செவ்வாய், 18 செப்டம்பர், 2018

தியாகராஜர்!

தியாகராஜர் மன்முறுகித் தொழுது வணங்கும் ராமர், சீதை பெயர்களே அவருடைய பெற்றோருக்கும் இருந்தது தான் அதிசயம்.'சீதம்ம மாயம்ம,  ஸ்ரீராமுடு நாதன்றி' என்ற பாடலில், சீதம்மா என் தாய், ஸ்ரீராமர் என் தந்தை என்ற பொருள் பட அவர் பாடியிருப்பது, இரட்டை அர்த்ததில் அழைத்தது.

சரபொஜி மகாராஜா தன்னைப் போற்றிப்பாட அழைத்த போது போகாத தியாகராஜர்,'மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா? என்ற அர்த்தம் கொண்ட' நிதி சால சுகமா' கீர்த்தனையைப் பாடினார். கோபமடைந்த அவரது தமையனார், தியாகராஜர் பூஜித்து வந்த சீதா, ராம, லஷ்மண விக்ரகங்களைத் தூக்கி காவிரியில் எறிந்து விட்டார். அதில் வேதனையுற்ற தியாகராஜர் 'உன்னை எங்கெல்லாம் தேடுவேன்?' என்ற வேதனை ஒலிக்கும் தே' நெந்து வெத குதுரா'கீர்த்தனையைப் பாடினார். பின்னர் ராமபிரான் அருளால் அந்த விக்ரகங்களைக் கண்டு பிடித்து மகிழ்ச்சியடைந்தார்.

கருத்துகள் இல்லை: