சனி, 11 ஜூலை, 2020

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் - இதன் உள்ளுறை அறிந்தோர் மிகச் சிலரே.
இது கணபதி துதி மட்டுமல்ல. (காய) கற்ப மூலிகைகளை விளக்கும் பாடலுமாகும். ஔவையார் இயற்றிய இப்பாடலின் நுண் பொருள் வருமாறு :-
பூ = தாமரை
மேனி = குப்பைமேனி
தும்பி = கவிழ் தும்பை
கையான் = கையான்தகரை / (மஞ்சள் பூவுடைய) கரிசலாங்கண்ணி / பொற்றலைக் கரிப்பான்
பாதம் = சிறு செருப்படை

இவற்றை முறைப்படிப் பயன்படுத்தினால் வாக்குவன்மை, மனவுறுதி, லக்ஷ்மி கடாக்ஷம், அரோக த்ருட காத்ரம் போன்ற பலன்கள் ஏற்படும்.

"தும்பிக்கையான் பாதம்" என்பதிலுள்ள சொல்லாடல் தான் எத்தகையது! அபாரம்!!
விளக்கம்.
ஸ்ரீ.விஸ்வநாத் தாஸ் குருஜி. சென்னை.
@⁨Vishwanath Das⁩

கருத்துகள் இல்லை: