ஞாயிறு, 31 மே, 2020

🙏 ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏

சபரிமலை மேல்சாந்தி A K சுதீர் நம்பூதிரி அவர்களின் பதிவு ......

கலியுகவரதன் கண்கண்ட தெய்வம் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் பக்தர்களுக்கு,  சன்னிதானத்தில் எனது பூஜை நேரத்தில் உதித்த சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க நமது கலியுகவரதனாம் ஐயப்பசாமியின் சன்னிதியில் தினமும் ஆராதித்து வேண்டி வருகிறேன்.

இந்த கலியுகத்தை கொரோனா பேரிடரில் இருந்து காப்பாற்ற "#ஸ்வாமியே #சரணம் #ஐயப்பா " எனும் நாம ஜெபமே ஒரே சிறந்த வழி....

ஜூன் 01ம் நாளானது, நமது சபரிமலை சன்னிதியில் கலியுகவரதன் அய்யப்பன் பிரதிஷ்டை தினமாகும். ஆகையால் வருகின்ற 01 ஜூன் 2020 முதல், உலகெங்கிலும் உள்ள அய்யப்ப பக்தர்களாகிய நாம் அனைவரும் தொடர்ந்து #41நாட்கள் , சந்தியா வேலை எனப்படும் மாலை 6:30 முதல் 07:00 மணி வரை உங்களது இல்லங்களிலோ, ஆலயங்களிலோ நிலை விளக்கின் முன் நின்று, நமது மணிகண்டனின் திருநாமங்களான சரண மந்திரங்களை உச்சரித்து, மனமுருகி வேண்டிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறாக 9 லட்சம் முதல் 90 லட்சங்களான சரண மந்திரங்களை ஒரே நேரத்தில் உச்சரிக்கும் பொழுது, நமது அனைவரின் மனதின் உள்ள கொடிய நோயின் பயத்தையும், அதன் ஆற்றலையும் அறவே ஒழிக்கும் சக்தி இப்புவியினில் உருவாகிறது.

இக்கொடிய நோயிடம் இருந்து நம்மை காக்க போராடும் அனைவருக்காகவும் இதை கனிவுடன் செய்வோமாக......

தயவு கூர்ந்து இதை உலகெங்கிலும் உள்ள அனைத்து அய்யப்ப பக்தர்களுக்கும் தெரிவித்து, ஐயனின் அன்பிற்கும் அருளிற்கும் பாத்திரமாகும்படி கனிவுடன் கேட்டு கொள்கிறேன்....

இங்ஙனம் :
பிரம்மஸ்ரீ A K சுதீர் நம்பூதிரி,
சபரிமலை மேல்சாந்தி

கருத்துகள் இல்லை: