வியாழன், 7 செப்டம்பர், 2023

6. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா... ஆறு.....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

6. ஸ்ரீ சுத்தானந்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்....

ஆறாவது ஆச்சார்யர் [கி.மு 205
-124]



ஸ்ரீ சுத்தானந்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு மருத்துவராக பணியாற்றினார். இவர் தந்தையின் பெயர் "பார்வு". "பார்வு" க்கு மகனாக பிறந்தவர் தான் "சுத்தானந்தேந்திர்". இவர்கள் வேதாரண்யத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வந்த இவர்கள் ஒரு திராவிட பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் "விஸ்வநாதன்". இவரது சந்யாச நாமம் "சுத்தானந்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்". ஹிந்து மதம் வளரப் பெரும் பாடுபட்டவர். ஸ்ரீ சந்திர மௌலீஸ்வர பூஜையை பெரும் ஈடுபாட்டோடு செய்து வந்தார்.

இவர் கி.மு. 124 ஆம் ஆண்டு, நள வருடம், சித்திரை மாதம், சுக்ல பக்ஷத்தில், கார்த்திகை நக்ஷத்திரத்தில் சஷ்டி திதியில், காஞ்சிபுரத்தில் சித்தி அடைந்தார்.

இவர் 81 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார். நாளை தொடர்வோம்...
-------------‐---------------------------------------------

கருத்துகள் இல்லை: