செவ்வாய், 18 செப்டம்பர், 2018

உச்சி காலத்தில் வழிபட வேண்டிய கோயில்

மூல்தான்  பாகிஸ்தானில் உள்ள இத்திருத்தலத்தை மூல ஸ்தானம் என்றும் கூறுவர். பாகிஸ்தானில் சீனாப்(செனாப் என்றும் கூறுவர்) நதிக்கரையில் உள்ள இந்த சூரியன் கோயில், உச்சி காலத்தைக் குறிக்க எழுப்பப்பட்ட ஆலயம் என்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இங்கு குறிக்கப்பட்டடுள்ள சீனாப் நதியே, முற்காலத்தில் சந்திரபாகா எனும் நதியாக விளங்கி வந்ததால், இத்திருத்தலம் சாம்பபுரம் என்றும் கருதப்படுகிறது. பவிஷ்ய புராணமும் இத்திருத்தலத்தை சாம்பபுரம் என்று கூறுகிறது. முந்நூறு அடி உயரமுள்ள இந்த சூரியன் கோயிலில், சூரியபகவான் மனித உருவில் தமது தொடையில் கைவைத்து அமர்ந்த நிலையில் எழுந்தருளியுள்ளார். இங்கு தங்கத்தால் ஆன சூரிய விக்கிரகம் ஒன்று இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இக்கோயிலும் பகவான் கிருஷ்ணரின் மகன் சாம்பனால், தன் தொழுநோயை சூரியபகவான் நீக்கியதற்காக எழுப்பப்பட்டதாகப் புராணம் கூறுகிறது.

கருத்துகள் இல்லை: