ஞாயிறு, 31 மே, 2020

வேதம் ஒரு புனிதமான சொல். இந்த சொல்லை உச்சரிக்க்கூட நமக்கு தகுதி இருக்கிறதா? என்பதை நாம் ஒவ்வொருவரும் அவரவர் மனதை தொட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முதலில் வேதம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் "அ" னாவிலே இருக்கிறோம்.

வேதம் என்றால் மந்திரமா?   வேத ஹோமங்களா? பாடல்களா? செய்யுளா, வாய்ப்பாடா உரைநடையா?  என்னவென்றே தெரியாமல் பீடு நடை போடுகிறோம்.

வேதம் என்றால் " அறிவு" என்று மட்டும் யாரோ சொல்ல கேட்டுள்ளோம்.

சாதாரண அறிவா அது. ஞானம் என்னும் களஞ்ஜியம் அப்பா அது.

அந்த ஞானத்தை நாம் எளிதில் எட்டிப் பிடித்திடலாம் பிடித்துவிட்டோம் என்பது மிகவும் எள்ளி நகையாடும் செயலாகும்.

அப்பேர்ப்பட்ட வேத ரிஷியான பாரத்வாஜரே ஒரு சிறு கல் அளவுதான் வேதத்தை ஏற்றிருக்கிறார் என வேதம் கூறுகிறது.

மந்திரங்கள் சரியானபடி சரியான ஏற்ற இறக்கங்களோடு சரியான நேரத்தில் சரியான நோக்கத்திற்காக சரியானபடி சொல்லப்பட்டால் அந்த மந்த்ரங்கள் அனைவருக்கும் பலித்தமாகும்.

உண்மை பேசுதல் பொறாமை இல்லாதிருத்தல் பிறர் சொத்துக்கு ஆசை படாமல் இருத்தல் எல்லோரையும் சமமாக பாவித்தல் திருடாமை பிறருக்கு உதவி செய்தல் பொரறுமை போன்ற  குணங்கள் இருந்தால்தான் ஒருவர் சொல்லும் மந்த்ரங்கள் பலித்தமாகும்.

வேத ரிஷிகள் தங்களின் பாடல்களை தங்களின் ஞானத்தால் மந்திரங்களாக  மாற்றி  நமக்கு நல்ல ஒளி என்னும் பாதையை காட்டி சென்றார்கள்.

ஆனால் நாம் அவர்களுடைய மந்த்ரங்ஙளை பாடல்களாக மாற்றி நமது பார்வையினை இழந்துவிட்டிருக்கிறோம்.

இது அவர்களின் தவறல்ல. நாம் நமது வேதத்தைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ளாதே அடிப்படை காரணமாகும்.

ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நமது செயலுக்கு விளக்கம் சொல்லி சமாதானம் செய்து கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: