திங்கள், 12 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 26

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 26



===========
 யாதவபிரகாசர் சிஷ்யனாகுதல்
=======
கூரத்தாழ்வானும், முதலியாண்டானும் காலட்சேபம் கேட்டுக் கொண்டிருக்க யாராலும் எதிர்பார்க்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது.

யாதவப்பிரகாசருக்கு இராமானுஜரை நினைத்து மனநிம்மதி இல்லாமல் போயிற்று. 'இராமானுஜர் சொல்லும் அர்த்தங்கள் எல்லாம் சாஸ்திரங்களுக்கு சரியாகப் பொருந்துகிறது. என்ன செய்யலாம்?' என்று யோசித்து தாயாரிடம் கேட்டார்.

"நீ ஒன்று செய். இது இதுவரை பட்டபாடு போதும். திரும்ப போய் இராமானுஜரின் திருவடிகளை ஆச்சர்யத்திரு" என்றார். "அவருடைய பக்தராக, சிஷ்யனாக வாழ்ந்துவிட்டு வாரும்" என்றார் யாதவப்பிரகாசரின் தாயார்.

"நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், இத்தனை காலம் சிகை இல்லாமல் வாழ்ந்துவிட்டோம். இனி அவ்வாறு மாற வேண்டுமானால் 'பூமி பிரதட்சிணம்' தான் பிராயச்சித்தம்" என்றார் (பூமியை ஒருமுறை வலம் வருதல்). 'ஆனால், என்னால் இந்த வயதில் எப்படி பூமி பிரதட்சிணம் பண்ண முடியும்?' என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அன்றிரவு யாதவப்பிரகாசர் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது, 'இராமானுஜரை ஒருமுறை வலம் வந்து, அவருடைய சிஷ்யனாக இருந்து வாரும்' என்றார் காஞ்சி தேவப்பெருமாள். அவர் கண்ட கனவின் மீது நம்பிக்கை இல்லாமல், திருக்கச்சி நம்பிகளிடம் "நீர் இறைவனிடம் கேட்டுச்சொல்லும்" என்று கேட்டார் யாதவப்பிரகாசர்.

திருக்கச்சி நம்பிகளும் தேவப்பெருமாளுக்கு ஆலவட்டம் வீசும் பொழுது கேட்க, தேவப்பெருமாள் இராமானுஜரை ஒருமுறை வலம் வரச்சொன்னார். இதை திருக்கச்சி நம்பிகளும் யாதவப்பிரகாசரிடம் சொல்ல, அவரும் "சரி,  அப்படியே ஏற்கிறேன்" என்றார்.

யாதவப்பிரகாசரும் இராமானுஜரைத் தரிசித்து, அவரை ஒரு முறை வலம்வந்து, காஷாயத்தையும், யக்ஜோபவீதத்தையும், சிகையையும், திரிதண்டத்தையும் பெற்றுக் கொண்டார். அவருக்கு சுவாமி இராமானுஜர் பட்டம் கொடுக்கிறார், "நீர் இனி கோவிந்தஜீயர் என்று அழைக்கப்படுவீர்" என்றார் இராமானுஜர்.

யாதவப்பிரகாசரை வைத்துக்கொண்டு ஒரு புத்தகத்தையே எழுத வைத்துவிட்டார் இராமானுஜர். 'யதிதர்ம சமுச்சியம்' என்ற நூலை இயற்றியவரே கோவிந்தஜீயர்தான். அதிலுள்ளவற்றை சட்ட திட்டமாகக் கொண்டு தான் எல்லா திரிதண்ட சந்நியாசிகளும் வாழ்கிறார்கள்.

யாதவர் இராமானுஜருடைய சிஷ்யராகி விட்டார் என்ற செய்தி, ஸ்ரீ வைஷ்ணவ உலகத்தில் ஒரு பரபரப்பை உண்டாக்கியது. திருவரங்கத்திலுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் மிகவும் உற்சாகமடைந்தார்கள்.

கோவிந்தஜீயர்

கே:−27. இராமானுஜரின் வேதாந்த குருவான யாதவப்ரகாசர் கூறிய உபநிஷத் அர்த்தங்களை, இராமானுஜர் அப்படியே ஏற்றுக்கொண்டாரா?

விடை:− இல்லை.. சாஸ்திரம், சூத்திரம் எனச் சர்வமும் கற்று, வாதத்தைவிடப் பிடிவாதத்தில் அதிக நம்பிக்கையுடைய அவரது குரு, தமது பாண்டித்யத்தாலும், சந்தி பிரிக்கும் சாமர்த்தியத்தாலும் மந்திரப் பொருள்களுக்குத் தவறான மாற்றுப் பொருள் கூறும்போது அதனை இராமானுஜர் மறுத்தார். அத்தோடு குருவிடம் அவற்றின் உண்மைப் பொருள்களைத் துணிவுடனும் சொன்னார்.

கே.28:− இளையாழ்வார் இராமானுஜருக்கும் அவரது வேதாந்த குருவுக்கும் இடையே நடைபெற்ற முதல் வாதம் என்ன? அதனைக் குரு ஒத்துக்கொண்டாரா?

விடை:− ஒருநாள், தைத்ரிய உபநிஷத்தில் வரும் வேத வாக்யமான, "ஸத்யம், ஞானம், அனந்தம், ப்ரம்ம" என்பதற்குப் பொருள் கூறும்பொழுது, "ஸத்யம், ஞானம், அனந்தம்" ஆகியவை ப்ரம்மம் என்று, யாதவப்ரகாசர் தவறாகப் பொருள் கூற, இளையாழ்வார் இராமானுஜர் அதனை ஏற்காது, "ஸத்யம், ஞானம், அனந்தம்" ஆகியவை ப்ரம்மத்தின் பண்புகள். அவையே ப்ரம்மம் ஆகா. ஸத்யம், ஞானம், அனந்தம் ஆகிய பண்புகளை உடைய ப்ரம்மம் என்று பொருள் கொள்ள வேண்டும்" என்றார்.

குருவும் வேறு வழியின்றி அதனை ஏற்றுக்கொண்டார்.

கே.29:− இராமானுசருக்கும் அவரது வேதாந்த குருவுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது வாதம் என்ன? அதனைக் குரு மறுத்தாரா?

விடை:− மற்றொரு நாள், சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் வேத வாக்யமான "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி" என்பதற்குப் பொருள் கூறும் போது, குரு யாதவப்ரகாசர், "குரங்கின் பின்புறத்தை ஒத்த கண்களை உடைய நாராயணன்" என்று தவறாகப் பொருள் கூற, அதனைக் கேட்டு கண்ணீர் வடித்த இராமானுஜர், "சூரிய மண்டலத்தில் உறையும் புருஷனான ஶ்ரீமந் நாராயணனின் கண்கள் அந்தச் சூரியனின் கிரணங்களால் அலர்விக்கப்படும் சிவந்த தாமரை மலர்களை ஒத்திருக்கின்றன" என்று வினயத்துடன் பொருள் கூறினார்.

அதனையும் குருவால் மறுக்க இயலவில்லை.

கே.30:− இராமானுஜருக்கும் குருவுக்கும் இடையே நடந்த வாதங்களின் தொடர்ச்சியாய் என்ன நடந்தது?

விடை:− சீடரின் ஞானத்தைக் கண்டு குருவுக்குப் பொறாமை வந்தது. உள்ளத்தில் சீடர் மீது பகை உணர்வு தோன்றியது. சீடர் இளையாழ்வார் இராமானுஜரால் தமது அத்வைத வாதங்கள் அடியோடு அழிந்துவிடும் என எண்ணி, அவரைக் காசி யாத்திரைக்கு அழைத்;துச் சென்று, கங்கையில் "மணிகர்ணிகா" கட்டத்தில் மூழ்கடித்துக் கொல்ல, சில அந்தரங்கச் சீடர்களுடன் சேர்ந்து தனிமையில் திட்டமிட்டார் யாதவப்ரகாசர்.

கே.31:− இராமானுஜர் குரு யாதவப் பிரகாசருடன் காசி யாத்திரை புறப்பட்ட போது, அவருக்கு வயது என்ன?

விடை:− 18 வயது.

கே.32:− இளையாழ்வார் இராமானுஜருடன் காசி யாத்திரைக்கு வந்த உறவினர் யார்?

விடை:− யாதவப்ரகாசரிடம் வேதம் பயின்றுவந்த இராமானுஜரின் தம்பியும், சிற்றன்னையின் குமாரருமான கோவிந்தன்.

கே.33:− காசி யாத்திரையில் விந்திய மலைச் சாரலில் ஒரு இரவில் நடந்த முக்கிய நிகழ்ச்சி என்ன?

விடை:− இராமானுஜரின் தம்பி கோவிந்தனுக்குக் குருவின் சதித் திட்டம் தெரிந்துவிட்டது. பதறிப்போன அவர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது, இராமானுஜரிடம் மிகவும் இரகசியமாக அதனைத் தெரிவித்து அவரைத் தப்பிச் செல்லுமாறு செய்தார்.

கே.34:− விந்திய மலைச் சாரலில் தனியே திக்குத் தெரியாது பயணித்த இளையாழ்வார் இராமானுஜர் யாரால் காப்பாற்றப்பட்டார்? எந்த ரூபத்தில்?

விடை:− காஞ்சிப் பேரருளாளன் − பெருந்தேவித்தாயார் ஆகிய திவ்ய தம்பதிகளால்,  இராமானுஜர் காப்பாற்றப்பட்டார்.
அவர்கள் வேடன், வேடுவச்சி உருவத்தில் வந்தனர்.

கே.35:− அவர்கள் இராமானுஜரின் பெருமையை எவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டனர்?

விடை:− மனைவியாக வந்தவர், "இப்படிப்பட்ட புத்திரன் நமக்கில்லையே!.."என்று ஏக்கத்துடன் கூறியும், கணவனாக வந்தவர், "இப்படிப்பட்ட புத்திரன் இதுவரை உலகில் பிறக்கவில்லை, இனிமேலும் பிறக்க மாட்டான்!" என்று கூறியும், இராமானுஜரின் பெருமையை வெளிப்படுத்தினர்.

கே.36:− அதில் பெண்ணாக வந்தவர், தமது கணவரிடம் வேண்டியது என்ன?
அதனைக் கேட்டுக் கொண்டிருந்த இளையாழ்வார் இராமானுஜர், அந்தப் பெண்ணின் வேண்டுகோளை எவ்வாறு நிறைவேற்றினார்?

விடை:−  அந்தப் பெண், தமது கணவரிடம் தாகத்திற்கு அருந்துவதற்காகத் தண்ணீரை வேண்டினாள்.

இராமானுஜர், அந்தப் பெண்ணின் கணவர் கூறியபடி, சாலையோரம் இருந்த கிணற்றிலிருந்து, பொழுது புலருமுன்னர், தண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்து உதவினார்.

கே.37:− அந்தக் கிணற்றுக்குப் பெயர் என்ன? அந்தக் கிணறு எங்கே உள்ளது?

விடை:−அந்தக் கிணற்றின் பெயர், "சாலைக் கிணறு".
அது காஞ்சியிலிருந்து சுமார் 7கி.மீ. தொலைவில் உள்ள செவிலிமேடு அருகே உள்ளது.

(வளரும்..) வைகுண்ட பதவி அடைந்தார். அத்துடன் கோவிந்தஜீயரின் சரித்திரம் முடிந்தது.

இனி, காஞ்சிபுரத்தில் தங்கியிருக்கும் இராமானுஜரை திருவரங்கம் அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இராமானுஜர் திருவரங்கம் வந்தாரா என்பதை மேற்கொண்டு வரும் பதிவுகள் மூலம் அறியலாம்.



கே:−27. இராமானுஜரின் வேதாந்த குருவான யாதவப்ரகாசர் கூறிய உபநிஷத் அர்த்தங்களை, இராமானுஜர் அப்படியே ஏற்றுக்கொண்டாரா?

விடை:− இல்லை.. சாஸ்திரம், சூத்திரம் எனச் சர்வமும் கற்று, வாதத்தைவிடப் பிடிவாதத்தில் அதிக நம்பிக்கையுடைய அவரது குரு, தமது பாண்டித்யத்தாலும், சந்தி பிரிக்கும் சாமர்த்தியத்தாலும் மந்திரப் பொருள்களுக்குத் தவறான மாற்றுப் பொருள் கூறும்போது அதனை இராமானுஜர் மறுத்தார். அத்தோடு குருவிடம் அவற்றின் உண்மைப் பொருள்களைத் துணிவுடனும் சொன்னார்.

கே.28:− இளையாழ்வார் இராமானுஜருக்கும் அவரது வேதாந்த குருவுக்கும் இடையே நடைபெற்ற முதல் வாதம் என்ன? அதனைக் குரு ஒத்துக்கொண்டாரா?

விடை:− ஒருநாள், தைத்ரிய உபநிஷத்தில் வரும் வேத வாக்யமான, "ஸத்யம், ஞானம், அனந்தம், ப்ரம்ம" என்பதற்குப் பொருள் கூறும்பொழுது, "ஸத்யம், ஞானம், அனந்தம்" ஆகியவை ப்ரம்மம் என்று, யாதவப்ரகாசர் தவறாகப் பொருள் கூற, இளையாழ்வார் இராமானுஜர் அதனை ஏற்காது, "ஸத்யம், ஞானம், அனந்தம்" ஆகியவை ப்ரம்மத்தின் பண்புகள். அவையே ப்ரம்மம் ஆகா. ஸத்யம், ஞானம், அனந்தம் ஆகிய பண்புகளை உடைய ப்ரம்மம் என்று பொருள் கொள்ள வேண்டும்" என்றார்.

குருவும் வேறு வழியின்றி அதனை ஏற்றுக்கொண்டார்.

கே.29:− இராமானுசருக்கும் அவரது வேதாந்த குருவுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது வாதம் என்ன? அதனைக் குரு மறுத்தாரா?

விடை:− மற்றொரு நாள், சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் வேத வாக்யமான "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி" என்பதற்குப் பொருள் கூறும் போது, குரு யாதவப்ரகாசர், "குரங்கின் பின்புறத்தை ஒத்த கண்களை உடைய நாராயணன்" என்று தவறாகப் பொருள் கூற, அதனைக் கேட்டு கண்ணீர் வடித்த இராமானுஜர், "சூரிய மண்டலத்தில் உறையும் புருஷனான ஶ்ரீமந் நாராயணனின் கண்கள் அந்தச் சூரியனின் கிரணங்களால் அலர்விக்கப்படும் சிவந்த தாமரை மலர்களை ஒத்திருக்கின்றன" என்று வினயத்துடன் பொருள் கூறினார்.

அதனையும் குருவால் மறுக்க இயலவில்லை.

கே.30:− இராமானுஜருக்கும் குருவுக்கும் இடையே நடந்த வாதங்களின் தொடர்ச்சியாய் என்ன நடந்தது?

விடை:− சீடரின் ஞானத்தைக் கண்டு குருவுக்குப் பொறாமை வந்தது. உள்ளத்தில் சீடர் மீது பகை உணர்வு தோன்றியது. சீடர் இளையாழ்வார் இராமானுஜரால் தமது அத்வைத வாதங்கள் அடியோடு அழிந்துவிடும் என எண்ணி, அவரைக் காசி யாத்திரைக்கு அழைத்;துச் சென்று, கங்கையில் "மணிகர்ணிகா" கட்டத்தில் மூழ்கடித்துக் கொல்ல, சில அந்தரங்கச் சீடர்களுடன் சேர்ந்து தனிமையில் திட்டமிட்டார் யாதவப்ரகாசர்.

கே.31:− இராமானுஜர் குரு யாதவப் பிரகாசருடன் காசி யாத்திரை புறப்பட்ட போது, அவருக்கு வயது என்ன?

விடை:− 18 வயது.

கே.32:− இளையாழ்வார் இராமானுஜருடன் காசி யாத்திரைக்கு வந்த உறவினர் யார்?

விடை:− யாதவப்ரகாசரிடம் வேதம் பயின்றுவந்த இராமானுஜரின் தம்பியும், சிற்றன்னையின் குமாரருமான கோவிந்தன்.

கே.33:− காசி யாத்திரையில் விந்திய மலைச் சாரலில் ஒரு இரவில் நடந்த முக்கிய நிகழ்ச்சி என்ன?

விடை:− இராமானுஜரின் தம்பி கோவிந்தனுக்குக் குருவின் சதித் திட்டம் தெரிந்துவிட்டது. பதறிப்போன அவர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது, இராமானுஜரிடம் மிகவும் இரகசியமாக அதனைத் தெரிவித்து அவரைத் தப்பிச் செல்லுமாறு செய்தார்.

கே.34:− விந்திய மலைச் சாரலில் தனியே திக்குத் தெரியாது பயணித்த இளையாழ்வார் இராமானுஜர் யாரால் காப்பாற்றப்பட்டார்? எந்த ரூபத்தில்?

விடை:− காஞ்சிப் பேரருளாளன் − பெருந்தேவித்தாயார் ஆகிய திவ்ய தம்பதிகளால்,  இராமானுஜர் காப்பாற்றப்பட்டார்.
அவர்கள் வேடன், வேடுவச்சி உருவத்தில் வந்தனர்.

கே.35:− அவர்கள் இராமானுஜரின் பெருமையை எவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டனர்?

விடை:− மனைவியாக வந்தவர், "இப்படிப்பட்ட புத்திரன் நமக்கில்லையே!.."என்று ஏக்கத்துடன் கூறியும், கணவனாக வந்தவர், "இப்படிப்பட்ட புத்திரன் இதுவரை உலகில் பிறக்கவில்லை, இனிமேலும் பிறக்க மாட்டான்!" என்று கூறியும், இராமானுஜரின் பெருமையை வெளிப்படுத்தினர்.

கே.36:− அதில் பெண்ணாக வந்தவர், தமது கணவரிடம் வேண்டியது என்ன?
அதனைக் கேட்டுக் கொண்டிருந்த இளையாழ்வார் இராமானுஜர், அந்தப் பெண்ணின் வேண்டுகோளை எவ்வாறு நிறைவேற்றினார்?

விடை:−  அந்தப் பெண், தமது கணவரிடம் தாகத்திற்கு அருந்துவதற்காகத் தண்ணீரை வேண்டினாள்.

இராமானுஜர், அந்தப் பெண்ணின் கணவர் கூறியபடி, சாலையோரம் இருந்த கிணற்றிலிருந்து, பொழுது புலருமுன்னர், தண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்து உதவினார்.

கே.37:− அந்தக் கிணற்றுக்குப் பெயர் என்ன? அந்தக் கிணறு எங்கே உள்ளது?

விடை:−அந்தக் கிணற்றின் பெயர், "சாலைக் கிணறு".
அது காஞ்சியிலிருந்து சுமார் 7கி.மீ. தொலைவில் உள்ள செவிலிமேடு அருகே உள்ளது.

(வளரும்..)

இன்னும் அனுபவிப்போம்....

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

கருத்துகள் இல்லை: