ஞாயிறு, 31 மே, 2020

பெரியவா சரணம்.

வருடத்திற்கு ஒரு முறையேனும் குலதெய்வத்தின் சன்னதிக்குச் சென்று ப்ரார்த்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள நாம் தவறாமல் இயன்றபோதெல்லாம் நம் மாதா-பிதா-குரு-தெய்வமான ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் அதிஷ்டானத்துச் சென்று வருவதும் அவசியமானதாயிற்றே!

நம்மில் பல பேர்களுக்கு அதிஷ்டானம் எங்கு அமைந்திருக்கின்றது என்பது தெரியாமற்கூட இருக்க வாய்ப்புண்டு என்பதாலே இன்றைய குருவருட்பாவினைப் பகிர்கையில் காஞ்சி ஸ்ரீமஹாஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீபுதுபெரியவா அதிஷ்டான தரிசனங்களையும் பகிர்கின்றேன்.  அதோடு கூட நம்பாத்து ஸ்ரீஉம்மாச்சீயின் விக்ரஹ தரிசனமும் கூட.

காஞ்சிபுரத்தில், சாலை தெருவில் உள்ள ஸ்ரீஆதிசங்கர பகவத்பாத பரம்பரகத  மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஸ்ரீமட ஸமஸ்தானத்திலே சாக்ஷாத் நம் பரமேஸ்வர ஸ்வரூபியான ஸ்ரீமஹாஸ்வாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. அங்கேயே அடுத்ததாக வீற்றிருக்கின்றார் ஸ்ரீபுதுபெரியவாளும். அந்த தரிசனமே இங்கே பகிரப்பட்டும் உள்ளது.

சங்கரம் போற்றி!

ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர...

#குருவருட்பா

அஞ்சுகத் தன்னருள் அம்பிகை அருகென
        அம்புலி தீர்த்தமும் சிகைநிரப்பி
செஞ்சடை வாகீசன் திருவருள் உருவென
        செகத்குரு எனவேகி வந்தோனை
மஞ்சுள வரதனை ஞானியர் தலைவனை
        மனதினுள் தொழுதிட நினைந்தேங்கி
காஞ்சிநல் பொக்கிஷம் மேவுநற் சன்னதி
        அண்டியே தரிசித்தும் மகிழ்வோமே!

ஆம்! இயன்றபோதெல்லாம் ஐயன் ஆனந்த வரதன் அவ்யாஜ கருணாமுர்த்தி அண்டினோர்க்கெல்லாம் வரந்தரும் அய்ஹ்புத திருப்பதியாம் கச்சிநகர் காமகோடித் திருப்பீடத்திலே அமைந்துள்ள அன்னவனின் அதிஷ்டானத்திற்குச் சென்று, குருநாதர்களின் சன்னதிகளை  பன்னிரு (12) பிரதட்சிணமும் (வலமும் செய்து நான்கு (4) நமஸ்காரங்களும் செய்வோமே!

நம்பி வந்தோர்க்கெல்லாம் நலம்பயக்கும் அம்மையப்பனின் அருளாலே நல்வாழ்விலே விளங்கச் செய்வோமே! குருவருள் குலத்தினை மட்டுமல்லாமல் குவலயத்தையே காக்குமன்றோ!

செய்வோமா, உறவுகளே!

கோவிட் 19 கொராணா கிருமியானது துன்புறுத்துகின்ற காலம் இது. நம்மால் இயன்றளவு கஷ்டப்படுபவர்களுக்கு உதவிகளைச் செய்வோம். அதுவே நம் ஆசார்யர்கலின் அருளோடு ஜகன்மாதா - ஜகத்பிதாவின் அருளையும் கூட பெற்றுத் தரும். உலக மக்கள் எல்லோருக்காகவுமாக ப்ரார்த்தனைகள் செய்வோம்! ஜகத்குரு நம்மை ரக்ஷிப்பார் என்பது சத்தியம்.

குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.

கருத்துகள் இல்லை: