ஞாயிறு, 15 மே, 2022

மாம்பழ கவிச்சிங்கர் நாவலர்

மாம்பழக் கவிச்சிங்கம் நாவலர்...

கண் இழந்தவரான இவர், அதீத முருக  பக்தர்.

சேய் தொண்டர்களில் ஒருவர்.

பழனியில் வாழ்ந்த  முத்தையா
இவர் சிற்பி
இவரின் மகனே மாம்பழக் கவிச்சிங்கம்.

முத்தையா ஆசாரி – அம்மணியம்மாள் தம்பதிக்கு 1836 இல் கவிராயர் பிறந்தார்.

இவரது இயர் பெயர் பழனிச்சாமி.

மாம்பழம்
என்னும் பட்டம் அவர்க்கு முந்திய தலைமுறையினர் திருமலை மன்னரிடம் பெற்றதாகும்.

செல்லமாக அவரது பெற்றோர் மாம்பழம் என அழைத்தனர்.

மூன்றாம்  வயதில்,
அம்மை நோயால் கண்பார்வையை இழந்தார்
மாம்பழக் கவிச்சிங்கம்.

முத்தையா தீவிர முருக பக்தர்.

தனது மகனுக்கு கண் போய்விட்டதே
எப்படி அவன் முருகனை காண்பான்
எப்படி வாழ்வான் என
நினைத்து வருத்தப்பட்டு இருந்தார்.

ஓர் நாள்,
முத்தையா உறங்கும்போது கருணைக் கடவுள் கந்தபிரான் காட்சித்தந்து, ‘உன் மகனுக்கு புறக்கண் பார்வைதான் இல்லையே தவிர, அந்த கண்களுக்கு நான் ஒளி என்னும் ஞானத்தை தந்துள்ளேன் கவலை வேண்டாம்’ என்று கூறி மறைந்தார்.

தூக்கத்தில் இருந்து எழுந்த முத்தையா மகிழ்ந்து,  கவலையின்றி மகனை ஆர்வத்தோடு வளர்த்தார்.

முத்தையாவே தம் மகனுக்கு முதல் ஆசிரியராக இருந்து கல்வி போதித்தார்.

தொடர்ந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களை பழனி மாரிமுத்துக் கவிராயரிடம் கற்றுத் தெளிந்தார்.

கவிபாடும் ஆற்றல் இவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தது.

மாம்பழக் கவிச்சிங்கம்
மற்றவர்களின் உதவியுடன் வடமொழியையும் கற்றார்.

ஒரு முறை காதால் கேட்டவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் திறமை பெற்றிருந்தமையால் இவரை ஏகசந்தக் கிரஹி என்றழைத்தனர்.

ஆண்டுகள் செல்ல, மாம்பழம் கல்வியில் சிறந்து விளங்கியதோடு மட்டுமல்லாது, மேலவர்களிடம் வாதிடும் புலமையும் பெற்றிருந்தார்.

இதைக் கண்ட தந்தை, தன் கனவில் இறைவன் கூறியது பலித்ததென்று என நினைத்து மகிழ்ந்தார்.

மாம்பழத்தை யாரும் கண் பார்வையற்றவன் என்று கூறிவிட முடியாது.

காரணம்,

சாதாரணமான மனிதர்களை காட்டிலும் இயல்பாக அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியவராக இருந்தார்.

மாம்பழம் எப்போதும் பழனி ஆண்டவனைப் போற்றித் தமிழில் இனிய கீதங்களைப் பாடி மகிழ்ந்தார்.

மாம்பழக் கவிராயர் முதன்முதலில் பழனியை அடுத்துள்ள பாப்பம்பட்டி மிராசுதார் வேங்கடசாமி நாயக்கர் ஆய்குடி ஓபுளக்கொண்டம நாயக்கர் துளசிமாணிக்கம் பிள்ளை ஆகியோரைப் பற்றிப் பாடி மனம் களிக்கச் செய்தார்.

புகழும் புலமையும் நிறைந்திருந்த போதும் மாம்பழக் கவிராயர், தம் மூதாதையர்களைப் போன்று தாமும் தமிழ்ப் பற்றும் கொடை நலமும் வாய்க்கப்பெற்ற தமிழரசர் அவைகளுக்குச் சென்று தமிழ்ப் புலமையைக் காட்ட வேண்டும் என்னும் தீராத வேட்கை கொண்டிருந்தார்.

அவர் காலத்தில் தென் தமிழ் நாட்டில் மன்னர் என்ற பெயருக்கேற்ற சகல தகுதிகளையும் அதிகாரத்தையும் கொண்டு விளங்கியவர்கள் இராமநாதபுரத்தையாண்ட முத்துராமலிங்க சேதுபதியும் அவர் தமையனார் பொன்னுச்சாமித் தேவரும் ஆவர்.

ஓர் நாள் இவர்களை காண சென்றவரை அவர்களை பார்க்க முடியாமல் காவலர்களால் திருப்பி அனுப்பப்பட்டார்...



கண் தெரிந்தவர்கள் பாடுவதே மிக கடினம், அந்த மிகக் கடினமான சதுரங்க பந்தத்தை நன்கு பாடியவர்களுள் ஒருவர் மாம்பழக் கவிச்சிங்க நாவலர்.

ஒருநாள், பழநி ஆண்டவனுக்குக் காவடி கொண்டு செல்லும் பக்தர்களுடன் மாம்பழக் கவிராயரும் படி ஏறிச் சென்று இறைவன் சந்நதியை அடைந்தார்.

பக்தர்களின் 'அரகரா' கோஷம்.
கேட்டுத் தானும் இறைவன் திருமுன் அமர்ந்தார்.

அருகிலிருந்த சிலர் கண் உள்ள நமக்கே பழநி பதியை காண்பது அரிதானது அப்படியிருக்கும் போது கண்ணில்லாத இவர் என்ன பார்க்கப் போகிறாரோ’ என்று  சிரித்தனர். மனம் நொந்த கவிச்சிங்கர் பழனாபுரி மாலை எனும் நூலைப் பாடினார். விசயகிரி துரை என்பவர் பழநியில் இருந்த நாள், முருகன் பற்பல அற்புதம் காட்டி அருளினான் என்ற செய்தி அவருக்கு நினைவு வந்தது.

‘விசயகிரி துரையின் காலத்தில் இங்கு வெகு அற்புதம் செய்தது சத்தியமாயின் இழித்துப் பேசும் கயவர் சூட்டும் வகைகளை நீக்கி என்னைக் காத்தல் உனக்குப் பெரும் காரியமோ? பழனாபுரி ஆண்டவனே!’’ என்று உள்ளம் உருகப் பாடினார் கவிச்சிங்கர்.

உடனே கவிச்சிங்கரின் மனக்கண்முன், கருவறையில் பழநி நாதனுக்குச் செய்யப்படும் பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், விபூதிக்காப்பு, அலங்காரவகை அனைத்தும் தோன்றலாயின. கவிஞர், அங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் பெருத்த குரலெடுத்து கூறிக்கொண்டே வந்தார்.இதனைக் கண்டு கேளி பேசியோர் நாணித் தலை குனிந்தனர். அவர் காலத்தில் தென் தமிழ் நாட்டில் மன்னர் என்ற பெயருக்கேற்ற சகல தகுதிகளையும் அதிகாரத்தையும் கொண்டு விளங்கியவர்கள் இராமநாதபுரத்தை ஆண்ட முத்துராமலிங்க சேதுபதியும் அவர் தமையனார் பொன்னுச்சாமித் தேவரும் ஆவர். இராமநாதபுரத்தை அடைந்த கவிராயருக்குப் பல நாள்களாகியும் இராஜதரிசனம் கிடைக்கவில்லை. இவரது வருகையைப் பற்றிப் புலவர்களும் சேதுபதிக்குத் தெரிவிக்கவில்லை. இறுதியாக ஒரு புலவரின் உதவியால் சேதுபதியின் அவைக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.  

அவையில்  

பொன்னுச்சாமித் தேவர், அவரின் சகோதரர் முத்துராமலிங்கத்தேவர் இருவர் மீதும் மாம்பழக் கவிராயர் வாழ்த்துக் கவிகளைப் பாடினார்.

கவிராயரின் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த பொன்னுசாமித்தேவர் கவிராயரை நோக்கி, "கிரியில் கிரியுருகும் கேட்டு" என்பதை ஈற்றடியாகக் கொண்டு வெண்பாப் பாடுமாறு வேண்டினார்.

கவிராயர்,

"மாலாம் பொன்னுச்சாமி மன்னர்பிரான் தன்னாட்டில்
 சேலாங்கண் மங்கையர் வாசிக்கு நல்யாழ் – நீலாம்
 பரியில் பெரியகொடும் பாலை குளிரும் ஆ
 கிரியில் கிரியுருகும் கேட்டு."

எனப் பாடினார் .

கவிராயரின் இயற்றமிழ், இசைத்தமிழ்ப் புலமையைக் கண்டு வியந்த தேவர்,
.
மேலும் பல ஈற்றடிகளைக் கொடுத்துப் பாடக் கேட்டார். அனைத்திற்கும் கவிராயர் பொருத்தமான பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்.  

தமிழ்ப் பற்றாளரான பொன்னுச்சாமித் தேவர் கவிராயரின் புலமையை மேலும் அறிய விரும்பி, "புலவரே, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாசுரத்தில் "முத்தைத் தரு" எனத்தொடங்கி "ஓது" என்பது வரை உள்ள பகுதியை ஒரு வெண்பாவில் அமைத்துப் பாடுங்களா" என்றார்.

உடனே கவிராயர்

"வரமுதவிக் காக்கு மனமே வெண்சோதி பரவிய" எனும் தொடரை முதலில் சேர்த்துக் கொள்ளுங்கள்,

அது வெண்பாவாகிவிடும் எனக் கூறி,

"வரமுதவிக் காக்கு மனமே வெண்சோதி
 பரவிய முத்தைத்தரு பத்தித் – திருநகையத்
 திக்கிறை சத்திச் சரவணமுத்திக் கொருவித்
 துக் குருபரனெனவோது."

என்று கவிராயர் பாடிய பாடலைக் கேட்டு மகிழ்ந்தார் தேவர்.

கண் தெரியாமலேயே இவ்வளவு
அற்புதமாக பாடல்களை கொடுக்கிறாரே என ஆச்சரியமானார்.

தமிழ்ப் புலவர்களில் இவரைப் போலத் தாம் எங்கும் எப்போதும் கண்டதில்லை எனக்கூறி, தம் ஆசனத்திலிருந்து எழுந்து வந்து, அவரது வலது கரத்தைப் பற்றிக் குலுக்கி, "சபாஷ், சபாஷ்" எனப் பலமுறை கூறிப் பாராட்டினார்.

அத்துடன், "புலவரீர், உமது புலமை அளவிடற்கரியது. அழகும், சுவையும் ஒருங்கே சிறக்கக் கவிபாடும் திறமை வியக்கத்தக்கது. கலை மடந்தையின் பீடமெனத் திகழும் தங்களுக்கு இப்பேரவையில்

."கவிச்சிங்கம்"

 எனும் விருதுப் பெயரைச் சூட்டுகிறேன்" என்று கூறி, மேலும் அவரை கெளரவிக்கும் வகையில் சேது சமஸ்தானத்துப் புலவராகவும் நியமித்தார்.

வாயிற் காவலர் ஒருவர்  புதிதாக வேலைக்கு வந்தவர்
கவிச் சிங்கத்துக்கு அரசவைக்குள்  நுழைய அனுமதி
மறுத்துவிட்டார்.

இதற்குள் வேறு ஒரு காவலர் வந்து புலவரைப்பற்றி
எடுத்துச் சொல்லி உள்ளே அனுமதிக்கச்  செய்தார்.  

கவிச்சிங்கம் சிறிது
தாமதமாக அரசவைக்குள் நுழைந்த காரணம் பற்றிப் பொன்னுச்சாமித்
தேவர் வினவ, அவர் நடந்த நிகழ்வை ஒரு பாடலில் கூறினார்.

பாடல் வருமாறு:

"தருமகுண மிகுமுனது சமுகமுறார் வறுமையெனச்

   சலிக்கக் காய்ந்துவருமிரவி வெயிலதனால் மயங்கியின்று யானிங்கு
வந்த போழ்தில்
அருமை தவிர் பாராச்சே வகர்தமது பெயர்ப்பொருளை
அறியக் காட்டிக்
கருவமொடு தடு ப்பதென்னே காமர்பொன்னுச் சாமியெனும்
 கருணை மாலே!"

பொருள்:

அழகிய பொன்னுச்சாமி என்னும் பெயருடைய கருணை மிக்க

திருமாலின் அம்சமானவரே!
தருமகுணம் மிகும் உமது சமுகத்தை

அடையார் வறுமையால் சலித்து வாடுவர். நான் தங்களை நாடி

ஏறு வெயிலில் வரும்போது வெயில் கொடுமையால் மயக்க

நிலையை அடைவதுபோல் இருந்தேன். வாயில் காக்கும் பாராச்

சேவகர் என்னை நுழைய விடாமல் தடுத்தார்.

(இருந்தாலும் வேறு
காவலர் ஒருவர் வந்து விளக்கிச்  சொல்லியதன் பேரில் என்னை
அனுமதித்தார்.).
.

மன்னர் தவறு செய்த காவலரை அழைத்து வர
உத்தரவிட்டார்.

உடனே கவிச்சிங்கம்   "ஐயா! அவர் இதற்குமுன்
என்னைப் பாராச் சேவகர்(பார்த்திராத சேவகர்) தானே; எனவே,பாராச் சேவகர் பணியில் கடுமையாக நடந்து கொண்டார். அவர்
தம் கடமையைச் சரியாகச் செய்தார். எனவே அவர்க்கு யாதொரு
தண்டனையும் தேவையில்லை"என்றார்.

பாரா என்னும் சொல்
தமிழ்ச் சொல் அன்று. ஆனால் அதன் பொருள் காவல் என்னும்
பொருளில் கையாளப் பட்டுள்ளது.

பாராச் சேவகன்=என்னை
இதற்குமுன் பார்த்திராத சேவகர்;  பாராச்  சேவகன்=காவல் காக்கும்
சேவகன் என்று இருபொருள்படப் புலவர் கையாண்டுள்ளார்.

ஒருமுறை  பொன்னுச்சாமித்தேவர்  மாம்பழக் கவிச்சிங்கத்துக்குப்
பரிசு அளிக்கும் போதில் ஓர் அழகிய வெள்ளித்தட்டில் வைத்துக்
கொடுத்தார்.

புலவருக்குத்  துணையாய் வந்த சிறுவன் வெள்ளித்
தட்டின் அழகைப் பற்றி விவரித்துச் சொன்னான்.

உடனே புலவருக்குத்
தட்டின் மீது பெருவிருப்பம் உண்டாயிற்று.

நேரடியாகத் தேவரிடம் தமக்குத்
தேவை என்று சொல்வதற்கும்  கூச்சமாக இருந்தது. எனவே, '"பணத்தட்டு
எவ்விடம்?"  என்று வினவினார்.

பணத்தட்டு என்பதற்குப் பணத்தையுடைய
தட்டு என்றும் பணத்துக்குத் தட்டு(தட்டுப்பாடு) என்றும் பொருள்படும்.

இக்
கேள்வியை எதிர்பாராத தேவர் சமஸ்தானத்துக்குப் பணத் தட்டுப்பாடு
வந்தால்(ஏற்பட்டால்) பொதுமக்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுவர்;

புலவருக்குப் பணத்தட்டு வந்தால்  அவர் சமாளித்துக் கொள்வார்

என எண்ணி

 "பணத்தட்டு
அவ்விடத்துக்கே" என்று விடையிறுத்தார்.

புலவரும்  ஆசைப்பட்ட படியே
வெள்ளித் தட்டையும் பரிசையும்  எடுத்துச் சென்றார்.

அட்டநாக பந்தம், சதுரங்க பந்தம் முதலியவற்றிற்கு இலக்கணம் வகுத்துள்ளார்.

சிலேடை பாடுவதில் வல்லவர்.

தேவாங்கு புராணம், பழநித் திருவாயிரம் என்ற நூல்களும் சில சிற்றிலக்கியங்களும் பாடியுள்ளார். அவை மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்டு என்ற பெயரில் தொகுக்கப் பெற்று வெளியாகி உள்ளன.

பழனி முருகன் மேல்

திருப்பழநி வெண்பா,
பழநிப்பதிகம்,
சிவகிரி யமக அந்தாதி,
திருப்பழநி சிலேடை வெண்பா ஆகியவற்றை உளம்முருக பாடினார்.

‘‘வேற்று மருந்து ஏன்?
விபூதி யொன்றேபோ தாதோ
தேற்று உன்னருள் மாத்திரமிருந்தால் காற்றுலவு
பஞ்சாமே நோயனைத்தும் பார்த்துப் பழநிவள்ளால
அஞ்சாமே ஆள்வது அறன்.’’
பழநி வெண்பா அந்தாதி.

‘‘வாழ்க்கைச் சூழலாலும், வயது மூப்பாலும் வரும்
நோய்தீர வேறு எந்த மருந்தையும் நாட
வேண்டியதில்லை; உன் விபூதி மட்டும் போதும்,
காற்றில் பறக்கும் பஞ்சுபோல் நோயனைத்தும் ஓடிவிடும்.
பழநி வள்ளலே!

தண்டபாணித் தெய்வமே!
என்னை உன்னருளால் காக்க  வேண்டும்!’’
என்று பழநி ஆண்டவனின் விபூதி மகிமையை போற்றுகிறார்.

‘‘திளைத்துணை யேனும் நின்சித்தம் என்பக்கம் திரும்பி விட்டால்
வினைத்துயர் தீர்வதரிதோ? பனிவெவ் வெயிலிலுண்டோ?
நினைத்த வரம் தமியேற்கருள் செய்து முன்னின்றிரட்சி
அனைத்துலகும் பணியும் பழனாபுரி ஆண்டவனே!’’
பழனாபுரி மாலை.

பழநி மலை வாழும் பாலதண்டாயுதா! தானியங்களில் சிறிய அளவான தினையளவிலாவது உன் அருள் எனக்குக் கிடைத்துவிட்டால் போதும், முன் வினையால் ஏற்பட்ட துயரம் எல்லாம் ஆதவன் ஒளிபட்டு உருகி அகலும் பனிபோல மறைந்துவிடும். அகிலமெலாம் போற்றி வணங்கும் பழநியிலே ஆட்சிபுரியும் ஆண்டவனே! முருகா! எனக்கு அருள் செய்து ஆண்டருள வேண்டும்.’’

48 வயது வாழ்ந்து 1884ம் ஆண்டு மாசி மாதம் இறைவன் திருவருளால் தனது இறுதிக் காலத்தை உணர்ந்து,‘‘என்ன பிழை யான் செய்திருந்தாலும் எண்ணாமல்
அன்னபிழை எல்லாம் அகற்றி இன்னே நின்உபய பாதநிழல் நல்கி எனைப் பாவித்துக் கொள்
சமயம்
நீ குகனே நம்பினேன்‘‘
என்ற பாடலைப் பாடி முருகன் திருவடியடைந்தார்

 *This is the continuation of yesterday's post on the subject*
 *ஓம் சரவண பவாய நம:*


கருத்துகள் இல்லை: