செவ்வாய், 18 செப்டம்பர், 2018

சிவபிரானின் வீரட்டானத் தலங்கள்

சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். வீரஸ்தானம் என்பதுவே வீரட்டானம் என்றாயிற்று. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.

1. திருக்கண்டியூர்   : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்
2. திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்
3. திருவதிகை         : திரிபுரத்தை எரித்த இடம்
4. திருப்பறியலூர்  : தக்கன் தலையைத் தடிந்த தலம்
5. திருவிற்குடி        : சலந்தராசுரனை வதைத்த தலம்
6. திருவழுவூர்       : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்
7. திருக்குறுக்கை    : மன்மதனை எரித்த தலம்
8. திருக்கடவூர்       : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.

கருத்துகள் இல்லை: