ஞாயிறு, 15 மே, 2022

யஜுர்வேத த்ரிகால ஸந்தியா வந்தனம்.

யஜுர்வேத த்ரிகால ஸந்தியா வந்தனம்.


சந்தியா வந்தனம் - பிரம்மச்சாரிகள் 4 முழம் வேஷ்டி அணிந்து இடுப்பில் ஒரு துண்டு கட்டியும், கிருஹஸ்தர்கள் 8 (அ) 9 முழம் வேஷ்டி பஞ்ச கச்சம் உடன் அங்க வஸ்திரம் அணிந்தும் செய்வது நல்லது. காலையில், சூரிய உதயத்திற்குச் சிறிது முன்னரும், மதியம் சுமார் 11.30 to 12.30 அளவிலும்  மாலை சூரியன் அஸ்தமனத்திற்குச் சிறிது முன்பும் செய்ய வேண்டும்.
(1) ஆசமனம் : மந்திரம்:- அச்யுதாய நம:, அனந்தாய நம: ,கோவிந்தாய நம: கெஶவ , நாராயண, மாதவ,கோவிந்த, விஷ்ணோ, மதுஸூதன,  த்ரிவிக்ரம, வாமன ஸ்ரீதர,  ஹ்ரிஷீகேச , பத்மநாப, தாமோதர. (தரையில் கிழக்கு (அ) வடக்கு நோக்கி குந்தி உட்கார்ந்து செய்ய வேண்டும். மந்திரங்களினால், உள்ளங்கையில் ஓரிரு துளிகள் நீர் பருகுதல் - உள்ளும் புறமும் சுத்தி )
(செய்முறை: வலது உள்ளங்கையில் கட்டை விரல், சுண்டி விரல் இரண்டும் தவிர்த்து , நடு மூன்று விரல்களை ஒன்று சேர்த்தால் ஏற்படும் உள்ளங்கைக் குழியில் உத்தரிணியால் சிறிது தண்ணீர் ஊற்றிக்கொண்டு ,அச்யுதாய நம: , அனந்தாய நம: ,கோவிந்தாய நம: மூன்று முறை நீர் உட்கொள்க.  விரல்களின் பிரயோகம். கேஶவ , நாராயண - வலது கட்டை விரல் நுனியால், வலது இடது கன்னத்தைத் தொடவும். மாதவ, கோவிந்த - பவித்ர விரலால் வலது, இடது கண்கள்; விஷ்நோ, மதுஸூதன - ஆள் காட்டி விரல் - வலது, இடது நாசிகள், த்ரிவிக்ரம, வாமன : நடு விரல், வலது இடது காதுகள்:  ஸ்ரீதர, ஹ்ரிஷிகேஸ;நுனி விரல்- வலது, இடது தோள்கள் ;  பத்மநாப - கட்டை விரல் தவிர்த்து மற்ற 4 விரல்களால் நாபியைத் தொடவும்; தாமோதர. ஐந்து விரல்களாலும் சிரசைத் தொடவும்.
(2) கணபதி தியானம் : மந்திரம் :- ஶுக்லாம்பரதரம், விஷ்ணும், ஶஶி வர்ணம், சதுர் புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே. ( செய் முறை ) : இரண்டு கை முஷ்டிகளாலும் 5 முறை மெதுவாக, புருவங்களுக்கு மேல் சிரசில், குட்டிக் கொள்க. )
(3) பிராணாயாமம்: மந்திரம்:-
( செய்முறை  ) வலது கை, கட்டை விரல், மோதிர விரல் இரண்டை மட்டும் உபயோகிக்க. கட்டை விரலை வலது மூக்கின் நுனியில் மேதுவாக அழுத்தவும்; மோதிர விரல் இடது மூக்கின் நுனியைத் தொட்டுக் கொண்டு இருக்கட்டும், அழுத்த வேண்டாம். மூச்சுக் காற்றை மெதுவாக, இடது நாசி வழியாக உள்ளே இழுத்து சிறிது நிறுத்தி, மூக்கின் நுனியை மோதிர விரலால் லேஸாக மூடவும் ; வலது கட்டை விரலை சிறிது தளர்த்தி மூச்சுக் காற்றை வெளியே விடவும். இது போல 10 முறை பிராணாயாமம் ஒவ் வொரு வேளையிலும் செய்ய வேண்டும்.
(4)  ஸங்கல்பம் : மந்திரம் :- மமோபாத்த-ஸமஸ்த- துரித-க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஶ்வர - ப்ரீத்யர்தம் ( காலையில் ) ப்ராத: ஸந்த்யாம் உபாஸிஷ்யே ;  ( மத்யானம்) மாத்யாஹ்நிகம் கரிஷ்யே (மாலையில்) ஸாயம் ஸந்த்யாம் உபாஸிஷ்யே  ( செய் முறை=  என்ன செய்யப் போகிறேன் என்கிற பிரமாணம் - வலது துடைமீது இடது உள்ளங்கை கீழும், வலது கை அதன் மேலும் இருக்குமாறு வைத்துக்கொண்டு சொல்லவும் ).
5) மார்ஜனம் ( ப்ரோக்ஷண மந்திர ஸ்நானம் செய்தல் ). 1.ஆபோஹிஷ்டா மயோபுவ: (2.) தான ஊர்ஜே ததான (3)மஹே ரணாய சக்ஷஸே (4) யோவ: ஶிவதமோ ரஸ; (5) தஸ்ய பாஜயதே ஹந:(6) உஸதீரிவ மாதர:(7).தஸ்மா அரங்கமாமவ (8) யஸ்யக்ஷயாய ஜின்வத (9) ஆபோஜனயதா ச ந: (10) ஓம் பூர் புவ: ஸுவ: ( செய் முறை - ஆத்ம பரிஷேசனம் ஜலத்தினால் சிரசை ப்ரோக்ஷண ஸ்நானம்.செய்தல் ) பின்னர் ஓம் என ஜலத்தில் எழுதி புருவ மத்தியில் தொடவும்.
(6) ப்ராசனம் என்றால் என்ன? விளக்கம் - நாம் ஒவ்வொரு தினமும் அந்தந்த வேளை வரை செய்த பாவங்களுக்கு ஸூர்யன் , அக்னி , திக் தேவதைகளை கை கூப்பி வேண்டிக்கொண்டு ப்ராயச்சித்தம் செய்து கொள்ளுதல்.
மந்திரம்- (மூன்று வேளைக்கும் தனித் தனி மந்திரம் ) ப்ராத:(காலையில் ) ஸூர்யஶ் ச மா மன்யுஶ் சமன்யுபதயுஶ் ச மன்யுக்ருதேப்ய: I பாபேப்யோ ரக்ஷந்தாம் I யத்ராத்ர்யா பாப மகார்ஷம் I மநஸா வாசா ஹஸ்தாப்யாம் II பத்ப்யா முதரேண - ஶிஶ்னா I ராத்ரிர் ததவலம்பது I யத்கிஞ்ச துரிதம் மயி I இதமஹம் மாம்ருத-யோ நெள Iஸூர்யே ஜோதிஷி ஜூஹோமி ஸ்வாஹா II
மாத்யாஹ்நே - ஆப: புனந்து ப்ருதிவீம் ப்ருதிவீ பூதா புநாதுமாம் Iபுனந்து ப்ரஹ்மணஸ் பதிர் - ப்ரஹ்மபூதா புநாது மாம் I யதுச்சிஷ்டம - போஜ்யம்  யத்வாதுஶ்சரிதம் மம I ஸர்வம் புனந்து மாமாபோ ஸதாஞ்ச ப்ரதிக்ரஹ ஸ்வாஹா II
சாயங்காலே-- அக்னிஶ்ச மாமன்யுஶ்ச மன்யுபதயஶ்ச மன்யுக்ருதேப்ய: I பாபேப்யோ ரக்ஷந்தாம் I யதஹ்நா பாப ம கார்ஷம் மநஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யா - முதரேண ஶிஶ்னா I அஹஸ்த ததவலம்பது Iயத் கிஞ்ச துரிதம் மயி I இதமஹம் மா-மம்ருத-யோநெளா I சத்யே ஜோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா II ( வலது உள்ளங்கையில் சிறிது ஜலம் விட்டு உட்கொள்ளவும் )
(7) புனர் மார்ஜனம் : ( செய்முறை : முதலில் ஆசமனம் செய்து, பின்னர் மார்ஜனம் (இதை 3 வேளையும் செய்ய வேண்டும் ) அச்யுதாய நம: முதல்..... தாமோதர...வரை. ததிக்ராவண்ணோ அகாரிஷம் I ஜிஷ்ணோ ரஶ்வஸ்ய வாஜின: Iஸுரபி நோ முகா கரத் I ப்ரண ஆயிஷிஹும் தாரிஷத் II ஆபோ ஹிஷ்டா மயோ புவ: I தா ந ஊர்ஜே ததா தந I மாஹே ரணாய சக்ஷஸே I யோவ: ஶிவத மோரஸ: I தஸ்ய பாஜயதேஹ ந: I உஶதீரிவ மாதர:Iதஸ்மா அரம் கமாம வ: I யஸ்ய க்ஷயாய ஜின்வத ஆபோ ஜனயதா ச ந: I ஓம் பூர் புவஸ்ஸுவ:II ( பின்னர் ஆத்ம பரிசேஷணம் செய்துகொள்க )
(8) அர்க்ய-ப்ரதானம்: ஓம் பூர் புவ: ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்.  செய்முறை - காலையில்    கிழக்கு நோக்கி ( கட்டைவிரல் சேராமல் ) இரண்டு உள்ளங்கை நிறைய 8 விரல்கள் நுனி வழியாக 3 முறை அர்க்யம்  விடவும் , மதியம் வடக்கு
நோக்கி 2 முறையும், மாலையில் மேற்கு நோக்கி 3 முறையும் தரையிலோ,தாம்பாளத்திலோ விழுமாறு கைகளை மேலே தூக்கி நிறைய நீர் விடவும்.
(9) ப்ராயச்சித் தார்க்யம்:பிராணாயாமம் - ஓம் பூ: + பூர் புவஸ்ஸுவரோம் II அர்க்யம்: ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந: ப்ரசோதயாத் II ஓம் பூர்புவஸ்ஸுவ: ஆத்ம பரிசேஷணம். (சிரசில்)  +  ஒரு ஆத்ம ( தன்னைத்தானே) பிரதக்ஷிணம்.
(10) ஐக்யானு சந்தானம்: ( ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியம் ஒற்றுமை ). மந்திரம் : அஸவாதித்யோப்ரஹ்ம Iப்ராஹ்மைவாஹமஸ்மி II
( த்யானம்.சூரியன் ப்ரம்மம் நானும் ப்ரம்மம் என ஜீவாத்மா பரமாத்மா ஒற்றுமையை இரு கைகளாலும் மார்ப்பைத் தொட்டுக் கொண்டு , கண்களையும் மூடிக்கொண்டு, ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியத்தை ஒரிரு நிமிடம் மெளனமாகச் சிந்திக்கவும் ).
(11)தேவ தர்ப்பணம் - மந்திரம் :- ஆதித்யம் தர்ப்பயாமி, ஸோமம் தர்ப்பயாமி, அங்காரகம் தர்ப்பயாமி, புதம் தர்ப்பயாமி, ப்ருஹஸ்பதிம் தர்ப்பயாமி, ஶுக்ரம் தர்ப்பயாமி,சநைஶ் சரம் தர்ப்பயாமி,ராஹும் தர்ப்பயாமி, கேதும் தர்ப்பயாமி,கேஶவம் தர்ப்பயாமி, நாராயணம் தர்ப்பயாமி, மாதவம் தர்ப்பயாமி, கோவிந்தம் தர்ப்பயாமி, விஷ்ணும் தர்ப்பயாமி, மதுஸூதானம் தர்ப்பயாமி,த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி, வாமனம் தர்ப்பயாமி, ஸ்ரீதரம் தர்ப்பயாமி, ஹ்ருஷீ கேஶம் தர்ப்பயாமி,பத்மநாபம் தர்ப்பயாமி, தாமோதரம் தர்ப்பயாமி.
பிறகு ஆசமனம் செய்யவும் ) செய்முறை -  குந்தி உட்கார்ந்து கொண்டு மேலே அர்க்கியத்திர்க்குக் கூறியபடி கட்டை விரல் சேராமல் ஒவ்வொரு தேவர்களுக்கும் ஒரு முறை ( ஜலம் ) - அர்க்யம்  விடவும் )
பூர்வ பாகம் முடிந்தது.
உத்தர பாகம் : (12) காயத்ரி ஜெப சங்கல்பம். மந்திரம்  ஶுக்லாம்பரதரம், விஷ்ணும், ஶஶி வர்ணம், சதுர் புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே II ஓம் பூ: ஓம் புவ: ஓகும் சுவ: ஓம் மஹ: ஓம் ஜன:  ஓம் தப: ஒகும் சத்யம். ஓம் தத் ஸ விதுர் வரேண்யம் பர்கோ தீமஸ்ய தீமஹி  தியோயோன: ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம் II மமோ பாத்த- சமஸ்த - துரிதக்ஷய -த்வாரா- ஸ்ரீ பரமேஶ் வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: ஸந்த்யா- காயத்ரீ - மஹா மந்த்ர ஜெபம் கரிஷ்யே; மாத்யாஹ்நிக காயத்ரீ - மஹா மந்த்ர ஜெபம் கரிஷ்யே; ஸாயம் ஸந்த்யா காயத்ரீ-மஹா மந்த்ர ஜெபம் கரிஷ்யே .(கிழக்கு, வடக்கு, மேற்கு)
(13) (13)(1) ப்ரணவந்யாஸ: மந்திரம் :-  ப்ரணவஸ்ய ரிஷி: ப்ரஹ்மா தேவி காயத்ரி சந்த: பரமாத்மா தேவதா IIபூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி, ப்ருகு, குத்ஸ, வஸிஷ்ட, கெளதம, காஶ்யப, ஆங்கீரஸ ருஷய: II காயத்ரீ-  உஷ்ணிக - அனுஷ்ட்டுப் - ப்ருஹதீ - பங்தீ - த்ருஷ்டுப் - ஜகத்யஶ்- சந்தாம்ஸி II அக்னி - வாயு - அர்க்க- வாகீஶ- வருண- இந்த்ர - விஶ்வே - தேவா - தேவதா: II
( செய்முறை. ரிஷியை சிரசிலும், சந்தஸ்ஸை நாவிலும், தேவதையை இருதயத்திலும் தியானம் செய்ய வேண்டும். ரிஷி என்று சிரசையும், சந்த: என்று உதட்டையும்; தேவதா என்று மார்பையும் தொடவேண்டும். பின்னர் மூன்று பிராணாயாமம் செய்துவிட்டு, முடிவில் வலது காதைத் தொடவும் )
(13)(2)ப்ராணாயாமம் : ஓம் பூ:I ஓம் புவ: I ஓஹும் ஸுவ:I ஓம் மஹ: I ஓம் ஜன:I ஓம் தப: I ஒஹும் சத்யம் II ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி I தியோ யோந: ப்ரசோதயாத் I ஒமாபோ ஜ்யோதீரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுரோம் II ( ஒம் காரமே அனைத்தும் என தியானித்தல் )
(14) காயத்ரீ ஆவாஹநம்: ஆயாத்வித்யனுவாகஸ்ய வாமதேவ ரிஷி: I அனுஷ்ட்டுப் சந்த: Iகாயத்ரீ தேவதா II ஆயாது வராதா தேவீ அக்ஷரம் ப்ர்ஹ்ம சம்மிதம் I காயத்ரீம் சந்தஸாம் மாதேத்வம் ப்ரஹ்ம ஜுஷஸ்வ ந:II
ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்ராஜோஸி தேவானாம் தாம நாமாஸி விஶ் வமஸி விஶ் வாயு: ஸர்வமஸி ஸர்வாயு: அபி‌பூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம் ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹ்யாமி II
செய்முறை : இரு கை கட்டை விரல் நுனிகளால் பவித்ர விரல் அடிக்கணுவைத் தொட்டுக்கொண்டு மார்பைத் தொடவும் ( இது ஆவாஹனீ முத்திரை -  இருதய கமலத்தில் காயத்ரீ தேவி ப்ரஸன்னமாக வேண்டுமெனப் பிரார்தனை செய்தல் )  .
(15)காயத்ரீ ஜெபம் - ஓம் பூர்புவஸ்ஸுவ: I தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி I தியோ யோன: ப்ரசோதயாத் II ( 28 / 58 / 108). செய்முறை - காலையிலும்,நடுப்பகலிலும் கிழக்கு முகமாக நின்று கொண்டும், மாலையில் - மாலையில் மேற்கு முகமாக உட்கார்ந்து கொண்டும் ஜெபம் செய்ய வேண்டும். காலையில் முகத்திற்கு நேராகவும், பகலில் மார்புக்கு நேராகவும், மாலையில் நாபிக்கு நேராகவும் கைகளை தன்னை நோக்கி இருக்குமாறு ( வஸ்திரத்தால் உபவீதமாக போர்த்தி வைத்துக்கொண்டு செய்யவேண்டும். ஸூக்ஷுமம் - என்னவென்றால் ஜெபம் ஓசை எழாமல், உதடு அசையாமல் , மனதில் ஐந்து இடங்களில் நிலை நிறுத்தி செய்ய வேண்டும் :- ஓம் -- பூர்புவஸ்ஸுவ: -- தத்ஸ விதுர் வரேண்யம் -- பர்கோ தேவஸ்ய தீமஹி -- தியோ யோன: ப்ரசோதயாத் )
(16) காயத்ரீ உபஸ்தானம் = ( திரும்ப அனுப்புதல் ) - பிராணாயாமம். ப்ராதஸ் ஸந்தியா உபஸ்தானம் கரிஷ்யே Iஆதித்ய சந்தியா உபஸ்தானம் கரிஷ்யே I ஸாயம் உபஸ்தானம் கரிஷ்யே I உத்தமே ஶிகரே தேவீ பூம்யாம் பர்வத மூர்தனி ப்ராஹ்மணேப்யோ ஹ்யனுஜ் ஞானம் கச்ச தேவீ யதா ஸுகம் II ( செய் முறை :- ஜெபம் செய்த திக்கில் நின்ற நிலையில் தேவியை வணங்கி வழி அழ்னுப்புதல் )  (17) ஸூர்ய உபஸ்தானம் - ( மூன்று விதம் - காலை, நடுப் பகல், மாலை ) காலை - மித்ரஸ்ய சர்ஷணீ த்ருத: ஶ்ரவோ தேவஸ்ய ஸானஸிம் I ஸத்யம்     சித்ர ஶ்ரவஸ்தமம் II மித்ரோ ஜனான் யாதயதி ப்ரஜானன் மித்ரோ தாதார ப்ருதுவீ முதத்யாம் Iமித்ர: கிருஷ்டீ ரனிமிஷாபிசஷ்டே ஸத்யாய ஹவ்யம்
க்ருதவத் விதேம IIப்ர ஸ மித்ர மர்தோ அஸ்து ப்ரயஸ்வான் யஸ்த ஆதித்ய ஶிக்ஷதி வ்ரதேன I ந ஹன்ய தே ந ஜீயதே த்வாதோ நைனமங்ஹோ அஶ் நோத யந்திதோ ந தூராத் II
நடுப்பகலில் - ஆஸாத்யேன ரஜஸா வர்த்தமானோ நிவேஶயன் அம்ருதம் மர்த்யஞ்ச I ஹிரண்யயேன ஸவிதா ரதேனாss தேவா யாதி புவனா விபஶ்யன் II உத்வயம் தமஸஸ்பரி பஶ்யந்தோ ஜ்யோதி ருத்தரம் I தேவம் தேவத்ரா ஸுர்ய-மகண்ம ஜ்யோதி-ருத்தமம்I உதுத்யம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ: I த்ருஶேவிஶ்வாய ஸூர்யம் II சித்ரந் தேவானா-முதகா -தனீகம் சக்ஷுர் மித்ரஸ்ய வருணஸ் யாக்நே: I ஆ ப்ரா த்யாவா ப்ருதிவீ அந்தரிக்ஷகும் ஸூர்ய ஆத்மா ஜகதஸ் தஸ்துக்ஷஶ்ச IIதச்சக்ஷுர் - தேவ ஹிதம் புரஸ்தாச் சுக்ரமுச்சரத் II பஶ்யேம ஶரதஶ் ஶதம், நந்தாம ஶரதஶ் ஶதம், மோதாம ஶரதஶ் ஶதம், பவாம ஶரதஶ் ஶதஹும், ஶ்ருணுவாம ஶரதஶ் ஶதம், ப்ரபரவாம ஶரத: ஶத: மஜீதாஸ்யாம ஶரத: ஶதம் ஜ்யோக்ச ஸூர்யம் த்ருஶே I ய உதகான்-மஹதோர்ணவாத்-விப்ராஜமான: ஸரீரஸ்ய மத்யாத் ஸமா வ்ருஷபோ லோஹிதாக்ஷ: ஸூர்யோ விபச்சின் - மநஸா புனாது II ஸாயங்காலே- இமம்மே வருண ஶ்ருதீ ஹவ - மத்யா ச ம்ருடய I த்வாமஸ்யு - ராசகே II தத்-த்வா யாமி ப்ரஹ்மணா வந்தமானஸ் ததா ஶாஸ்தே யானஜாமனோ ஹவிர்ப்பிஹி: I அஹேடமானோ வருணேஹ போத்யுருஶஹும் ஸ மாந ஆயு: ப்ரமோஷீ: II யச்சித்திதே விஶோயதா ப்ரதேவ வருண வ்ரதம் I மினீமஸி த்யவி த்யவி II யத்கிஞ்சேதம் வருண தைவ்யே ஜனேபி-த்ரோஹம் மனுஷ்யாஶ் சராமஸி I அசித்தீ- யத்-தவ தர்ம யுயோபிம மா நஸ் தஸ்மா-தேனஸோ தேவ ரீரிஷ: II கிதவாஸோ யத்-ரிரிபுர்- ந தீவி யத்வாகா சத்ய- முதயன் ந வித்ம Iஸர்வாதா விஷ்ய சிதிரேவ தேவாதா தே ஸ்யாம வருண ப்ரியாஸ: II  ( ஶ் , ஶ ஶா, ஶி ,ஶீ, ஶு, ஶூ, ஶெ, ஶே, ஶை, ஶொ, ஶோ, ஶௌ.) (  இதை விட்டுவிடவும் )
 ( செய்முறை விளக்கம் - ஜெபம் செய்த திசையை, கை கூப்பி நோக்கி நின்ற நிலையில், சூரிய மண்டல நடுவில் இருக்கும் பரமாத்வாவை மேற்கூறிய மந்த்திர உச்சாடனத்தால் துதிக்க வேண்டும் )
18).ஸமஷ்ட்யபிவாதனம்: மந்திரம் ஸந்த்யாயை நம: சாவித்ர்யை நம:காயத்ர்யை நம: ஸரஸ்வத்யை நம: ஸர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம: காமோ கார்ஷீன் மன்யுரகார்ஷீன் நமோ நம:  செய்முறை - ஜெபம் செய்த திசையிலிருந்து ஆரம்பித்து கிரமமாக நான்கு திசைகளிலும் அஞ்சலிசெய்து, முடிவில் ஜெபம் செய்த திசையில்- சர்வாப்யோ தேவதாப்யோ நமோன் நம: , காமோகார்ஷீத் மன்யுரகார்ஷீத் நமோ நம: எனவும் சொல்லி வணங்கவேண்டும்.
பின்னர் அபிவாதயே.....இரு காதுகளையும் உள்ளங்கையால் தொட்டுக் கொண்டு அவரவர் கோத்ரம் நாமம் கூறி நமஸ்கரிக்கவும். (1) அபிவாதயே -
(2) _______ _______ ______( ரிஷிகளின் பெயர், உங்கள் கோத்திரத்திற்கேற்ப ) (3) __(உங்கள் கோத்திரத்திற்கேற்ப - ஏகா, த்வயா, த்ரயா, பஞ்சா, ஸப்தா ரிஷேய
 என்பனவற்றை கூட்டிக்கொள்ளவும்), (4) ப்ரவரான்வித:
(5) __ஸூத்ர (ஆபஸ்தம்ப ,போதாயனஸூத்ர,  (6) ___(யஜூஷ் , ஸாமோ, ரிக்.. சகாத்யாயி  (7) ______கோத்ரஸ்ய (உங்கள் கோத்ரம்)
(8) ____ராமகிருஷ்ண (உங்கள் பெயர்) சர்மாணம் அஹம் அஸ்மிபோ:
19) திக் தேவதா வந்தனம்: மந்திரம் :- ப்ராச்யை திஶே நம:I தக்ஷிணாயை திஶே நம: I ப்ரதீச்யை திஶே நம: I உதீச்யை திஶே நம:I ஊர்த்வாய நம: I அதராய நம:Iஅந்தரிக்ஷாய நம: Iபூம்யை நம:I ப்ரஹ்மணே நம: I விஷ்ணவே நம:I ம்ருத்யவே நம: I ஜெபம் செய்ய ஆரம்பித்த திசையிலிருந்து வரிசைக் கிரமமாக நான்கு திசைகளிலும் அஞ்சலி செய்க. திக் தேவதைகளையும், மும்மூர்திகளையும் வணங்கவும். 20) யம வந்தனம்: யமாய நம: யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்தகாய ச ஒளதும்பராய தத்நாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய     சித்ரகுப்தாயவை நம: சித்ரகுப்தாயவை நம ஓம் நம இதி. ( இம்மந்திரத்தை தெற்கு நோக்கி சொல்லவும் )
21) ஹரிஹர வந்தனம் : ருதஹும் ஸத்யம் பரம்ப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ண பிங்களம் ஊர்த்வரேதம் விருபாக்ஷம் விஶ்வரூபாயவை நம: விஶ்வரூபாயவை நம ஓம் நம இதி II நர்மதாயை நாம: ப்ராதர் நர்மதாயை நமோ நிஸி நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹிமாம் விஷ ஸர்பத: அபஸர்ப்ப ஸர்ப பத்ரந்தே தூரம் கச்ச மஹா யஸா: ஜனமே ஜயஸ்ய யாகாந்தே ஆஸ்தீக வசனம் ஸ்மரன்னு ஜ்ஜரத்கார்வோ ஜ்ஜரத்கார்வாம் பன்னகேப்யோ பிரக்ஷது ஸ்ரீபன்ன கேப்யோபி ரக்ஷத்வ ஓம் நம இதி. II
22) ஸூர்யநாராயண வந்தனம். நம: ஸவித்ரே ஜகதேக சக்ஷுஷே ஜகத்ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேதவே I த்ரயீ மயாய த்ரிகுணாத்ம தாரிணே. விரிஞ்சி நாராயண ஶங்கராத்மனே II த்யேய: ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண:ஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட: கேயூரவான் மகர குண்டலவான் கிரீடி ஹாரி ஹிரண்மயவபுர் த்ருத ஶங்க சக்ர: II
ஶங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத I கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம், ஶரணாகதம் II ஆகாஶாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம் I ஸர்வ தேவ நமஸ்கார: கேஶவம் ப்ரதி கச்சதி II கேஶவம் ப்ரதி கச்சதி ஓம் நம இதி I அபிவாதாயே ---- அஸ்மிபோ: ஜெபம் செய்த திசையை நோக்கி அஞ்சலி செய்து,நமஸ்காரம்.
23) ஸமர்ப்பணம்: காயேன வாசா மனஸேந்த்ரியைர்-வா புத்த்யாத்ம நாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் I கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி I ஆசமனம். (ப்ரயோகம் - உள்ளங் கையில் சிறிது தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு, பலனை ஸ்ரீமன் நாராயணனுக்கே ஸமர்ப்பிக்கிறேன் .  

(


செய்முறை) வலதுகைவிரல்கள் வழி கீழே தீர்த்தத்தை விடவும் )
24) இரக்ஷை -- அத்யா நோ தேவ ஸவித: ப்ராஜாவத் ஸாவி: ஸெளபகம் I பராதுஸ்வப்னியஹும் ஸூவ II விஶ்வானி தேவ ஸவிதா துரிதானி பரா ஸுவ I யத் பத்ரம் தன்ம ஆஸுவ II ( ப்ரயோகம் -ஜெபம் செய்த இடத்தில்   தீர்த்தத்தை ப்ரோக்ஷித்து , குனிந்து வலது பவித்ர விரலால் பூமியைத் தொட்டு ஜலத்தை புருவ மத்தியில் இட்டுக்கொள்ளவும் )முடிந்தது.- சுபம்.

கருத்துகள் இல்லை: