திங்கள், 14 அக்டோபர், 2013

படலம் 96: யானையை தானம் செய்யும் முறை

96வது படலத்தில் யானையை தானம் செய்யும் முறை கூறப்படுகிறது. ஆயிரம், ஐநூறு, இருநூற்றி ஐம்பது, 100, 50, 125, 108, என்ற இந்த அந்த எண்ணிக்கையில் தங்கத்தாலோ, வெள்ளியாலோ, லக்ஷண முறைப்படி யானை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு துலாரோஹதான முறைப்படி வேதிகை குண்டம், மண்டலம் இவைகளுடன் கூடியதாக மண்டபம் அமைத்து அதன் மத்தியில், கஜேந்திரனை வைத்து சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும். துலாரோஹதான முறைப்படி சிவனை பூஜித்து ஹோமம் செய்யவும். சிரத்தையுடன் கூடி யானையை சிவனுக்கும் சிவபக்தனுக்கும் கொடுக்க வேண்டும், அங்கு கூறப்படாத எல்லா கர்மாவையும் துலாபார விதியில் கூறியபடி அனுஷ்டிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இவ்வாறாக 96வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பிறகு யானை தானத்தை பற்றி கூறுகிறேன். பிரம்மணோத்தமர்களே அந்த யானையானது தங்கத்தாலோ அல்லது வெள்ளியாலோ நிர்மாணிக்க வேண்டும்.

2. ஆயிரம் ஸ்வர்ணங்களாலோ, அல்லது ஐநூறு தங்கத்தாலோ அல்லது இருநூற்றி ஐம்பது தங்கத்தாலோ அல்லது நூற்றி இருபத்தி ஐந்து தங்கத்தாலோ அல்லது நூற்றிஎட்டு ஸுவர்ணங்களாலோ யானையை நிர்மாணிக்க வேண்டும்.

3. முன்பு போல் வேதிகை மண்டலம் நிர்மாணித்து இவற்றுடன் மண்டபத்தை நிர்மாணித்து அதன் நடுவில் யானையை பிரதிஷ்டை செய்து சந்தனம் புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

4. முன்பு போல் சிவபூஜை செய்து விசேஷமாக ஹோமம் செய்ய வேண்டும். பிறகு சிவார்ப்பணமாக சிரத்தையுடன் சிவபக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

5. இதில் கூறாத எல்லாவற்றையும் துலாரோஹ விதிப்படி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கஜதான விதியாகிற தொண்ணூற்றி ஆறாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: