வியாழன், 7 செப்டம்பர், 2023

12. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பன்னிரண்டாவது ஆச்சார்யர்...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பன்னிரண்டாவது ஆச்சார்யர்...

12. ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று



பன்னிரண்டாவது ஆச்சார்யர் [கி.பி. 172 - 235]

ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் [ஒன்று] பாலாற்றங் கரையிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். இவருக்கு வாத்ஸ்யாயன கோத்திரம். தந்தையின் பெயர் "ஸ்ரீ வத்ஸ பட்டர்". பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் "ஹரி".

இவரின் சிஷ்யரான ஸ்ரீ சத்சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம், சந்திர மௌலீஸ்வர பூஜையையும், ஸ்ரீ மடம், மடம் சார்ந்த நிர்வாகத்தையும் ஒப்படைத்து விட்டு "சார்வ பௌம" என்னும் சிறப்பான யோக நிஷ்டையைக் கடைப்பிடித்தார். பல ஆண்டுகளாக "சார்வ பௌம" நிஷ்டையில் இருந்த மிக பெரிய தபஸ்வி இவர். இப்படியும் ஒருவர் இருக்க முடியுமா என்று நினைத்த மக்கள் இவரை போற்றி கொண்டாடினார்கள்....

இவர் கி.பி. 235 ஆம் ஆண்டு, ஆனந்த வருடம், ஆடி மாதம், சுக்ல பக்ஷம், நவமி திதியில் முதல் குருவான ஆதிசங்கரர் எப்படி காமாக்ஷி அம்மன் கோவிலில் அம்பாளோடு ஐக்கியமானாரோ அது போலவே சேஷாசலத்திலுள்ள ஒரு குகையில் மறைந்தருளினார். அதில் அழியாப் பேரானந்தம் அடைந்தவர் என்பது இவரின் சிறப்பு...

இவர் 63 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐---------------------------------------------

கருத்துகள் இல்லை: