கூடிய மண்டபத்தில் அந்த படலத்தில் கூறியுள்ள முறைப்படியே சிவ பூஜை ஹோமம் செய்து நல்ல லக்ஷணத்துடன் கூடிய எட்டு சிவாச்சாரியர்களை கூப்பிட்டு புதிய வஸ்திரத்தின் மேல் வடக்கு முகமாக அமர்த்தி அவர்களை சந்தனம், புஷ்பம் இவைகளால் அஷ்டதிக்பாலக மந்திரங்களாலும் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. வேறு ஒருமுறை கூறப்படுகிறது. பிறகு அந்த சிவாச்சாரியர்களுக்கு வஸ்திரம் ஆபரணங்கள் வாசனை திரவ்யங்கள் கம்பளம் முதலியவைகளை கொடுக்கவும். ஆபரணங்களுடன் கூடி நூறு நிஷ்கத்துடன் கூடியதாக தட்சிணைகள் கொடுக்கவேண்டும் என கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படாத எந்த சிறிய முறை உண்டோ அதை துலாரோக விதிப்படி செய்யவும். முடிவில் திக்பாலகர்களின் தானம் எல்லா சம்பத்தையும் ஸம்ருத்தியாக கொடுக்கக் கூடியதாகவும் பிறரால் ஏவப்பட்ட சக்ரங்களை அழிக்க வல்லதாகவும் யானை குதிரை இவைகளை விருத்தி செய்வதாகவும், குழந்தையை கொடுக்கக் கூடியதும், ராஜ்யத்தை அபிவிருத்தி செய்வதாகவும், பசு பிராம்ணர்கள் இவர்களுக்கு சுகத்தை கொடுக்கக் கூடியதுமாக ஆகும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு 97வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பிறகு எட்டு திக்பாலகர்களின் தானம் கூறுகிறேன். முன்பு கூறப்பட்ட இடம், காலத்தில் வேதிகை, மண்டலத்துடன் கூடிய இடத்தில்

2. குருவானவர் முன்பு போல் சிவபூஜையும், ஹோமமும் செய்து எல்லா அமைப்பும் உள்ள எட்டு ஆதி சைவர்களை அழைத்து

3. வடக்கு முகமாக அமர்த்தி, புதிய வஸ்திரங்களை உடுத்தியவர்களாக சந்தனம், புஷ்பம் இவைகளாலும் திக்பால மந்திரங்களாலும் பூஜிக்க வேண்டும்.

4. ஒரு குண்டம் அல்லது ஸ்தண்டிலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். ஆபரணங்களுடன் கூடியதாக பத்து நிஷ்க அளவுள்ள தட்சிணையை கொடுக்க வேண்டும்.

5. ஆஸனம், கம்பளம், வஸ்திரம், உத்தரீயங்களையும் கொடுக்கவும். இங்கு கூறப்படாதது ஏதாவதிருப்பின் துலாபார விதிப்படி செய்ய வேண்டும்.

6. எல்லா ஸமிருத்தியான ஐஸ்வர்யத்தை கொடுக்கக்கூடிய லோக பாலதானம் இவ்வாறாகும். இது பிறரால் ஏவப்பட்ட சக்கரங்களை அழிக்க வல்லதும் யானை குதிரை இவைகளை விருத்தி செய்வதும் ஆகும்.

7. புத்ரனை கொடுக்கக் கூடியதும், அபிவ்ருத்தியான ராஜ்யத்தை கொடுக்கக் கூடியதும் பசு, பிராம்மணர்களுக்கு நலத்தை கொடுக்கக் கூடியதும் ஆகும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்த்ரத்தில் லோகபாலாஷ்டக தான முறையாகிற தொன்னூற்றியேழாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: