செவ்வாய், 17 செப்டம்பர், 2019

பசு (கோமாதா)

மேற்கத்திய வரலாற்று இயல் காலத்துக்கும் முன்பிருந்தே சனாதன தர்மம் என்ற இந்துமதம் எல்லாம் இறை மயம் என்றும் தத்வமசி அதாவது நீயும் பரம் பொருளே என்றும் அத்வைதம் எல்லாம் ஒன்றே அதாவது, பரம் பொருளின்றி வேறொன்றும் இல்லை என்றும் காண்பவை எல்லாம் கடவுளின் எண்ணற்ற தோற்றங்களே என்றும் கூறி வந்திருக்கின்றது. இந்நிலையில் மிருக இனங்களில், பசுவையும், யானையையும், ஊர்வனவற்றில் நாகப் பாம்பையும், தாவர இனத்தில் அரசு, வேம்பு போன்ற சிலவற்றை மட்டும், மிகச் சிறப்புடையதாக, நம்மிலும் மேலாக, தெய்வங்களாக தொன்று தொட்டு வழிபட்டு வருவதும் அவ்வழக்கத்தை தொடர்ந்திட வேண்டும் என்று கூறுவதும். பாரபட்சமற்ற செயல் தானா? நியாயமான பரிந்துரை தானா?

இந்துக்கள் பசுவையும், யானையையும், பாம்பையும், வேம்பையும் சிறப்புடையதாகப் போற்றி வந்திருக்கின்றனரே தவிர பிறவற்றை இழிவு படுத்தவுமில்லை அழிக்கச் சொல்லவுமில்லை. எந்த சிற்றின உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்றும் அவற்றைப் போற்றிப் பேண வேண்டும் என்றுமே இந்துக்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். திருக்குளங்களில் மீன்களுக்கு இரை போடுவதும் ஈ, எறும்பு, எலி போன்றவற்றுக்கு உணவாக வாசலில், வாயிற்படிகளில் பச்சரிசி மாக்கோலம் போடுவதும். புற்றுகளில், பாம்புக்குப் பாலும், முட்டையும் வைப்பதும் அன்றாடம், பகலில், காக்கைக்கு  உணவளிப்பதும், இரவு வேளையில் நாய்களுக்கு உணவளிப்பதும், பறவைகளுக்கு உணவாக நெற்கதிர்களைத் தொங்க விடுவதும் இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இதோடு சிற்றினங்களை நமக்குச் சமமாக மட்டுமின்றி மேலானவையாகவும் நாம் கருத வேண்டும் என்பதற்காக பெரும்பாலான தெய்வங்களின் வாகனங்கள் மிருகங்களாகவே பறவைகளாகவே இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளன.

விநாயகன் யானைத்தலையன், அவன் ஆட்கொண்டு அமர்ந்திருப்பது மூஞ்சுறு, தம்பி முருகன் மகிழ்ந்து வருவது மயிலில், தகப்பன் சிவன் அணிந்திருப்பது நாகம், மாமன் திருமால் படுப்பது பாம்பணையில், அவன் ஏறும் வாகனம் கருடன், எடுத்த உருவங்கள் மீனும், பன்றியும், சிங்கமும் தர்மதேவன் வருவது எருமையின் மீது சனீஸ்வரனை சுமப்பது காகம் இப்படி நூற்றக் கணக்காக பட்டியலிடலாம். மேலும் பல இனங்களின் நிலையை ஆய்ந்து சிலவற்றை உதாரணமாக பூரான், தாய்க்கு ஒரு பிள்ளை என்பதற்காக கொல்லப்படக்கூடாது என்றும் சட்டம் இருக்கிறது.

கோமாதா பின் தொடர்வாள் பகுதி இரண்டு

கருத்துகள் இல்லை: