ஞாயிறு, 15 மே, 2022

வைத்தியநாத தேசிகர்

வைத்தியநாத தேசிகர்

17ஆம் நூற்றாண்டில் திருவாரூரில்
வான்மீக நாதர், உலகம்மை தம்பதியருக்கு மகனாக வைத்தியநாத தேசிகர் பிறந்தார்.

முருகபத்தியில் மிகச் சிறந்தவர் இவர் சேய்தொண்டர்களில் ஒருவர். தினமும் முருகப்பெருமானை நினைத்து வணங்கி வாழ்ந்து வந்தார் வைத்தியநாத தேசிகர், அருணகிரிநாதர் மீது அளவிலா அன்புக்கொண்டவர்.

ஓர் நாள், வைத்தியநாத தேசிகரின்
கனவில் வந்த முருகப்பெருமான்
பிள்ளைக் கவி பாடு என கூறினார். காலையில் முருகப்பெருமானை நினைத்து பிள்ளை தமிழ் பாடினார்.

பின்னர் ஓர் நாளில், மயிலம் முருகன்  ஆலயத்திற்குச் சென்றார். அந்த ஆலயத்தில் குடிக்கொண்டிருந்த முருகனை தரிசித்து ``மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்’’ பாடினார்.

மேலும், சில நாள் அங்குத்தங்கி இனிய பல தமிழ்மாலைகள் சூட்டி மகிழ்ந்தார்.
தமிழகத்தில் எண்ணற்ற முருகன் ஆலயங்களை தரிசித்து பின்னர் திருவாரூர் திரும்பினார். வைத்தியநாத தேசிகர், படிக்காசுப் புலவரின் ஆசிரியர். தருமபுரம் ஆதினத்தைச் சார்ந்த வைத்தியநாத தேசிகர்

பாசவதை பரணி, நல்லூர் புராணம்,
திருவாரூர் பன் மணிமாலை முதலிய நூல்களை இயற்றினார்.

இலக்கண விளக்கம் எழுதியுள்ளார்.
இது ஒரு தமிழ் இலக்கண நூல் ஆகும்.

இந்நூல் ஐந்திலக்கணங்களையும் கூறுவதுடன் பாட்டியல் பற்றியும் விளக்குகிறது.

தமிழ் இலக்கணத்தை விரிவாகவும் முழுமையாகவும் கூறுவதால் இந்நூலைக் குட்டித் தொல்காப்பியம் என்றும் குறிப்பிடுவதுண்டு.


கருத்துகள் இல்லை: