சனி, 12 அக்டோபர், 2013

படலம் 73: சவுக்யகர்ம விதி

73வது படலத்தில் சவுக்யகர்ம விதி அல்லது சுத்த நிருத்த விதியோ கூறப்படுகிறது. முதலில் பிரதிஷ்டை உத்ஸவம் முதலிய கர்மாக்களில் முதலில் அவ்வாறே நித்யோத்ஸவத்தின் முடிவில் சவுக்ய கர்மவிதி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு சவுக்ய கர்மமாகவோ அல்லது சுத்த நிருத்தமோ ருத்திர கன்னிகைகளால் செய்ய வேண்டும் என கூறி ருத்திர கன்னிகை உற்பத்தி இரண்டு விதமாக கூறப்படுகிறது. ருத்ரனால் இந்திரன் பிரதிக்காக சிருஷ்டிக்கப் பட்டதில் அப்ஸரசுகளின் குலத்தில் உண்டானவர்கள் முதலாவதான ருத்திர கன்னிகைகள் ஆவார்கள். மற்றவர்கள் தாருகாவனத்தில் விளையாடுவதற்காக சுந்தரமான உருவத்துடன் சஞ்சாரம் செய்த பகவான், தேவனான சிவனின் அழகினால் மயக்கம் அடைந்த முனி பத்தினிகளுக்கு பரமேஸ்வரனால் பார்த்த மாத்திரத்தினாலே கர்பத்தை அடைந்தவர்களில் உண்டான சந்ததிகள் ஆவர். அவர்களில் இரண்டு வித ருத்ரகன்னிகைகளுக்கும் பரதசாஸ்திரத்தில் கூறி உள்ள லக்ஷணத்துடன் கூடிய சுத்த நிருத்த ஆசரண ரூபமான அர்ச்சனையே பிழைப்பு என்றும் அவர்களின் பிரார்த்தனையை அனுசரித்து பகவான் ஆன சிவனால் கூறப்பட்டது. பிறகு சந்தோஷம் அடைந்த சிவனாலேயே இரண்டு விதமான ருத்திர கன்னிகைகளுக்கும் தீøக்ஷ செய்யப்பட்டது. பிறகு நந்தியை கூப்பிட்டு அவன் கையிலுள்ள வேத்திரம் என்ற தண்டத்தினால் ஸ்பர்சிக்கப்பட்டார்கள். பிறகு அந்த குலத்தில் உண்டான நத்தினி என்னும் பெயர் உள்ளவர்கள் பூமியில் வியவஹாரம் செய்யப்படுகிறார்கள் என்று ருத்திர கன்னிகையின் உற்பத்தியும் அவர்களின் தொழிலும் கூறப்படுகின்றன. பிறகு சுத்த நிருத்தம் ருத்திர கன்னிகைகளால் பஞ்ச ஆசார்யர்களுடன் கூடி நர்தக, மர்த்தக, காயக, வாம்சிக மவுர்விக என்று 5 ஆசார்யர்களின் பெயர் கூறப்படுகிறது. பிறகு நாட்ய வேதத்தால் சிரமம் அடைந்தவர்களும் (நாட்டிய வேதத்தை அறிந்தவர்களும்) நடிப்புடன் கூடிய பாட்டு நாட்டியம் இவைகளை அறிந்தவர்களும் சிரேஷ்டமானவர்களும் நவநாட்யங்களை அறிந்தவர்களும் குற்றமில்லா மனதை உடையவர்களும் சிவ பக்தர்களுமான சதுர்வர்ண அனுலோம ஜாதியில் பிறந்தவர்கள் பஞ்சாசாரியன் என கூறி அவர்களின் லக்ஷணம் கூறப்படுகின்றன.

பிறகு அவர்களின் தனித்தனி லக்ஷணமும் நாட்டிய காலத்தில் அவர்களின் ஸ்தானமும் அங்கு செய்ய வேண்டிய கர்மாக்களும் கூறப்படுகின்றன. முன்பே ருத்திர கன்னிகைகள் தீட்சிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் பிறகு பிறப்பதால் மறுபடியும் தீøக்ஷ செய்யப்படவேண்டும். அந்த தீøக்ஷயும் சுருக்கமாக கூறப்படுகிறது என்று கூறி ருத்திர கன்னிகா தீக்ஷõ முறை கூறப்படுகிறது. பிறகு ருத்திர கன்னிகைகள் 5 வயதுக் மேற்பட்டு 50 வயதுக்கு உட்பட்டவர்கள் தீøக்ஷ கர்மாக்களில் யோக்யர்கள். மற்றவர்கள் யோக்யர்கள் இல்லை. பிறகு சுத்த நிருத்தத்திற்காக மண்டபம் அமைக்கும் முறை சொல்லப்படுகிறது. பிறகு மண்டப மத்தியில் நடேச பூஜை முறை, பஞ்சாக்ஷரம் முதலான மந்திரத்தால் ஜபித்து சங்க தீர்த்தத்தால் ருத்ரகன்னிகைகளுக்கு பிரோக்ஷணம் செய்யும் முறையும், மண்டபத்தில் தண்டத்தை ஸ்தாபிக்கும் முறை, நந்தி பூஜா முறை பிறகு குருவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தட்சிணைகளுடன் கூறி அந்த ஆசார்யனாலோ அல்லது சிஷ்யனாலோ வேத்திர தண்டத்தை ருத்ரகன்னிகளின் சிரசில் வைக்கும் முறையும் அவர்களுக்கு பெயர்வைக்கும் முறையும், புஷ்பாஞ்சலி தானம் செய்யும் முறையும், பிறகு சிவசன்னதியில் பரதரரால் கூறப்பட்ட பஞ்சபதி என்று பெயர் உள்ள நாட்டிய முறையும் ஆகிய இந்த விஷயங்கள் ருத்திர கன்னிகையின் தீøக்ஷ விதியில் விளக்கப்படுகின்றன. பிறகு ஐந்து ஆசார்யர்களுக்கும் செய்ய வேண்டிய தீக்ஷõவிதி கூறப்படுகிறது. ஆசார்யன் தன்னுடைய கிரஹத்திலோ ருத்ர கன்னிகைகளின் ஆசார்ய கிரஹத்திலோ சுத்தியுள்ள இடத்தில் மத்ய பாகத்தில் பரமேஸ்வரனை பரிவார ஸஹிதமாக பூஜித்து அதற்கு முன்னதாக ஸ்வர்ணம் வஸ்திரம் இவைகளுடன் கூடிய கும்பத்தை வைத்து, அந்த ஜலத்தை பஞ்சாக்ஷர மந்திரம் ஜபிக்கவேண்டும். பிறகு ஸ்நானம் செய்து வெள்ளை வஸ்திரம் தரித்த ஆசார்யர்களை கும்பதீர்த்தத்தால் பிரோக்ஷித்து பஞ்சாக்ஷரம் ஜபித்து கூர்சத்தினால் சிரசை ஸ்பரிசிக்கவும் அப்பொழுது கர்ம அதிகாரம் ஏற்படுகிறது என்று பஞ்சாசார்ய தீக்ஷõகர்மா கூறப்படுகிறது. ருத்ர கன்னிகைகளின் நாட்யத்திற்காக நுழையும் முறை கூறப்பட்டு பிறகு குறிப்பிட்ட தினத்திற்கு முன் தினம் அங்குரார்ப் பணம் செய்யவும்.

பிறகு ஆலயத்தை சுற்றி 4 மண்டபம் அமைக்கவும். கிழக்கு முகமாக இரண்டு மண்டபம் அமைக்கவும். மண்டபத்தில் பலிபீட அளவுள்ள பீடம் அமைக்கவும். எல்லா மண்டபத்திலும் ஹோமத்திற்காக குண்டமோ, ஸ்தண்டிலமோ, அமைக்கவும். பிறகு ஆரம்ப தினத்திற்கு முன் பரமேஸ்வரனை பூஜிக்கவும். நான்கு நபர்கள் ஸ்நானம் செய்தவர்களும், எல்லா அவயவ பூஷணம் தரித்தவர்களும் ஸர்வமங்களத்துடனும் ஈசனை நமஸ்கரித்தவர்களும், சாந்தர்களாயும் நியமம் உள்ளவர்களுமான ருத்ரகன்னிகைகளும் அதே லக்ஷணம் உள்ள ஐந்து ஆசார்யர்களும் மண்டபத்தில் அதிவாசம் செய்யப்படவேண்டியவர்கள் என்று பூஜைக்கு முன் தினத்தில் செய்ய வேண்டிய அதிவாச விதி கூறப்படுகிறது. பிறகு மறுதினம் காலையில் செய்யவேண்டிய கிரியைகள் கூறப்படுகின்றன. பிறகு முதலில் ஸஹஸ்ரகலச, ஸ்நபனத்துடன் கூடியதும் பிரபூத ஹவிஸ் நிவேதனம் செய்யப்பட்டதுமான பரமேஸ்வரனை பூஜிக்கவும் என்று ஆலயத்தினுள் பூஜிக்கும் முறை கூறப்படுகிறது. பின்பு மண்டப சம்ஸ்காரத்திற்கு பிறகு மத்யபீட மத்தியில் ஸதாசிவனையோ தேவியுடன் கூடிய நடராசரையோ ஆவரண சஹிதமாக பூஜிக்கவும். பிறகு அங்கு பிரம்மாவை சாங்கமாக பூஜிக்கவும். பிறகு ஆவரண விஷயத்தில் முறையாக நான்கு திக்குகளிலும் நந்தீ பிரம்மா, ஸ்கந்தர், மஹாவிஷ்ணு இவர்களை முதல் ஆவரணத்தில் பூஜிக்கவும். அதற்கு வெளியில் லோகபால ஆவரணமும், லோகபால ஆவரணத்திற்கு வெளியில் ஆயுத ஆவரணமும் பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு கிழக்கு மண்டபத்தில் கவுரியுடன் கூடிய ருத்திரனையும் முன் போல் ஆவரண ஸஹிதம் பூஜிக்கவும். தெற்கு மண்டபத்தில் ஸரஸ்வதியுடன் கூடி பிரம்மாவை லோகபாலகர் முதலான ஆவரணத்துடன் பூஜிக்கவும். மேற்கு மண்டபத்தில் யோகபாலர்களுடன் ஸ்கந்தரை பூஜிக்கவும். வடக்கு மண்டபத்தில் லோகபாலக ஆவரணசஹிதமாக மஹாவிஷ்ணுவை பூஜிக்கவும் என்று பூஜா முறை கூறப்படுகிறது. பிறகு குண்டசம்ஸ்காரம் அக்னி சம்ஸ்காரம் செய்து அந்தந்த இடத்தில் செய்ய வேண்டிய ஹோமம் கூறப்படுகிறது.

பிறகு அரங்கத்தில் ஸ்வாமியை பூஜித்து சுத்த நிருத்தம் செய்யவும். நாட்டிய ஆரம்பத்தில் ஆசார்யனை விசேஷமாக வஸ்திர ஆவரணங்களால் பூஜை செய்யவும், ஐந்து ஆசார்ய ருத்ர கன்னிகைகளின் விஷயத்தில் வஸ்திரம் முதலான பூஷணங்களுடன் கூடியதான கூலி கொடுப்பதை அவர்கள் திருப்தி அடையும் வரை கொடுக்கவும் என கூறப்படுகிறது. இங்கு ருத்ர கன்னிகையும் பஞ்சாசார்யர்களும் முன்பு கூறப்பட்ட தீøக்ஷயினால், தீøக்ஷ செய்யப்படாமல் இருந்தால் முன்பு கூறியபடி நாட்டியம் ஆடவும் என கூறப்படுகிறது. இவ்வாறு ருத்திர கன்னிகைகளின் நாட்டிய பிரவேசத்திற்கு முதலில் நுழையும் கார்ய முறை கூறப்பட்டது. பிறகு நித்யோத்ஸவத்திற்கு பிறகு செய்ய வேண்டி சுத்த நிருத்தம் கூறப்படுகிறது. பிறகு ஸ்நானம் செய்து ஸர்வ அலங்கார பூஷிதமாயும் வெள்ளை மாலை தரித்தவளாயும் உள்ள ருத்ரகன்னிகையோடு அரங்கத்தில் உள்ள பரமேஸ்வரனை பூஜித்து அதற்காக ஸ்லோகத்தில் உள்ள அர்த்தத்தை பாவனையுடன் கூடி சுத்த நிருத்தத்தை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ருத்திரன் இவர்கள் மூன்று சந்திகளுக்கும் அதிபர் என கூறி புஷ்பாஞ்சலி சமயத்தில் சொல்லவேண்டிய மூன்று ஸ்லோகம் கூறப்படுகிறது. அவர்களுக்கு முடிவில் ஸ்தாபனம், பிரோக்ஷணம், பிராயச்சித்தம், உத்ஸவம், ஸ்நபனம், மாச பூஜை ஹோம கர்மா, திவஜாரோஹண காலங்கள், காம்யகர்மா அனுஷ்டிக்கும் முறை தினம் ஆகிய இந்த சமயங்களில் சுத்த நிருத்தம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 73வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே அந்தணர்களே, பிரதிஷ்டை, திருவிழா முதலான நிகழ்ச்சிகளிலும், நித்யோத்ஸவத்தின் முடிவிலும் செய்ய வேண்டிய சவுக்ய கர்மாவை கேளுங்கள்.

2. ருத்ர கன்னிகைகளால் சவுக்ய கர்மா செயற்பாலது. அது இரு வகைப்படும். கவுசிகரின் ப்ரீதிக்காக, ருத்ரன், அப்ஸர ஸ்தீரிகளை படைத்தார்.

3. அந்த அப்ஸர ஸ்தீரிகளின் வெகு நாளைய வம்சமானது ருத்ர கன்னிகை குலமாகும். ப்ரதிலோமர்களால் தொடப்படாதவர்கள் பொது மனிதராக இருப்பார்கள்.

4. அவர்களே ருத்ர கன்னிகைகளாவார்கள், வேறு விதமாகவும் கூறப்படுகிறது. உயர்ந்த அந்தணர்களே, முன்பு தேவதாரு வனத்தில் என்னால் விளையாட்டாக

5. கல்யாண கோலமாக அங்கு பிரவேசித்தேன் அவ்வமயம் அங்குள்ள ரிஷிர பத்னிகள் இமை கொட்டாமல் மயக்கத்துடன் பார்த்து

6. காம வேட்டை உள்ளவர்களாக நழுவிய வஸ்திரம் கேசமுடையவர்களாக ஆனார்கள். அப்பேர்பட்டவர்களை என் கருணையால் பார்த்தேன்.

7. நான் பார்த்த மாத்ரத்தில் குறைவில்லா கர்பமடைந்தார்கள், அவரவர் கர்பத்திலிருந்து உண்டானவர்கள் ருத்ர கன்னிகையராவர்.

8. அவர்கள் யாவரும் ஒன்று கூடி எங்களுக்கு என்ன தொழில் இருக்கிறது என்று கேட்க நான் கூறுகிறேன் கேளுங்கள் என்று சிவனால் கூறப்பட்டது.

9. சவுக்ய ஸஹிதமான என் அர்ச்சனாதி பூஜா சிரேஷ்டமாகும். அந்த சவுக்யம், சுத்த ந்ருத்தம் ஆகும். பரத நாட்டிய விஷயத்தில் அதன் லக்ஷணம் கூறப்பட்டுள்ளது.

10. பிரதி தினமும் என் ப்ரீத்திக்காக சவுக்ய கர்ம பூஜையில் சேர்க்கப்படவேண்டும். அந்த வம்சத்தில் ஜனித்த ஸ்திரீகளால் ஐந்து ஆசார்யனுடன் கூட செய்ய வேண்டும்.

11. இவ்வாறு பூமியில் லீலை செய்ததாக சங்கரனால் கூறப்பட்டதாகும். என்னால் சந்தோஷிக்கப்பட்டு, தீøக்ஷயால் அவர்கள் தீக்ஷிக்கப்பட்டவர்களாவர்.

12. நந்தியை கூப்பிட்டு, கையிலுள்ள தண்டத்தை கொடுத்தார். நந்தியிடமிருந்து எந்த ருத்ர கன்னிகைகளின் சிரஸில் வேத்ரமென்ற, தண்டத்தால் தொடப்பட்டதோ

13. அது முதற்கொண்டு நந்தன் என்ற பெயரால் பூமியில் இருக்கிறார்கள். நந்தி தண்டத்தினால் ஸ்பர்சிக்கப்பட்டவர்கள் சிரோதண்டிநர் எனப்படுகிறார்கள்.

14. அந்த குலத்திலுண்டானவர்களால் சுத்த ந்ருத்தம், அனுஷ்டிக்கப்பட வேண்டும். நர்தகர், மர்தகர், காயகர், வம்சகர்

15. மவுரவிகர், ஆகியவர்கள் பஞ்சாசார்யர்கள் ஆவார்கள். நான்கு வம்சத்தை அனுசரித்தவர்கள், நாட்ய வேதங்களை அறிந்தவர்கள்,

16. பாவனை, பாட்டு, ந்ருத்தங்களை அறிந்தவர்கள், வாத்யஞானத்தில் உயர்ந்தவர்கள் நவ நாட்யரஸத்தை அறிந்தவர்கள், குற்றமில்லாத என் பக்தர்களாவர்.

17. அவர்களில் உயர்ந்தவர், நடன கல்வியை அறிந்த நர்தகராவர். அவர் மாத்ரை என்னுவதில் சிரேஷ்டமும், நர்த்தனத்தில் சிரேஷ்டருமாவார்.

18. மல்ல வித்யையில் நன்கு அறிந்தவர். மர்தகராவர். அவர் சுத்த ந்ருத்தத்தில் ஈடுபட்டவரும் அங்க லக்ஷணத்தில் ஈடுபட்டவருமாவர்.

19. ஏழு ஸ்வரத்தை அறிந்தவரும் கான வித்யையை அறிந்தவரும், பாடகர் ஆவார். அவர் ஸப்தஸ்வர பேதம் அறிந்து, கானம் செய்பவராவார்.

20. குழலூதுபவரும், அவ்வாறே குழல் வித்தையில் வல்லவராயிருப்பவன், உதாத்த முதலிய பேதங்களுடன் சவுக்யத்தில் குழலூதுபவராவர்.

21. சவுக்ய காலத்தில் முரவவாத்யத்தால் சங்கீதம் செய்பவர், மவுர விகாரவர், தென் பாகத்தில் நர்த்தகரும், மர்தகரும் இருக்க வேண்டும்.

22. காயகரும் வம்சகரும் உத்தர பாகத்தில் இருக்க வேண்டும். முன் பக்கத்தில் மவுரவிகருபாக சவுக்ய காலத்தில் முரவ வாத்யம் வாசிக்க வேண்டும்.

23. முன்பு கூறப்பட்டவர்களுக்கு மறு பிறப்பு ஏற்பட்டிருந்தால் சண்டேச ஹோமத்தின் பிறகு மறுபடியும் தீøக்ஷ செய்யப்படவேண்டும். அந்த தீøக்ஷ சுருக்கமாக கூறப்படுகிறது.

24. அனுகூலமான தினத்தில் தன்னுடைய ஐந்து வயதிலிருந்து அதிகரித்து ஐம்பது வரை வயதுள்ளவர்கள், யோக்யமானவர்கள் மற்றவர்கள் ஒரு போதும் யோக்யம் இல்லாதவர்கள்.

25. சவுக்ய நிருத்தத்திற்காக லக்ஷணமுள்ள மண்டபம் செயற்பாலது. முற்பத்தி மூன்று கரத்திலிருந்து இரண்டிரண்டு ஹஸ்த அளவாக குறைக்க வேண்டும்.

26. தேவன் முதல் சூலம் வரை உள்ள இடங்கள் முறையே சிரேஷ்டம், மத்யமம், அதமம் என மூன்று விதமான இடமாகும். ஒவ்வொன்றும் மூன்று, மூன்று அளவினாலும் அவைகளில் விருப்பமானதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

27. தேவாதி நான்கு வகைகளில் தேவன் முதலான வரிசை முறைப்படி ஏற்றுக் கொள்ளவும். அல்லது எல்லோர்க்கும் ஸாமான்யமான முன்பு நிர்மாணிக்கப்பட்ட மண்டபங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

28. நர்தனத்திற்கு, (பங்க்தி) பத்துமுழம் என்ற அளவு பேதத்தால் ஏற்றுக் கொள்ளவும். எல்லா மண்டபங்களையும், நிவ்ருத்தி முதலிய கலாமயமாக பாவிக்கவேண்டும்.

29. மண்டபத்தின் நடுவில் சுத்த ந்ருத்தத்தை செய்யவும். மண்டபத்தில் நடராஜரை சந்தனம் முதலியவைகளால் அங்க பூஜையுடன் கூடியதாக பூஜிக்கவேண்டும்.

30. ருத்ர கன்னிகைகளை கூப்பிட்டு சங்க தீர்த்தத்தால் பிரோக்ஷிக்கவும். பஞ்சாக்ஷரத்தால் ஜபிக்கப்பட்டு ஸ்வாமியின் முன்பு மெழுகப்பட்ட இடத்தில்

31. பிரணவாசனமிட்டு அதன் நடுவில் ஹா என்ற தீர்த்தத்தால் சுத்தி செய்த தண்டத்தை எடுத்து

32. பூர்வாக்ரம், உத்ராக்ரமாக தண்டத்தை ஸ்தாபித்து அதில் நந்தியை சந்தன, புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும்.

33. புதிய வஸ்திரம், மாலை, வெண்ணீர், உத்திரீய புஷ்பமாலை, வெள்ளை சந்தனம் பூசி, அங்குலீயம் (மோதிரம்) தரித்த ஆதிசைவனானவன்

34. ஆசார்யன் ஐந்து நிஷ்க அளவு தட்சிணை முதலியவைகளை பெற்று அவரின் சிஷ்யனாவது அந்த தண்டத்தை எடுத்து தலைமுதலாக நியாஸம் செய்யச் சொல்ல வேண்டும்.

35. சிவாய நம என்று எல்லோருடைய தலையிலும் நியாஸம் செய்ய வேண்டும். சந்தனம் முதலியவைகளால் முன்பு போல் தண்டத்தை பூஜிக்க வேண்டும்.

36. ஹே நந்த என்று விளி வேற்றுமையுடன் கூடியதாக, தண்டிநீ வரையிலான சிரேஷ்டமான வேறு நாமாக்களை தருகிறேன் என்று

37. என்னுடைய உத்ஸவ காலத்தில் உன்னுடைய நாட்யத்தை அனுசரித்து இருப்பாயாக, என்று கட்டளையிட்டு சிஷ்யனின் கையில் புஷ்பங்களை கொடுக்க வேண்டும்.

38. புஷ்பாஞ்சலியை வாங்கி நமஸ்காரத்துடன் குருவிடம் கொடுக்க வேண்டும். மறுபடியும் புஷ்பங்களை எடுத்து பரமேஸ்வரனிடம் நிவேதிக்க வேண்டும்.

39. பிறகு பரத நாட்டியத்திலுள்ள பஞ்சபதி என்றதான நர்தனத்தை, சிவ சன்னதியில் சிவனின் திருப்திக்காக சவுக்ய கர்மாவிற்கு செய்ய வேண்டும்.

40. இவ்வாறே ஸ்தீரிகளின் தீக்ஷõ விதி கூறப்படுகிறது. இது பஞ்சாசார்ய விஷயங்களாகும், தேசிகருடைய வீட்டிலோ தன்னுடைய வீட்டிலோ அழகான நடுபாகத்தில்

41. அர்ச்சனாங்க விதிப்படி தேவேசரை பூஜை செய்து, ஸ்வர்ண வஸ்திரத்துடன் கூடிய கும்பத்தை ஈசன் முன்பு ஸ்தாபித்து

42. பஞ்சாக்ஷரத்தால் தீர்த்தத்தை அபிமந்திரனம் செய்து, ஸ்நானம் செய்து வெள்ளை வஸ்திரம் முதலியவைகளுடன் கூடி ஐந்து ஆசார்யர்களை

43. சிவ தீர்த்தத்தால் பிரோக்ஷித்து கூர்ச்சத்தால் தலையை தொட்டுக் கொண்டு பஞ்சாக்ஷரத்தோடு கூடியதால் கார்யங்களுக்கு உகந்தவராக ஆகிறார்கள்.

44. ருத்ர கன்னிகைகளின் நுழைதல் சுருக்கமாக கூறப்படுகிறது. நிச்சயித்த உத்ஸவ தினத்தின் முன் தினம் அங்குரார்பணம் செய்ய வேண்டும்.

45. கோயிலின் நான்கு திக்குகளிலும், கிழக்கு முகமாக இரண்டு மண்டபம் அமைக்கவும். மண்டபத்தில் பலிபீடம் போல் பீடம் செய்ய வேண்டும்.

46. எல்லா மண்டபத்தின் முன்பாக குண்டம் அமைத்து ஸ்தண்டிலம் அமைக்கவும். உத்ஸவத்தின் முன் தினம் தேவ தேவனை பூஜிக்க வேண்டும்.

47. நான்கு ருத்ர கன்னிகைகள் உணவு உட்கொள்ளாமலும், சந்தனம் முதலியவைகளுடனும் பல்துலக்கியவர்களாயும், நீராடியும் அழகான அவயங்களை உடையவர்களாயும்

48. ஸர்வமங்களமுடையவர்களாகவும், உள்ள பஞ்சாசார்யர்கள் ஈசனை நமஸ்கரிக்கப்பட்டவர்களாகவும், ரக்ஷõபந்தனமுடையவர்களாகவும்

49. உத்ஸவத்தின் முன்தினம் அதிவாசம் செய்ய வேண்டும். ஸஹஸ்ர கலசாபிஷேகம் பரமேஸ்வரனுக்கு செய்து

50. சந்தனம் புஷ்பங்களால் பூஜித்து அதிகப்படியான நிவேதனங்களை செய்யவும். மண்டப நிர்மாணத்திற்கு பின் சில்பியை திருப்தி செய்து பசுஞ்சாணம் மெழுகிட்டு

51. புண்யாஹப்ரோக்ஷணம், அந்தணர்க்கு உணவளித்து நடு பீட நடுவில் ஸதாசிவரை பூஜிக்க வேண்டும்.

52. நடராஜர், தேவியுடனோ பிரம்மாவையுமோ கிழக்கிலுள்ள இரண்டாவது மண்டபத்தின் ஆவரண பூஜையுடன் கூடியதாக பூஜிக்கவும். ஈசனின் ஆவரணமானது

53. கிழக்கில் நந்தியையும் வடக்கில் பிரம்மாவையும் பூஜிக்கவும், ஸ்கந்தரை மேற்கு திக்கிலும் விஷ்ணுவை வடக்கிலும் பூஜிக்க வேண்டும்.

54. அதற்கு வெளியில் லோக பாலர்கள் அதற்கு வெளியில் ஆயுதங்களை பூஜிக்கவும். முன்புள்ள ஆவரணப்படி கிழக்கில் கவுரி தேவீ ஸஹிதம் ருத்ரனையும்

55. தெற்கில் பிரம்மாவையும் அந்த பிரம்மாவை ஸரஸ்வதி, லோகபாலர்களுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும்.

56. மேற்கு மண்டபத்தில் ஸ்கந்தரை லோக பாலர்களுடன் கூடியதாக பூஜிக்கவும். வடக்கு மண்டபத்தில் லோக பாலருடன் கூடியதாக மஹாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.

57. பிறகு குண்ட, வன்னி ஸம்ஸ்காரம் செய்து, அந்தந்த வஹ்நியில் அந்தந்த தேவர்களை சந்தனம் முதலியவைகளால் ஆவாஹித்து பூஜித்து நாடீசந்தனம் செய்து ஹோமம் செய்யவேண்டும்.

58. நூறு ஆவ்ருத்தி ஹோமம் பத்து ஆவ்ருத்தி சமித்து, நெய், அன்னம், பொறி, எள் இவைகளால் ஹோமம் செய்து பூர்ணாஹுதி செய்யவேண்டும்.

59. மண்டபத்தில் தேவரை பூஜித்து சுத்த ந்ருத்தம் செய்யவும். ருத்ர கன்னிகைகளுக்கு முன்பு கூறப்பட்ட ஸம்ஸ்காரத்தையுடைவர்களோ

60. ஸம்ஸ்காரமின்றி இருந்தால் ஸம்ஸ்காரம் செய்து ந்ருத்தம் செய்விக்க வேண்டும். ந்ருத்த ஆரம்பத்தில் தேசிகருக்கு விசேஷ பூஜை செய்து

61. பஞ்சாசார்ய கன்னிகைகளை வஸ்த்ராதி, பூஷணங்களால் உபசரித்து எவ்வளவு கொடுத்தால் திருப்தி ஏற்படுமோ அவ்வளவு கூலியை அந்த பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.

62. நித்யோத்ஸவத்தின் முடிவில் சவுக்யம், சொல்ல வேண்டும். ஸ்நாநம் முடித்து அணிகலன் தரித்து வெள்ளை மாலை அணிந்து

63. பஞ்சாச்சர்யர்களுடன் கூட முன்பு கூறிய ஆவரணத்துடன் நடராஜரை அர்ச்சித்து அதன் முன்பு நவநாட்டிய ரஸத்துடன்

64. ஸ்லோகத்தின் அர்த்த பாவனையோடு சுத்த ந்ருதத்தை செய்யவும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரனிவர்கள் மூன்று கால சந்த்யாதிபர்கள் ஆவர்.

65. காலை, மதியம், ஸாயங்காலம், கிரமமாக மூன்று ஸ்லோகங்களை படிக்கவும். மந்தார புஷ்பம் இரைத்ததினால் பலவித வாசனையால் மதங்கொண்ட வண்டு கூட்டங்களால் அழகான பாட்டு சப்தத்தையுடையதும், பலவித அங்க கரணங்களால் துதிக்கக் கூடியதுமான எனது புஷ்பாஞ்சலியானது பிரம்மாவிற்காக ஆகட்டும்.

66. பாவத்தோடு கூடியதும் ரஸத்தோடு கூடிய ந்ருத்தத்தினாலும் ந்ருத்தத்தால் உண்டானதும் வாசனை யோடும் மதங்கொண்ட வண்டுகளால் சப்திக்கப்படுவதுமான புஷ்பாஞ்சலியானது விஷ்ணுவின் பொருட்டு ஆகுக.

67. ஸாந்தாதிகர் முதலிய சிவஸம்காரம் செய்யப்பட்ட ருத்ர கன்னிகைகளால் பலவித அபிநயங்களால் கொண்டாடப்பட்டதும், பலவித புஷ்பக் கலப்புகளால் அரச அரசாங்க வளர்ச்சியின் பொருட்டு புஷ்பாஞ்சலியானது பரமேஸ்வரனின் பொருட்டு ஆகுக.

68. ஸ்தாபனத்திலும் பிரோக்ஷணத்திலும், பிராயச்சித்தத்திலும், அற்புத சாந்தியிலும், உத்ஸவத்திலும், ஸ்னபனத்தில், மாஸ பூஜையிலும், ஹோம கர்மாக்களிலும்

69. த்வஜா ரோஹண காலத்திலும் காம்ய கர்மாக்களிலும் சவுக்ய கர்மா விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் சவுக்ய கர்ம விதியாகிற எழுபத்தி மூன்றாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: