செவ்வாய், 18 செப்டம்பர், 2018

தியாகராஜர் கீர்த்தனை கேட்டால் ஆடாத மனமும் ஆடுமே! ஆனந்த கீதம் பாடுமே!

இசைக்கு மயங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? சிலர் பாடினால், நம் தலை தானாகவே ஆடுகிறது. இப்படிப்பட்ட உயிரோட்டமுள்ள பாடல்களை அக்காலம் முதலே நம்மவர்கள் தந்துள்ளனர். அதிலும் இசைத்தென்றல் வீசிய நாதபிரும்மம் தியாகராஜ சுவாமிகளின் தெலுங்கு கீர்த்தனைகளைக் கேட்டால் ஆடாத மனமும் ஆடும். திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா ஜனவரி 24, பகுளபஞ்சமியன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தியாகராஜரின் பிரபலமான இரண்டு கீர்த்தனைகளை பொருளுடன் தந்திருக்கிறோம். பாடுங்கள், மகிழுங்கள்.

கீர்த்தனை-1

மறி மறி நின்னே மொறலிட நீ
மனஸுன தய ராது(மறி)
கரி மொற லினி ஸரகுன சன நீகு
காரண மேமி ஸர்வாந்தர்யாமி(மறி)
கருணதோ த்ருவுனி கெதுட நில்சின
கத வின்னானய்யா
ஸுரரிபு தனயுனிகை நர ம்ருகமௌ
ஸுசன லேமய்யா
மறசி யுன்ன வனசருனி ப்ரோசின
மஹிம தெலுபவய்யா
தரனு வெலயு த்யாகராஜ ஸன்னுத
தரமுகாதிக நே வினனய்ய(மறி)

பொருள்: மீண்டும் மீண்டும் நான் உன்னிடம் வேண்டியும் உன் மனதில் கருணை பிறக்கவில்லையே ஐயா! எங்கும் நிறைந்த இறைவா! கஜேந்திரன் என்னும் யானையின் கதறலைக் கேட்டு நீ விரைந்து சென்ற காரணம் என்ன ஐயனே! இரக்கத்துடன் நீ துருவன் எதிரில் தோன்றிய கதையைக் கேட்கிறேன் சுவாமி! தேவர்களுக்கு எதிரான இரணியனின் மகன் பிரகலாதனுக்காக நீ நரசிம்மமாக மாறியதன் காரணம் தான் என்ன? எல்லாவற்றையும் இழந்திருந்த சுக்ரீவனை நீ காப்பாற்றியதன் மகிமையைச் சொல் ஐயனே! தியாகராஜன் வணங்கும் இறைவனே! இனியும் நான் பொறுக்கமாட்டேன். ஐயனே! நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்.

கீர்த்தனை-2

சாந்தமு லேக ஸெளக்யமு லேது
ஸாரஸ தள நயன(சாந்தமு)
தாந்துநிகைன வேதாந்து நிகைன (சாந்தமு)
தார ஸுதுலு தன தான்யமு லுண்டின
ஸாரெகு ஜபதப ஸம்பத் கல்கின (சாந்தமு)
யாகாதி கர்மமு லன்னியு ஸேஸின
பாகுக ஸகல ஹ்ருத் பாவமு தெலிஸின(சாந்தமு)
ஆகம சாஸ்த்ரமு லன்னியு ஜதிவின
பாகவதுலனுசு பாகுக பேரைன(சாந்தமு)
ராஜாதி ராஜ ஸ்ரீராகவ த்யாக
ராஜவினுத ஸாது ரக்ஷக தனகுப(சாந்தமு)

பொருள்: தாமரைக் கண்களை உடைய திருமாலே! மனதில் அமைதி இல்லாவிட்டால் சுகம் இல்லை. புலன்களை அடக்கிய துறவியானாலும், மனைவி மக்களுடன் வாழும் இல்லறத்தான் என்றாலும், எந்நேரமும் ஜபம் தியானம் செய்பவனாக இருந்தாலும், மனதில் அமைதி இல்லாவிட்டால் என்ன பயன்? யாகம் உள்ளிட்ட வழிபாடுகளைச் செய்தாலும், அனைவரின் உள்ளக்கருத்துக்களை அறிந்திருந்தாலும், வேத சாஸ்திரங்களைக் கற்று பாகவதர் என்ற புகழ் பெற்றிருந்தாலும் சாந்தம் இல்லாவிட்டால் பயனில்லை. மன்னாதி மன்னரான ஸ்ரீராமனே! தியாகராஜனால் வணங்கப்படும் மூர்த்தியே! நல்லவர்களை பாதுகாப்பவனே! சாந்தமில்லாவிட்டால் ஏது சுகம்?

கருத்துகள் இல்லை: