செவ்வாய், 17 செப்டம்பர், 2019

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
    உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
    சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
    அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
    தொண்டனேன் விளம்புமா விளம்பே

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

மதிமலி புரிசை மாடக் கூடற்
    பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
    கன்னம் பயில்பொழில் ஆல வாயின்
    மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
    பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்

    கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
    குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
    செருமா உகைக்கும் சேரலன் காண்க
    பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
    தன்போல் என்பால் அன்பன் தன்பாற்

    காண்பது கருதிப் போந்தனன்
    மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.

கருத்துகள் இல்லை: