செவ்வாய், 17 செப்டம்பர், 2019

பஞ்சாங்கம் என்பது என்ன?

நக்ஷத்திரம், திதி, வாரம், கரணம், யோகம் என்னும் பஞ்ச அங்கங்களைக் கொண்டது தான் பஞ்சாங்கம். பழைய புராதன பழக்கவழக்கங்களில் பஞ்சாங்கம் பார்ப்பது மிக முக்கியமான  ஒன்று என்பது எல்லோரும் அறிந்தது தான். இது ரிஷிகளாலும், ஞானிகளாலும் கொண்டுவரப்பட்டவை. கிரக அசைவுகளையும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் எளிதாக தெரிந்து கொள்ள ஜோதிடர்களுக்கு உதவும் ஒரு கை ஏடு என்றே சொல்லலாம். இதற்கு முன்னால் இன்றைய அறிவியலால் நிற்கக் கூட இயலாது. மழை வரும் காலம் கிரகண காலம் என்று எல்லாமே மிகத் துல்லியமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே நமது முன்னோர்களால் கணித்துத் தரப்பட்ட பரிசு தான் இந்த பஞ்சாங்கம். ஆகவே தினமும் எல்லோரும் பஞ்சாங்கம் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை: